Aug 28, 2012

Cocktail mix- மதுபான கடை, அட்டகத்தி, நான்!

மதுபான கடை, அட்டகத்தி, நான் ஆகிய படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. (எப்படி மா உனக்கு நேரம் கிடைச்சதுலாம்னு கேட்க கூடாது!)

3) மதுபான கடை- கதையே இல்லாமல் மொக்கை படம் எடுப்பதைவிட, இந்த மாதிரி சுவாரஸ்சியமான படம் எடுப்பது ஒரு வகையில் நல்லா தான் இருக்கு. குடிக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதுபோல் முற்றிலும் குடிக்காரர்களை பற்றி தான் படம். நையாண்டி, நக்கல், கிண்டல், அதில் கொஞ்சம் காதல் என படம் நகர்கிறது.

இந்த நீதிமன்றம் விஜித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது என பராசக்தி வசனம் போல் இப்படமும் பல விஜித்திர கதாபாத்திரங்களை கொண்டுள்ளன.

'என்னடா இது' கதையே இல்லாமல் போகுது என ஒரு சில இடங்களில் தோய்வு ஏற்பட்டாலும், சரி என்ன தான் நடக்குதுனு பார்த்து முடித்தேன்.  படத்திற்கே பலமே வசனங்கள் தான்.





DVDல பார்க்கலாம் படத்தை! anyway, tasmarc கடையலாம் மூட போறாங்களா? உண்மை செய்தியா, மக்களே!!?

2) அட்டகத்தி- படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் பாடல்கள்!!! 'ஆடி போன ஆவணி' பாடல் செம்ம சூப்பர் ரகம். வெங்கட் பிரபு உதவி இயக்குனர் என்பதினால் என்னவோ தெரியல இப்படத்திலும் கதை ஒன்றும் வலுவா இல்ல. நல்லா பொழுதுபோக்கு படம்.

பேருந்தில் காதல், கானா பாடல், காமெடி என படம் போகிறது. அவ்வபோது சென்னை 28 படம் ஞாபகத்திற்கு வந்துபோனது.

படம்- ஒரு முறை பார்க்கலாம் (2-in-1 dvdல)

1) நான் - பார்த்த மூனு படங்களிலேயே ரொம்ப பிடிச்ச படம். கதை, திரைக்கதை எழுதிய ஜீவா சங்கருக்கு முதல் பாராட்டு. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி சரியா இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தமைக்கு இன்னொரு பாராட்டு.

சும்மா, புரியாத வார்த்தையா போட்டு பாட்டு அமைக்கும் விஜ்ய் ஆண்டனி மேல் இப்போ தனி மரியாதையே வந்து இருக்கு. படத்தில் ஒரு கட்டத்தில் நண்பன் இறந்த பிறகு, அந்த இருள் நிறைந்த ஹாலில் அழுவார் பாருங்க.....செம்ம சூப்பர் நடிப்பு (இது என்ன பெரிய நடிப்பு, எங்க தனுஷ் கூட தான் பின்னி எடுப்பார்னு சொல்வோருக்கு....போங்க தம்பி போங்க...போய் புள்ள குட்டிங்கள படிங்க வையுங்க!!)

மயாக்கலா பாடலும் தப்பெல்லாம் தப்பே இல்லை பாடலும் அருமையிலும் அருமை!

நல்ல திரில்லர் கதையில் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசிச்சு ஒருசில திருப்பங்களை சேர்த்து இருந்தால், இன்னும் நல்லா இருந்திருக்கும்னு தோனுது!

நான் - நாக்க மூக்க நாயகனின் மூக்கு மேல விரல் வைக்கும் ஒரு அற்புத படைப்பு!

(விஜய் ஆண்டனி தான் படத்தில் தயாரிப்பாளர்!)

Aug 18, 2012

போ டா!


விஷ்ணு சமையல் அறையிலிருந்து தான் சமைத்த உணவுகளை ஹாலில் இருக்கும் மேசையில் வைத்தான். மதியம் 2 ஆகியது. உடல் நலமில்லாத அமுதா அப்போது தான் எழுந்து வந்தாள். ஹாலில் விஷ்ணுவை பார்த்தவுடன்,

"ஹாலோ மிஸ்ட்டர்? யாரு நீ?" என்றபடி சோபாவில் மெல்ல உட்கார்ந்தாள்.

