Jul 13, 2015

பாகுபலியும் காக்கா முட்டையும்



இரண்டு படங்கள்.
ஒன்று 250 கோடிகளில் உருவாக்கப்பட்டது.
இன்னொறு வெறு 2 கோடியில்.

ஆனால் இரண்டுமே தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு கொண்டு போய் உள்ளன. தமிழ் சினிமா ரசிகையாய், எவ்வளவு பெருமையாக இருக்கு என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.


காக்கா முட்டை- ரெண்டு பசங்க பிட்சா சாப்பிட ஆசைப்படும் கதை.

பாகுபலி- பழிவாங்கும் கதை.




ஒற்றை வரி கதையை எப்படி இப்படி பிரமாண்டமாய் எடுத்து இருக்காங்க! இரண்டுமே ஒரு வகையில் பிரமாண்டம் தான்.

காட்சி அமைப்பும் சரி, வசனங்களும் சரி அருமையிலும் அருமை. ரெண்டு படங்களையும் பார்த்து ரசித்து விட்டு தோன்றிய சிந்தனை....

 "ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியம் திரைக்கதையும் நடிகர் நடிகைகளும் தான்."

காக்கா முட்டை: அந்த ரெண்டு பசங்களும்.... யப்பா!!! அவர்களின் அம்மாவாக நடித்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாகுபலி: யார் நடிப்பை பற்றி நான் பாராட்டி எழுதுவது? ஒவ்வொரு நடிகை நடிகரும் வெளுத்து வாங்கி இருக்காங்க! ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு படத்தில் நடித்தவர்களின் ரசிகையாய் மாறிவிட்டேன்.

இரண்டு படங்களிலும் பிடித்த இன்னொரு விஷயம்: தமிழ்.

இரண்டு தமிழுமே அழகு தான்!!

இரண்டு படங்களையும் இந்தியர்கள் அல்லாத வேறு இனத்தவர்கள் பார்த்து ரசித்து செல்வதை பார்க்கும்போது, ஆனந்த கண்ணீரை தவிர்க்க முடியவில்லை.


இது போன்று இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என சொல்ல மனசு வருவில்லை. இது போதும் எனக்கு! இந்த சந்தோஷம் அப்படியே மனதில் நீண்ட நாள் இருக்கட்டும்!!


Jun 3, 2015

500th post!!

இது என்னுடைய 500வது பதிவு!!

அடேங்கப்பா!!! என நானே வியந்து பார்க்கிறேன். இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆயிற்று. சும்மா கிறுக்கி எழுதிய கவிதைகளை ஒன்றாக சேர்த்து வைக்கலாம் என ஆரம்பித்த வலைப்பக்கம், இப்போது பல கதைகளையும், பல கட்டுரைகளையும், கவிதைகளையும், திரைவிம்ரசனம், பற்ற பல லொள்ளுகளையும் தாங்கி நிற்கிறது.

ஆதரவு தந்து, ரசித்து படித்து, தொடர்ந்து ஊக்குவித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

'you must love yourself' என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. அதனை முழுமையாக அனுபவித்த இடம் இந்த வலைப்பக்கம்! என்னையே நான் ரசித்து வருகிறேன் என் எழுத்துகள் மூலம்.

10 வருடங்களை புரட்டி பார்க்கும்போது, எழுத்திலும் சிந்தனையிலும் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் நீங்க தான்!!! நன்றி!!

சரி இத்தன வருஷம் எழுதி இருக்கோமே, சிறந்த பதிவுகளுக்கு, அவார்ட் கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்பதான் அவார்ட் ஷோ நடத்தறது சர்வ சாதாரணமா போச்சே.....ஹிஹிஹி....

எனக்கு பிடித்த தொடர்கதை: டாடி மம்மி வீட்டில் இல்ல (series 1)
http://enpoems.blogspot.sg/2009/04/daddy-mummy-1_13.html

மக்களுக்கு பிடித்த தொடர்கதை: விண்ணை தாண்டி வந்தாளே
http://enpoems.blogspot.sg/2010/03/1.html

நான் எழுதியதில் ரசித்தது: short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

http://enpoems.blogspot.sg/2013/06/short-films.html



பாராட்டும் திட்டும் பெற்ற விமர்சனம்: கௌதம் மேனன் படம் செய்வது எப்படி?- சமையல் குறிப்பு


500 பதிவுகளில், எனக்கு பிடித்த சிலவற்றுக்கு இந்த அவார்ட்!! 

தொடர்ந்து படிங்க!!! ஆதரவு தாங்க!!

May 20, 2015

36 வரிகளில் 36 வயதினிலே....

1) படம் பார்த்துவிட்டு, என் மனதில் ஓடிய, உதித்த சிந்தனைகள் இவை.

2) மலையாளம் படமான 'how old are you?' படத்தை 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.

3) காரணம்- ரொம்ப மெதுவான காட்சி ஓட்டம் எனக்கு அவ்வளவா பிடிக்கல.

