Jan 28, 2013

முருகா? ஊறுகா? (தைப்பூசம் ஸ்பெஷல்)

தைப்பூசம் திருவிழா சிங்கையிலும் மலேசியாவிலும் ரொம்ப விமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருஷம் சனிக்கிழமை வந்ததால், யப்பா!!!! கூட்டம் கூட்டம் கூட்டம்!!! ஒரு முருகன் கோயில் இருந்து இன்னொரு கோயிலுக்கு கிட்டதட்ட 8கிலோ மீட்டர் நடக்கனும்.

சனி இரவு 11 மணி அளவில் பால் குடம் தூக்கி சென்றவர்கள் ஏராளம். அக்கா, பக்திமான் என்பதால் பால் குடம் தூக்கி சென்றார். தங்கைக்கு இந்த வருஷம் result வருவதால் அவரும் பால் குடம் தூக்கி சென்றார். நம்ம மட்டும் சும்மா இருந்தால், வீட்டில் சோறு கிடைக்காது என்பதால் நானும் தூக்கி சென்றேன் ஒரு பால் குடத்தை... பால் குஜாவை! அக்கா, தங்கை, அப்பா அனைவரும் தொடங்கும் இடத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தார்கள். அம்மாவால் அதிக தூரம் நடக்க முடியாது என்பதால் நானும் அவரும் பாதி வழியில் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தோம். (இதுக்கு தான்..இந்த பில்டப்- பா-னு கேட்காதீங்க!!)

பக்தி-விரதம்-பூஜை-நேர்த்திகடன் - இதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை உண்டு. எனக்கு தெரிந்த ஒரே மந்திரம்
"போடா....அந்த ஆண்டவனே நம்ம பக்கம்". நான் கடவுளை வணங்குகிறேன் என்று காட்டி கொள்வதில் அதிகம் ஆர்வம் கிடையாது. இந்த அறக்கருத்துகளை சொன்னால், அரை விழும் என்பதால் 'ஊருடன் ஒத்து' வாழ்ந்தேன் தைப்பூசம் அன்று.

அக்கா, தங்கை, அப்பா நடந்து வரும்போது விடியற்காலை 2 ஆகிவிட்டது. கோயில் அருகே கூட்டநெரிசல் அதிகமானது. ரொம்ப நேரம் காத்து இருந்தோம்!

அப்போது நடந்து சில காமெடிகள்.

1) சரி வேண்டுதல் பெரிசா ஒன்னுமில்ல எனக்கு. இருந்தாலும், கடவுள்கிட்ட நல்ல ஆரோக்கியத்திற்காக வேண்டினேன். ஆனால், 2 மணி நேரத்துக்கு மேல் காத்து கொண்டிருந்தமையால் முதுகு வலியே வந்துவிட்டது!:))

2) கோயில் அருகே வந்தபோது விழா அமைப்பாளர்கள் 'பக்தர்கள் விரைவாக நேர்த்திகடனை செலுத்திவிட்டு போங்க.' என்றபோது பக்கத்தில் நின்றவர்கள்

'அடேங்கப்பா, முதல கோயில்குள்ள விடுங்க சாமி' என்றனர்.

3) 'ஓம் முருகா' என்று ஒருத்தர் ஒலிபெருக்கியில் சொன்ன போது, எங்கள் காதுகளில் 'ஓம் ஊறுகா' என்று கேட்க குபீர் சிரிப்பு வந்துவிட்டது.

4) பக்தர்கள் நடக்கும் பாதையில் ஒரு அறிவிப்பு பலகை- "மது அருந்திவிட்டு செல்ல வேண்டாம். புகை பிடிக்காமல் இருக்கவும்"

ஹாஹாஹா....பக்தி என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் கூத்துக்கு இது ஒரு பதிலடி!

5) இரண்டு வெள்ளைக்காரர்கள் கூட்டத்தில் மாட்டிகொண்டனர். சும்மா நடந்துவிட்டு கோயிலுக்குள்ள போகலாம்னு நினைச்சு இருப்பாங்க போலும். ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றதால், தாங்க முடியாமல் அவர்கள் கூட்டத்தில் மோதி எப்படியோ 'தப்பி' சென்றனர்.

*********************
மனதை கடவுள் என்று நினைச்சு நல்லது பண்ணாலே தினம் தினம் தைப்பூச திருவிழா தான்!!

Jan 11, 2013

மச்சான், அவள் என்னை பார்த்து சிரிச்சா டா!


ஆபிஸில் யதேர்ச்சியாய் 
நீ என்னை
பார்த்து புன்னகையித்தபோது
புரிந்தது,
'யோகம் அடிக்கும்' என்ற
காலெண்டரின் வாசகம்.



நீ ஆபிஸ் வராத
நாட்களில்
நான்
சன்யாசியாய் வாழ்கிறேன்!



நீ நடத்தும் ஒவ்வொரு
'மீட்டிங்'- 
உன் அழகும்
நானும் போகும்
'டேட்டிங்'



அழகு கோபபட்டால்
எப்படி இருக்கும்?
அன்று ஒரு நாள்
நீ உன் ஜீனியர்களிடம்
கோபப்பட்டபோது
கண்டு கொண்டேன்.



கண்ட நேரங்களில்
ஏற்படும் மின்சார தடை
நீயும் நானும்
ஒரே மின் தூக்கியில்
போகும்போது ஏற்பட்டதில்லை
இந்த கடவுளை
என்ன சொல்லி திட்டுவது?




அறிவில்லாத பாஸ்
தெளிவில்லாத மேனெஜர்
மூளையில்லாத டீம்
அனைத்தையும்
சகித்து கொள்கிறேன்
சகியே, நீ இருப்பதால்! 