புன்னகையித்தபடி விஷ்ணு, " தலவலி போச்சா? " என்றான்.

"தலவலினு யாரு சொன்னா?" என்றாள் அமுதா.

"இல்ல மா...உனக்கு அடிக்கடி தலவலிக்குமே! உடம்பு சரியிலேனு சொன்னீயே...அதான்...." என இழுத்தான்.

"anyway, you have not answered my question. யாரு நீ-னு கேட்டேன்?" என கூறிவிட்டு அமுதா செய்தித்தாளை புரட்டினாள். மேசையை ஒரு முறை துடைத்துவிட்டு, சோபாவில் அவள் அருகே உட்கார்ந்தான் விஷ்ணு.

"என்ன கோபமா?"

"i don't like to talk to strangers." என்றாள் அமுதா அவனின் முகத்தை பார்த்து.

"நான் stranger ah? உன்ன தொடாம தாலி கட்டின ரொம்ப innocent husbandயா நான்!!" என்று சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தான். அவள் முறைத்துவிட்டு பேசாமல் இருந்தாள்.

விஷ்ணு, " ஜோக் கேட்டால் சிரிக்கனும். முறைக்க கூடாது."

அமுதா, "இன்னிக்கு ஆபிஸ் போகாம இங்க இருக்க?"

விஷ்ணு, "லீவு போட்டேன்."

அமுதா, "எதுக்கு?"

விஷ்ணு, " மேனெஜர்கிட்ட... ஆபிஸ் விஷயமா 3 நாள் வெளியூர் போயிருக்கேன் சார். வூட்டுல பொண்டாட்டிக்குகூட சொல்லாம போயிட்டேன். அவள சமாதானப்படுத்த atleast ஒரு வாரம் வேணும்னு தான் கேட்டேன். அந்த bulb-u தலையன் ரெண்டு நாள் தான் கொடுத்தான். so இன்னிக்கும் நாளைக்கும் உன்கூட தான்!"

அமுதா, "பரவாயில்ல நீ போ. உனக்கு முதல் பொண்டாட்டி உன் ஆபிஸ் தானே."

விஷ்ணு, "ஹாஹாஹா... அத கட்டிக்குறேன். உன்னைய வச்சுக்குறேன்!"

அமுதா, "shut up!"

விஷ்ணு அவள் மடியில் இருந்த கையை பிடித்து, "jokes apart...I'm really sorry. இனி இப்படி நடக்காது.... really sorry." என்றான்.

அமுதா, "இந்த sorryய எவன் கண்டுபுடிச்சான்? அவன முதல உதைக்கனும்!" கோபத்துடன் கையை விடுக்கென்று எடுத்தாள். சமையல் அறைக்கு சென்று juice போடலாம் என்று சென்றபோது, மேசையில் இருந்த flaskலிருந்து orange juiceயை அவளுக்கு எடுத்து கொடுத்தான் விஷ்ணு.

"உனக்கு இந்த பிங் கலர் coffee mug தானே ரொம்ப பிடிக்கும்..." என்று பேச்சை மாற்ற முற்பட்டான். அவன் கொடுத்த ஜூஸை வாங்கி கொண்டு அவனை  கண்டுகொள்ளாமல் balconyக்கு சென்றாள். மத்திய வேளையில் குளிர் காற்று இதமாய் வீசியது. மேகங்கள் மழையை தாங்கிபிடித்து கொண்டிருந்தன. வானத்தின் நிறம் அழகாய் தெரிய, coffee mugடன் நின்று கொண்டிருந்த அமுதாவை தனது கைபேசியில் படம் எடுத்து கொண்டான்.

புகைப்படத்தை பார்த்த விஷ்ணு, "ப்ச்....என் பொண்டாட்டி அழகு டா!" என்று புகை படத்துக்கு முத்தம் கொடுத்தான். வேண்டுமென்றே அமுதாவை வேறுபேத்தினான்.

அவன் செயலை கண்ட, அமுதா, "stop it, விஷ்ணு."

"ஓய்! உனக்கு என்ன வந்துச்சு? என் பொண்டாட்டிய நான் கிஸ் பண்றேன். இது என் பிறப்புரிமை. யாரும் ஒன்னும் கேட்க முடியாது!" என்றுவிட்டு இன்னொரு முறை முத்தமிட்டான் புகைப்படத்திற்கு.

அமுதா juice அருந்தியபடியே, "பைத்தியமா வாழலாம்...ஆனா..." ஒரு வினாடி அவனைப் பார்த்து,

"ஆனா...பைத்தியத்தோட வாழ முடியாது!" என்றாள்.

சிரித்தவன், "சரி atleast சாப்பிட்ட பிறகாவது சண்ட போடலாம் டா. பசிக்குது பா எனக்கு! ப்ளீஸ்....வா சாப்பிடலாம்." என்று கெஞ்சினான்.

"நீ சாப்பிடு. எனக்கு பசிக்கல."

"அது எப்படி முடியும்? நான் செஞ்சத நானே சாப்பிட்டு சாவ சொல்றீயா?" என்று சொன்னதை கேட்டு, அமுதா,

"உனக்கு நல்லதே பேச வராதா?"

விஷ்ணு, "நல்லது தானே? பேசிட்டா போச்சு...." என்றவன் அவள் அருகே சென்று அவள் கன்னங்களை  கைகளால் தாங்கியவாறு,

"I love you." என்றான்.

அதற்கு அமுதா, "இதுக்கு நீ, முன்னாடி சொன்னதே better!"

வாய்விட்டு சிரித்தவன், "அட போ மா!! உன்னைய இந்த காலத்துக்கு சமாதானப்படுத்த முடியாது... நீ சாப்பிடலனா நானும் சாப்பிடல. எல்லாத்தையும் எடுத்து fridgeல வச்சுடுறேன்." என்றான். fridgeல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அறைக்கு சென்றான். அலமாரியில் தினமும் செய்யவேண்டிய வீட்டுவேலைகளின் பட்டியல் இருந்தது. அதை பார்த்துவிட்டு விஷ்ணு, மெத்தை உரைகளை மாற்றினான்.

அவன் வேலை செய்து கொண்டிருந்ததை அறை கதவு அருகே கைகட்டி நின்று பார்த்து கொண்டிருந்த அமுதா, "விஷ்...."

விஷ்ணு, "என்ன?" என்றபடி தலையணை உரைகளை கழட்டினான். அவன் பக்கத்தில் சென்று அவனது கையை பிடித்தாள் அமுதா.

"ஒரு அழகான பையன் கைய புடிச்சு இழுக்குறீயே, பஞ்சாயத்த கூட்டவா?" என்றான் விஷ்ணு.

புன்னகையித்து கொண்டு அமுதா, அவனை இறுக்க அணைத்து கொண்டாள். மழை சாரல் பொழிந்தது. குளிர் காற்று வேகமாய் வீச, இன்னும் இறுக்கி கொண்டாள் விஷ்ணுவை. அவன் நெஞ்சில் முகம் சாய்த்தாள். சற்று தலை தூக்கினாள் அமுதா, அவள் உதடுகள் அவனது கழுத்தை எட்டி பார்த்தன.

"இச்" வைத்தாள் கழுத்தில்.

"ஓ....மேடம் என்ன திடீர்னு மாறிட்டாங்க?"

வெட்கம் கலந்த புன்னகையுடன் அமுதா, "உன்கிட்ட ஒன்னு சொல்லனும்?"

தொடர்ந்தாள் அமுதா, "டாக்டர பாத்தேன் நேத்திக்கு. நிறைய tablets கொடுத்தாங்க..ம்ம்...and.... நமக்கு பாப்பா பொறக்க போகுது!" என்று சொன்னவுடன் மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

ஆச்சிரியம் அடைந்த விஷ்ணு, அமுதாவை பக்கத்தில் இருந்த மெத்தையில் உட்கார வைத்தான்.

"டாக்டர் வேற என்ன சொன்னாங்க?" அவனது கண்களில் ஒருவித படபடப்பு தெரிந்தது.

"டேய்...are you ok?? உனக்கு சந்தோஷமில்லயா?" என்றாள் அமுதா.

