Jun 28, 2008

நான் நானாக இல்ல

என்னமோ தெரியல கொஞ்சம் நாளா ஒரு மாதிரியாவே இருக்கு. concentration சிதறி போகுது. இன்னிக்கு ரொம்ப மோசமா போச்சு. keyboard lesson போகும்போது எப்போதுமே கொஞ்சம் குஷியா தான் இருப்பேன்.. ஆனா இன்னிக்கு ரொம்ப டல்லா இருந்தேன். லேட்டாக போயிட்டேன். வாசிக்க ஆரம்பித்தேன்!

rythm தாறுமாறா போச்சு! tempoவ follow பண்ண முடியல... வாசிக்கவே வரல்ல.. ரொம்ப ஒரு மாதிரியா போச்சு! போன வாரம் பயிற்சி செய்த பாடலை மறுபடியும் வாசித்தால், சரியாகவே notations பாத்து வாசிக்க முடியல! ச்சே!! ஏதோ ஆச்சு எனக்கு! :((

Jun 25, 2008

எதிர்நீச்சல்

நீச்சல் குளத்தில்
தள்ளினாய்
நீச்சல் தெரியாதவன்
எப்படியாவது
நீச்சலடித்து கற்று கொள்வான்!
நீச்சல் பிடிக்காதவன்
என்ன செய்வான்?
மூழ்கி தானே போவான்.
புரிந்து கொள்ளமாட்டீர்களா?

வேலை பிடிக்கவில்லை என்றான்
"நல்ல வேலையில் இருக்கிற
உனக்கு, என்ன கேடு வந்துச்சு?"
என்றீர்கள்!
பிடிக்கவில்லை என்றேனே
ஏன் எனக்கு பிடிக்கவில்லை
என்று கேட்க
ஒரு ஜீவன் இல்லையே!

பிடிக்காத இடத்தில்
உதட்டில் சிரிப்பு
உள்ளத்தில் தவிப்பு!

கோபம் வருகிறதே
கோபத்தை வெளிப்படையாக
காட்டமுடியவில்லை என்று
அழுகை வருகிறதே.

கண்ணீரை துடைக்க
என் கைகுட்டைகூட
வர மறுக்கிறது
மடியில் சாய்ந்து
அழ ஒரு ஆளில்லை
என் மனச்சாட்சிக்கு
ஒரு மடி இல்லை!

Jun 24, 2008

120 மணி நேரம் படம் பார்த்து சாதனை!

120 மணி நேரம் தொடர்ந்து 48 ஹிந்தி படங்களை பார்த்து உலக சாதனை புரிந்திருக்கிறார் மதுராவை சேர்ந்து ஆஷிஷ் ஷர்மா. இதற்கு முன் ஜெர்மனிய நாட்டை சேர்ந்த claudia wavra தான் 117 மணி நேரம் தொடர்ந்து படம் பார்த்து சாதனை பட்டியலில் இருந்தார். அதை முறியடித்துவிட்டார் ஆஷிஷ்.

ஜூன் 11 காலை 11.08 ஆரம்பித்தவர் ஜூன் 16 ஆம் தேதி இரவு 8.12 வரை தொடர்ந்து 48 படங்களை பார்த்தார். ஒவ்வொரு படம் முடிந்தபிறகு அவருக்கு 10 நிமிடம் பிரேக் கொடுக்கப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை டாக்டர் வந்து பரிசோதனை செய்தார். சாதனையை நிகழ்த்திய ஆஷிஷ் தன் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை எண்ணி பெருமிதம் கொண்டார்.

இச்செய்தியை படித்தபிறகு, எனக்கும் சாதனை பண்ணவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. தொடர்ந்தாற்போல் 120 மணி நேரம் நான் என் வலைப்பூவில் பதிவுகளை அள்ளி வீசலாம் என்று எண்ணியுள்ளேன். எப்படி?

why? why? ஏன் எல்லாரும் அழுவுறீங்க!! நோ நோ! சரி சரி சரி... நான் எழுதல!

நாலு பேரு நல்லா இருக்கனும்னா இந்த நாயகன்(நாயகி) எதையும் செய்வாள்.(பின்னாடி நாயகன் தீம் மியூசிக் கேட்குதா...)

'அவன்' இன்றி ஓர் அணுவும் அசையாது.

தினமும் காலேஜுக்கு கார் டிரைவ் பண்ணிட்டு தான் போவேன். இன்னிக்கு அப்பாவுக்கு கார் தேவைப்பட்டதால், அவர் காலையிலேயே கார் எடுத்துகிட்டு சென்றுவிட்டார். நேற்று இரவே கேட்டார்,"உனக்கு ஓகே தானே, இல்ல.." என்றார்.



நோ! நான் தான் பெரியவங்க கிழிச்ச 'கோடு'டை தாண்டாத பிள்ளையாச்சே. ஆக நான், "it's ok. u take it." அப்படி என்றேன். இருந்தாலும் மனசுக்குள் கஷ்டமா இருந்துச்சு. ஒரு நாள் கார் ஓட்டவில்லை என்றால், ஏதோ பைத்தியம் பிடித்தவள் போல் இருப்பேன். ஏனா, i luv my car to the core! அவனுக்கு (காரை தான் சொல்றேன்.) நான் இட்ட செல்ல பெயர் "sweetheart".



என் நண்பர்கள் கார் எப்படி இருக்கு என்று கேட்பதைவிட "உன் darling எப்படி இருக்காருன்னு' தான் கேட்பாங்க! ஒரு நாள், என் தோழி வீட்டுக்கு சென்று இருந்தேன். தோழி அவள் அம்மாவிடம், "காயத்ரி, அவளோட darlingக கூட்டிகிட்டு வருது." என்று சொல்லியிருந்தாள்.



ஆண்ட்டிக்கு தெரியாது காரை தான் டார்லிங் என்கிறோம்னு. வீட்டுக்குள் சென்றுவுடன், "உன் darling எங்கே" என்றார் ஆண்ட்டி.



நான், " கீழே கார்பார்க்ல இருக்குது" என்றேன்.



ஆண்ட்டி உடனே, "ஐயோ, ஏன்? மேலே வர சொல்லவேண்டியது தானே" என்றார். அப்ப ஆரம்பிச்ச சிரிப்பு ஒரு மணி நேரத்துக்கு ஓயவே இல்ல.



சரி இன்னிக்கு கதைக்கு வருவோம். டார்லிங்க அப்பா எடுத்து சென்றுவிட்டதால், நான் பஸில் கிளம்பினேன். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் டார்லிங் வந்துடுச்சு. அதுக்கு முன்னாடி எல்லாம் பஸ், train தான்!



காலையில் 6.25 பஸில் ஏறினேன்! எனக்கு பஸிலோ அல்லது trainல் போக பிடிப்பதற்கு ஒரே காரணம், நல்லா 'சைட்' அடிக்கலாம். ஆனா, எனக்குன்ன ஒன்னுமே கண்ணுல படாது. எல்லாம் ஒன்னாவது இரண்டாவது படிக்குற பசங்களா பஸுல ஏறி என்னைய செம்ம காண்டாக்குவாங்க!!



'போர்' அடித்த வகுப்புகளை ஒரு வழியா முடித்துவிட்டு வீடு திரும்ப பஸ் ஏற வந்தேன். அவ்வளவு கூட்டமா இருந்துச்சு! சரி இந்த பஸுல ஏற முடியாது. பசி வேற எனக்கு... ஆக நடக்க ஆரம்பித்தேன். 40 நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தேன்.



அப்ப தான் என் காரை ரொம்ம்ம்ம்ம்பபப 'மிஸ்' பண்ணேன். absence makes the heart grow fonder என்ற ஆங்கில பழமொழி ஒன்று இருக்கு. அதாவது, ஒருத்தரை பிரிந்து இருக்கும்போது தான் அவர் மீது இன்னும் ஆசை அதிகரிக்குமாம்! அப்படி போச்சு என் மனநிலைமை!



ஆக, என் வீட்டுக்காரர்... ச்சி ஐ மின் என் வீட்டுக் 'கார்' இல்லாமல் என்னால் செயல்பட முடியாது. அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது!



(குறிப்பு: இந்த பதிவுக்கு 'இரண்டாவது நாள்..யப்பாடா' என்று தலைப்பு கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா, என்னால் தர்மடி வாங்க முடியாது என்பதால் இந்த தலைப்பு)



முதல் நாள்.. யப்பாடா



என் டார்லிங் நினைத்து எழுதிய கவிதை(கொஞ்சம் மொக்கையாக இருக்கும்.:)

Jun 23, 2008

முதல் நாள்..யப்பாடா

இன்னிக்கு முதல் நாள், கல்லூரியின் மூன்றாவது வருடம். நேத்திக்கு ராத்திரி சரியாவே தூங்க முடியல. ஏன்னு தெரியல. கைப்பேசியில் alarm clock நேரத்தை காலை 5.15 வைத்தேன். விடிய காலை 2.15 எழுந்து ரா பிச்சைக்காரன் மாதிரி உட்கார்ந்து கொண்டேன். தூக்கமும் வரல...

மதியம் 2 மணி எப்படா வரும்? காலேஜ் விட்டு எப்படா வீடு செல்வோம் என்று இருந்துச்சு.

சரி வகுப்பு வெளியே எதாச்சு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கான்னு பார்த்தேன்.. எந்த பசங்களையும் காணும்! தூங்கிவிட்டேன்.

(இது எல்லாம் ஒரு பதிவான்னு கேட்காதீங்க. நான் நல்ல தான் இருந்தேன். எப்ப படிப்பு ஆரம்பிச்சாங்களோ, இப்படி ஆகிட்டேன்! எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்....அவ்வ்வ்வ்)

Jun 21, 2008

அம்மா, நான் schoolக்கு போகல...

