Jun 24, 2013

ஜஸ்ட் சும்மா(24/6/13)வில் Raajhnaa

படம் பார்த்தாச்சு! ராஞ்ஜனா படத்தில் வந்த Aaja aaja dil ke gaaon பாடலை கேட்ட முதல், தினமும் அப்பாடலை ஒரு முறையாவது கேட்பதுண்டு. அந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன். பாடல்கள் நல்லா இருந்தாலும், குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க போனேன்.

இப்ப வர எல்லாம் படத்துக்கும் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் போகிறேன்.

எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு ஒரு மகான் சொல்லியிருக்காரு!

ஆக, படம் எப்படி இருந்துச்சு?

நம்ம வீட்டு புள்ள முதன் முதலாக வெளியூர் போக போது என்றால் குடும்பமே ஏர்போட் சென்று வழி அனுப்பி வச்சு பெருமைபடுமே, அந்த மாதிரி தான் உணர்ந்தேன் தனுஷ இப்படத்தில் பார்க்கும்போது.  தனுஷ் நடித்த படங்களின் ரசிகை இல்லை. இருந்தாலும், ஏதோ ஒருவித பெருமை!

இப்படத்தில் 'ஏன்' நடித்தார் என்று தெரிந்துகொள்ள நீங்களே படத்தைப் பாருங்க.... (ம்ம்ம்.... டிவிடி வரட்டும்) அவருக்கு பிடித்த 3 பகுதிகள்- பள்ளி பருவம், வாலிப பருவம், அதுக்கு அப்பரம் பொறுப்பான பையன்.

சின்ன வயதில் காதல்,  துரத்தி துரத்தி காதல், அப்பரம் தோல்வி, ஹீரோயின் பிடிக்கவில்லை என்று சொல்ல, அப்பரம் கதை எங்கோ போய்....அரசியலை தொட்டு நிக்குது!

இசை- பரவாயில்ல

நடிப்பு- தனுஷ். பல தமிழ் படங்களில் பார்த்த நடிப்பு தான். ஹிந்திக்கு புதிதாய் தெரியும். ஹிந்தி ரொம்ப நல்லா பேசியிருக்கார்!

சோனம் கபூர் பரவாயில்ல. பள்ளி பருவ காலத்தில் அவர் தோன்றும்போது தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருந்தார். மேக்-கப் இல்லாமல் நடித்து இருக்கிறார். வாரிசுகளின் பெண்பிள்ளைகள் நடிக்கும்போது இது தான் பிரச்சனை. எனக்கு என்னமோ அவங்க அப்பா மாறுவேஷம் போட்டு நடிப்பதுபோல் தெரியும். (போடா போடி பார்க்கும்போது, தனிப்பட்ட முறையில் சிரித்தேன். )

நடிகைகளைப் பெற்ற நடிகர்களுக்கே தெரியும்
அது ஏன் காமெடி என்று!


தனுஷின் நண்பன் நடிப்பு அபாரம்! அபே டியோல் ஒகே நடிப்பு.

பனாரஸ் அழகிய காட்சிகள்.

பிடிக்காத விஷயங்கள்

1) 89774 முறை அறை கொடுக்கும் காட்சிகள்
2) தனுஷுக்கு தோழியாய் வருபவரை தேவையில்லாமல் அடித்து விளையாடும் காட்சிகள்.
3) கையை அறுத்து கொள்ளும் காட்சி
4) திடீர் திடீர்னு சோனம் கபூர் கதையைவிட்டு காணாமல் போய்விடுகிறார். அது ஏன்?
5) அரசியலை புகுத்தியது.


இந்த படத்தில் shahid kapoor நடிக்க வேண்டியதாக இருந்ததாம். அப்படினு ஒரு செய்தி படிச்சேன். அப்படி இருந்திருந்தால், கொஞ்சம் காசு மிச்சமாயிருக்கும். தனுஷ் என்னதான் பண்ணியிருக்கார் என்பதை பார்க்க தான் படத்தையே பார்த்தேன். நிறைய பேர் அதுக்கு தான் போய் இருப்பாங்கனு நினைக்குறேன்.

படத்தில் தெரிந்த தனுஷ்- சோனம் chemistryவிட அவங்க promotionகளில் தெறிக்கும் chemistry தான் பார்க்க நல்லா இருக்கு. ம்ம்ம்...பேசமா promotionகள மட்டும் பார்த்து இருக்கலாமோ!