"ஐயோ அப்படி இல்லமா...திடீரெனு சொல்லிட்டீயா...எனக்கு என்னமோ..அப்படியே உலகமே....ஒரு மாதிரியா போச்சு...சாரி மா..எப்படி react பண்றதுனு தெரியல...சாரி சாரி..."

புன்னகையுடன் அமுதா, அவனது தாடையை பிடித்து, "நீ அப்பா ஆக போற?"

விஷ்ணு, "அப்ப இனிமேல....ஜோக்-கெல்லாம் அடிக்க முடியாதுல..."

அமுதா, "ஹாஹாஹா...டேய்... என்ன டா ஆச்சு உனக்கு?"

விஷ்ணு, "தெரியலங்க..."

அமுதா, "என்னது? ங்கவா?"

விஷ்ணு, "அம்மா ஆக போறீங்க..அதான்...மரியாத!"

அமுதா, "oh my god! you're so cute, I tell you." என்று புன்னகையுடன் அவன் முடியை கோதிவிட்டாள்.

விஷ்ணு உற்சாகத்துடன், " இது அன்னிக்கு...... "

அமுதா புருவங்களை சுருக்கி, "என்ன அன்னிக்கு?"

விஷ்ணு, " அன்னிக்கு உன் ப்ரண்ட் birthday party முடிஞ்சு..... late night வந்தோமே.. இது birthday party night baby தானே!!"

அமுதா, "ச்சி போடா!"

*முற்றும்*

Aug 14, 2012

ஒலிம்பிக்கில் நான் ரசித்தவை

இந்த வருஷம் ஒலிம்பிக்ஸ் ரொம்ப ஸ்பெஷல். புதிய விளையாட்டுகளை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு, நிறைய அதிரடி ஆட்டங்கள், ரசிக்க வைத்த இறுதி போட்டி, சய்னா நேவால், மேரி கோம், மைக்கல் பெல்ப்ஸ் நீச்சல்....இப்படி எத்தனையோ!

 1) சய்னா நேவால்- இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். இந்த விளையாட்டுக்கே ஒரு புத்துணர்ச்சி தந்து இருக்கிறார். வெண்கல பதக்க போட்டியில், சீனா வீராங்கனை பாதியிலேயே போட்டியை விட்டு விலகியதால் சய்னாவுக்கு பதக்கம் கிடைத்திருந்தாலும், இந்த அளவுக்கு அவர் வந்து இருப்பது ஒரு இந்தியர் என்ற முறையில் எனக்கு பெருமை தான்!

 desktop wallpaper சய்னாவின் படம் தான்!! இவர் கொடுத்திருக்கும் அனைத்து பேட்டிகளையும் யூடியுப்பில் பார்த்தேன். ஒரு நாளுக்கு 8-9 மணி நேரம் பயிற்சியாம். 17 வயது வரைக்கும் வெளியே சென்று படம்கூட பார்த்தது இல்லையாம். தோழிகள் யாருமே இல்லை. காலை எழுந்து பயிற்சி, மதியம் பயிற்சி, மாலை பயிற்சி! வாழ்க்கையை விளையாட்டாய் எடுத்துக்க கூடாது என்பார்கள்....இவருக்கோ அந்து விளையாட்டு தான் வாழ்க்கை! இப்படிப்பட்ட வீராங்கனைகளை மீது பெரிய மரியாதை உண்டு.

 2) மேரி கோம்- இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. இந்தியர் என்றுகூட பலரால் ஏற்றுகொள்ளாதவராய் இருந்து, இன்று இந்தியாவுக்கு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை தந்து இருக்கிறார். அரசாங்கம், ஜெயித்தால் தான் திரும்பி பார்க்கும். இன்று இவருக்கு பரிசு தொகை, வேலை, புதிதாய் பாக்ஸிங் பள்ளி தொடங்க இடம் ஒதுக்கீடு கொடுத்து இருக்கிறது அரசாங்கம். இதை முன்னாடியே செய்திருந்தால், இந்தியா பதக்கங்களை குவித்து இருக்கும்.