இரண்டு மாசம் லீவு முடிஞ்சு திங்கள் கிழமை காலேஜ் ஆரம்பிக்க போகுது. ஐயோ மறுபடியும் காலேஜ் ஆரம்பிக்க போகுதேனு நினைச்சாவே, எனக்கு அழுகாச்சியா வருது. (இந்த வயசுல போய்.. ச்சி..உனக்கு அசிங்கமா இல்ல அப்படினு நீங்க சொல்றது என் காதுல கேட்குதுங்க..)

இருந்தாலும் என்ன பண்ண... அம்புட்டு assignments, projects, weekly tests, surprise quizzes, exams மறுபடியும் வர போகுதுன்னு நினைச்சா, எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாவே இருக்கு!! இந்த ஒன்னாவது படிக்கற பசங்க, 'நான் ஸ்கூலுக்கு போகலனு" சொல்றது போல என் மனமும் அடம்பிடிக்கிறது. பரவாயில்ல... சமாளித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.

இந்த லீவுல நான் 4 புதிய விஷயங்களை கத்துக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுல இரண்டு விஷயம் ஓரளவுக்கு நல்லாவே வந்துட்டு.

1) musical keyboard கத்துக்கனும்னு நினைச்சேன். இப்ப 6 lessons போயிட்டேன். எனக்கு திடீரென்னு ஆசை வந்தது ar rehman பேட்டிய பாத்த பிறகுதான். தமிழ் புத்தாண்டு அன்று 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் பேசிய போது பாத்தேன். ரொம்ப inspirational போச்சு!! உடனே முடிவு பண்ணேன். பக்கத்துல உள்ள musical schoolல இப்ப keyboard கத்துகிறேன். 6 lesson போனபிறகு, ஏதோ ஏ ஆர் ரகுமானுக்கே நம்ம தான் குரு மாதிரி ஒரு ஃபீல்.(ஹிஹி.. இந்த build-upக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...)

உருப்படியா கத்துக்கிட்ட முதல் விஷயம் இது. தினமும் வீட்டிலும் பயிற்சி செய்வேன்.


2) இரண்டாவதா hip-hop dance கத்துகிட்டேன். ( நிறைய பேரு விழுந்து விழுந்து சிரிக்குற சத்தம் எனக்கு கேட்குது...hoi!!)

ரொம்ப நாளா எங்க பாட்டி சொல்வாங்க, மாவு ஆட்ட கத்துக்கோன்னு. அவங்க சொல்றத நான் இப்ப செய்றேன். நான் hip-hop டான்ஸ் ஆடுறது மாவு ஆட்டுற மாதிரியே இருக்கும். நமக்கு கையும் காலும் ஒரே நேரத்தில் coordination வராது. நான் போய் டான்ஸ் ஆடிட்டாலும்....ம்ஹும்... ஏதோ கையும் காலையும் குளிர்ஜொரம் வந்த மாதிரி அசைச்சுகிட்டு வந்துடுவேன்.

சும்மா டைம் பாஸுக்காக போனேன். அவ்வளவுதான்!

3) சமைக்க கத்துக்கிட்டேன்.(இல்ல இல்ல.. அப்படி ஆசைப்பட்டேன்.)

அம்மா அடிக்கடி சொல்வாங்க "சமையல் கத்துக்கோ, சமையல் கத்துக்கோ! போற இடத்துல இதுகூட சொல்லி தரலியானு என்னை தான் சொல்வாங்க...".

என்னது போற இடமா?? அப்படின்னா? என்று நான் கேட்பேன்( பதில் தெரிந்திருந்தும்..ஹிஹி..) அம்மா பதில் சொல்லமாட்டாங்க... அதுக்கு எல்லாம் இன்னும் நிறைய வருஷம்ம்ம்ம்ம் இருக்கு. இருந்தாலும் டைம் பாஸுக்காக சமையலறைக்குள்ளே புகுந்து என் வேட்டையை ஆரம்பித்தேன்..

முதல் நாளே mutton fry, ரசம்! சாப்பிட்டோம்! அதுக்கு அப்பரம் எனக்கு 4 நாள் mouth ulcer வந்துட்டு! உணவினால் வந்த பிரச்சனையா? இல்ல..சும்மா coincidenceஆ நடந்ததானு தெரியல.. அதுக்கு அப்பரமும் நான் என் வேட்டையை நிறுத்தல. புறப்பட்டாள் காயத்ரி கோழி குழம்பு செய்ய. ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. இப்படி இரண்டே நாள் தான் சமைத்தேன். ஆனா, ரொம்ப bore அடித்துவிட்டது. நிறுத்திவிட்டேன்.

4) ஹிந்தி மொழி கத்துக்க நினைத்தேன். நிறைய ஹிந்தி படம் பார்த்தேன் (with english subtitles) ஹீரோக்களை ரசித்து பார்த்தேனே தவிர ஹிந்தி கற்று கொள்ள முடியவில்லை.

இப்படி ஏதோ என் லீவு 'லீவு' எடுத்து கொண்டது!! அவ்வ்வ்.... இந்த பதிவ எழுதும்போதுகூட என் மனம் "i don't wanna go college." என்கிறது.

Jun 19, 2008

friday 13th-ஏதாச்சு நடந்துச்சா உங்களுக்கு?

friday 13th- பொதுவா இந்த நாள் ரொம்ப பயங்கரமான நாள். ஏதாச்சு கெட்டது நடக்கும். அப்படி இப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அனுபவித்துவிட்டேன் போன வெள்ளிக்கிழமை அன்று.


---------------------------------------------------------------------
ராத்திரி 1130 மணி இருக்கும். அடுத்த நாள் காலையில் அப்பா வெளியூர் கிளம்புவதால் அவரை விமானநிலையத்தில் காரில் கொண்டுவிட வேண்டும் விடியகாலையில் 4 மணிக்கு. சரி 1130 மணி போல தூங்கினா தான் கொஞ்சம் 4 மணி நேரம் நல்லா தூங்க முடியும் என்று நினைத்து, என் ரூம் lightயை off செய்யலாம்னு சென்றேன். திடீரென்று அப்பா உள்ளே நுழைந்து, பதற்றமாக,

"குட்டிக்கு நெஞ்ச வலிக்குது சொல்றா. வந்து பாரு." என்றார். (தங்கச்சியோட nickname குட்டி)

நான், " வீராசாமி படத்த பாத்து இருப்பா.." என்று ஜோக் அடித்தேன். அப்பாவுக்கு ஜோக் விளங்கவில்லை ஏன் என்றால் அவர் 4 வருடத்திற்கு ஒரு முறை படம் பார்ப்பவர்.

"இல்ல இல்ல... குட்டி அழுவுறா.." என்றார் அவர். சரி என்ன நடந்தது என்று அவள் ரூம்க்கு சென்று பார்த்தேன். படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறாள். நடந்தது என்னவென்றால், குட்டி என் அக்கா மேல் உப்புமூட்டை ஏறி விளையாட அக்கா முதுகு மேல் பாய்ந்திருக்கிறாள். அப்போ 'டக்' என்று நெஞ்சுபகுதியில் சத்தம் கேட்க, நெஞ்சவலி வந்துவிட்டது.

nickname தான் குட்டி. ஆனா எங்க வீட்டுல அவதான் நெட்டை.. அக்கா ரொம்ப small-built தான்.

அவ உடல் உருவத்துக்கு அக்கா மேல் ஏறி இருக்கலாமா? வயசு என்ன ஆகுது இரண்டு பேருக்கும்... அதுவும் ராத்திரி படுக்கும்போது யாராச்சு விளையாடுவாங்களா இப்படி... என்று மனதில் திட்டி தீர்த்தேன். குட்டி வலியால் கத்தி கொண்டிருந்ததால், நேரடியாக திட்ட மனம்வரவில்லை. அவளை அழைத்து கொண்டு பக்கத்திலுள்ள 24hrs clinicக்கு சென்றோம். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அவங்க 10 மணிக்கு படுத்துவிட்டார். சதாரணமா குட்டி இரும்பல வந்தாகூட, அம்மா ஒரு வாரம் மருந்து சாப்பிடுவாங்க அவளுக்கா...இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான்!

அப்பா, நான், அக்கா, மூன்றுபேரும் சென்றோம். அங்க போனால்,

"இது maybe fracture-ஆ இருக்காலம். இல்ல lungs burst ஆயிருக்கலாம்" என்றார்.

அதை கேட்டவுடன் எனக்கு நெஞ்சு வெடித்துவிட்டது. என்னது lungs burst ???

ஒன்றுமே புரியவில்லை. பெரிய hospitalக்கு அழைச்சுகிட்டு போய் x-ray எடுக்க சொல்லுங்க என்று சொல்லி எங்களை அனுப்பிவிட்டார்.

பெரிய மருத்துவமனைக்கு சென்றோம். பகலிலே எங்க அப்பா மாட்டுவண்டி மாதிரி தான் ஓட்டுவார் காரை. இப்போ இந்த பதற்றத்தில அவரை காரை ஓட்ட சொல்லமுடியாது என்பதால் நான் ஓட்டினேன்.

'உங்க ரெண்டு பேருக்கும் என்ன நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா பாட்டுல வர கார்த்திக், சௌந்தர்யானு நினைப்பா...
நாளைக்கு அப்பாவ கொண்டுபோய் விடனும். இப்பவே மணி 1230 ஆச்சு.
குட்டிக்கு என்ன ஆகபோதோ?'