Jan 8, 2013

love stop- குறும்படம்

சும்மா ஒரு நாளைக்கு, படம் எடுப்போம்-னு பேச ஆரம்பிச்சு அப்பரம் உண்மையாகவே ஒரு குறும்படம் எடுத்து முடித்தோம்.

5 hours of filming
4 crew member
3 locations
2 actors
1 love stop

இந்த வாசகத்தை இப்படத்தின் ஹீரோ/எடிட்டர் எழுதியது!

ஆமா, உனக்கு இதுல என்ன வேலை-னு கேட்கறது புரியது. direction/கதை/இசை தேர்வு!

படத்தகூட எடுத்துட்டோம். அதுக்கு அப்பரம், எடிட்டிங் வேலை இருக்குதே, யப்பா!!!!!!!!! அது தான் உண்மையிலேயே பெரிய வேலை. ஆனா, ஒரு உண்மையை புரிந்து கொண்டேன். கதையை எழுதிவிடலாம். ஆனால், அதை மறுபடியும் செதுக்குவது எடிட்டிங்  தான்!!

படத்தை பாருங்க! பிடிச்சிருந்தால், share பண்ணுங்க! பிடிக்கலன்னா, எப்படி இன்னும் செதுக்குவது-னு சொல்லுங்க!!!:)))


Jan 3, 2013

நடுவுல கொஞ்சம் 2012 காணும்!!

என்ன ஆச்சு!
2012 calendar வாங்கினேன்.
கிழிச்சேன்.
ஓ..ஓ..ஓ....அப்படி பறந்து போச்சே!!
ஒகே ஒகே ஒகே

*************************************************************
2012 இவ்வளவு சீக்கிரம் பறந்து போகும்னு நினைக்கல! அப்படி 2012 என்ன தான் பண்ணோம்னு யோசிச்சு பார்த்தா...ம்ம்ம்....எதையும் அப்படி ஒன்னும் பெரிசா பண்ணியிருக்க மாட்டே நீ அப்படினு நீங்க சொன்னீங்கன்னா அது தப்பு!

ஐரோப்பா பயணம்


டிசம்பர் மாதம் 13 நாள் சென்ற பயணம்! வாழ்க்கைல மறக்க முடியாத பயணம். அந்த 13 நாட்கள் அப்படினு ஒரு புத்தகமே எழுதலாம்!!! குளிர் காற்று, பனி, சாப்பாடு...ச்சே...இதலாம் திரும்பி வரவே வராது!!

குறும்படம்

சும்மா ஒரு பேச்சுக்கு ஆரம்பிச்சு, கடைசில உண்மையாகவே ஒரு குறும்படத்த எடுத்தோம் நானும் எனது 3 நண்பர்களும். சும்மா ஜாலிக்காக எடுத்த படம் தான். 3 மணி நேரத்தில் எடுத்த படமாக இருந்தாலும், அதுக்கு அப்பரம் நடந்த எடிட்டிங் வேலை இருக்கே!!! யப்பா!!! வேலை செய்யும் இடத்தில் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் இந்நேரம் promotion கிடைச்சு இருக்கும். :(((( சரி விடுங்க அந்த சோக கதை இப்ப வேணாம்.
 (குறும்படம் சீக்கிரம் வெளியிட படும்)


தோழியின் கல்யாணம்+ பார்ட்டி

நெருங்கிய தோழியின் கல்யாணம்! நல்ல படியாய் முடிந்தது! மாலை reception முடிஞ்சு விடிய விடிய ஆடிய ஆட்டம் மறக்கவே முடியாது!!! அதிலும் இன்னொரு தோழன் masters graduation முடித்தவன். அதற்கும் சேர்த்து கொண்டாட்டம்! மறக்க முடியாத ஒரு நாள்!

எந்த கடையில நீ அரிசி வாங்குற?

என் வலைப்பூவை தொடர்ந்து படித்தவர்களுக்கு தெரியும்....3 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாய் 13கிலோ குறைத்தேன். அதுக்கு அப்பரம் வேலைக்கு போனபிறகு 10கிலோ இடை கூடியது!:(((( இந்த 2.5 வருடங்களில் 10கிலோ அதிகரிப்பு!!! ச்சே என்னடா வாழ்க்கை இதுனு நினைச்சு, இப்ப மறுபடியும் தீவிரமாய் 'கோதா'வில் இறங்கிவிட்டேன்.

கடந்த 4 மாதங்களில் 5கிலோ குறைத்துவிட்டேன். தினமும் 3கிலோ மீட்டர் ஓட்டம், இரவு சாப்பாடு அளவை குறைத்துவிட்டேன். நமக்கு புடிச்ச ஜீன்ஸகூட போட முடியாமல் இருக்கும்போது மனசு வலிக்குதே!!! ஆக, இன்னும் 4 கிலோவை குறைத்தால் போதும்!!! so once கோதாவுல இறங்கிட்டோம், நம்ம தாதா தான்!!

இன்று அதற்கு பிள்ளையார் சுழியாய், 5 கிலோ மீட்டர் ஓடினேன் 35 நிமிடங்களில்!!!

#நம்பிக்கை தான் வாழ்க்கை#

எல்லா வருஷமும் நல்ல வருஷம் தான்! ஆனா, அதுல மண்ணு அள்ளி போடுற மாதிரி சில ஆசாமிகள் இருப்பாங்க....அவங்கள சமாளிச்சு, இந்த 2013 வருஷத்தை நல்ல வருஷமாக அமைத்து கொள்ள எல்லாருக்கும் வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன்.