Aug 18, 2018

கோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila

"மாப்பிள்ள இவர் தான் ஆனா இவர் போட்டுருக்கும் சட்டை என்து" சொல்ற மாதிரி, படத்துல நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீரியஸ் தான் ஆனா படம் காமெடி படம்.

கோலமாவு கோகிலா.




இந்த படத்தோட இயக்குனர் நெல்சன் கையாண்ட வெற்றி உத்தி நகைச்சுவை. காமெடி படம்னு ரெண்டு வார்த்தைல முடிச்சிகிட்டாலும், டக்-னு சிரிக்க வைக்கும் நகைச்சுவை வசனமும், அத சொல்ற கதாபத்திரங்களும் படத்தோட மிக பெரிய தூண்கள். எல்லாருமே காமெடி பண்ணாலும் சலிப்போ அல்லது 'லொள்ளு சபா' மாதிரிகூட ஆகியிருக்கலாம். ஆனா, அப்படி எந்தவித பிசுரும் இல்லாம, அளவா, அழகா திரைக்கதையை நகர்த்திய விதம் படத்தை ரசிக்க வச்சிருக்கு.

எனக்கு படத்துல பிடிச்ச ஒரு விஷயம், கதைல வர அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வலுவான அழுத்தமான நடிப்பை காட்டியது தான். என்ன தான் நம்ம விஜய் டிவிய கரிச்சு கொட்டினாலும், விஜய் தொலைக்காட்டி நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு ஏராளமான திறமைசாலிகள் கிடைச்சு இருக்காங்க- தொகுப்பாளர் ஜாக்லின், அரந்தாங்கி நிஷா, சின்ன பையன் ஆனந்த போன்றோர்.

யோகி பாபு மலிகை கடையில வேலை பாக்கும் சின்ன பையன் ஆனந்த வரும் காட்சிகளில் எல்லாம், ஆனந்த் பயபுள்ள அள்ளி சாப்டுருக்கான்!

யோகி பாபு: டேய் இனிமேல அவன் (ஜாக்லினை காதலிக்கும் அன்பு தாசன்) வந்தான் நான் இல்லேனு சொல்லு.

ஆனந்த்: நீ செத்துட்டேனு சொல்றேன்.

யோகி பாபு: என்னாது?

ஆனந்த்: எரிச்சுட்டாங்கனு சொல்றேன்.

இந்த மாதிரி ஏகப்பட்ட சிரிப்பு வெடி படம் முழுக்க தூவி விட்டுருங்காங்க.

நயன் தன் அம்மாவோட மருத்தவ செலவுக்காக, ஒரு கும்பல்கிட்ட வேலை பாக்கபோறாங்க. அங்க கொக்கேன் கடத்துறாங்க. நயன் குடும்பத்தோட 90கிலோ சரக்க கடத்திட்டு போகும் கட்டாயம் ஏற்படுது.
ஒரு கட்டத்துல அந்த கும்பல்கிட்டயும் மாட்டிக்குது. போலீஸும் கண்டுபிடிக்க, எப்படி தப்பிச்சாங்க தான் முழு கதையும். ரொம்ப சாதாரண கதை. ஆனா, கதை போன விதம் மிக நேர்த்தி.

நகைச்சுவைக்காக தனியே காட்சி அப்படினு வகைப்படுத்தாம, எல்லா கதாபாத்திரங்களும் அன்றாட வாழ்க்கைல நம்ம எப்படி பேசுவோமோ அப்படி பேசியிருக்காங்க.

ஒரு காட்சில, நயன்தாரா எத எப்படி கடத்தபோறோம்னு ப்ளான் போட்டு தன் குடும்பத்துகிட்ட  சொல்லிகிட்டு இருப்பாங்க, அப்போ வாய்அடைச்சு போய் பாத்துகிட்டு இருந்த அப்பா சொல்வாரு, "யம்மா, கோகிலானு நான் ஒரு புள்ளைய வளத்தேனு அவ எங்க?"னு சொல்ற situational காமெடியா இருக்கட்டும்,

அம்மாவா வரும் சரண்யா உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சு, ஒரு அலமாரில புதைக்கப்பட்ட கொக்கேனோட  சேர்த்து அவங்கள தூக்கி யோகி பாபு வண்டில போட்டுகிட்டு போகும்போது, உணர்ச்சிவசப்பட்ட ஜாக்லின் காதலன் அன்பு தாசன் (ஸ்மைல் சேட்டை புகழ்) சரண்யா கால பிடிச்சுகிட்டு,

"உங்களுக்கு எதாச்சு ஒன்னு ஆச்சுனா ஆண்ட்டி பூமிய புளந்துடுவேன்,
வானத்த கிழிச்சுவேனு," கத்த, அதுக்கு சரண்யா டக்-குனு எழுந்து,

"சேலைய கிழிச்சுடாத பா"னு சொல்ற counter காமெடியா இருக்கட்டும்,

யோகிபாபு தன் வண்டி பின்னாடி பதிக்கப்பட்ட வாசகம்- 'கோகிலமே நீ குரல் கொடுத்தா, உன்னை கும்பிட்டு கண் அடிப்பேன்'

வண்டில ஏறும்போது, அத நயன் கிட்ட படிச்சு காட்டிட்டு, "spelling க்ரட்டா இருக்குல?"னு சொல்ற bonding-in-the moment காமெடியா இருக்கட்டும்

வசனம் எழுதிய இயக்குனர் நெல்சனை பாராட்டியே ஆகனும்.

குறிப்பா, யோகிபாபு வண்டில கடத்திட்டு போகும் sequence. யோகி பாபு அடிக்கும் ஒவ்வொரு ஜோக்-கும் இனி facebook group page டைட்டிலா மாறும்.  முதல் ஷோ படம் பாத்துட்டு செய்தியாளர்கள் அவர்கிட்ட, "படம் எப்படி இருக்கு?"

யோகி பாபு: நடிச்சவங்க கிட்ட கேட்டா எப்படி? நாங்க நல்லா இருக்குது தான் சொல்வோம். போய் மக்கள்கிட்ட கேளுங்க சார்.

இப்படி நிஜ வாழ்க்கையிலும் யதார்த்தமான நகைச்சுவை உணர்வு கொண்ட யோகி பாபு இன்னும் கொஞ்சம் காலத்துக்கு தமிழ் சினிமாவுல் ஒரு ரவுண்ட் வருவார் என்பது நிச்சயம்.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச காட்சி, இடைவேளைக்கு முன்னாடி வரும் நயன்தாரா சீன் தான். ரொம்பவே subtleஆ ஒரு நடிப்பு. கோகிலா கதாபாத்திரத்துக்குள்ள இருக்கும் புத்திசாலித்தனத்தையும், அப்பாவித்தனத்தையும், கொஞ்சம் திருட்டுத்தனத்தையும் வெளிகோணர வைச்ச காட்சி. நயன் சினிமா வரலாறுல இது கண்டிப்பா ஒரு 'செம்ம கெத்து' காட்சி.

இப்படி ஏகப்பட்ட ரசிக்கும்படியான விஷயங்கள் இருந்தாலும், படம் இடைவேளைக்கு அப்பரம் கொஞ்சம் நேரம் தட்டு தடுமாறி போச்சு. ஆனா, மறுபடியும் இறுதி கட்டத்துல இழுத்து பிடிச்சு நின்னுட்டாங்க.

இயக்குனர் நெல்சன் சமீபத்தில் கொடுத்த பேட்டில சொல்லியிருந்தார், இந்த படம் முதல ஹீரோ வச்சு பண்ற மாதிரி தான் அமைக்கப்பட்டதுனு.

நெல்சா, நல்ல வேளயா!
அப்படி மட்டும் பண்ணியிருந்தீங்க, திரும்பி திரும்பி அரைக்கப்பட்ட
அரைச்ச மாவு தான் கிடைச்சுருக்கும்,

கோலமாவு கிடைச்சு இருக்காது!

Jun 21, 2018

மயிர் தான் பொண்ணுக்கு அழகா?



முடி, கூந்தல், மயிர்- எப்படி 'தலைமுடிக்கான'  சொல் எக்கசக்கமா இருக்குதோ, அதே மாதிரி ஒரு காலத்துல நமக்கும் எக்கசக்கமா முடி இருந்திருக்கும். வேலைக்கு போற வயசு வரைக்கும் முடிய பத்தி அவ்வளவு கவலைப்பட்டு இருக்க மாட்டோம். ஆனா, வேலை, பணம், உடல் ஆரோக்கியம், இப்படி  நமக்கு தெரியாமலேயே நம்ம ஒரு 'சமூக விரோதி' வந்து தாக்கிட்டு போயிடும்.

ஒரு படத்துல, செந்தில் சொல்வாரே, " இந்த இடம் தான் thrillingஆன இடம். மனச தேத்திக்குங்க. பயந்துடாதீங்க'' அந்த மாதிரி, 30 வயசுக்குள்ளயே பாத்தா, நம்மள பதற வைக்குற மாதிரி, நமக்கு முடி கொட்டும் பிரச்சனை வந்திடும். குறிப்பா, இது பெண்களுக்கு நடக்கும்போது தான், இன்னும் அதிர்ச்சி ஆவங்க.

2017. வருஷம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல இத கவனிச்சேன். கண்ணாடி முன்னாடி நின்னு, முடி சீவும்போது, தலையில சில இடம் காலியா போவத. சரி, இப்படிக்கா சீவி பாத்தா, இன்னும் மோசமா போகுது. அப்போ தான் மனசு 'பகிர்'னு இருந்துச்சு. நமக்கு சொட்டை விழுந்திடுச்சா?

மெத்தையில உட்கார்ந்து என்ன டா நடக்குதுனு யோசிச்சா, கண்ணுல கண்ணீர் வருதே தவிர யோசிக்க முடியல. நமக்கு உடல பிரச்சனை வந்தா என்ன பண்ணுவோம்?

அதே தான்.

நானும் அந்த முட்டாள்தனத்த பண்ணினேன். கூகல் பக்கம் போனேன்.  கூகல போய், hair fall அப்படினு ஆரம்பிச்சு, அது எங்க எங்க போய், கடைசில ஒரு முடிவுக்கு வருவோமே அதுக்கு தான் நானும் வந்து சேர்ந்தேன்- உனக்கு தீரத ஒரு நோய் இருக்கு, காயு! அப்படினு எனக்கு நானே self-diagnosis பண்ணிகிட்டேன்.

அதுக்கு அப்பரம், ரெண்டு வாரம் கண்ணாடி முன்னாடி நின்னு அழுவேன். ராத்திரி தூங்கும்போது, ஒரு extra அரை மணி நேரம் அழுவேன். ரெண்டு வாரம் கழிச்சு, கண்ணாடி முன்னாடி நின்ன போது, அந்த ரெண்டு கேள்வி தோணுச்சு.

"சொட்டையா இருக்கறதுனால, என்ன பிரச்சனை? யாருக்கு பிரச்சனை?"

ரொம்ப நேரம் யோசிச்ச பிறகு, பதில்- ஒன்னுமே இல்ல.

அப்பரம் எதுக்கு நான் இவ்வளவு feel ஆனேனு தெரியல.

மயிர் தான் பொண்ணுக்கு அழகா?

முதல் விஷயம்- ஏன் முடி கொட்டுது? ஏன் சொட்டையா போகுது?

மன உளைச்சல், உடல் ஆரோக்கியம். இது தான் மூல காரணம். இத control பண்ண முடியுமா?

overnightல முடியாட்டிகூட ஓரளவுக்கு முடியும். அதுக்கு ஏதாச்சு முயற்சி பண்ணலாம்.

அப்பரம், chef தாமோதிரன் கடாய் மாதிரி, நம்ம தலையில கருவேப்பில, வெளக்கெண்ண, அந்த தூள் இந்த தூள்னு மண்டைய மசாலா அரைக்குற மிஷின் மாதிரி ஆக்கிடுவோம் ஒரு ஏக்கத்துல, எப்படியாச்சும் முடி வளர்ந்திடாதானு.

நானும் கொஞ்ச நாள், கருவேப்பில மேட்டர் முயற்சி பண்ணி பாத்தேன். ஒரு 0.5% improve ஆகி இருக்கும். அப்பகூட மனசு ஏத்துக்காது! மறுபடியும் சோகமா ஆயிடும். அப்பரம் வேற எதையாச்சும் தேட தோணும். Dermatologist போய் பாத்தேன். அவர் ஒரு spray கொடுத்தார். அத சில மாசம் try பண்ணி பாத்தேன். இன்னொரு 0.2% improve ஆகி இருக்கும்.

இத முழுசா சரி பண்ண முடியாது- அது தான் உண்மை. அந்த உண்மைய ஏத்துக்கனும்.  மனசு ஏத்துக்க கொஞ்சம் நாள் ஆகும்.



ஆனா, இது பிரச்சனை கிடையாது. முதல 'முடி கொட்டும் பிரச்சனை'னு எழுதி இருப்பேன். அதுவே தப்பு தான். இதுல என்ன பிரச்சனை இருக்கு?


பொண்ணுக்கு முடி தான் அழகு, ஆறடி கூந்தல் பெண் அப்படி இப்படினு வர்ணிச்சு வச்சதுனால, நமக்கு முடி இல்லனே வந்தவுடனே ஒரு மாதிரியா ஆயிடுறோம்.

நமக்கு எது ஒன்னு இல்லையோ, அத குறையாவே பாக்க கத்து கொடுத்து கெடுத்து வச்சு இருக்கு, இந்த சமுதாயம்.

படிப்பு இல்லையா?- ஐயோ பாவம்.
வேலை இல்லையா?- ஐயோ பாவம்.
வீடு இல்லையா?- ஐயோ பாவம்.
கார் இல்லையா?- ஐயோ பாவம்
கல்யாணம் ஆகலயா?- ஐயோ பாவம்.
புள்ள இல்லையா- ஐயோ பாவம்
முடி இல்லையா?- ஐயோ பாவம்.

ஆனா, ஒரே ஒரு விஷயத்துக்கு தான் நம்ம பாவம் பாக்குறது இல்ல.

மூளை இல்லதாவன் கிட்ட.
இப்படி மூள இல்லாதவன் தான் வந்து எவனாச்சு உங்க தலைமுடிய பாத்து, "ஐயோ என்ன சொட்ட விழுது" னு கேட்பான். அப்படி கேட்டா,

கபாலி ரஜினி மாதிரி கால் மேல கால் போட்டு,

"ஆமாண்டா, எனக்கு முடி இருந்துச்சு. இப்ப இல்ல. உனக்கு என்ன டா பிரச்சனை"னு சொல்லி பாருங்க,

அந்து கெத்தே தனி கெத்து தான்.



உங்க அழகு, உங்க மனசுலயும், தைரியத்தலயும் தான் இருக்குது.

மத்தது எல்லாம், வெறும் மயிர் தான்!

Jun 20, 2018

[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது

Movieworld- Gold Coast, Australia. (உல்லாச பூங்கா)

Brisbaneலிருந்து ஒரு மணி நேரத்தில் உல்லாச பூங்காவிற்கு சென்றுவிடலாம். நுழைவு கட்டணம் கொஞ்சம் பதற வைச்சாலும், வாழ்க்கைல ஒரே ஒரு தடவ போற இடம் இதலாம். ஆக, அத பத்தி ரொம்ப யோசிக்காம போயிடனும். இணையத்தில் கட்டணம் பதிவு செஞ்சா, இன்னும் மலிவு, அங்க நேரடியா போய் டிக்கெட் வாங்கினால் கொஞ்சம் அதிகம்.

 


காலையில் 10 மணிக்கு சென்றுவிடலாம். கூட்டம் அதிகம் இருக்காது. அதுவும் பொது விடுமுறை இல்லாமல், சாதாரணமான வார நாள் என்றால் கூட்டம் அவ்வளவா இருக்காது. நுழைஞ்ச உடனே, நீங்க யார இருந்தாலும், டக்குனு சந்தோஷம் ஆயிடுவீங்க. ஒலிக்கப்படும் பிரமாண்ட இசையும், வண்ணமும், ஏகப்பட்ட உணவு பொருளும், ஐஸ்கீரிமும் உங்கள குதுகலம் படுத்தும். 

கொஞ்சம் நேரம் கழித்து, stunt show நடந்தது. கண் முன்னாடி, பறக்கும் வாகனங்களும், தீப்பொறியும் மிரள வைத்து விட்டார்கள். 

street parade ஒரு நிகழ்ச்சி. சாலையில், superhero மற்றும் wonder woman இன்னும் சில கதாபாத்திரங்கள் வந்து சண்டை, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றையெல்லாம் நின்றுபடியே அல்லது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்தபடியே ரசிக்கலாம். இதுல என்ன சுவாரஸ்சியம் என்றால், இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கைக்கு எட்டிய தூரத்தில் பார்க்கலாம்.

முதலில் சூப்பர்மேன் வந்தார். அவருடன் தனியாக படம் எடுத்து கொள்ள, 20டாலர் கொடுத்து அந்த பாக்கியத்தை பெறலாம். ஒரு சுற்று சுற்றி விட்டு, சிறிது நேரம் கழித்து, பேட்மேன் வந்தார்.

என் அம்மா, "ரெண்டு பேரும், அதே ஆளு தான்."

நான்: இல்ல மா! இருக்காது.

அம்மா: இல்ல. ரெண்டும் ஒன்னு தான்.

நான்: எப்படி தெரியும்?

அம்மா: ரெண்டு பேருக்கும்....அதே கண்கள்!

நான்: என்னது அதே கண்ணா? 

அங்க வந்த முக்கால்வாசி, குழந்தைங்க தான். கூட அவங்க பெற்றோர், இல்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. ஆனா, பெரியவங்க சின்னவங்க என்று வயசு வித்தியாசம் இல்லாம, எல்லாருமே ஆச்சிரியத்துடவும் ஆனந்தத்துடவும் பார்த்தோம், ஒவ்வொரு முறையும் ஒரு சூப்பர்ஹீரோ வந்தபோது.  'எதுக்கு தெரியல, ஆனா, நம்மள காப்பாத்த ஒருத்தர் வந்துட்டார். இவரு இருக்கார் பா அது போதும்," என்ற உணர்வும் அடிப்படை ஏக்கம் கலந்த ஆசை தான், எல்லாருக்கும் சூப்பர் ஹீரோக்களை பிடிக்க காரணமாக இருக்கும் என்று அந்நோடி எனக்கு தோன்றியது. 

                                   

May 16, 2018

நடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்?

தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ஒரு சந்தேகமும் இல்ல.  இவ்வளவு பெரிய 'ரிஸ்க்' எடுத்துருக்குறார்னு திறமை உழைப்பு ரெண்டுமே அவர்கிட்ட நிறையவே இருக்கு.

சாவித்திரி.
சாரி.
சாவித்திரி அம்மா.


அவங்க எவ்வளவு பெரிய நடிகையர் திலகம்னு நமக்கு ஒரே ஒரு காட்சில புரிய வைக்குறார் அஷ்வின். சாவித்திரி அம்மா பட ஷுட்டிங்ல இருக்குறார். அழுகிற காட்சி. சாவித்திரி அம்மாவுக்கு கிளிசரின் போடனும். ஆனா, அன்னிக்கு அந்த நாள் கிளிசரின் சரியா போச்சு. இயக்குனருக்கு கோவம் வர, பேக்-கப் சொல்றார். அதுக்கு சாவித்திரி அம்மா, "இல்ல, இப்பவ நடிச்சுடுறேனு' சொல்ல, இயக்குனர், "நிறைய டேக் ஆகும். ஒரே ஒரு கண்ணுல மட்டும் தான் கண்ணீர் வரனும். உன்னால கிளிசரின் இல்லாம முடியாது'னு சொல்ல,

அதுக்கு சாவித்திரி அம்மா, "இல்ல நான் ஒரே டேக்ல பண்ணிடுறேன். எத்தன துளி கண்ணீர் வரனும்?"

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சாவித்திரி அம்மானு சொன்னா, அது மிகையாகாது.

மூனு மணி நேரம் படம் போனதே தெரியாம, ஒரு அழகிய ஆறு மாதிரி ரசிச்சு பாத்துகிட்டே இருந்த படம் சமீபகாலத்துல இதுவா தான் இருக்கும். அவங்க வளர்ச்சி மட்டும் இல்லாம, வீழ்ச்சியும் அதுக்கு காரணம் என்ன அப்படினு தைரியாம காட்டியிருக்காங்க. ஏன் தைரியம்னா, இதுல பல பிரபலங்கள் பெயர் அடிப்படுது? முக்கியமா, ஜெமினி கணேசன்.

சாவித்திரி அம்மா பல பேரும் புகழும் அடையுறாங்க. ஜெமினி கணேசனுக்கு அது அப்போப்போ புடிக்காம போக,  கல்யாணம் பண்ணிகிட்ட  ரெண்டு பேருக்கு இடையே விரிசல். ஒரு கட்டத்துல எல்லாத்தையும் விட்டுடுறேனு சாவித்திரி அம்மா சொன்னாலும், அதுக்கு அவர், "இல்ல அம்மாடி, வேணாம்னு' சொல்றார். ஜெமினி கணேசனை வில்லனா காட்டாம, இருக்க எடுத்துகிட்ட முயற்சி பாராட்ட வேண்டியது.


சாவித்திரி அம்மா, 'பத்மஸ்ரீ' பட்டம் வேணாம்னு சொல்லிட்டாங்க, அதுக்கு காரணம் ஜெமினி கணேசன். ஏனா அவர் தப்பா நினைச்சுப்பார்னு' இப்படி அவங்க வளர்ச்சிக்கு  முட்டுகட்டையா ஜெமினி இருக்க, அவர் மேல ஏதோ ஒரு வெறுப்பு வர தான் செய்யுது. "நீங்க மட்டும் கடைசி வரைக்கும் சரியா பாத்துகிட்டு இருந்திருந்தா....இந்த நிலம அவங்களுக்கு வந்திருக்குமா?" அப்படினு கேள்விய கேட்காம இருக்க முடியல.


சாவித்திரி அம்மா குடிபழக்கத்துக்கு அடிமையா ஆன பிறகு, அவங்க பொண்ணு, "அம்மா எது செஞ்சாலும் யாரும் செய்யாத அளவுக்கு தான் செய்வாங்க. அம்மாவுக்கு தோல்விங்கறதே பிடிக்காது. ஆனா, அப்பாவ ஜெயிக்கனும்னு வெறில எல்லாத்தையும் தோத்துட்டாங்க"ணு சொல்லும்போது மனசு கனத்துடுச்சு.

அவங்க எத்தனயோ பேருக்கு உதவி செஞ்சாங்க. எல்லாருக்கு சாப்பாடு போட்டாங்க. தர்மம் பண்ணாங்க.  ஒன்னுமே இல்லாத போதும், அவங்க அவங்களாவே வாழ்ந்து முடிச்சது தான், நமக்கெல்லாம் மிக பெரிய வாழ்க்கை படம்.  எனக்கு படம் பாக்கபோது, இளவரசி டயனா வாழ்க்கை வரலாறு நினைவுக்கு அப்பப்போ வந்து போனுச்சு.

*******

சாவித்திரி அம்மா மாதிரி தெரிவது
சாவித்திரி அம்மா மாதிரி நடிப்பது
சாவித்திரி அம்மா மாதிரி வாழ்ந்து காட்டியது

இது மூனுலயும் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கி இருக்காங்க. 50 வருஷம் கழிச்சு கீர்த்தி சுரேஷ் பத்தி படம் எடுத்தா, இந்த படம் கண்டிப்பா அதுல முக்கியமா இருக்கும். முதல் ஒரு மணி நேரம் படம் சாதாரணமா தான் போகுது. ஆனா, அவங்க நடிகையா ஆன பிறகு, ஜெமினி கணேசன் மேல காதல் கொண்ட பிறகு, கீர்த்தி சுரேஷ் அப்படியே முழுமையா சாவித்திரி அம்மாவ மாறிட்டாங்க.

சில black&white ஷாட்லயும் சரி, மாயபசார் பாடல் காட்சிகளயும் சரி கீர்த்தி சுரேஷின் நேர்த்தியான நடிப்ப பாத்து வியந்து போகாம இருக்க முடியல. கொஞ்சம் பிசரு தள்ளினா கூட, கலக்க போவது யார் நிகழ்ச்சி மாதிரி வெறும் மிமிக்கிரி மாதிரி இருந்திருக்கும். ஆனா, அந்த மாதிரி எதுவுமே இல்லாம, 'என்னோட best இது தான் பாருங்க'னு கீர்த்தி சொல்லாம சொல்லியிருக்காங்க.

எனக்கு 7ஜி ரென்போ காலனி படத்துல அப்பா, சொல்வாரே, "பாரேன் இந்த பையனுக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்கு", அந்த காட்சி வசனம்  கீர்த்தி சுரேஷுக்கு பக்காவா பொருந்தும்.

நடிப்பு மட்டும் இல்லாம, இசையும் இந்த படத்துக்கு மிக பெரிய பலம். சாவித்திரி அம்மாவ கண் முன்னாடி, visualஆ கீர்த்தியின் செஞ்ச மேஜிக் ஒரு பக்கம்னா, இசை, இன்னொரு மேஜிக். சாவித்திரி அம்மா, திரையில வரும்போதெல்லாம், பிண்ணனி இசை ஒன்னு வரும் பாருங்க, புல்லரிக்கவச்சிடும்.

படம் பார்த்து முடிச்சுட்டு, சாவித்திரி அம்மாவின் நிஜ மகள்,

கீர்த்தி சுரேஷ் அம்மாவுக்கு ஃபோன் போட்டு சொன்னது, "கீர்த்தி எங்க அம்மாவ பெத்து எடுத்து கொடுத்துட்டா"

இதுக்கு மேல, ஒரு நடிகைக்கு என்ன பாராட்டு வேணும்?


சமந்தா வழி கதை நகர்வது சுவார்ஸ்சியம். சும்மா, அவங்க வாழ்ந்த வாழ்க்கைய 'documentary' மாதிரி கொண்டு போகாம, நம்ம மனசுல நிக்கிற படமா உருவம் பெற உழைத்த அத்தனை நடிகர் நடிகைக்கும், பாராட்டுகள்!
வெறும் படமா இல்லாம, தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய வரலாறா மாறிய அற்புத பொக்கிஷம்- நடிகையர் திலகம்.

May 11, 2018

மண்ணெண்ணே வேப்பெண்ணே வெளக்கெண்ணே, STRESS வந்து கிட்னி போனா எனக்கென்ன?

வேலை கஷ்டம்னு நினைச்சு, கொஞ்சம் நாள் படிக்க போலாம்னு வந்தா, இந்த படிப்பும் என்ன இவ்வளவு கஷ்டமா இருக்குப்பு??



சரி, அந்த வாக்கியத்த மறுபடியும் rephrase பண்ணி சொல்றேன். இந்த மூன்னு மாசத்துல knowledge கண்டிப்பா நிறைய வளர்ந்து இருக்கு. எத்தன புது விஷயங்கள கத்துகிட்டேனு கணக்குல வச்சுக்கு முடியாத அளவுக்கு அவ்வளவு சுவாரஸ்சியமான விஷயங்கள் படிச்சு, ரசிச்சு இருக்கேன். ஒருத்தன் மொழி ஏன் கத்துக்கிறான், அத எப்படி கத்துக்கிறான், ஒரு மொழி கத்துகிட்டு, இன்னொரு மொழிய சுலபமா கத்துக்க முடியுமா? முடியாதா? அத அப்படி மூளைக்குள்ள process ஆவுது. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள்.சின்ன புள்ளைங்க ஆங்கிலம் கத்துக்கும்போது, ஏன் முதல 'playing, jumping, eating'னு -ing present progressive verb பயன்படுத்துறாங்கனு பல விஷயங்கள பத்தி தெரிஞ்சுக்க ஒரு அபூர்வ வாய்ப்பு இந்த பயணம்.
ஆங்கிலம் மொழி யாருடையது? பரவிகிடக்கும் ஆங்கில ஆதிக்கத்தால் விளைவுகள், பயன்கள்.... இப்படி ஆர்வத்தயும், அதே சமயம் எத்தன மொழி தெரிந்தாலும், நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில ஒன்னு தானு புரிந்த மூன்னு மாசம் இதுவா தான் இருக்கும்.

அப்பரம் என்ன லா stress?

படிக்கறது stress கிடையாது. அதுக்கு அப்பரம் 2500 வார்த்தைல ஆய்வு கட்டுரை எழுதனும். அது தான் மண்டைய காய வைக்குது. 

இப்படி கிட்டதட்ட 9 கட்டுரைகள் மூனு மாசம் எழுதிகிட்டு இருக்கேன். ஒரு கட்டுரை எழுதறதுக்குள்ள, ஒரு கிட்னி காணாம போயிடும். இதுல கட்டுரைனு சுருக்கி சொல்லிட்டேன்- essay, research, analysis. இப்படி ஜில் ஜங் ஜக்குனு மூனா பிரிக்கலாம். எனக்கு மூனுமே வராது, பிடிக்காது. என்ன படிச்சேனு உட்கார்ந்து பேச சொல்லுங்க, வாய் கிழிய, உங்க காது வலிக்க, பேசுவேன். ஆனா, இந்த எழுத்து தான்..... அபிராமி கமல் மடல் எழுதுற மாதிரி....அந்த வார்த்த தான் வரமாட்டேங்குது. 

இதுக்கு பத்தாதுனு வாரம் வாரம் quizனு ஒன்னு வச்சு இன்னொரு கிட்னியயும் புடிங்கிட்டாங்க. அதுல கேள்வி என்னான்னு புரிஞ்சிக்க இன்னிக்கு வரைக்கும் முயிற்சி பண்றேன்...ம்ம்ம்...ஹும்... இது ஆவறதுக்கு இல்ல!

அப்பரம் வாரம் வாரம் reflection- அதுக்கு ஒரே ஒரு மார்க் தான். ஆனா, குறைந்தபட்சம் 3 மணி நேரம் செலவு பண்ணனும். ஏனா, 42 பக்கங்கள் படிக்கனும். அந்த ஒரே ஒரு மார்க் பெற. 


18 வயசுல படிக்கறதுக்கும், 'ஹாலோ, எனக்கென பெரிய வயாசாச்சு? எனக்கு 18 வயசு தான்'  னு பொய் பேசும் மூட்டு வலியும் முதுகு வலியும் முழுசா நம்மகிட்ட ஐக்கியமான வயசுல படிக்கறதுக்கும் கடலளவு வித்தியாசம் இருக்கு, சித்துப்பு!! 2 மணி நேரத்துக்கு மேல ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்க முடியாது.  ஏனா என் மண்ட உச்சில சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது! 

ராத்திரி குளிர் வேற அடிக்கும் சீசன் இது. இங்க brisbaneல சாய்ந்திரம் 5 மணிக்கெல்லாம்  இருட்டிடும். அதுக்கு அப்பரம் சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, 'டேய், 6 மணிக்கு மேல, ஒரு ரூபா கொடுத்தாலும், நான் வேல பாக்க மாட்டேன்' னு கூவுவாரே அந்த மாதிரி, 6 மணிக்கெல்லாம், தூக்கம் கண்ண சொக்கும். விடியற்காலைல 3 மணிக்கு, நல்ல தூங்கிட்டு இருக்கும்போது, வலது கண்ணுலேந்து தண்ணி கொட்டும். என்ன ஆச்சுனு போய் கண்ணாடில பாத்தா,

'ஜாதி ஜாதினு கத்துறீயே, ஜாதியா டா உன்ன பெத்துச்சு?" னு விஜயகாந்த் ஒரு படத்துல சொல்லும்போது அவருக்கு கண்ணு சிவப்பா துடிக்குமே அந்த மாதிரி, கண்ணு சிவப்பா ஆயிடும் எனக்கு. இது தான் மன உளைச்சலின் உச்ச கட்டம்னு நினைச்சு மூஞ்சிய ஜில் குழாய் தண்ணில கழுவிட்டு படுத்துடுவேன்.

 'இதுக்கே பயந்தா எப்படி, இன்னும் ஒரு spessal item இருக்கு'னு வடிவேல் சொல்ற மாதிரி,



அடுத்த நாள், 6 வேளை சாப்பிடுவேன். சும்மா ஒரு தட்டு உணவு இல்ல. 6 பெரிய விருந்து சாப்பிடுவேன். அதுக்கு அப்பரம் 2 நாள், சாப்பிட்டேனாகூட தெரியாத அளவுக்கு assignments செய்ய பார்ப்பேன். நான் செய்றேனோ இல்லையோ, அது என்னைய நல்லா வச்சு செய்யும்.

வீட்டுல இருந்தா, சாப்பிட்டுகிட்டும் தூங்கி கிட்டும் இருப்பேன், அதனால, பள்ளி நூலகத்துக்கு போயிடுவேன். கிட்டதட்ட 10 மணி நேரம் வேலைய முடிக்க முயிற்சி பண்ணும்போது தான், அந்த திகில் சம்பவம் நடக்கும்.

'டேய், எவ்வளவோ பாத்துட்டோம், இதலாம் சப்ப மேட்டர். என்னால முடியும்'னு மனசுக்குள்ள, சக்தி கொடுனு ராகம் பாடும்போது, இடது கை சுண்டுவிரல ஒரு சொட்டு தண்ணி ஜொலிக்கும். என்ன டா ஆச்சுனு, விரல கண்ணுகிட்ட கொண்டு போனா, தக்காளி, அழுதுகிட்டு இருக்கேன்.

எனக்கு தெரியாமலே நூலகத்துக்கு நடுவே உட்கார்ந்து அழுத நாட்கள் ஏராளம்.

அப்போ, கட்டம்போட்ட சிவப்பு சட்டை, ஒரு french பையன் நூலகத்துக்குள்ள நுழைவான். எப்படி frenchனு உனக்கு தெரியும்னு கேட்காதீங்க? சரி italianன கூட இருக்கலாம். நான் தான் சோகத்துல அழதுகிட்டு இருக்கேன்ல. ஏன் கிட்ட ரொம்ப கேள்வி கேட்காதீங்க, ப்ளீஸ்!

அழகான பையன் முன்னாடி அழ கூடாதுனு விறுவிறுனு 'வேர்த்த' கண்ண துடைச்சிகிட்டு,
 சரி விரியா விடுனு மனசுக்கு ஆறுதல் வார்த்த சொல்லும்போது, மறுபடியும் பசிக்கும்.

Apr 4, 2018

முதல் e-kavithai நூல்- கா _ _ Comes First.


ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா!

கீழே  உள்ள லிங்-கை அழுத்தவும்,

http://online.anyflip.com/hnnb/fguh/mobile/index.html#p=1

Apr 3, 2018

நீங்களும் உங்க காதல் காட்சிகளும்.

கோபம் வர மாதிரி காமெடி பண்றது இது தான் நினைக்குறேன். சமீபத்துல பார்த்த ரெண்டு மூனு காதல் காட்சிகள் பயங்கரமா முகம் சுளிக்க வச்சுட்டு. சூரி சொன்ன மாதிரி, "ஒரே irritatingஆ இருக்கு மாப்பிள்ள"

மதுரவீரன்.

ஷண்முக பாண்டியனும் ஹீரோயின் மீனாட்சியும் பேசிகிட்டு இருக்காங்க. பக்கத்துலே காமெடியன் பாலா. 

பாலா: ராத்திரி பூரா மீன் குழம்பு எப்படி செய்யுறது கத்துகிட்டு, உனக்கு மீன் குழம்பு வச்சு கொண்டு வந்திருக்கா டா. அப்படினு என்னான்னு தெரியுமா?

ஷண்முகம்: தெரியல.

பாலா: அவளுக்கு உன்ன புடிச்சு இருக்குடா. 

ஹீரோயின் ஹீரோவ பாக்க, ஹீரோ அவள பாக்க, பாட்டு ஆரம்பிக்க, நான் தூங்க.

no 1) ஒரு புள்ள ராத்திரி முழுக்க தூங்காம இருந்திருக்கு. அப்படினு அதுக்கு insomnia. தூங்கமின்மை பிரச்சனை இருக்கு. அந்த புள்ளைக்கு உடனடியா மருத்துவ உதவி தேவை.

no 2) மீன் குழம்பு வைக்கறதுக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம்? அதுவும் ராத்திரி முழுக்க மீன் குழம்பு வச்சு இருக்குனு? மீன் என்னத்தாக்கு ஆகறது? அப்படி என்ன அவசரம்? உலக உணவு சங்கம் மீன் குழம்ப அடுத்த நாள் தடைகிட பண்ண போறாங்களாம் என்ன?

no 3) படம் முழுக்க, வேற எந்த ஒரு காதல் அறிகுறியும் காதலில் விழுவதற்கான காரணமோ அழுத்தமோ இல்ல. அப்பரம் என்ன ம....மீன் குழம்புக்குய்யா காதல் காட்சினு பெயர்ல கண்ராவித்தனத்த திணிக்கிறீங்க?

***************

படம்: இவன் தந்திரன்.

ஹீரோயின் வேலை இண்டர்வியு போறாங்க. அங்க ஆபிசர் ஒரு கேள்வி கேட்கறாங்க.

ஆபிசர்: 20 வருஷத்துல நீங்க என்னவா ஆகனும்னு ஆசைப்பட்றீங்க?

ஹீரோயின்: இடுப்புல மடிப்பு வேணும், ஒன்னு இரண்டு தல முடி நரைக்கனும்.... தனியா இருக்க பயப்படனும்....

காதல் வசனம் எழுத சொன்னா, ஏன் காட்டுமிராண்டி வசனம் எழுதுறீங்க?  
இது எந்த மாதிரியான அன்பு, காதல்?

எனக்கு கோபத்தைவிட பயம் தான் அதிகரித்தது. படத்துல சொன்னது ஒரு பொண்ணா இருந்தாலும், இதை யோசித்து (யோசிக்காமல்) எழுதினது ஒரு ஆண். அப்போ இவ்வளவு உங்க நினைப்பா? இத தான் நீங்க காதல்னு வகைப்படுத்துறீங்களா? 

ஆண், பெண் பேதம் வித்தியாசம் பேசல. இருந்தாலும் யோசிச்சு பாருங்க. இதுவே ஒரு ஹீரோ....

"எனக்கு முடியெல்லாம் கொட்டனும். சொட்டை விழனும். கிட்னில ரெண்டு கல்லு வரனும்..."

எப்படி பேசினா? காதல்னு ஒத்துப்போமா? அப்பரம் ஏன் ஹீரோயினுக்கு இந்த மாதிரி வசனம்?

படத்துல தண்ணி பாடல், பெண்கள இழிவுப்படுத்தும் பாடல் இப்போ கொஞ்சம் குறைஞ்சிகிட்டு வர நேரத்துல இந்த மாதிரி வசனம் பீதிய கிளப்புதய்யா! 

*******************

Feb 25, 2018

காற்றில் மறைந்த கீதம்


விவரம் தெரியும் வரை ஸ்ரீதேவி தான் உண்மையான முருகன் சாமி என்று நினைத்தேன்.

இன்று காலை 8 மணி இருக்கும். வெளியே நடக்க போகலாம் என்று காலணியை மாட்டியவாறு, கைபேசியில் டிவிட்டர் பக்கம் சென்றேன். அதிர்ச்சி செய்தி. ஸ்ரீதேவி பற்றி. இல்லை அப்படி ஒன்றும் இருக்காது என்று
மற்ற இணையதளங்களை புரட்டி பார்த்தேன்.

உண்மை தான்.

54 வயது. cardiac arrest. மனம் பாரமாகிவிட்டது. ஸ்ரீதேவி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இணையத்தளங்களை படிக்க படிக்க, அதே இரங்கல் செய்தி. டிவிட்டர் பக்கம், பல பிரபலங்கள் #RIPsridevi டிவிட்டு போட, என்னமோ செய்தது மனசு.

நான் நடக்க சென்றுவிட்டேன்.


எப்போதும் playlistலுள்ள பாடல்களை தான் கேட்பேன். ஆனா, இன்னிக்கு, விரல் youtube பக்கம் போனது.  ஸ்ரீதேவிஹிட்ஸ் பாடல்களை தேடி சென்றது. புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்வாங்களேன் அந்த மாதிரி, முதல் பாடலே, "காற்றில் எந்தன் கீதம்...."



கேட்ட முதல் வரியிலேயே, கண்கள் குளமாகிவிட்டன. கண்ணீருடன், தொடர்ந்து நடந்தேன். "காற்றில் எந்தன் கீதம்" பாடலில், ஒரே ஒரு மைக், அருவி சாரல், ஸ்ரீதேவி- எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல். அந்த பாடலில், தன் முகபாவனையால் முழுதாய் படம் பார்ப்பவர்களை வசீகரித்து இருப்பார். இப்போ இந்த மாதிரி பாடல்களை 'சுமந்து' செல்ல யாரு இருக்கா சொல்லுங்க?

"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"னு வசனத்தை சொல்லாத ஆள் இருக்கா?

இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் பார்த்துட்டு, தியெட்டரில் கண்ணீர் மல்க எழுந்து நின்று கைதட்டிய ஞாபகம் அலைமோதியது.

நேற்று இரவு, அவங்க துபாயில் உறவினர் ஒருத்தர் கல்யாணத்தில் சந்தோஷமாக நடனமாடிய வீடியோவை பார்த்தேன். துக்கம் தாங்கமுடியவில்லை.

ஸ்ரீதேவியின் அன்றாட உடற்பயிற்சி உணவு பழக்கத்தை பற்றி படிக்க நேர்ந்தது. இப்படி இருந்தும், எப்படி? ஏன்?

மாரடைப்பு வர பல காரணங்கள் இருக்கு.
விதி.
நேரம்.
'எமன் கூப்ட்டான்'

இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், மனம் இன்னும் லேசாய் விசும்பி கொண்டு தான் இருக்கிறது.

Feb 13, 2018

காமம் comes first( கவிதை)


மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தபடி
நாம் கிடக்க,

வெறும் போர்வையை மட்டும்
ஆடையாய் கோர்க்க,
வேர்வை காய்ந்த முதுகில்
உன் ஆள்காட்டி
விரலும்
நடுவிரலும்,
மயிலிரகாய்
கழுத்திலிருந்து
கீழே வருட
மறுபடியும் புரிந்தது
எவ்வளவு பெரிய
வித்தைக்காரன் நீ என்று!

புயல் அடித்து ஓய்ந்த
நிசப்தம் கலைக்க,
“Wake up baby Ma” 
காதுமடல் உரச
உன் உள்ளங்கை
மட்டும் திருட்டுத்தனமாய் 
என் இடுப்பை
அணைக்க
என்னிடம் பதில் இருந்தும் அமைதிகாக்கிறேன்.
கொஞ்சம் நேரம்
உன் மூச்சுகாற்று படரட்டும்.

கைபேசியில் நீ எதையோ 
தேடிகொண்டிருக்க,
மூன்று நாட்கள் ஷேவ் செய்யாத தாடியும்
அதில் ஓரமாய் மலர்ந்த நரை முடியும்
லேசாய் இடிக்கும் குட்டி தொப்பையும்

அனைத்தையும் நான் ரசிக்க,

“why are you so hot?” 
இதழ் பதித்தேன் 
கன்னக்குழிக்கும் தாடைக்கும் இடையே,
நீ வெட்கப்பட்டு புன்னகையிக்கும்
இடம் எதுவென்று அறிந்தே. 

“baby ma, how do I delete this in fb?”
அவனுக்கு தெரியவில்லை.

சொல்லி கொடுத்தேன்.

நேற்று இரவு போல்.

facebookல் யார் யாரோ போட்ட
படங்களை பார்த்து நக்கல் அடித்து

சேர்ந்து சிரிக்க,
கல்யாணம் செய்ய போகும் 

அவனது பள்ளி நண்பன் ஒருவனது
படத்திற்கு, 
“காமம் comes first da.” என்று கிண்டல்
செய்து வாழ்த்து கூற,

“baby ma, evening ஆச்சு டா. Get up” 

என அவன் எழ,
மீண்டும் தேடல்கள்
முளைத்த ஆசைகள்
கலைந்த ஆடைகள்.




Feb 12, 2018

'முதல் இரவும்' முதல் பிரியாணியும்

8 வருஷம் வேலை செஞ்சதுபோதும். ரொம்ப 'போர்' அடிக்குது. (போரும் நடந்தது) வேற ஏதாச்சு சுவாரஸ்சியமா பண்ணலாம்னு முடிவு எடுத்து, ஆஸ்திரேலியாவுல கால் அடி எடுத்து வச்சாச்சு. masters of applied linguistics அப்படினு ஒரு படிப்பு. இது என்ன, யாரு, எப்படி- அப்படினு சத்தியமா ஒன்னு தெரியாது. படிப்பு முடிய 1.5 வருஷம் ஆகும். அதுக்குள்ள கண்டுபுடிச்சிடுறேன்.




மொழி சம்மந்தப்பட்ட விஷயம்னு இணையத்தளத்துல போட்டு இருந்துச்சு. அந்த ஆர்வத்தோடும், ஆசையோடும், ஏதோ ஒரு இதோடும் மறுபடியும், காலேஜ்க்கு பைய தூக்கிட்டு கிளம்பிட்டேன்.

"மாப்பு, படிப்பு என்ன அவ்வளவு சீப்பா போச்சா'னு என் குலசாமி கவுண்டமணி சத்தியராஜ்கிட்ட ஒரு படத்துல சொல்வார்ல, கவுண்டமணி எங்கிட்டயும் சொல்றது மாதிரி தான் தினமும் காதுல கேட்குது. எந்த தைரியத்துல படிக்க கிளம்பிட்டேனு கேள்விய மனசுக்குள்ள ஒரு 1000 தடவ கேட்டு இருப்பேன். என்னனெமோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமானு ஒரு குருட்டு தைரியம், முரட்டு நம்பிக்கை.


தனிமையில் ரசித்து கழித்த முதல் இரவு 10 Feb. வாழ்க்கையில் தனிமைபடுத்தப்பட்ட தருணங்கள் ஏராளம். ஆனா, தனியாக வாழ்ந்த நாட்கள் இல்ல. ஆக, இந்த அனுபவம் புதுசு. இந்த இரவு புதுசு. கடிகார முள் சத்தம், சாலையில் கடந்த சென்ற பெரிய லாரியின் எஞ்சீன் சத்தம், சுழலும் காற்றாடி சத்தம், பக்கத்துவீட்டு பையன் நடந்து சென்றபோது அவரின்           காலடி சத்தம், என் கைப்பையின் வார் லேசாக நாற்காலி மேல் தட்டி கொண்டிருந்த சத்தம், நிம்மதியின் நிசப்தம், ரொம்பவே ரசித்தேன். மறுநாள் பிரியாணி செய்ய போகிறோம்னு ஒரு அலாதி சந்தோஷத்துடன், 'முதல் இரவு' நல்லிரவாக அமைந்தது.

முதன் முதலாக சமையல் செய்றதுங்கறது  science practical மாதிரி. சில பல தட்டுகள் உடையும், சில பல காயங்கள் ஏற்படும். இதலாம் தாண்டி தான் பிரியாணிய அடை முடியும். அந்நிய மண்ணில் நான் சமைத்த முதல் உணவு- பிரியாணி என்று நாளைக்கு வரலாறு பேசட்டும்!

பிறந்த குழந்தைய மருத்துவமனை அறையில் வைப்பாங்க, அப்ப வெளியே நின்னு எட்டி பார்க்கும் தந்தை மாதிரி தான் நானும் பார்த்தேன்.

கண் கலங்கிட்டேன்.