என்று பல சிந்தனைகள் மின்னலாய் ஓடியது.

mount alvenia மருத்துவமனைக்கு சென்றோம். அங்க டாக்டர் ரூம்க்குள்ளே சென்றோம். டாக்டரை பார்த்தபிறகு, எனக்கு சிரிப்பு வந்துட்டு(இந்த serious situationலயும்...) அவர் தலைமுடி ஏதோ குருவி கூடு மாதிரி இருந்துச்சு. இப்பதான் தூங்கி எழுந்திருச்ச மாதிரி ஒரு முகம்.

x-ray எடுத்து பார்த்தார். கொஞ்சம் நேரம் வெளியே வேட் பண்ண சொன்னார். விடியகாலை மணி 2 ஆகிவிட்டது. 4 மணிக்கு விமான நிலையத்துக்கு போனும். 'இன்னிக்கு எனக்கு விடிய விடிய தீபாவளி, பொங்கல், ரம்ஜான், christmas தான்.' என்றது மனம்.

இன்னும் வலியால் துடித்த தங்கச்சிய பார்க்க பாவமா இருந்துச்சு( ஒரு புரம் கோபம் இருந்தாலும்..) எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தோழிக்கு ஸ்.எம்.ஸ் செய்து நடந்தவற்றை கூறினேன். அவளும் பதில் ஸ்.எம்.ஸ் அனுப்பினாள் ஆறுதலாக.

டாக்டர் உள்ளே அழைத்தார். சென்றோம். fracture ஒன்னுமில்ல. lungs burst ஆயிருந்தா தான் கொஞ்சம் problemஆ போய் இருக்கும். இது just muscle strain தான் என்று சொன்னார்.

போன உயிர் திரும்பி வந்தது.

அவர் சொன்னபிறகு என் தங்கையிடம் மறுபடியும் கேட்டார், "வலி இருக்கா?"

அவள் ரொம்ப coolலாக, "இல்லையே!" என்றாள். அடிபாவி உனக்காக நாங்கலாம் கவலைப்பட்டா... ச்சே...

மருந்துகளை வாங்கி கொண்டு வீடு திரும்பும்போது மணி 3.

மறக்க முடியாத நாளாக அமைந்தது friday the 13th!

Jun 18, 2008

காபி சுமார், கப்பு சூப்பர்ர்ர்!!

சீனியர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். அதனால் நான் சும்மா ஒரு attendance மட்டும் போடுறேன். நானும் பாத்துட்டேன், தசாவதாரம். ஹிஹி..

கமலிடம் ஒரே ஒரு கேள்வி-

"பத்து கமல் இருந்தும், ஒரு கிக்கான முத்தக்காட்சிகூட இல்லையே? ஹாஹா.."

(இதை எழுதிகொண்டியிருக்க தோழன் ஸ்.எம்.ஸ் வந்துச்சு- 'சிலந்தி' படத்த பாரு, அங்கதான் பத்து கமலும் தெரிகிறாரு. அவனை நம்பி படத்த பாத்தேன்.. அவ்வ்வ்வ்... அதுல 100 கமல் தெரிஞ்சாரு. படத்த பாத்தவங்களுக்கு புரியும்!)

தசாவதாரம்- கதை சுமார், திரைக்கதை-வசனம் சூப்பர்ர்!
காபி சுமார், கப்பு சூப்பர்ர்ர்!!

Jun 17, 2008

சொல்ல மறந்த க(வி)தை

மறைக்கமுடியாத சோகத்தை
மறைத்துவைத்தது ஏனோ?
புரிந்துகொள்ளாத
சொந்தங்களை
பிரிந்து நிற்பது
சரி தானோ?


மற்றவன் சொல்படி
வாழ்க்கை வாழ்ந்து
முடிந்துபோகையில்
உன்
சொந்த வாழ்க்கை
உன்னைப் பார்த்து
"என்னை ஏன் வாழ மறந்தாய்?"
என்று கேட்கையில்
மற்றவன் இருக்கமாட்டான்.
தோற்றவனாய் நீ
நிற்பாய்!


போலியாய் வாழ்ந்தாய்!
உன் தன்மானம்
தினம் தினம்
தற்கொலை
செய்துகொண்டது.

ஆறுதல் கூற
ஆளில்லை
அழுத புரள
நேரமில்லை!

காலம் தான்
மருந்தாம்!
மருந்து காயத்தை
குணப்படுத்தும்
வலியை குணப்படுத்துமா?

Jun 13, 2008

என் அறைக்கும் கடவுள் வருவாரா?

'அறை எண் 305ல் கடவுள்' படத்தை இரண்டு நாளைக்கு முன்னாடி தான் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில கருத்துகள் எனக்கு பிடிச்சிருந்தது.


பிரகாஷ்ராஜ் கடவுள் வேடத்தில் நல்லாவே செய்துள்ளார். அவர் சொன்ன ஒரு விஷயம்- கடவுள் இதை செய்யனும் அதை செய்யனும் என்று மனிதர்களிடம் ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால், நாம் தான் தேவையில்லாமல் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். கடவுளிடம் நான் கேட்க விருப்பப்படும் சில கேள்விகள்...


*வெள்ளிக்கிழமை ஏன் சைவமாக இருக்கனும்?


*சித்திரை மாதத்தில் பிள்ளை பிறந்தால் ஆகாது என்கிறார்களே, அது ஏன்?

*செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு புது காரியத்தை தொடங்கவேண்டாம் என்கிறார்களே, அது ஏன்?


*ஏன் புரட்டாசி மாதம் சைவமாக விரதம் இருக்கனும்?


என்னை பொருத்த அளவில், இதில் பல விஷயங்கள் மனிதர்களே உருவாக்கி கொண்டவை. ஆனால், அதற்கு ஏன் கடவுளுக்கு செய்கிறோம் என்கிறார்கள்? கடவுள் இப்படி செய்ய சொன்னாரா? என்பது தான் என் கேள்வி.


வெள்ளிக்கிழமை சைவமாக இருந்து கோயிலுக்கு சென்று வழிபட்டால், மனதிருப்தி கிடைக்கும், மனம் சந்தோஷம் அடையும் என்கிறார்கள் பலர். இது இவர்களின் நம்பிக்கை.


அதே போல, அதே வெள்ளிக்கிழமை, ஒரு அஞ்சப்பர் கடைக்கு சென்று ஒரு கோழி பிரியாணி உண்டால், எனக்கு மனதிருப்தி வருகிறது. மனம் சந்தோஷம் அடைகிறது. அப்ப, சந்தோஷம் இருக்கும் இடம் கடவுள் என்றால், இதுவும் கடவுள் இருக்கும் இடம் தானே!! இது என் நம்பிக்கை.


என் ஆதங்கம், என்னவென்றால், அவரவருக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஒருவரின் நம்பிக்கையை இன்னொருவரின் மேல் திணிக்கவேண்டாம் என்பதே என் ஆசை. வீட்டுல இதை சொன்னால், பல கருத்து வேறுபாடுகள் வெடிக்கும். :))


நான் ஒரு பயங்கரமான அசைவ பிரியர். ஆனா, கொடுமை பாருங்க, நான் பிறந்தது புரட்டாசி மாதத்தில். வீட்டில் புரட்டாசி விரதம் இருப்பார்கள். சுத்த சைவமாக இருப்பார்கள். நான் பிறந்தது முதல் இன்றுவரை, எனக்கும் விருப்பமான உணவை(அசைவ உணவு) என் பிறந்தநாள் அன்று சாப்பிட்டதே இல்ல!! சிறு வயதாக இருந்தபோது, இதை நினைத்து ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கேன். இதை பத்தி சொல்லும்போது, நிறைய பேர் நினைக்கலாம் "இதலா சின்ன விஷயம்.. இதுக்கு போய்.. "




ஆனா, நினைத்து பாருங்க, நமக்கென்ற ஒரு நாள்(பிறந்த நாள்), அன்றுகூட விருப்பமான உணவை உண்ணமுடியவில்லை என்றால், விரதம் எதற்கு?? கடவுளின் பெயரால் விரதம் எதற்கு??


இப்படி பல கேள்விகளை வீசி, கடவுளிடம் பதில் வாங்க வேண்டும். அறை எண் 305ல் கடவுள் படத்தை பார்த்த பிறகு, என் மனதில் எழுந்த ஒரு கேள்வி,


"என் அறைக்கும் கடவுள் வருவாரா?"


படத்தில் பிரகாஷ்ராஜ் கடவுள் வேடத்தில் வந்தார் படத்தில், ஆனால் என் அறைக்கு வருவது என்றால், இந்த உருவத்தில்







அல்லது இந்த உருவத்தில் வரவேண்டும்! ஒகே கடவுளே? ஹிஹி..


Jun 12, 2008

காதலுக்கு மரியாதை-பாகம் 3

அடுத்த நாள் காலையில் காலேஜில்..

“ ஆமா நந்தினி, எனக்கு இந்த காதல் வேண்டாம். உன்ன பத்தி தெரிஞ்ச பிறகும் உன் பின்னாடி சுத்த நான் ஒண்ணும் முட்டாள் இல்ல,” என்ற சிவா கடுகடுப்புடன் முறைத்து கொண்டு சொன்னான்.

“என்ன சிவா, சொல்லுற? ஏன் திடீருன்னு. நான் என்ன தப்பு செஞ்சேன். ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்று குழப்பத்துடன் கேட்டாள் நந்தினி.

“உன்ன பத்தி எங்க அப்பா அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க,” என்ற சிவா அவன் வீட்டில் நடந்தவற்றை கூறினான்.

சிவா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நந்தினியின் மனதைக் கத்திபோல் குத்தியது. கண்ணீர் அருவியாய் வழிந்தது நந்தினிக்கு. அவளுக்குப் பேசவே முடியவில்லை. எவ்வளவு கீழ்த்தனமாக பேசமுடியுமோ அந்த அளவுக்குப் பேசி நந்தினியைக் காயப்படுத்திவிட்டான். அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த சுதாகர், சிவா பேசும்போது தடுக்க முயன்றாலும் சிவா அவனது கடும்சொற்களை நிறுத்தவில்லை.

அவன் மனதில் ஏறிய விஷத்தை கக்கி, கத்தி முடித்தவன் கடைசியில் ஒன்று சொன்னான்-

“ ஏய் நந்தினி, இன்னியோடு உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஆனா நம்ம பிரிஞ்சத வேற யாருக்கும் தெரியவேண்டாம். காலேஜில எனக்குனு ஒரு மரியாதை இருக்கு. இத பத்தி தெரிஞ்சா அவ்வளவுதான். ஒரு பையலும் என்னை மதிக்க மாட்டான். ஒரு பொண்ணகூட ஒழுங்க லவ் பண்ண தெரியலன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதனால சொல்லுறேன், இத பத்தி யாருக்கிட்டையும் சொல்லி தொலைச்சுடாதே. டேய் சுதாகர் உனக்கும்தான்டா சேத்து சொல்லுறேன்.” என்று பேசிவிட்டு சிவா அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

மேசையின்மீது தன் தலையை சாய்த்து குமுறி குமுறி அழுதாள் நந்தினி. சுதாகர், சிவா பேசியதை நினைத்து அதிர்ச்சி அடைந்தவனாய் இருந்தான். அவளுக்கு ஆறுதல் சொன்னான் சுதாகர்.

பல நாட்கள் உருண்டோடின. ஆனாலும் நந்தினிக்கு அவள் மனதில் இருந்த பாரம் குறையவில்லை. சிவா வேறு புதிய நண்பர்களின் கூட்டத்தில் சேர்ந்து கொண்டான். சுதாகர் நந்தினியைப் பழையபடி கொண்டுவர பல முயற்சிகள் செய்தான். ஆனால் ஒன்றுக்குமே நந்தினி ஒத்துபோகவில்லை.

காதல் துயரமே அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சிவா எதுவுமே நடக்காததுபோல் திரிந்தான். ஆனால் நந்தினியால் அவ்வாறு இருக்க முடியவில்லை. வீட்டில் சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிகொள்வாள். இதயத்தில் விழுந்த இடிக்கு அவள் கண்களில் கொட்டும் மழைதான் அவளுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது.

சிவாவின் பிறந்தநாள் வந்தது. நந்தினி தான் காதல் மயக்கத்தில் இருந்தபோது அவனுக்காக வாங்கிய பிறந்தநாள் பரிசு ஒன்று அவளிடம் இருந்தது. இதை ஒரு முன்னாள் தோழி என்ற வகையில் சிவாவிடம் கொடுத்துவிடலாம் என அவள் ஆழ்மனம் சொன்னது. அதே சமயம் சிவாவை நேரடியாக பார்த்து கொடுக்க மனம் ஒப்பவில்லை. ஆகையால் சுதாகரிடம் பரிசை கொடுத்து சிவாவிடம் கொடுக்க சொன்னாள் நந்தினி. நந்தினி மறைவாக ஒரு தூண் பின்னால் நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தாள்.

“சிவா, பிறந்தநாள் வாழ்த்துகள். எனிவே இந்தா...,” என்றான் சுதாகர், நந்தினி கொடுத்த பரிசு பொருளை சிவாவிடம் நீட்டி,

“ இது நந்தினி பிறந்தநாள் பரிசா உனக்கு கொடுக்க சொன்னுச்சு.” என்றான் சுதாகர்.

“ ஓ...அவங்க வந்து கொடுக்க மாட்டாங்களோ.. என்ன திரும்ப ஒட்டப்பாக்குறாளா அவ. இந்த பரிசுல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம்,” என்று கூறி அருகில் இருந்த குப்பை தொட்டியில் அந்த பரிசை தூக்கி வீசிவிட்டு சிவா போய்விட்டான்.

இதை பார்த்த நந்தினி சிலையாய் நின்றுவிட்டாள். அவள் கண்களிலிருந்த கண்ணீர் மட்டும் கொட்டியது. சிவா தன்னை ஒரு தோழியாகக்கூட எண்ணவில்லையே என்று நினைத்து வேதனை அடைந்தாள்.

சுதாகர் நந்தினியிடம் வந்து ,

"நந்தினி, அவன் இப்படி செய்வான்னு எதிரப்பாத்தேன்!! சில பசங்க இப்படிதான். நீ அழுவாத. பொண்ணுங்க கண்ணீர் ரொம்ப விலை உயர்ந்ததுன்னு சொல்லுவாங்க. அத இனிமேலு இந்த மாதிரி ஆளுக்காக வேஸ்ட் பண்ணாத இவன பத்தி நினைக்காதே! அடுத்து என்ன பண்ணலான்னு யோசி. உனக்கு ஒரு ஏம் இருக்கு. அத நிறவேத்தி உன் அம்மாவுக்கு பெருமை சேரு,” என்று சுதாகர் அமைதியாகவும் உறுதியாகவும் ஆறுதலாகவும் கூறி நந்தினியின் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தத்தையே உருவாக்கி கொடுத்தான்.


பல வருடங்கள் கிடுகிடுவென ஓடின. சுதாகரின் ஊக்கத்தால் நந்தினி நன்கு படித்து அவள் நினைத்த போலவே ஒரு ஆசிரியர் ஆனாள். தன்னுடைய குடும்பத்திற்கு பெருமை சேர்த்தாள்.

ஒரு நாள் நந்தினி பள்ளி அலுவலகத்தில் இருக்கும்போது,

“ டீச்சர், உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு.. “ என்று ஆபிஸ் களார்க் நந்தினியிடம் தொலைபேசியை நீட்டினாள்.

நந்தினி தொலைபேசியை காதில் வைத்து,

“ ஹாலோ ஐ எம் நந்தினி இயர். யாரு அது?” என்றாள்.

ஒரு அமைதியான தழுதழுத்த குரலில்,

“ நான்தான் சிவா பேசுறேன்.” என்றது அந்த குரல்.

யார் இந்த சிவா என்று ஒரு நிமிடம் புரியாதவளாய் யோசித்தாள் நந்தினி.

“ நான்தான் நந்தினி, உன் காலேஜ் ஃபிரண்ட்.” என்றதும் நந்தினிக்கு எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. அதே பழைய சிவாதான்!

“ சொல்லு... என்ன திடீருன்னு ஃபோன்,” என்றாள் நந்தினி அமைதியாக, குரலில் ஒரு உணர்ச்சியும் இல்லாமல்.

“ உன்ன பாக்கனும் நந்தினி.” என்றான் சிவா.

நந்தினி சற்று உறத்த குரலில்,

“ அப்படி ஒரு சந்திப்பு இந்த ஜென்மத்தில நமக்கு வேண்டாம்!” என்றாள் உறுதியாக.

சிவா தனக்கு நடந்த கல்யாணத்தைப் பற்றியும் அவன் மனைவி சந்தேகம் புத்தி உடையவள் என்பதைப் பற்றியும் அவளால் தினமும் வேதனைப்படுவதாகவும் கூறினான் சிவா அழுது கொண்டே.

தன்னுடைய கல்யாண வாழ்க்கை கசந்துவிட்டதால் எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்கேயாவது போக போகிறேன் என்று வேதனையில் கூறிய சிவா,

” இதனாலதான் நந்தினி, உன்ன பாத்து பேசனும்னு சொன்னேன். அதுமட்டும் இல்ல நந்தினி. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் என் அப்பா அம்மா உன்ன பத்தி சொன்னது எல்லாம் பொய்னு சொன்னாங்க. அப்போ ஏதோ தப்பு செஞ்சுட்டாங்க. என்னோட கல்யாண வாழ்க்கை இப்படி போயிட்டேன்னு ரொம்ப கஷ்டப்படுறாங்க.. நந்தினிக்கு கல்யாணம் பண்ணிவச்சுருந்தா என் வாழ்க்கை இப்படி போய் இருந்திருக்காதேன்னு சொன்னாங்க..” என்றான் சிவா.

எல்லாவற்றையும் கேட்டு சற்று நேரம் மௌனமாக இருந்த நந்தினி ,

” நாய் துரத்தினா நம்மலும் ஓடிக்கிட்டே இருந்தா அதுக்கு முடிவே கிடையாது. தைரியமா நின்னு பிரச்சனைய எதிர்க்கனும். அப்போ நம்ம விஷயத்துல பிரச்சனை வந்தபோது எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு போனே.. இப்போ உன் மனைவியால பிரச்சனைன்னு வந்தபிறகு அவங்கள விட்டுட்டு எங்கே போகனும்னு நினைக்குற. முதல பயந்து ஓடுற பழக்கத்த விடு..” என்றாள்.

பின்னர் நந்தினி அவனுக்கு மேலும் பல அறிவுரைகளைக் கூறி ஒரு நல்ல மருத்துவரிடம் அவனுடைய மனைவியை அழைத்து செல்லுமாறு கூறினாள்.

அனைத்தையும் கேட்ட சிவா,

“ ரொம்ப தேங்கஸ்.. நந்தினி. உன் உதவிய நான் மறக்க மாட்டேன். அப்ப.. நம்ம சந்திப்பு..” என்று இழுத்தான் சிவா.

“ அதான் சிவா முன்னாடியே என் பதில சொல்லிட்டேனே. எல்லாத்தையும் மறந்துட்டு உன்ன பாக்க வர நான் ஒன்னும் இந்த சீரியல் கதையில வர ஹீரோயின் இல்ல. இப்ப உதவி பண்ணதுகூட.. ஒரு மனிதாபிமானம் என்ற அடிப்படையில்தான் தவிர.. வேறு ஒன்னு இல்ல.. என் காதலுக்கு நான் மரியாதை கொடுக்கறதுனால தான் உன்ன பாக்க விரும்பலன்னு சொன்னேன்..” என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டாள் நந்தினி.

“ என்ன டீச்சர்..தெரிஞ்சவங்களா?.. ரொம்ப நேரம் பேசினீங்க..” என்றார் களார்க். அதற்கு நந்தினி

“ ரொம்ப நாளா தெரியாம இருந்தவங்க” என்று பதில் அளித்துவிட்டு தன்னுடைய அடுத்த வகுப்பிற்கு சென்றாள் நந்தினி.

(முற்றும்)

(இது ஒரு உண்மை கதை தான். நண்பர்கள் வட்டாரத்தில் நடந்த ஒரு கதை. கதைக்காக பெயர்களை மாற்றி அமைத்தேன். மூன்றாம் பகுதி மட்டும், கதை முடிவுக்காக சற்று கற்பனை கலந்து எழுதினேன். சுதாகர் மாதிரி ஒரு நல்ல ஃபிரண்ட் தான் இந்த கதைக்கு inspiration! i dedicate this story to him.)

Jun 11, 2008

காதலுக்கு மரியாதை-பாகம் 2

பாகம் 1

இவ்வாறு பல நாட்களுக்கு, நந்தினி ஒரு மாதிரியாய் திரிந்தாள். அவளின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள். நந்தினியால் இந்த விஷயத்தில் ஒரு உடனடி முடிவு காணமுடியவில்லை.

‘சரி , உண்மையாகவே சிவாவைக் காதலிக்கிறோமா’ என்று பலமுறை கேட்டுக் கொண்டாள் நந்தினி. ஆயிரம் முறை கேட்டாலும் அதற்கு பதில் ‘ஆம்’ என்று ஆயிரத்து ஒரு முறை வந்தது.

தனது மனதில் தோன்றிய காதலை சிவாவிடம் சொல்ல முற்பட்டாள். அதற்கு முன்னால் சுதாகரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தாள்.

ஆனால், அவளுக்கு கூச்சமாக இருந்தது. வெட்கம் அவளை வெளிப்படையாகப் பேசவிடாமல் தடுத்தது. தன் காதலை எப்படி சிவாவிற்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் அவளது மனம் கபடி ஆடியது. தன் தாயிடம் இதைப் பற்றி சொல்ல முடியாது. தன் தம்பியிடமும் சொல்ல இயலாது. இதனைப் பற்றி நினைத்து நினைத்து நந்தினிக்கு ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. ஒரு சனிக்கிழமை மாலை நேரம், அவளுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.

“சரி நந்தினி, நீ ஏன் அவனுக்கு உன் காதலை எஸ். எம். எஸ் மூலம் அனுப்பலாமே?” என்று அவள் மனம் நந்தினிக்கு சொல்லியது.

இனி இதுதான் ஒரு சிறந்த வழி என்று தன் கையடக்கத் தொலைபேசியை எடுத்தாள். மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாலும் கைகள் ஏனோ நடுங்கின. விரல்கள் சிவாவின் தொலைபேசி எண்ணை அழுத்த போகும்போது கையடக்கத் தொலைபேசியின் மணி ஒலித்தது. அவளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது.

“ச்சே..." முக்கியமான விஷயம் செய்யும்போதுதான் இப்படி கண்டநேரத்தில எஸ்.எம்.எஸ் வரும். யார் இது?...” என்று நந்தினி எரிச்சலுடன், வந்திருக்கும் குறுந்தகவலைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள்.


“ ஹாய் நந்தினி, எப்படி இருக்கே? உங்கிட்ட ஒன்னு சொல்லனும். ரொம்ப நாளாவே சொல்லனும்னு இருந்தேன். இனிக்குதான் அதை சொல்ல தைரியம் வந்துச்சு. ஐ லவ் யூ நந்தினி! உன்ன நான் காதலிக்கிறேன்! உங்கிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியாம திண்டாடிகிட்டு இருந்தேன். இந்த விஷயத்தைப் பத்தி இனிக்குதான் நம்ம சுதாகர்கிட்ட சொன்னேன். அவன்தான் உடனே உனக்கு சொல்ல சொன்னான். ஐ சின்சியர்லி லவ் யூ, நந்தினி! உன் பதிலை எதிர்பார்க்கும் உன் காதலன் சிவா.” என்றது அந்த குறுந்தகவல். நந்தினியால் நம்பவே முடியவில்லை.

நந்தினிக்கு கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. எதை நினைத்து சென்றோமோ, அது கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தில் ஆகாயத்தில் பறந்தவளாய் இருந்தாள் நந்தினி. ஞாயிற்றுக்கிழமை முழுதும் அவள் பரபரப்பாக இருந்தாள். திங்கள்கிழமை எப்போது வரும்; சிவாவை எப்போது பார்க்கலாம் என மனம் பறந்தது.

இருப்பினும் சிவாவை முதன் முதலாக காதலனாக பார்க்க போகிறோமே என்ற புது உணர்ச்சி அவளை கவ்வி கொண்டு அவளுக்கு புதிய சுகத்தை தந்தது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள், கண்களில் நட்சத்திரங்கள் என நந்தினி பள்ளிக்குச் சென்றாள் திங்கட்கிழமை அன்று. பள்ளியில் எப்போதும் சந்திக்கும் இடத்தில்தான் சிவா காத்திருந்தான்.

நந்தினிக்கு அந்த இடமே புதிய உலகமாக தோன்றியது. சந்தித்துக் கொண்டனர்; பேசினர் ; சிரித்துக் கொண்டனர்.

“ excuse me. நான் தான் சுதாகர். இங்க நானும் உட்கார்ந்து உங்ககூடலாம் பேசியிருக்கிறேன். உங்க பழைய ஃபிரண்ட்,” என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு விளையாட்டாய் அவர்களிடம் சொன்னான்.

“டேய், என்னடா. உனக்கு எப்போதும் கிண்டல்தானா. ஏய் எனிவே, ரொம்ப நன்றிடா. நீ கொடுத்த தைரியத்தினால்தான் இவ்வளவும் நடந்திருக்கு. ரொம்ப நன்றிப்பா,” என்றான் சிவா. அதற்கு அமோதித்தவளாய் நந்தினியும் தன் தலையை அசைத்துக் கொண்டாள்.

“அதுக்கு என்னடா.. பரவாயில்ல” என்ற சுதாகர், நந்தினியைப் பார்த்து,

“ நந்தினி, இனிமேல்தான்பா நீ ஜாகரதையா இருக்கனும். பசிக்கும் ஆனா சாப்பிட முடியாது. தூக்கம் வரம் ஆனா தூங்க முடியாது. அப்படியே தூங்கினாலும் தூக்கத்துலே சிரிப்பு வரும். பஸ் ஜன்னல் ஓரமா உட்கர பிடிக்கும். ராத்திரி எல்லாம் பகலா தெரியும். பகல் எல்லாம் ராத்திரியா தெரியும். காதல் பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்க ஆரம்பிக்கும். அதுவும் முக்கியமா இளையராஜாவின் 80ஸ் பாட்டுதான் அதிகம் கேட்பே!” என்று மூச்சு விடாமல் தொடர்ந்து கடகடவென்று பேசி முடித்தான். அவன் சொன்னதைக் கேட்டு சிவாவும் நந்தினியும் வாய்விட்டுச் சிரித்தனர்.

“ஹாஹாஹா.. சரி சரி.. நான் சும்மா கிண்டலுக்காகச் சொன்னேன். இரண்டு பேருக்கும் ஆல் தி பெஸ்ட்! எனக்கு class ஆரம்பிக்கபோது. டைம் ஆச்சு. நான் கிளம்புறேன், “ என்று மேசையிலிருந்து பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் சுதாகர்.

உண்மையில் அவனுக்கு வகுப்பு அப்போது இல்லை. ஒரு மணி நேரம் கழித்துதான் அவனுக்கு பாடவேளை உண்டு. சிவாவும் நந்தினியும் தனியாக இருக்கட்டும் என்று நினைத்து நாகரிகத்துடன் நடந்து கொண்டான் சுதாகர்.

பல நாட்கள் சென்றன. காலேஜில் உள்ள பலருக்கும் தெரியும் இவர்களின் காதல் விவகாரம். சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருவரும் சுற்றினார்கள். வெளியே செல்வது, ஊர் சுற்றுவது, அவர்கள் எழுதும் பிழையுள்ள கவிதைகளை பகிர்ந்து கொள்வது என காதல் மயக்கத்தில் இருந்தனர் சிவாவும் நந்தினியும். சில நேரங்களில் நந்தினிக்கு பள்ளி மதியம் ஒரு மணிக்கே முடிந்துவிடும். ஆனால் சிவாவிற்கு மூன்று மணிக்குதான் முடியும்.

பள்ளி உள்புறத்திலிருந்து வெளி ‘gate’ வரை நடக்க இரண்டு நிமிடங்கள்தான் ஆகும். இருந்தாலும் அவனுக்காக காத்திருப்பாள் நந்தினி. அவன்கூட சேரந்து நடக்கும் அந்த இரண்டு நிமிடங்களைகூட அவள் பெரிதாக எண்ணினாள். இதற்காக பள்ளி முடிந்து காத்திருப்பாள். இவ்வாறு இரு வீட்டாருக்கும் தெரியாமல் நாளுக்கு நாள் இவர்களின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது.

தினமும் சிவாவும் நந்தினியும் வீடு சென்றபிறகு ஒரு ஐம்பது குறுந்தகவல்களையாவது அனுப்பி கொள்வார்கள். அதை சிவா அழித்துவிடாமல் தன் கையடக்க தொலைபேசியிலே வைத்திருப்பான். ஒரு நாள், அவன் தன்னுடைய கையடக்க தொலைபேசியை அவன் அறையின் மேசையில் வைத்துவிட்டுக் குளிக்க சென்றுவிட்டான்.

அந்நேரம் சிவாவின் அப்பா அவன் அறைக்குள் இருந்த செய்தித்தாளை எடுக்க வந்தார். அச்சமயம் கையடக்க தொலைபேசியின் குறுந்தகவல் ஒலி வந்தது. புதிதாக வந்திருக்கும் குறுந்தகவலை யதேச்சியாக திறந்து பார்த்தார். அவருக்குத் தூக்கி வாறி போட்டது. அந்த குறுந்தகவல் நந்தினியிடமிருந்துதான்- “ ஏய் சிவா, என்ன பண்ணுறே? ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ!” என்று இருந்தது.

சிவாவின் அப்பா அந்த கையடக்கத் தொலைபேசியில் உள்ள மற்ற குறந்தகவல்களை எல்லாம் படிக்க ஆரம்பித்தார். சிவாவிற்கும் நந்தினிக்கும் இடையே காதல் இருப்பதை அறிந்து கொண்டார். கோபத்துடன் இருந்த அவர் சிவா குளித்து வந்ததும் சிவாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார். சிவா சுருண்டு கீழே விழுந்தான்.

“ஏங்க நம்ம பையன அடிக்கிறீங்க?” என்று பதறிபோய் கேட்டார் சிவாவின் அம்மா.

“உன் பையன் என்ன காரியம் பண்றான், தெரியுமா?” என்று ஆரம்பித்தவர் அவர் அறிந்தவற்றைக் கொட்டி தீர்த்தார். அதிர்ச்சியடைந்தார் சிவாவின் அம்மா. சிவா தலைகுனிந்து நின்றான். சற்று நேரத்தில் ஆத்திரம் அடங்கியவராய் சிவாவின் அப்பா சிவாவிடம் நந்தினியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார்.

எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல சிவாவின் அம்மா அவருடன் சேர்ந்துகொண்டு பேசினார். தன் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், இப்படி காதல்கீதல் என்று சுற்றகூடாது என்ற எண்ணத்தில் கூறினாலும் அவர்கள் சொன்ன வீதம் நியாயமற்றது.

இதை புரியாதவனாய் சிவா இருந்தான். பாம்பாட்டியின் இசைக்கு மயங்கும் பாம்புபோல் சிவா, அவனின் பெற்றோர்கள் நந்தினியைப் பற்றி சொன்னதை நம்பிவிட்டான். அவர்களுக்கு நந்தினியைப் பற்றி ஏற்கனவே தெரிந்ததாகவும் அவள் சிவா படிக்கும் அதே கல்லூரியில் படிப்பதால் அவளைப் பற்றி அவனிடம் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும் என்று சிவாவின் மனதை குழப்பிவிட்டனர்.

நந்தினியின் தந்தை குடும்பத்தைவிட்டு ஓடியவர், அப்படிப்பட்டவரின் மகள் எவ்வாறு இருப்பாள்? என்று சிவாவின் பெற்றோர்கள் சிவாவின் மனதை கலைத்துவிட்டனர். சிவாவிற்கு கெட்டதையும் நல்லதையும் சிந்தித்துப் பார்க்கத் தெரியாதவன். தன்னுடயை பெற்றோர்கள் சொல்வது உண்மை என்று நினைத்து தன் காதலைத் தூக்கி எறிந்தான்.

(தொடரும்)

பாகம் 3

Jun 10, 2008

காதலுக்கு மரியாதை-பாகம் 1

“டேய் என்னடா இது? இதுல்லாம் ரொம்ப தப்பு சுதாகர்?” என்று செல்ல கோபத்துடன் சொன்னாள் நந்தினி.

“ ஏய், நீ சும்மா இரு. இன்னிக்கு நம்ம •பிரண்ட் சுதாகரோட பிறந்தநாள். அதுவும் என்ன ஸ்பெஷல்! அவனுக்கு இன்னிக்கு 18 வயசு ஆகுது. இனி அவன் 'தம்' அடிக்கலாம், தண்ணி அடிக்கலாம், ஸைட் அடிக்கலாம்...” என்று குறும்புடன் கை கொட்டி சிரித்தான் சிவா.

“டேய் சும்மா இருடா. ஓவரா பேசாதே. அப்படியெல்லாம் ஒன்னும் செய்யமாட்டேன். இன்னிக்கு 18 வயசு ஆகுதுல, அதான் பெரிய மனுஷன் ஆகிடோம்னு ஒரு ஃபீல் வர்றதுக்கு, யாருக்கும் தெரியாம திருட்டு தம் அடிக்கபோறோம். மத்தபடி ஒன்னும் இல்ல நந்தினி.” என்றான் நமட்டுச் சிரிப்புடன் சுதாகர்.

இப்படியே மூவரும் பேசி கொண்டே தங்கள் கல்லூரி அருகே இருக்கும் பூங்காவிற்குச் சென்றனர். பூங்காவில் நிறைய மரத்தடிகளும் செடிகளும் அடர்த்தியாக இருக்கும். அங்கே சென்று தங்களின் கொண்டாடத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சுதாகர் முடிவு செய்திருந்தான்.

இவர்கள் மூவரும் பூங்காவைச் சென்றுடையவதற்குள் இவர்களைப் பற்றி சொல்லிவிட வேண்டும்.

நந்தினி, சுதாகர், சிவா ஆகியோர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள். ஒவ்வொருவரும் வேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் பாடங்கள் இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மூவருமே ஒன்றாகதான் இருப்பார்கள். மூவருமே இணைபிரியாத நண்பர்களும்கூட.

நந்தினி- இவளும் மற்ற பெண்கள் மாதிரி சாதாரணமாகதான் தோன்றுவாள். ஆனால் மனதிற்குள் ஒரு பெரிய இலட்சியத்துடன் வாழ்கிறாள். நன்கு படித்து நல்ல ஆசிரியராக வரவேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் திறமைசாலி. இரண்டு வயது இளையவன் ஒரு தம்பி உள்ளது. அம்மா தொழிற்சாலையில் சாதாரண வேலையில் பணி புரிகிறாள். பாவம்! நந்தினி நான்கு வயதாகும்போது அவள் அப்பா இந்தக் குடும்பத்தைவிட்டு வேறு ஒருத்தியுடன் ஓடிவிட்டார். இதனாலேயே நந்தினிக்கு ஆண் வர்க்கத்தின் மீது சிறு வயதிலிருந்தே கோபம். ஆனால் சுதாகரின் நட்பு கிடைத்தபிறகு அவள் கொஞ்சம் கொஞ்சமாக ஆண்கள் மீது இருக்கும் தன் கோபத்தைக் குறைத்துக் கொண்டாள். இருந்தாலும் அவள் ஆழ்மனத்தில் படிந்த வடு முழுமையாக அழியவில்லை.

சுதாகர்- இவன் குறும்புத்தனம் கொண்டவன். எல்லோரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவன். மற்றவர்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்டவன். உதவி என்று வந்தால் தயங்காமல் உதவி செய்வான். நந்தினியின் மன மாற்றத்திற்குக் காரணமானவன். வாழ்க்கையின் அஸ்திவாரமே அவன் வைத்துக் கொண்ட ஒரு கொள்கையில்தான் அடங்கியது என்று எண்ணுபவன். என்ன கொள்கை தெரியுமா? ‘ஜாலியா இருக்காலம், போலியாகதான் இருக்கக் கூடாது!’

சிவா- இவனும் நல்லவன்தான். ஆனால் காலமும் விதியும் யாரை விட்டுவைத்தது. சுயபுத்தி இல்லாதவன் என்ற ஒரு கெட்ட குணமே அவனிடத்திலுள்ளது.

பூங்காவைச் சென்றுடைந்தனர். யாரும் பார்க்க முடியாத ஒரு அடர்த்தியான செடிக்குப் பின்னால் சென்றனர். இதற்குக் காவல் நந்தினிதான்! யாரேனும் திடீரென்று வந்துவிட்டால், அவர்களுக்கு முன் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று சுதாகர் நந்தினியிடம் சொல்லியிருந்தான். நந்தினி இவர்கள் செய்யும் குறும்புத்தனத்தை ரசித்தபடி தூரத்தில் நின்று கொண்டு காவல் காத்தாள்.

தொலைவில் நின்ற சுதாகர் நந்தினியை உறக்கக் கூப்பிட்டான், “ஏய் நந்தினி, எங்கள கவுத்துடாதே தாயி. யாராச்சு வந்தா சிக்கினல் கொடு. அப்பரம் இன்னொரு விஷயம். இந்த 'தம்' சும்மா ஜாலிக்காகதான் அடிக்கிறோம். அப்படியே இன்னிக்கு அப்பறம் இந்தப் பழக்கம் எனக்கு ஒட்டிக்கிச்சுனா நீதான் என்னை நல்ல வழிக்குக் கொண்டு வரனும் தாயே!” என்று இரு கைகளைக் கூப்பி கும்பிட்டான்.

சிரித்தபடியே நந்தினி “அடிங்க, சரி சரி, உலறாம, சீக்கிரம் முடிச்சுட்டு வாங்கப்பா, டைம் ஆச்சு” என்றாள் அவளும் உறத்த குரலில்.

பிறகு கொண்டாடத்தை முடித்துக் கொண்டு மூவரும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தனர். சுதாகருக்கும் சிவாவிற்கும் கொண்டாடத்தை நினைத்து ஒரே பேரானந்தம். இவர்களின் முக மலர்ச்சியைக் கண்டு புன்னகையிட்டாள் நந்தினி.

மறுநாள் கல்லூரி முடிந்து மூவரும் மதியம் உணவு சாப்பிட பக்கத்திலிருக்கும் உணவகத்திற்குச் சென்றனர். எப்பொழுதும் போல மூவருமே சிரித்துப் பேசி கொண்டு உணவகத்தை நோக்கிச் சென்றனர்.

“ என் கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்ல. கணக்கே தெரியாத ஆளா இருக்காரு,” என்று சொன்னபடி சுதாகர் உணவகத்தின் கதவைத் திறந்தான்.

உள்ளே நுழைந்தபடி சிவா “ஏன்?” என்றான் ஆச்சிரியத்துடன்.