*****************************************************

தற்போது முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல். புது ஹிந்தி படம் 'சென்னை எக்ஸ்ப்ரஸ்' படத்தில் வரும் 1,2,3,4 get on the dance floor!


*****************************************************

லீவு முடிச்சு வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்குது!

:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

******************************************************

இன்று ரசித்து பார்த்த ஒரு simple short film. ஒரு சிறுகதை படித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வை தந்தது இப்படம்!

முக்கியா கடைசி காட்சி- ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள். அவர்களே அவர்களுக்கு பிடித்த முடிவை அமைத்து கொள்ளட்டும் என்று சொல்லும் ஒரு படம்!


Jun 19, 2013

காதல் கவ்வும் (பகுதி 2)- சிறுகதை

பகுதி 1

காலை மணி 10 ஆனது. வாசல் கேட்-டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அஷ்வின். மாடியில் நின்று கொண்டிருந்தாள் அனிதா. அவன் வருவதை பார்த்தாள். ஆனால், ஒன்றும் அலட்டி கொள்ளாமல் அப்படியே நின்றாள்.

அஷ்வின் நேராக மாடிக்கு சென்றான். சாக்லெட் மில்க் ஷேக் குடித்தவாறு கைபேசியில் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்தாள். அனிதா அருகே வந்து நின்றாள் அஷ்வின். ஒன்றும் கேட்காமல் இருந்தாள் அனிதா. சிறிது நேரம் கழித்து, அஷ்வின்,

"ஐ எம் சாரி, அனிதா." என்றான். நடந்து வேறு பக்கமாய் சென்றாள் அனிதா. அவளை பின் தொடர்ந்தவன் மறுபடியும் அவள் பக்கத்தில நின்றான் அஷ்வின்.

"ஐ எம் ரியலி சாரி, மா. இனிமே இப்படி செய்ய மாட்டேன்." என்றான்.

"என்ன திடீரெனு ஞானம்?" என்றாள் அவள். பார்வை கைபேசியில் இருந்தது.

அவள் இடுப்பை அணைக்க, அவனது வலது கை சென்றது. அதை கவனித்தாள் அனிதா. தலை குனிந்து கைபேசியை பார்த்து கொண்டிருந்தவள், தலை நிமிர்ந்து அஷ்வினை பார்த்து முறைத்தாள்.

"ஒகே ஒகே. சாரி சாரி.... ஞானம் எல்லாம் ஒன்னுமில்ல" என்று சமாளித்தான்.


*************************************************************
இரவு மணி 11 ஆனது.

அஷ்வின் தனது நண்பன் ரமேஷிடம் நடந்ததை தொலைபேசியில் சொன்னான்.ரமேஷின் மனைவி,திவ்யா, வேலை விஷயமாக வெளியூர் சென்று இருப்பதால், தனது வீட்டிற்கு வர சொன்னான் ரமேஷ்.

அஷ்வின், "மச்சான்...நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன் டா..." என்றான் ரமேஷின் வீட்டு சோபாவில் உட்கார்ந்தவாறு. உட்கார்ந்தவன், சற்று சோபாவில் கைவைத்து பார்த்தான்.

"டேய்....ஏன் டா சோபா ஈரமா இருக்கு?" என்றான் அஷ்வின்.

தரையில் உட்கார்ந்திருந்த ரமேஷ் சோபா மேசையில் chips பாக்கேட்களை திறந்தபடி, " அதுவா? towelல அங்கே போட்டேன் டா...அதான்... நீ தள்ளி உட்காரு மச்சான்!"

தனது கால்சட்டை ஈரமாக போனதை சுட்டி காட்டி, "டேய்! ஈரமா போச்சு டா! நான் என்ன பண்ண?" என்றான் அஷ்வின்.

ரமேஷ், "ஐயீயே...ஏன் டா என் பொண்டாட்டி மாதிரியே எதுக்கு எடுத்தாலும் கத்துற?" என்று சிரித்தவன், "டேய் மச்சான், என் ரூம்ல போய் வேற shorts மாத்திக்கோ.

அறைக்கு சென்ற அஷ்வின் மறுபடியும் கத்தினான். வாயில் chipsகளை போட்டவாறு, ரமேஷ் அறைக்கு சென்றான். "என்ன மச்சான் உன் பிரச்சன?"

