Dec 28, 2007

ஓடி போயிட்டா..

'என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு'

என்று செல்போன் ரிங்டோனாக பாடல் ஒலித்தது நிஷாவின் செல்போனில். பாதி தூக்கத்தில் கண் விழிக்க முடியாமல் தன் தலையணை கீழ் கிடந்த கைபேசியை எடுத்து பேசினாள்.

"ஏ செல்லம், நீ இன்னும் என்ன பண்ணுறே? நேத்திக்கு நம்மா plan பண்ணபடி 7 மணிக்கு பஸ் டாப்புல வேட் பண்ண சொன்னியா இல்லையா... உன்ன நம்பிதான் எல்லாத்தையும் பண்ணேன். 715 ஆச்சு... எங்க நீ?" என்றான் பஸ் டாப்பில் நிஷாவிற்கு காத்து கொண்டிருந்த ராகுல். தூக்க கலக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்த நிஷா வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள். விரிந்துகிடந்த தன் கூந்தலை கட்டிகொண்டே ராகுலிடம் பேசினாள், " ஏய் சாரி பா, கொஞ்சம் தூங்கிட்டேன். நீ நேத்திக்கு plan சொன்னதேலிருந்து எனக்கு தூக்கமே வரல. இது எல்லாம் சரியா வருமா?" என்றாள் சற்று பயத்துடனும் சந்தேக்கத்துடனும்.

ராகுல் சும்மாவே டென்ஷன் பார்ட்டி. கடுப்புடன் " ஆமா நான் மட்டும் என்னவா... தினமுமா இப்படி பண்ணுறேன். ஏதோ நீ சொன்னதுனால நானும் ஓகே சொல்லிட்டேன். உன்னைய மாதிரிதானே நானும். சரி சரி... சிக்கிரம் கிளம்மி வா."நிஷாவுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. தன் அறையின் கதவை திறந்தாள். வீட்டு கதவு, சன்னல் அனைத்தும் மூடியே இருந்தது. யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. நேற்று இரவு வீட்டில் நிஷாவின் அம்மா, அப்பா, தம்பி, வீட்டு வேலைக்காரி அனைவரும் 'காதல்' படம் பார்த்துவிட்டு இரவு 12 மணியளவில் தான் தூங்கினார்கள். நிஷா அவர்களோடு படத்தை பார்க்காமல் தனியே தன் அறையில் ராகுலிடம் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தாள்.

கிச்சுனு இருந்தது வீட்டு, காலையில். நிஷாவுற்கு மனதில் படுபடுவென்று அடித்தது. முகத்தை மட்டும் கழுவி கொண்டாள். எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. குடும்பத்தார் படுத்திருந்த அறைகளின் கதவுகளை சத்தமின்றி திறந்து லேசாக பார்த்தாள். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்து இருந்தனர். தன் கையில் இருந்த கைபேசி முணுமுணுத்தது. ராகுலிடமிருந்து ஒரு மெஸ்சேஜ்- ' ஏய் செல்லம், சாரி பா, கொஞ்சம் டென்ஷனாயிட்டேன். அதான் அப்படி பேசிட்டேன். சாரி! anyway நான் எடுத்துட்டு வர சொன்னத, மறக்காம கொண்டுவா... don't forget... இட் ஸ் வெரி important. those 2 things...' என்று பாதி ஆங்கிலத்திலும் பாதி தமிழிலும் கலந்து கலந்து அனுப்பியிருந்தேன்.

நிஷா அவற்றை எடுத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆனால், சொல்லாமல் போகிறோமே என்ற வருத்தம் நெஞ்சில் பாய்ந்தது. அதனால் நிஷா வீட்டு மேசையில் கிடந்த ஒரு காகிதத்தில் ஏதோ எழுத ஆரம்பித்தாள்.. எழுத்திவிட்டு அங்கே வைத்துவிட்டு சென்றாள். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராகுலை பார்த்துவிட்டாள். அவனை நோக்கியபடி மெல்ல நடந்தாள்... சற்று குழப்பத்துடன்.

"ஏய் செல்லம்... குட் மார்னிங். யூ ஓகே?" என்று வினாவினான் ராகுல், நிஷாவின் வேர்த்து கொட்டிய முகத்தை பார்த்தவுடன். நிஷா தன் முகத்தை துடைத்து கொண்டு 'ஒன்றுமில்லையே' என்றவாரு முகம் பாவம் செய்தாள். இருவரும் பேருந்தில் ஏறினர். இறங்கவேண்டிய இடம் வந்தது. ஒரு பெரிய கட்டடம் தெரிந்தது நிஷாவின் கண்கள் முன். "சரியா வருமா?" என்றாள் நிஷா ராகுலின் கையை பிடித்து.

"ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா? நம்மல மாதிரி எத்தனையோ பேரு இப்படிதான் செய்வாங்க.. சோ don't worry." என்று ஆறுதல் கூறினான் ராகுல்.

(அப்படியே உங்க கேமிரா கண்களை நிஷா வீட்டிற்கு திருப்புங்க..)