“ அது ஒன்னு இல்லடா. இந்த வாத்தியாரு அவரோட நாலாவது பொண்ணுக்கு ‘அஞ்சு’னு பேரு வச்சருக்காரு” என்று சுதாகர் சொல்லி முடிப்பதற்குள் சிவா அனைவருக்கும் கேட்கும்படி சத்தம்போட்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

நந்தினிக்கும் சுதாகர் சொன்னதைக் கேட்டவுடன் சிரிப்பு வந்தது. ஆனால் சிவாவின் இறைச்சலான சிரிப்பைக் கண்டு அனைவரும் அவர்களையே பார்த்தனர்.

இதை அறிந்து கொண்ட நந்தினி, “ சிவா, அமைதியா இருடா. எல்லாரும் நம்மலே பாக்குறாங்க” என்றாள்.

நந்தினி சொல்லியும் சிவாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு தனது சிரிப்பு சத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தான். பின்னர், ஒரு வழியாய் சிரிப்பை அடக்கிக் கொண்டான் சிவா. மூவரும் தங்களின் உணவை வாங்கிக் கொண்டு காற்றாடிக்குக் கீழ் இருக்கும் மேசை ஒன்றில் உட்கார்ந்தனர்.

“அட பாவி என்னடா இப்படி loud சிபிக்கரை முழுங்கன ஆளு மாதிரி சிரிச்சு மானத்த வாங்குறே,” என்று சுதாகர் வாங்கிய தோசையை வாயில் அடைத்தபடி சொன்னான்.

அந்த சமயத்தில் கடைக்குள் நுழைந்த பவித்ரா இவர்களைப் பார்த்துவிட்டாள். பவித்ரா அதே கல்லூரியில் படிக்கும் மாணவி. பவித்ரா ஒரே பந்தா பொண்ணு. எந்த புது பொருளை வாங்கினாலும் அதை மற்றவர்களிடம் காட்டி பந்தா செய்து கொள்வாள். இவளுக்குப் பட்ட பெயரே “பந்தா பவித்ரா”! பவித்ரா இவர்களை நோக்கி வருவதைக் கண்டுகொண்ட சுதாகர்,



“ வந்துட்டாயா! வந்துட்டாயா!” என்றான் வடிவேலு பாணியில். மூவரும் சிரித்துக் கொண்டனர்.

“ஹாய் பிரண்ட்ஸ், என்ன பண்ணுறீங்க?” என்று கொஞ்சும் தமிழில் பம்பாய் ஹீரோயின் போல கேட்டாள் பவித்ரா.



“ ஓ.. நாங்களா புலிய வேட்டையாடிக்கிட்டு இருக்கோம்,” என்று கிண்டலாகச் சொன்னான் சுதாகர்.



“ ஏய் naughty boy” என்று செல்லமாக சுதாகர் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டி, அவன் பக்கத்தில் காலியாக இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்தாள். தான் புதிதாக வாங்கிய கையடக்கத் தொலைபேசியைக் கைபையிலிருந்து எடுத்து 'பந்தா' செய்ய ஆரம்பித்துவிட்டாள்.



“ ஏய் guys, யூ நோ, திஸ் ஸ் எ நியூ நோக்கியா போன். camera quality ரொம்ப நல்லா இருக்கும்” என்று கொஞ்சி கொஞ்சி பேசினாள். திடீரென்று அவள் எதிரே அமர்ந்திருந்த நந்தினியையும் சிவாவையும் தன் கையடக்க தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தாள்.

“கிளிக்” என்ற சத்தத்தைக் கேட்ட சிவா, “ பவித்ரா, என்ன செய்யுற?” என்றான்.


உடனே பவித்ரா தான் எடுத்ததை அவர்களிடம் காட்டினாள். படம் அழகாக தொலைபேசியில் பதிந்திருந்ததைக் கண்டு பெருமிதம் அடைந்தாள் பவித்ரா. மறுபடியும், தன் பையில் வைப்பதற்கு முன்னால் இன்னொரு முறை படத்தைப் பார்த்து,



“ ஏய், நீங்க இரண்டு பேரும் பார்க்க உண்மையான ‘லவ்’ ஜோடி மாதிரி இருக்கீங்க” என்று கேலியாக சொன்னாள்.



தான் பெரிய ஜோக் அடித்ததாக எண்ணி அவள் சிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள். “ அடச்சே, இது சரியான லூசு” என்று திட்டிக் கொண்டு சாப்பிட தொடர்ந்தான் சுதாகர்.

ஆனால் நந்தினிக்குதான் மனதில் ஏதோ ஒரு அலை தாக்கியதுபோல உணர்ந்தாள். பவித்ரா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் எதிரொலி போல ஒலித்துக் கொண்டே இருந்தது-

“ நீங்க லவ் ஜோடி மாதிரி இருக்கீங்க.”

அந்த நொடியிலிருந்த அவள் மனதில் ஏதோ ஒரு சலனம் ஏற்பட்டுவிட்டது. சிவாவைப் பார்க்கும்போது எல்லாம் அவள் பார்வை வேறு விதத்தில் அமைந்திருப்பதைக் கண்டு அவள் வியந்து போனாள்.

தனக்குள் ஏதேதோ நடப்பதை அறிந்தும் அறியாமலும் திக்குமுக்காடினாள். திடீரென்று மனத்திற்குள் ஒரு ரோஜாகூட்டமே பூத்ததாகத் தோன்றியது. அன்று இரவு இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே மல்லாந்து படுக்கும் நந்தினிக்கு அன்றிரவு மல்லாந்து படுக்க கூச்சமாக இருந்தது. ஒருக்களித்து கால்களை மடக்கிக் கொண்டு தூங்க முற்பட்டாள். ஆனால் உறக்கம் ஒரு ‘இஞ்’ கூட அவளிடம் நெருங்கவில்லை. இதுதான் காதல் வந்ததற்குரிய அறிகுறியோ?

பாகம் 2
பாகம் 3

Jun 9, 2008

உலகில் மிக அழகான 5 ஆண்கள்

Most handsome Saudi man.. the grandson of king Faisal


Hrithik Roshan -Most handsome Indian man…. actor






Imran Abbas -Most Handsome Pakistany man…. actor



Tarkan-Most handome Turkish man… singer





(( Fazza)) -Most handsome Emeriti man

ஆஹா ஆஹா!! ஆண்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். நமக்கு நம்ம ஊர் விஷாலா பாத்தாவே கவிதையா கொட்டும்!! இப்ப என்ன ஆக போகுதோ?:)) இனிக்கு ராத்திரி தூக்கம் வந்த மாதிரிதான்.

(ஏன் என் படத்த போடலன்னு யாராச்சு கேட்டீங்க.... அழுதுடுவேன்:)))

Jun 6, 2008

இளையராஜா, யுவன் மாதிரி பாடின்னா?

வீடியோவின் கடைசி பகுதியில் தான் காமெடியே இருக்கு!!! விழுந்து விழுந்து சிரிச்சுட்டேன்! ஹாஹா...

Jun 4, 2008

ஆத்தா.. நான் 'பாஸ்' ஆயிட்டேன்!!

semester 4 பரிட்சை முடிவுகள் வெளிவந்தது சற்றுமுன்பு தான். பரிட்சை முதல் நாளும் கடைசி நாளும் விழுந்து விழுந்து கும்பிட்டேன் சாமியை, அந்த சாமி என்னைய கைவிடல. இது வரைக்கும் எழுதிய semsterகளில் இந்த semester தான் எதிர்பார்த்ததைவிட 'டாப்'. computational mathematics பரிட்சையில் கண்டிப்பா fail தான் என்று நினைத்தேன். நல்ல வேளை என் தாத்தா பாட்டி செஞ்ச புண்ணியமோ.. நல்ல மார்க் வாங்கிட்டேன்.


Language Acquisition and Development B+
Statistics I B+
Computational Mathematics B+
The Role of Language in Education B+
Voice Studies and Production A

என்னை கொள்ளையடித்த கள்வனே!


அதிசயத்தை பார்த்தாயா?

காயமும் அதே முத்தம்

மருந்தும் அதே முத்தம்!




நீ கண்ணாலே காதல்
ஸ்.எம்.ஸ்
அனுப்பிட வேண்டும்
கூட்டமாக இருந்தாலும்
ரகசியமாய்
என் காது அருகே
"ஐ லவ் யூ" சொல்லிட வேண்டும்!



உன் உதட்டு தபால்காரனை
கடிதங்களை
முத்தங்களாய் மட்டும்
போட சொல்லு,
ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!


கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்
மீசை வைத்த ரோஜா
தாடி உரசும் தென்றல்
வேட்டி அணிந்த கார்மேகம்!


உன் தோள்களில் சாய்ந்தபோது
உணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு
நீ என்னை பார்த்தபோது
அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று!

Jun 2, 2008

saturday night parties

சனிக்கிழமை 17th may

இந்த வருஷம் ரொம்ப சபெஷல். ஏனா, 21st பிறந்தநாள் கொண்டாட்டம் தான் எங்க gangல உள்ள பல பசங்களுக்கு. 17th may தோழன் சுவின் பிறந்தநாள். அவன் வீட்டிலேயே பிறந்தநாள் கொண்டாட்டம். உறவினர்கள், நண்பர்கள் என்று கிட்டதட்ட 70 பேருக்கு மேல். செட்டிநாட்டு உணவகத்திலிருந்து சாப்பாடு. இது தெரிந்து, நான் இரண்டு நாளுக்கு முன்புலிருந்தே ஒன்னும் சாப்பிடாமல் இருந்தேன். அப்பதான், ஒரு வெட்டு வெட்டலாம்னு!