மெத்தையில் மலை போல் குவிந்துகிடந்த துணிகளை சுட்டிகாட்டிய அஷ்வின், "டேய் என்ன டா இது?"

ரமேஷ், "ஓ இதுக்கு தான் சத்தம் போட்டீயா? cupboard சுத்தம் செய்ய சொன்னா திவ்யா. போன வாரம் எடுத்து வெளியே போட்டேன். இன்னும் செய்யலடா."
ரமேஷ் அந்த 'மலை'யிலிருந்து ஒரு புது shorts எடுத்து அஷ்வின் கையில் திணித்தான்.

அஷ்வின், "இதலாம் எப்ப டா உள்ள எடுத்து வைக்க போற?"

ரமேஷ், "86 வருஷம் கொடுத்தாலும். பொண்டாட்டி வரத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான் சுத்தம் செய்யுவோம்!!! உனக்கு தெரியாதா மச்சான்?" என்றபடி ஒரு chips பாக்-கேட்-டை முடித்தான்.

ஹாலுக்கு மறுபடியும் வந்தனர். "உனக்கு சோடா மிக்ஸ் பண்ணனுமா வேண்டாமா?" கேட்டான் ரமேஷ். ஏதோ யோசனையில் இருந்தான் அஷ்வின்.
அஷ்வினின் தோளை தட்டினான் ரமேஷ்.

ரமேஷ், "டேய், சோடா வேணுமா?"

இருவரும் பேசி கொண்டே தங்களது கடமைகளை தொடங்கினர். ரமேஷ், "உன் சோகம் எனக்கு புரியது மச்சான். திவ்யாவும் அப்படி தான். இந்த ரெண்டு வாரமா நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா!! ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்!"

இரண்டாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.

அஷ்வின், "திவ்யாவுமா? she was our very good collegemate, மச்சான்."

ரமேஷ், "எல்லாமே friendஆ இருக்கும்வர தான். கல்யாணம் நடந்தா...அவ்வளவு தான். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாத. இத செய்யாத. ஏன் bill கட்டல்ல? காய்கறி வாங்கிட்டு வா. electrician கூப்பிட்டு. சித்தி பொண்ணுக்கு காது குத்து function.........ஐயோ ராமா!!" என்றவன் இரண்டாவது பாட்டில்லை திறந்தான்.

அஷ்வின், "ஏன் டா அப்படி?"

ரமேஷ், "திவ்யாவா இருந்தாலும் சரி, திரிஷாவா இருந்தாலும் சரி. கல்யாணத்துக்கு அப்பரம் பொறுப்பு வரும்னு எதிர்ப்பார்ப்பாங்க!! தக்காளி, அது தான் தமிழ்லே நமக்கு பிடிக்காத வார்த்தையாச்சே!!!."

மூன்றாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.

பேசி கொண்டு இருக்கையில், அஷ்வின், "டேய் ரொம்ப சூடா இருக்குது ஹால். ஹால் ஏ.சி switch on பண்ணுடா. "

ரமேஷ், "repair டா...."

அஷ்வின், "அப்பரம் ஏன் டா electricianஎ கூப்பிடல?"

ரமேஷ், "டேய்!! பொண்டாட்டி வைரஸ் உனக்கு வந்துருச்சுனு நினைக்குறேன்! ரொம்ப கேள்வி கேட்காத!!" என்றவன் மூன்றாவது பாட்டில்லை திறந்தான்.

போதை தலைக்கு ஏறியது ரமேஷ்க்கு.

அஷ்வின், "are you ok?"

ரமேஷ், "ஐ மிஸ் திவ்யா!!ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்!"  என கத்த ஆரம்பித்தான். அவனை சமாளிக்க முயன்றான் அஷ்வின்.

அஷ்வின், "ரெண்டு வாரம் சந்தோஷம். பொண்டாட்டி வைரஸ் அப்படி இப்படினு சொன்னே!"

ரமேஷ், "ohh izz it? நானா? நானா?" என்று சந்தரமுகி ஜோதிகா போல் நடித்தான். ரமேஷுக்கு ரொம்ப முத்தி போய்விட்டதால், அஷ்வின் அவனை அறைக்கு அழைத்து செல்ல முற்பட்டான்.

ரமேஷ், "உனக்கு ஒரு உண்மை தெரியுமா, அஷ்வின்?"

அஷ்வின், "என்ன?"

ரமேஷ், "இந்த ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கு. i really miss her da. i really love her."

அஷ்வின், "சரி ஒகே ரைட்டு. நீ கீழே விழுமா நடந்து வா" என்றபடி ரமேஷின் கையை பிடித்து கொண்டு அறைக்கு சென்றான்.

மேலும் 'உளறினான்' ரமேஷ், " கோபம் ரொம்ப வரும் அவளுக்கு. ஆனா ராத்திரி அப்படியே நாய்க்குட்டி மாதிரி வந்து நெஞ்சுல சாஞ்சி பா!! சாரி கேட்பா. அவ என்னோட முதல் பாப்பா.... சரியா பா?"

அஷ்வின் ஒரு வழியாய் அவனை அறை படுக்கையில் 'போட்டான்'.

ஹாலுக்கு வந்து சோபாவில் இவனும் விழுந்தான். யோசித்தான். ரொம்ப யோசித்தான்.

************************************************************************

"சொந்தமாவே யோசிச்சு. நான் செஞ்ஜது தப்பு-னு தோணிச்சு..." என்று பதில் சொன்னான் அஷ்வின்.

"நீ சொந்தமா யோசிச்சே?? சரி நம்பிட்டோம்...." நக்கல் அடித்தாள் அனிதா, அவனைப் பார்த்து.

தொடர்ந்தாள் அனிதா, "சொந்த புத்தி இருக்கறவன் தான் செத்து போக போறேனு சொல்வானா....என்னையும் செத்து போ-னு சொன்னே?" முகத்தை சுவர் பக்கம் திரும்பினாள் அனிதா.

"சேர்ந்து சாகலாம்னு ஒரு ஐடியா...அதான் திரும்பி வந்தேன்." புன்னகையித்தான் அஷ்வின்.

புன்னகை கலந்த செல்ல கோபத்துடன் அவனை முறைத்தாள் அனிதா.

அஷ்வின், "புன்னகை மன்னன் படம் பார்த்தீயா? அந்த மாதிரி. i am kamal. you are rekha."

அனிதா, "அப்ப கூட....நான் செத்து போய்டுவேன். நீ பொழைச்சுகிட்டு ஒரு ரேவதிகூட டான்ஸ் ஆடலாம்னு ஐடியா!"

காமெடியாய் பேசினோம் என நினைத்து புன்னகையித்த அஷ்வின், அவள் சொன்னதை கேட்டு சிலையாய் நின்றான். அவனது முகத்தில் தெரிந்த ஆச்சிரிய ரேகைகளை கண்டு வாய்விட்டு சிரித்தாள் அனிதா.

அனிதா, "லூசு...காலங்காத்தால...சாவு...அது இது-னு... நீ போய் தூங்கு. உன் கண்ண பாத்தாவே தெரியுது. ராத்திரி முழுக்க தூங்கலனு."

அஷ்வின், "நான் தூங்கறது இருக்கட்டும். நீ ரொம்ப சோகத்துல இருந்திருக்க போல..."

அனிதா, "உனக்கு எப்படி தெரியும்?"

அஷ்வின், "சோகத்துல இருக்கும்போது தான் சாக்லெட் மில் ஷேக் எல்லாம் குடிப்பாங்களா?"

விளையாட்டாய் சோகமாய் முகத்தை வைத்தவாறு, "ஆமா பா, ரொம்ப சோகம். அதான் சாக்லெட் மில் ஷேக்!"

அஷ்வின், "எனக்கும் வேணும்."

அனிதா, "அடடே முடிஞ்சு போச்சு. சரி கீழே வா செஞ்சு தரேன்." என்றவள் கீழே கிளம்பு முற்பட்டாள். அவள் கையை பிடித்து இழுத்து, சுவரோடு சாய்த்தான் அஷ்வின்.

அஷ்வின், "உன் உதட்டுக்கு மேல கொஞ்சம் இருக்கு. அது போதும் எனக்கு...."

காதல் கவ்வும்!!

*முற்றும்*

Jun 18, 2013

451வது பதிவு மற்றும் தில்லு முல்லு கொடுத்த அதிர்ச்சி!

முதலில் எல்லாருக்கும் பெரிய நன்றி! கடந்த 8 வருடங்களாய் இந்த வலைப்பூவில் எழுதி வருகிறேன். இது எனது 451வது பதிவு! ஆதரவு தந்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! இப்போது தான் ஆரம்ப கால பதிவுகளை சற்று புரட்டி பார்த்தேன்!!

ப்ப்ப்ப்பா!!! என சொல்ல வைத்தது. ஆரம்பகால பதிவு சிலவற்றை என்னாலேயே படிக்க முடியல இப்போ!  நீங்களெல்லாம் படித்து, ஊக்குவித்து நல்லபடியாய் கருத்து சொல்லி, இந்த அளவுக்கு வளர்த்துவிட்டு இருக்கீங்க! உங்க தைரியத்திற்கும் பொறுமைக்கும் மிக பெரிய நன்றி!

இன்னும் நிறைய எழுதனும்னு ஆசை. அதுக்கு எதிரியாய் வேலை என்ற விஷயம் இருந்தாலும், முடிந்தவரை எழுதுகிறேன்!

இன்னொரு முறை எல்லாருக்கும் நன்றி.

*******************************************************************************

தில்லு முல்லு படத்தை ரொம்ப குறைந்த எதிர்பார்ப்புடன் தான் பார்க்க சென்றேன். அந்த கொஞ்சம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அதிர்ச்சி கொடுத்துவிட்டது.

இன்றைய சூழலில் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய என்ன அவசியம்? பழைய தில்லு முல்லு கேசட் எல்லாம் அழிந்துவிட போகுதா என்ன?

புதுசா படத்தை எடுத்தா, அதை மட்டும் பார்த்து கருத்து சொல்லனும். compare எல்லாம் பண்ணகூடாது என்று மனதை ஒருநிலை படுத்தி படத்தை பார்த்தாலும், பழைய படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

காட்சிக்கு காட்சி ஒரு லிங் இல்லாமல் போகுது. முக்கியமான சில காட்சிகளை வைத்தே தீர வேண்டும் என்பதால் வலுகட்டாயமாய் திணித்த காட்சிகள் போல் தெரிந்தது. அப்பரம், அகில உலக நாயகன் சிவா....ம்ம்ம்.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!

இசை..ம்ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

பிரகாஷ்ராஜ்...வசூல்ராஜா படத்தில் இருப்பது போல் இருந்தார்...பரவாயில்ல...

சந்தானம் வந்தாலே கொஞ்ச 'பகீர்' என்று தோணுகிறது....அடுத்த என்ன மொக்கை அல்லது முகம் சுளிக்கும் வசனத்தை பேச போகிறாரோ என்று...இந்த படத்தில்...தேவையில்லாது கதாபாத்திரம்..


மொத்தத்தில் உப்பு திண்ணால் தண்ணீர் குடித்து ஆக வேண்டும் என்பதுபோல், இந்த தில்லு முல்லு படத்தை பார்த்தால், பழை தில்லு முல்லு படத்தை பார்த்தே தீர வேண்டும்.

ஆக, பழைய தில்லு முல்லு படம் மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடியுள்ளது!

Jun 12, 2013

காதல் கவ்வும்(பகுதி 1)- சிறுகதை

 நகை கடையில் ஷாபிங் முடிந்து காரில் வந்தார்கள் அஷ்வினும் அனிதாவும்.  காரில் ஒலித்து கொண்டிருந்தது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் 
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்

என்ற அலைபாயுதே பாடல். சத்தத்தின் அளவை, அஷ்வின் அதிகரித்தான். முறைத்தாள் அனிதா. பாடல் தொடர்ந்தது.

காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே........

சேர்ந்தபடி பாடலை முணுமுணுத்தான் அஷ்வின். அவன் வேண்டுமென்றே பாடினான். அது அறிந்த அனிதா, " ரேடியோவ கொஞ்சம் off பண்ணுறீயா?"

அவள் சொன்னது காதில் விழுந்தும் கேட்காததுபோல் இருந்தான் அஷ்வின். பாடலை முணுமுணுத்த அஷ்வின், இப்போது சத்தமாக பாட ஆரம்பித்தான்.

துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ


என்று ஒலித்தபோது, அஷ்வினும் "அப்போ!!!!!!!!!!!!" என பாடினான்   கத்தினான்.

"இப்ப மட்டும் வாய தொற! கடையில ரேவதி ஆண்ட்டி familyய பாத்தோமே. யாருகிட்டயும் பேசாம எதுக்கு டா இருந்த? I felt so awkard and embarrassed." என்றாள் அனிதா.

traffic junctionல் சிவப்பு லைட் வர, கார் நின்றது. அஷ்வின், " அந்த குடும்பத்தையே பிடிக்காது. அதுக்கு அப்பரமும் ஏன் வாய தொறக்கல. பல்லு விளக்கலனு கேட்டா நான் என்ன பண்ண முடியும்?"

அனிதா, "இப்ப மட்டும் வாய் கிழிய பேசு. வந்தவங்க எல்லாரும் கேட்டாங்க. அஷ்வின் ஏன் இப்படி இருக்காரு-னு? பதில் சொல்ல முடியல."

அஷ்வின், "சொல்ல வேண்டியது தானே. என் புருஷன் மூட் அவுட்ல இருக்கானு."

அனிதா, "இப்ப உனக்கு என்ன மூட் அவுட்?"

கார் முன்னாடி இன்னொரு கார் வேகமாய் புகுந்து செல்ல, கோபத்துடன் ஹார்னை அழ்த்தி, "ச்சே!" என்றான். அனிதாவின் கேள்விக்கு பதில் அளித்தான்,

"இன்னிக்கு தங்கம் வாங்கீயே ஆகனுமா? நான் வேலை முடிஞ்சு எவ்வளவு tired-a இருக்கேன் தெரியுமா? உன்னைய நகை கடைல விட்டுட்டு ஒரு மணி நேரமா பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சேன்! எனக்கு எப்படி இருக்கும்?"

அனிதா, " இன்னிக்கு தங்கம் வாங்கினா, நல்லதாம்."
  
ளை பார்த்து முறைத்துவிட்டு பேசாமல் ருந்தான் அஷ்வின்.   வீட்டை வந்து அடைந்தும், காரை விட்டு வேமாய் வெளியேறினாள் னிதா. இருரும் மின் தூக்கியில் நுழைந்னர்.

6 ஆம் நம்ரை அழ்த்திடி,  
ஷ்வின் "பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது. பெண்களே உலகில் இல்லையென்றால். ஆறுதலே தேவை இருக்காது" என்று மறுபடியும் அலைபாயுதே பட பாடலைப் பாடினான். 

கோபம் கொண்ட அனிதா, "stop singing that song!" என்றாள். 6ஆம் மாடியில் மின் தூக்கி கதவு திறந்தது. விறுவிறு என்று நடந்து வீட்டிற்குள் சென்றாள். வீட்டிற்குள் புகுந்த அஷ்வின் களைப்புடன் சோபாவில் விழுந்தான். தொலைக்காட்சியில், நேற்று முன் தினம் நடந்த கிரிக்கேட் மறு ஒளிப்பரப்பு ஆட்டத்தை பார்த்தான்.

ஆடையை மாற்றிவிட்டு அறை வெளியே வந்த அனிதா, அவன் கிரிக்கேட் ஆட்டத்தை பார்ப்பதை கண்டு, "இப்ப உனக்கு tiredஆ இருக்காத!"

அஷ்வின், "உன்கிட்ட, இன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லது-னு சொன்னவன் தான் என்கிட்டயும் சொன்னான்..."

புரியாமல் முழித்த அனிதா, " யாரு? என்ன சொன்னான்?"

அஷ்வின், "இன்னிக்கு கிரிக்கேட் பார்த்தால் நல்லதாம்."

அனிதா "stop irritating me ashwin!" என்றபடி சமையலறைக்குள் புகுந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அனிதா மீண்டும் சத்தம் போட்டாள்.

"அஷ்வின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!" என கத்தினாள். என்னமோ ஏதோ ஆகிவிட்டது என ஓடினான் சமையலறைக்கு.
பதற்றத்துடன் அஷ்வின், "என்ன மா ஆச்சு?"

கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள் அனிதா குளிர்பதன பெட்டி அருகில்.
"என்ன இது?" என்றாள் அனிதா, குளிர்பதன பெட்டிக்குள் இருக்கும் 2 பாத்திரங்களை பார்த்து.

"இதுக்கு தான் கத்தினீயா? நான் என்னமோ-னு பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு அறிவு இல்ல!!" என்று சீறினான் அஷ்வின்.

"உனக்கு இருக்கானு கேட்குறேன்." என்றபடி அந்த 2 பாத்திரங்களை எடுத்து அவன் கையில் வைத்து திறந்து காட்டினாள்.

ஒரு பாத்திரத்தில் அரை இட்லியும் இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் சட்னியும் இருந்தன. "காலைல சாப்பிட்டு முடிச்சீயே....இத ரெண்டும் முழுசா சாப்பிட்டு கழுவி வைப்பாங்களா? இல்ல fridgeல வைப்பாங்களா?" என்று அதட்டினாள் அனிதா.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் அஷ்வின். "காலைல நிறைய சாப்பிட முடியல." என்று சொல்லிகொண்டே ஹாலுக்கு நழுவ பார்த்தான். அவளுக்கு இன்னும் கோபம் வந்தது, "I am talking to you, ashwin."

எரிச்சல் அடைந்த அஷ்வின், "இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு ஏன் சண்டை போடுற?" மறுபடியும் சோபாவில் அமர்ந்தான் கத்தியவாறு.

சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்த அனிதா, "இது சின்ன விஷயம் இல்ல அஷ்வின். where is your responsibility?"

தொலைக்காட்சியில் இருந்த பார்வையை, அவள் மேல் திருப்பிய அஷ்வின், "இட்லிய வச்சா என் responsibilityய judge பண்ணுவ?" தொலைக்காட்சி சத்த அளவை கூட்டினான்.

இதற்குள் மேல் அவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவள் வருத்தத்துடன் தலையை ஆட்டிவிட்டு அவளது வேலையை பார்க்க சென்றாள். அஷ்வினும் கண்டுகொள்ளாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிரிக்கேட் பார்க்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு சத்தம்! அனிதா studyroomல் நின்று கொண்டு கத்தினாள்.

"oh my god, what's wrong with you anita?" என்றபடி அறைக்குள் சென்றான் அஷ்வின். கைகளை கட்டி நின்று கொண்டிருந்தாள் அனிதா.

"இப்ப என்ன ஆச்சு உனக்கு?" என்றான் அஷ்வின்.

அனிதா, "ஏன் அஷ்வின், ஈர towelல chairலே போட்டு போற? எப்படி காயும்? chair வீணா போகாதா?"

பதில் ஏதும் சொல்லாமல், வெடுகென்று துண்டை எடுத்து கொண்டு வெளியே காய போட சென்றான். தொலைக்காட்சியை நிம்மதியாக பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் அஷ்வினுக்கு இருந்தது.

அனிதா சோபாவில் அமர, அவன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். சோபா மேசையில் சில கடிதங்களை தூக்கி வீசினாள். புருவங்கள் சுருங்கின அஷ்வினுக்கு.

"எதுக்கு இப்ப இத இங்க தூக்கி போடுற?"

"electricity bill, credit card bill, car loan. போன மாசமே உன்ன, இதலாம் கட்ட சொன்னேன். ஏன் இன்னும் கட்டாம வச்சுருக்க?"

எரிச்சலும் கோபமும் பொங்க அஷ்வின், "just stop it anita. don't treat me like a slave. நான் ஒன்னும் நாய் இல்ல. நீ சொல்றதெல்லாம் கேட்க."

அனிதா, "அப்பரம் இதலாம் யாரு போய் கட்டுவா? உன்னால போக முடியலனா, atleast சொல்லியிருக்கலாமே?"

அஷ்வின், "வந்ததுலேந்து நானும் பாக்குறேன். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாதே. இத செய்யாதே. நிம்மதியா இருக்க முடியுதா இந்த வீட்டுல. உன்னால...." என்று அஷ்வின் தனது அறைக்கு சென்று சட்டையை மாற்றிவிட்டு, வீட்டை வீட்டு வெளியே சென்றான்.

அப்போது அனிதா, "இப்ப இந்த ராத்திரி நேரத்துல எங்க போற?"

அஷ்வின், "சாக போறேன். முடிஞ்சா நீயும் செத்து தொல...." என கூச்சல்போட்டு விட்டு, வீட்டின் கதவை படார் என்று சாத்தினான்.

(பகுதி 2)