நிஷாவின் அப்பா மேசையில் இருந்த கடிதத்தை படித்துவிட்டு, தன் மனைவியிடம் நீட்டினார், " உன் பொண்ணு நம்மகிட்டு சொல்லாம என்ன பண்ணிட்டா பாரு." கடிதத்தை படித்துவிட்டு நிஷாவின் அம்மா புன்னகையிட்டார். நிஷாவின் கைபேசிக்கு அழைத்தார்.

ராகுல் தான் எடுத்தான். "ஹாலோ ஆண்டி.. எப்படி இருக்கீங்க..." என்றான்.

"ஹாலோ ராகுல், am fine. how about u? ஹாஹா.. நிஷா சீக்கிரம் கிளம்மி போயிட்டா.. நாங்கலாம் இப்பதான் எழுந்திருச்சோம். அதான் நிஷா ஒரு தாள்ல gym போயிருக்கேனு எழுதி இருந்தாள். அத பார்த்து தான் போன் பண்ணேன். ஹாஹா.. ராகுல்.. நான் ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருந்தேன் அவகிட்ட... gym போ... உடம்ப குறையினு... இப்ப தான் புத்தி வந்து போயிருக்கா... சரி அவ ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டாளே.. எதாச்சு எடுத்துகிட்டு வந்தாளா?" என்றாள் நிஷாவின் அம்மா.

"ஓ.. இல்ல ஆண்டி... வெறு வயத்துல...exercise பண்ணாதான்... அந்த fats எல்லாம் குறையும். நான் அவகிட்டு ஒரு small towelலும் water bottleலும் எடுத்துட்டு வர சொன்னேன். அது போதும் ஆண்டி... " என்றான் ராகுல்.

"ஓ அப்படியா.. சரி நீங்க இரண்டு பேரும் நல்லா gymக்கு போய் உடம்ப குறைச்சா சரி." என்று சிரித்து கொண்டே நிஷாவின் அம்மா சொன்னார். அதுக்கு தானே வந்துருக்கோம் என்பது போல் ராகுலும் சிரித்தான்.

"சரி செல்லம் என்ன பண்ணுது இப்ப... ச்சி i mean நிஷா... உங்க கூட்டாளிங்க செட் பசங்க அவள செல்லம் செல்லம்னு கூப்புட்டு எனக்கும் ஒட்டிகிச்சு. where is நிஷா?" என்று கேள்வியுடன் முடித்தார் அம்மா. அதற்கு ராகுல் சொன்னான்,

"ஆண்டி.. செல்லம்... ஓடிகிட்டு இருக்கா!!"

------------------------முற்றும்-------------------------------

Dec 19, 2007

ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்!!

ஆத்தா.. நான் pass பண்ணிட்டேன். ஆமாங்க.. இந்த semester முடிவுகள் வெளிவந்துவிட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தேர்வு, டென்ஷன்,இத பத்தி எல்லாம் இங்க பதிவு போட்டேன்.





http://enpoems.blogspot.com/2007/11/blog-post_21.html





இப்ப சாயந்தரம் தான் முடிவுகள் வெளிவந்துச்சு! எதிர்பார்த்ததுவிட நல்லாவே வந்துருக்கு!! யப்பாடா... இப்பதான் பெருமூச்சு விடமுடியுது!

Dec 15, 2007

பில்லா 2007

முதல் நாள் முதல் காட்சி, அஜித் படம்னா சும்மாவா!! அடிச்சு புடிச்சு டிக்கெட் வாங்கிட்டோம்!! ஒரே கூட்டம். வெள்ளிக்கிழமை மதியம் காட்சிக்கு இவ்வளவு கூட்டமா (யாருமே வேலைக்கு போகலைனு நினைக்கிறேன்.) பள்ளி விடுமுறை என்பதால் சின்ன பசங்கதான் வருவாங்க என்று நினைத்தேன். அங்கபோய் பார்த்தா ஒரே அஜித் ரசிகர்கள்!(கொஞ்சம் ரகளை செய்யும் ரசிகர்ள் தான்) ஒரே விசில் சத்தம்..... எங்க அம்மா சும்மாவே டென்ஷன் பார்ட்டி. இந்த சத்தத்துல எங்க அம்மா செம கடுப்புல இருந்தாங்க வேற.

சரி கதை, அதே பழைய பில்லா கதை தான். திரைக்கதை கொஞ்சம் மாற்றம் பெற்று இருந்தது. ஆனால் விறுவிறுப்பு கிடையாது. இரண்டாம் பாதியில் படம் ரொம்ப 'போர்' அடித்து விட்டது. லாஜிக் பல இடங்களில் இடித்தது.

இருந்தாலும் 2007 வருடத்தில் ரொம்பவே எதிர்பார்த்த படம் ஆச்சே!! 'தலை'க்கு ரொம்பவே முக்கியமான படம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு 'stylish' படம் வந்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. படம் படு ஸ்டைலாக இருந்தது. இடம், சண்டை காட்சிகள், கார் பந்தயம், போடும் உடைகள் என்று எல்லாம் வடிவிலும் படு ஸ்டைலாக வருகிறார் தல!!
வசனங்களும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது.

"அந்த வேலுக்கு ஆறு தல. நான் ஒரே தல.' என்று சொல்லும்போது என் சித்தி பெண்ணு (12 வயது தான்) கைதட்டுது தட்டுது.... ஒரே குஷியாகிவிட்டது அவளுக்கு! பயங்கர விசில் சத்தம். 'தல'க்கு ரசிகர்கள்விட ரசிகைகள் அதிகமாகும் இந்த படம் மூலம்... அது மட்டும் நிச்சயம்! பாடல்கள் நல்லா இருக்கு! பிண்ண்ணி இசை ரொம்பவே அழகா இருக்கு. யுவன் தன் வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

பிரபு, ரகுமான்... மற்ற மலேசியா நடிகர்கள் என்று பலரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் சில இடங்களில் பிரபு வரும்போது சிரிப்பு வந்துவிடுகிறது... அவர் சீரியஸா நடித்தால்கூட... என்ன கொடுமை சரவணா இது!!! நயன்தாரா... என்ன இப்படி மெலிஞ்சு போச்சு புள்ள! என்னதான் செய்தாளே, புள்ள படு சிலிமாக வருது... ஆனால் நடிப்புக்கு ஒன்னும் வேலை கிடையாது. நயன் போடும் உடைகள் சகிக்கவில்லை. இதில் கொடுமை, நயன் நீச்சல் உடையில் வேற வரும்... கொடுமை கொடுமை (சிம்பு காதுல.. புகை புகையா வர போகுது சாமியோ!!) நமிதாவும் தேவையில்லை. ஆனால் அதுக்கும் ஒரு பாட்டு, சில வசனங்கள். இது முழுக்க முழுக்க அஜித் படம், ஆகா பெண் கதாபாத்திரங்கள் தேவையில்லை!!

படம் பார்க்க போது படு ஸ்டைலாக இருக்கும், ஆனால் மற்றபடி ஒன்னும் புதிது அல்ல.எங்க அம்மாவுக்கு படம் சுத்தமா பிடிக்கல. ஆனா அவங்க சொன்னது 'இந்த படம் மூலம் இரண்டே இரண்டு நல்ல விஷயம் நடக்கும். கறுப்பு 'கூலிங்' கண்ணாடிகளின் விற்பனை அதிகரிக்கும். அடுத்து, மலேசியாவுக்கு போகும் சுற்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.' அது உண்மை தான். ஏனா... மலேசியாவை ரொம்பவே அழகாவே படம் பிடித்து காட்டியுள்ளனர்!!

பில்லா- 'ஓகே' லா

Dec 11, 2007

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?


மாற்றம் கண்டுள்ளது
பல விஷயங்களில்
மாற்றம் காணவேண்டிய
சில விஷயங்களில்
கண்டுகொள்ளாமல்
இருக்கிறது
சிங்கார சென்னை!
சில வருடங்களில்
எத்தனையோ வளர்ச்சி
மெய்சிலிர்க்க வைக்கும்
அடுக்குமாடி கடை அங்காடிகள்
சென்னைக்குள் ஒரு
நியூ யோர்க் பார்த்தேன்
சென்னைக்குள் ஒரு
ஹாங் காங் பார்த்தேன்!

வசதிகள் பெருகிவிட்டன
சினிமா டிக்கேட் முதல்
சாப்பிடும் பிட்சா வரை
'door delivery'!


பணத்தை தண்ணீர் போல செலவு
செய்யும் ஒரு கூட்டம்
தண்ணீர்க்குகூட வசதியில்லாத
இன்னோரு கூட்டம்
மின்சாரம் சரிவர இல்லாத
இடங்களில்
எதற்காக
கம்பீரமாக நிற்கின்றன
ரசிகர் மன்றங்களின் பலகைகள்?

வீட்டுக்கு வீடு வாசப்படி
இருக்கிறதோ இல்லையோ
தெருவுக்கு தெரு 'டாஸ்மார்க்'!
மோட்டார் சைக்கில்
பாதுகாப்பு தலைகவசம்
தலையில் தானே அணிய வேண்டும்
அதை சும்மா பின்னாடி
வைப்பது ஏனோ?
சட்டம் தன் கடமையை 'செய்தது'
மரத்தின் நிழலடியில் இதையல்லாம்
கண்டுகொள்ளாத
காவலர்கள் ரூபத்தில்....

பள்ளிக்கு செல்லும் வயதில்
பணிக்கு செல்லாதே
ரொம்ப பிடித்த வாசகம்!
பெண்ணின் திருமண வயது 21-வாசகம்
போட்டிருக்கும் ஆட்டோவில்
நான் ஏறவே இல்லை!!
எத்தனையோ வாசகங்கள் இருந்தபோதிலும்
எனக்கு சிரிப்பை வரவழைத்தது
தினமும் சாலையில் செல்லும்போது
மூன்று முறையாவது கேட்டுவிடும்
'வூட்டுல சொல்லிட்டு வந்துட்டிய்யா?'