Mar 22, 2016

ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன்- amazing auto driver அண்ணாதுரை

ஆட்டோக்காரன் நான் ஆட்டோக்காரன் என பாடலை கம்பீரமாக, இந்தியாவில் பாட தகுதி உள்ளவர் ஒருவர் என்றால் அது அண்ணாதுரையாக தான் இருக்க முடியும்.

தனது ஆட்டோவில், மாத இதழ், செய்திநாள், லாப்டாப், wifi, ஆசிரியர்களுக்கு இலவசம், குழந்தைகள் தினம் அன்று குழந்தைகளுக்கு இலவசம். அப்துல் கலாம் தினம் அன்று சலுகை என எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அசர வைக்கும் இவரது தொழில் பக்தி.

அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னது, "customers தான் எனக்கு தெய்வம். அதனால தான் நான் சாம்பாதிக்கும் பணத்த, அவங்களுக்கு செய்யனும்னு ஆசைபடுறேன்." என்றார்.

இவ்வளவு வசதிகள் இருந்தும், அதே கட்டணம் தான். கிட்டதட்ட மாதம் 10,000 வரை செலவு ஆகிறது, வீட்டில் இதனை செய்ய அவ்ளளவு ஊக்குவிப்பு இல்லை என்றபோதிலும், அண்ணாதுரை தொடர்ந்து செய்கிறார் அவரது பணியை.

இப்போது புதிதாக அவரது 'app' ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அண்ணா, கண்டிப்பா நீங்க பெரிய ஆளாக வருவீங்க! வாழ்த்துகள் அண்ணா!


Mar 20, 2016

கூடமேல கூட வச்சு பாடலை PARIS நகரத்தில் காட்சியமைக்கப்பட்டிருந்தால்......

இந்த வாரம் முழுக்க லீவு என்பதால் கிட்டதட்ட வாழ்க்கையையே facebookகிலும் youtubeலும் அர்பணித்துவிட்டேன். அதில் என்னை கவர்ந்த 3 வீடியோக்களின் தொகுப்பு தான் இது.

1) குறும்படம்: ஜீ-பூம்-பா

இயக்குனர் பாலாஜியே (காதலில் சொதப்புவது, மாரி படம் இயக்குனர்) இப்படத்தில் குறும்படத்தின் நாயகன். என்ன தான் கதைனா பார்த்தா?

அட இப்படம் short and sweet  என சொல்ல வைத்தது. வீட்டில் பார்த்த மாப்பிளையை காபிஷாப்பில் பார்க்கும் செல்கிறாள் நாயகி. அங்க என்ன நடக்குது தான் கதை. இதில் என்னொரு சுவாரஸ்சியம் என்னவென்றால், முழு நீள படத்தின் ஒரு காட்சியாம் இக்குறும்படம்! அப்படி செதுக்கி இருக்கார் இயக்குனர் விக்னெஷ் விஜய்குமார்.

2) கூடமேல கூட வச்சு பாடலை parisல் எடுத்திருந்தா....

தமிழ் சினிமாக்களில் வெளிநாட்டு படபிடிப்பு பாடல்கள் ரொம்ப சாதாரணமா போச்சு. ஆனா சில பாடல்கள் எந்த லொக்ஷ்னலில் எடுத்தாலும், அழகாக தான் இருக்கும். நாம் அனைவருக்கும் பிடித்த "கூட மேல கூட வச்சு" பாடலை, பாரிஸ்சில் வசிக்கும் இக்காதல் ஜோடி இப்பாடலுக்கு மேலும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த வீடியோ


3) குறும்படம்: husBANned.

செம்ம ஜாலியான ஒரு குறும்படம். கணவர்களின் கஷ்டங்களை புட்டு புட்டு வைக்கும் படம்.

எனக்கு பிடித்த வசனம்.

கணவர்: sunday வராத வாரம் இருக்கலாம். ஆனா சண்டையே வராத வாழ்க்கை கிடையாது.

அவரது நண்பன் (கல்யாணம் ஆக போகும் நண்பன்): செத்து போச்சு!

க: என்னது?

ந: உங்க sense of humor

க: அதான் married life!


Mar 19, 2016

நான் , விஜய் சேதுபதிய heavyயா லைக் பண்ண காரணம் என்ன?

ஏற்கனவே, விஜய் சேதுபதி (வி. சே) பத்தி தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் ல எழுதியிருக்கேன்.

  • வி.சே என்ற நடிகர் எப்போ எனக்கு தெரிய வந்தார். "thuru" குறும்படம் பார்த்த போது, எனக்குள் தோன்றியது "அட இவர் ரொம்ப நடிக்குறார் பா!"

அன்று சொன்னது போல் தான், முதலில் அவர் சிரிப்பு! புன்னகை.

ஏதோ ஒன்னு பண்ணது!


  • மக்களுக்கு பிடிச்ச மாதிரி....சரி சரி....எனக்கு பிடிச்ச மாதிரி திரையில் வரும் விஜய் சேதுபதி. நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் அவர் நடிக்கும் விதம் ஏதோ ஒன்னு பண்ணது! 


  • அவர் கொடுக்கும் பேட்டிகளிலும் சரி, அவரை பற்றி மற்றவர் பேசும்போதும் சரி, வி.சே ரொம்ப 'shy type' ஆளு. ஆனா, அந்த பழக்கத்தை மாற்ற தான் நடிக்க வந்ததாக சொன்னார்கள். இதுவும் இன்னொரு காரணம். basically i am a shy type girl என்பதால் வி.சே போன்றவர்களை ரொம்ப பிடிக்கும்.

  • வித்தியாசமான முக பாவனைகள். சமீபத்தில் வந்த காதலும் கடந்து போகும் படத்தில், இரண்டு காட்சிகளில் இதை பார்த்தேன்.
"ஏதா பண்ணுண்ணா!" என்று சொல்லும் modulation....க க க போ!! 




"நாயா?" என்று பதில் சொன்ன விதமும்.......ப்பா!!!!!!!!!



  • கூட மேல கூட வச்சு பாடல்:  இப்பாடல் யூடியுப்ல மட்டும் கிட்டதட்ட 55 லட்சம் வீயுஸ் கிடைச்சுருக்கு. அதில் பாதி என்னால தான் இருக்கும்னு நினைக்குறேன். ஏனா, இப்பாடலை எடிட்டு செய்தவரைவிட, நான் இப்பாடலை அதிக முறை பார்த்து இருப்பேன். இப்பாடலும் இன்னொரு காரணம்.

    வி.சே பிறந்த நாளுக்கு கவிதை கூட எழுதியிருக்கேன் பாருங்க....

    காட்டு தாடி உன் அழகில்லை
    சேட்டு பையன் கலர் இல்லை
    இருந்தும் கனவுகள் முழுதும் 
    நீ வராத நாள் இல்லை.

    நீ ம்ம் என்று சொல்லி பார்
    உன் கூடவே வருவேன்.
    என் எடை ஒத்துழைத்தால்
    அந்த கூடலூர் 
    கூடையில்கூட
    வருவேன்!