தோழனுக்கு தியானம், யோகா, உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் ரொம்ப ஈடுபாடு. ஆக, அவனுக்கு 'tips in meditation' என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்தேன். எனக்கு வீட்டுல வைக்குற celebration தான் பிடிக்கும். ஏனா, அப்ப தான் ரொம்ப freeya போகலாம் வரலாம். 630 pm வர சொன்னான். நம்ம இந்திய வழக்கபடி கரக்ட்டா 730க்கு சென்றேன். ஒரே கூட்டம்! சரி நம்ம gang எங்கேனு ஒரு பார்வை அலசல்.

தோழனைவிட அவங்க அம்மா தான் எனக்கு பயங்கர தோஸ்த். வந்து என்னை வரவேற்று அவங்க உறவினர்களிடம் ஒன்னு சொன்னாங்க... அத கேட்டு உச்சி குளிர்ந்துபோயிட்டேனுங்கோ!


அவங்க அம்மா, "காயத்ரி பேசுன்னா.. நான் சிரிச்சுகிட்டே இருப்பேன். சொல்ல போனா, எனக்கு இன்னொரு மகள் மாதிரி!' (அவ்வ்வ்வ்....)





மற்ற நண்பர்கள் தோழனின் அறையில். விவேக் பாணியில் எல்லாருக்கும் ஒரு 'hi hi hi' சொல்லிவிட்டு சும்மா அரட்டை அடித்தோம். அரட்டை குறட்டை போல் சென்று கொண்டிருந்ததால், நேபாளி படம் வீசிடியை மடிக்கணினியில் போட்டு பார்க்க நினைத்தோம். ஆனால், எந்த நேரத்துல அந்த படத்த போட்டும்னு தெரியல. படம் ஆரம்பிச்சுதுலேந்து சின்ன பிள்ளைகள் அறைக்குள்ள வந்து போவது, ஓடி விளையாடுவது.. அப்படி இப்படினு படத்தையே பார்க்க முடியல. மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு hallக்கு வந்தோம்.




தோழன் கேக் வெட்டினான். அவன் அம்மா ஜாலிக்காக, "டேய் உனக்கு 21 வயசு ஆச்சு. இப்பவாவது சொல்லு உன் girlfren யாருன்னு?"




எல்லாரும் விழுந்து சிரித்தோம். உடனே நான், " ஆமா ஆண்ட்டி அவனுக்கு ஏகப்பட்ட girlfrens. திரிஷா, நயன் தாரா, ஷ்ரேயா, அசின்..."





கேக் வெட்டியபிறகு, வந்த வேலையை கவனிக்க சென்றோம். அதான்ங்க, சாப்பாடு!! நான் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. ஆமா, இரண்டு நாளா வயிற்றை emptyaa வச்சுருந்தேன். நினைத்தபடியே சாப்பாடு செம்ம தூள்!! ஓடுறது, பறக்குறது, தாவுறது.. அப்படி இப்படினு ஒரு குட்டி discovery channelலே இருந்துச்சு! முதல் round முடிஞ்சு அடுத்த round சாப்பாடு எடுக்கும்போது ஆண்ட்டி,




"காயத்ரி, வெட்கபடாம சாப்பிடு!"




நான், "வெட்கமா... அது எங்க இருக்கு? அதுலையும் எனக்கு ஒரு plate வேணும்" என்றேன். சிரிக்க ஆரம்பிச்சவங்க, நிறுத்தவே இல்ல. அப்பரம் மீண்டும் அரட்டை, சிரிப்பு, கலாய்த்தல் என்று முடித்து இரவு 10 மணிக்கு வீடு திரும்பினேன்.

-----------------------------------------------------


சனிக்கிழமை 24th may




நான் சொன்ன மாதிரி வாரம் வாரம் ஒரு saturday night party! ஆனா இந்த கொண்டாட்டம் ஒரு தோழிக்கு, அதுவும் riverside party. இடத்த கண்டு பிடிச்சு போறதுக்குள்ள.... யப்பா! நோந்து போயிட்டேன். ஏதோ ஒரு காட்டுக்குள்ள இருந்துச்சு அந்த இடம். எல்லாரும் பார்த்து அசந்துபோகும் அளவில் ஒரு பெரிய பரிசு (பரிசு பெருசுதான்... ஆனா விலை சற்று கம்மி தான்..ஹாஹா..)


theme of the celebration is princess/prince. அதாவது ராஜா, ராணி மாதிரி உடை அணிந்து வரவேண்டும். ஆமா, எங்களுக்கு இது ஒன்னு தான் குறைச்சல்!




நிறைய விளையாட்டுகள், ஆடல், பாடல்! couple dance என்ற ஒரு அங்கம். தோழி மைக்கை எடுத்தாள் , "நாம இப்போ couple dance பார்க்க போறோம். நிறைய பேரு வந்து இருக்கீங்க. உங்களேந்து 5 ஜோடிய choose பண்ணி அவங்க இங்க முன்னாடி வந்து ஆடனும்." என்றாள்.




மற்ற நண்பர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் சும்மா பேசி கொண்டிருந்தோம். திடீரென்று பார்த்தால், பொண்ணு என் பெயரு சொல்லிட்டு!




"காயத்ரி வா!" என்றாள்.




எனக்கு செம்ம கோபம்!! நானும் இன்னொரு பையனை ஜோடி சேர்த்து ஆட சொல்லிட்டு அதுவும் "ஏ மாமா ஏ மாமா வரியா" (மருதமலை பட பாடல்) என்ற பாட்டுக்கு. ஆஹா.. நான் பாட்டுக்கும் அங்கிருந்த tomato சூப்பு குடிச்சிகிட்டு இருந்தேன். சூப்பு குடித்தவளுக்கு இப்படி ஆப்பு வச்சுட்டாளே!!




சரி ஏதோ கைகளையும் கால்களையும் அசைத்து, ஒரு டப்பாங்குத்து அளவுக்கு ஏதோ ஒன்று ஆடிவிட்டேன். couple danceனு சொல்லி என் மானத்தை கப்பல் ஏற்றியவளின் நட்பை 'கட்' செய்துவிடலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.




சாப்பாடு சரியில்லை. ஆக சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன்.

---------------------------------------------------------------------






சனிக்கிழமை 31st may



இது ஒரு surprise party! தோழி சுதாவிற்கு. 12 நண்பர்கள் நாங்கள் pasir ris parkல் இருந்தோம். சசியும் சுதாவும் ரொம்ப thick frens. ஆக சசி சுதாவிடம், வா நம்ம ரண்டு பேரும் சைக்கிளிங் போகலாம்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்தாள். நாங்கள் அங்கிருந்த புதர்களுக்குள் ஒளிந்திருந்தோம். அவர்கள் பாதையில் கடந்து செல்ல, நாங்கள் பின்னாடியிலிருந்து பதுங்கி சென்று அவள் மீது மாவு, தண்ணீர், முட்டைகளை தூக்கிவீசி surprise கொடுத்துவிட்டோம்.



புள்ளைக்கு என்ன நடக்குதுன்னு சுயநினைவுக்கு வரவே கொஞ்ச நேரமாச்சு. அப்பரம் வாங்கி வச்சிருந்த கேக்கை வெட்டி. அந்த கேக் அவ என் மேல போட. கேக்கே ஏற்கனவே chocolate flavour. அத என் மேல போட்டா ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனா, நான் அவ மூஞ்சில தடவி ஒரு facial பண்ணிவிட்டு அமெரிக்கா citizen போல இருந்தவளை africa சிட்டிசன் மாதிரி மாற்றியதில் ரொம்ப சந்தோஷம்!!


பின்னர், பக்கத்திலுள்ள theme parkக்கு(நம்ம ஊர் mgm மாதிரி உள்ள இடம்) போகலாம்னு முடிவு. ஆனா, ஒரு டிக்கெட் விலைய பார்த்தா... அவ்வளவு விலையா இருந்துச்சு!! 4 மாசலா தோசை சாப்பிடலாம் அதுக்கு! நாங்க போலாமா வேண்டாமானு முடிவு பண்ணறதுக்குள்ள...



ஆனா, உள்ளே சென்று விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த 3 தமிழ் புள்ளைங்க(சிறு வயது தான்...14, 15 வயசு தான் இருக்கும்) எங்ககிட்ட வந்து,



"ஹாலோ, இந்தாங்க free டிக்கேட்ஸ். நாங்க உள்ளே game விளையாடினோம். அதுக்கு கொடுத்தாங்க இந்த free டிக்கேட்ஸ். வச்சுக்குங்க." என்று சொல்லி 8 டிக்கேட்களை கொடுத்துவிட்டு சின்னகவுண்டர் விஜய்காந்த் போல சென்றுவிட்டார்கள். அவர்கள் பெயர் என்னவென்றுகூட கேட்கவில்லை.




எங்களுக்கோ ஆச்சிரியம்! அதிர்ஷ்டம் இப்படிகூட வருமா? மீதி உள்ள 4 டிக்கெட்களின் விலையை நாங்கள் அனைவரும் பங்குபோட்டு வாங்கினோம். உள்ளே சென்று ஒரே கூத்து, கும்மாளம்!! விளையாடி தீர்த்தோம்!! வாந்தி வராத குறைதான், பறக்கும் கப்பல், inverter, தலைக்கீழ் போவது, குதிப்பது என்ற அனைத்தை ஒரு கை பார்த்தோம்.


களைப்புடன் வீடு திரும்பினோம்! அடித்த கூத்தும், போட்ட ஆட்டமும் தலைவலியை ஏற்படுத்தியது எனக்கு. வீடுக்கு வந்தவுடனே சாப்பிடாமல் தூங்கிவிட்டேன். மறு நாள் காலையில் எழுந்து என் கைப்பேசியில் பார்த்தேன். புதிதாக ஒரு sms.



"ஏய் மக்கள்ஸ். நம்ம குருவோட பிறந்தநாள் அடுத்த வாரம்.so we are meeting at vivocity @ 630pm."




ஆஹா....ஆரம்பிச்சுட்டாங்கய்யா!!! அவ்வ்வ்வ்வ்