 (சித்தாப்பா பையனுக்கும் மச்சான் தம்பிக்கும் மட்டும் உதவி செய்தால், உலகிலேயேஅதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இப்படியே போய்விடும்)

 3) mexico Vs brazil- ஆண்கள் காற்பந்து இறுதி ஆட்டத்தை பார்த்தேன். brazil தான் ஜெயிக்கும் என்று உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் தனது முதல் கோலை போட்டது mexico அதுவும் 36 வினாடியில். சரியாக ஆடாததால் தோற்றனர் brazil என்பதைவிட, mexico அணியினர் நம்பிக்கையோடு விளையாடியதே அதன் வெற்றிக்கு காரணம் எனலாம். 

எனக்கு இப்ப பில்லா வசனம் தான் ஞாபகத்துக்கு வருது "இது ஆசை இல்ல. பசி!!" mexicoவின் பசி!

 4) USA Vs Japan- பெண்கள் காற்பந்து இறுதி ஆட்டம். ஜப்பான் பெண்கள் அணியின் அதிரடி முன்னேற்றம் இன்னும் சில வருடங்களில் விஸ்வரூபம் எடுக்கும். எனக்கு தெரிந்த உள்ளூர் காற்பந்து பயிற்சியாளர் ஜப்பான் சென்று வந்திருக்கிறார். அவர் சொன்னது, " ஜப்பானியர்களுக்கு இருக்கும் சுய ஒழுக்கம் வேறு எந்த நாட்டிலும் காண இயலாது"

 அதாவது பயிற்சி முடிந்து அவர்களே இடத்தை சுத்தம் செய்வார்களாம். சொல்வதை கேட்டு கொள்வார்களாம். எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார்களாம். அதனால் தான் இன்று சிறப்பாய் விளையாட முடிந்தது. அமெரிக்கா ஜெயித்தாலும், ஜப்பானிய பெண்களின் விடாமுயற்சியை பாராட்ட வேண்டும்.

 5) மைக்கெல் பெல்ப்ஸ்- நீச்சலில் பல சாதனைகள். இத்துடன் நீச்சல் விளையாட்டிலிருந்து விலகி கொண்டார். கிட்டதட்ட retirement மாதிரி. வயது 27 ஆகுது!!

  (*ம்ம்....நானும் வேலையிலிருந்து இப்படி retirement வாங்கிகலாமானு பாக்குறேன்!!)

 கிடந்த சில நாட்களாய் ரசித்த ஒலிம்பிக் ஒரு முடிவுக்கு வருகிறது என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தமா இருக்கிறது. தொடர்ந்துகிட்டே போக இது என்ன ஆபிஸ் மீட்டிங்கானு நீங்க கேட்குறது புரியது!! அடுத்த ஒலிம்பிக்-காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

 anyway, இந்த வார இறுதியில், ஓட்டம், காற்பந்து, நீச்சல், badminton ஆகியவற்றில் ஈடுபட்டேன். thanks to olympics!! 4 வருஷத்துக்கு ஒரு முறை, நானும் உடற்பயிற்சி செய்தேன் என்று வரலாறு சொல்லட்டும்!

Aug 2, 2012

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-21


ஹீரோலாம் தாடி வச்சிகிட்டு, மூஞ்சி கழுவி 17 நாள் ஆன மாதிரி இருக்காங்க!! அதனால் என்னவோ வில்லன்களாவது அழகாய் காட்ட வேண்டிய கட்டாயம் வந்திருக்கு!

இப்பலாம் வில்லன் தான் அழகா இருக்காங்க. அதுக்கு ஒரு உதாரணம் தான் இவன்...சாரி இவர்! பில்லா படத்தில் வரும் வில்லன் - vidyut jamwal. இவர் 'force''எனும் ஹிந்தி படத்தில் வந்திருக்கிறார். இந்த french beardலாம் எல்லாருக்கும் பொருந்தாது! இவருக்கு..ம்ம்ம்...செம செம செம!! முகம் அமைப்பும் இவரின் சிறப்பு அம்சமாகும்!

இவரை மாதிரியே இன்னொருவர் இருக்கிறார். உலகத்தில் 7 பேர் ஒரே மாதிரி இருப்பது உண்மை தான் போலும்!


இவர் பெயர்- godfrey gao. taiwanese supermodel. இவரை பார்த்தவுடன் தோன்றிய பாடல்

"கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?" :))))))))))))))))))))))