4) சரி, ஜோ என்ன தான் பண்ணியிருக்காங்க இந்த படத்துல-னு, படம் பார்க்க போனேன்.

5) சும்மா, சொல்ல கூடாது.

6) ஜோ, we missed you lots!!

7) படத்தின் பலமே ஜோ தான்.

8) வசனங்கள் இன்னொரு பலம்.

9) ஆனா, கதையில் இன்னும் ஆழம் தேவையோ என நினைக்கவைத்தது இப்படம்.

10) நடிகைகள் நிறைய பேர், சினிமாவுக்கு திருப்பி வரும்போது, இப்போன்ற படங்களில் நடிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

11) ஸ்ரீதேவி, ஜோ போன்றவர்களின் படங்களில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக படம் எடுத்தாலும், அதில் என்னமோ ஒரு நெருடல் இருக்கிறது.

12) 'நான் யார் என்று இந்த உலகத்துக்கு காட்டனும்' என மன போக்கில் தான் படம் போகுது.

13) படத்தில் பார்த்தால், கணவன் கிண்டல் பண்ணுவான், மகள் கிண்டல் செய்யும், சுற்றி உள்ளவர்கள் கிண்டல் பண்ணுவார்கள்.

14) இரண்டாம் பாதியில், இதை எல்லாம் உடைத்து எரிந்து விட்டு, ஒன்றை சாதிப்பார்கள்.

15) இது தவறு இல்லை.

16) என்றாலும், ஒரு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதாக தான் எனக்கு தெரிகிறது.

17) you don't have to prove yourself to anyone. you have to prove only yourself. என கருத்தை இங்கு யாருமே அதிகமாக யோசிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

18) உதாரணம், queen என்ற ஹிந்தி படம்.

19) ஸ்ரீதேவியோ, ஜோவோ- இது போன்ற படத்தில் நடிப்பார்களா?

20) அப்படியே நடித்தாலும், நம்மில் பலர், 'ஒ....அவங்க எப்படி இந்த மாதிரி படத்துல நடிக்குறது?'

21) அது தப்பு, கலாச்சாரம், குடும்பத்துக்கு எதிரான ஒன்று என சொல்லியே மட்டம் தட்டிவிடுவார்கள்.

22) இதை தான் நான் சொல்ல வருகிறேன்.

23) நான் யார் என்று மற்றவர்களுக்கு காட்டும் கதையில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதில் எதோ ஒரு குறைபாடு உண்டு,

24) 'அப்போ என்ன, இந்த மாதிரி படங்கள் பெண்களை மையப்படுத்தி வரகூடாதா?' என சிலர் நினைப்பீர்கள்.

25) அப்படியில்ல, இப்போன்ற படங்கள் முன்னோடியாக இருக்கட்டும்.

26) ஆனா, இனி வரும் படங்கள் இதே பாணியில் வந்துவிடுமோ என்ற ஒரு அச்சம்.

27) 'நான் என் மனைவிய சாதிக்க விட்டு இருக்கேன்," என்று மார்தட்டி கொள்ளுபவர்கள் பலரின் ஆழ்மனதிலும் இன்னும் 'நான் சுதந்திரம் தருகிறேன்' என்று அதே வட்டத்துக்கு தான் பயணிப்பதாக தெரிகிறது.

28) இங்கு யாரும் யாருக்கும் சுதந்திரம் தர தேவையில்லை.

29) 'என் கணவன் எல்லாம் வீட்டு வேலையை செய்வார்' என்று பல பெண்கள் பெருமைகொள்ளும் அதே மனப்பான்மையும் போகவேண்டும்.

30) கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போவது அல்லது சாதிப்பதும், வீட்டு வேலை பார்ப்பதும் அனைத்தும் இயல்பான ஒன்றாக மாற வேண்டும்.

31) அதனை எப்போது இயல்பான ஒன்றாக பார்க்கிறோமோ, அப்போது ஏற்றதாழ்வு, படத்தில் காட்டிய பிரச்சனை அனைத்தும் இல்லாமல் போகும்.

32) சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.

33) ரகுமானின் நடிப்பு நல்லா இருந்துச்சு.

34) ஜோவை மறுபடியும் பார்க்க அவ்வளவு அழகா இருந்துச்சு.

35) தொடர்ந்து நடிங்க அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்.

36) சாதிக்க விரும்பும் பெண்கள் போல், எதை செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள்! வாழ்த்துகள்!


Apr 28, 2015

கண்ண தொறக்கனும் சாமி.......

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!



1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு!நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.

சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 


போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 

பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?

அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!


நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 


2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!

இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.


நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.


- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-


"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)

- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)




3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 

ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!



ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.

ஆண்ட்டி 2: from?

ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)

ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?

ஆண்ட்டி 1: no, we rejected it.

ஆண்ட்டி 2: oh no. why?

ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.

********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி!