Oct 19, 2007

மாமோய்!!-குட்டி கிறுக்கல்கள்




மாமா,
உன்னை இதைவிட
செல்லமாய் கூப்பிட
இன்னொரு பெயர்
வைக்கவா?
----------*****-----


மாமா மகன்
என்பதால் அதிக
உரிமை எடுத்து கொள்கிறாள்
என்று நினைக்காதே
உண்மையிலே
நான்
உன்னை..

ச்சீ போடா...
---------******---------



விடுமுறை நாட்களில்
உன் வீட்டில்
தங்கியிருக்கும்
அந்த ஒவ்வொரு
நிமிடத்தை பற்றியும்
என் டைரியில்
எழுதும்போது
வார்த்தைகள்கூட வெட்கப்படுகிறதே!
------****-----------------

என் கன்னத்தில் நான்
மயில் இறகால்
வருடியபோது
உன் மீசைக்கு
எவ்வளவு
கோபம் வந்திருக்கும் ?



Oct 13, 2007

தேநீர் With வைரமுத்து- காமெடி special

எல்லாருக்கும் வணக்கமுங்கோ! சும்மா ஒரு மொக்கை பதிவை போடலாமுனுதான் இத எழுதுறேன். நம்ம வாரம்தோறும் பார்க்கும் காபி வித் அனு நிகழ்ச்சியை வைரமுத்து ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும் என்பதை சற்று காமெடியோட... அதுல ரெண்டு special guests... பாருங்க..
----------------******------------------------------------------

என் இனிய விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்கள் 'தேநீர் வித் வைரமுத்து' அன்போடும் பாசத்தோடும் பண்போடும் பரிவோடும் நேசத்தோடும் மரியாதையோடும்

காமிராமேன் :- சார் சார்.... போதும் போதும்... அடுத்த லைன்ன சொல்லுங்க... programme one hr தான் சார்!!

வைர: மரியாதையோடும் உங்கள் தேனீர் வித் வைரமுத்து வரவேற்கிறேன். வாரந்தோறும் நம் தமிழ் சினிமா நட்சத்திரங்களை அழைத்து அவர்களுக்கு மகுடம் சூட்டி, கீரிடம் பூட்டி, பொன்மாலை அணிவித்து கௌரவம் படுத்துகிறோம். அவ்வகையில் இன்றும் நமது இனிய பொழுதை சுவையாக்க, நகைச்சுவையாக்க என் இனிய தோழன், என் உயிர் நண்பன், என் அருமை சிநேகிதன் ஒருவர் வீற்றிருக்கிறார். இவரை பற்றி சொல்ல சொற்கள் கிடையாது, வார்த்தைகள் வராது, வாக்கியங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நான் பல பாடல்களில் எதுகை மோனையுடன் அழகாய் சொல்வதை, இவர் பல படங்களில் சில நேரங்களில் அபத்தமான அவருக்கு ஏற்ற பாணியில் சொல்லகூடிய வல்லவர், நல்லவர், தமிழ் நாட்டின் சிங்கம், அசிங்கம், நம்ம விஜய டி ராஜேந்திரனை அன்போடு வரவேற்கிறோம்!!

டி ஆர்: ஏய் டண்டனக்கா... டனக்குடக்கா... ஏன்ய்யா நீ என்னை கூப்புடுறத்துக்குல... எவ்வளவு நேரம்ய்யா...

வைர: வாங்க உங்க இருக்கையில் அமருங்கள்!

டி ஆர்: உட்காந்து தாண்டா இருக்கேன்!!

வைர: சுகமா?

டி ஆர்: வெட்ட வெட்ட வளரும் நகம்
காதலில் விழ தேவை முகம்
எனக்கு பிடிச்சுது உன்னோட கவிதை ரகம்
இந்த டி ஆர் எப்போதும் சுகம்!!

வைர: நீங்கள் ஒரு வார்த்தை பதிலுக்கு ஒரு பக்கம் பதில் சொல்கிறீர்களே.. நீங்க சிறு வயதில் பரிச்சையில் ஒரு சொல் பதில் கேள்விகளை எவ்வாறு சமாளித்தீர்கள்?

டி ஆர்: நான் எப்போதும் இப்படிதான். இப்படிதான் எப்போதும். டீச்சர் பண்ணுற டாச்சர் தாங்க முடியாம அவங்கள பழிவாங்க நான் நிறைய பக்கம் எழுதுவேன் பரிச்சையில... அதுவே பழக்கமா போச்சு. இப்போ அதுவே என் மூச்சு.

வைர: அழகாய் பேசுகிறீர்கள் என்று உங்களிடம் யாரேனும் பொய் சொல்லி இருக்கிறார்களா? சொன்னது யார்?

டி ஆர்: நான் மேடையில் பேசும்போது எல்லாருமே அப்படிதான் சொல்லுவாங்க.. அதை பொய்யினு சொல்லுறுவன் கோமாளி
அதை உண்மையினு நம்புறவன் அறிவாளி
இப்படி கேள்வி கேக்குற நீ, ஒரு சன் சன் சன்..**

வைர: அடே நண்பா, நிறுத்து! போதும். என் மானத்தை கப்பல் ஏற்றாதே. நான் வைரத்திற்குள் ஒலிந்திருக்கும் முத்து. முத்துக்குள் ஒலிந்திருக்கும் வைரம். என்னை இப்படி சொல்வது நியாயமா? குறையா? தகுமா?

காமிராமேன்:- சார், prograame முடிஞ்சு என்கூட சேட்டு வீட்டுக்கு வாங்க.. வைரம் முத்துலாம் உங்ககிட்ட இருக்கல.. உங்கள அடுமானம்வச்சு என் அக்கா கல்யாணத்த முடிச்சுரேன் சார்!!

வைர: அட பாவிகளா? ரசனையோடு ஒரு பேச்சுக்கு சொன்னால்... இப்படியா? எனக்கு இப்போது தேவை ஒரு இடைவேளை.

டி ஆர்: நான் சொல்லட்டா??...

வைர: வேண்டாம் தோழா. இடைவேளை என்பது சுருக்கசொல்வது. அதையே நீ ஒரு முழு நீள படம் ஆக்கிவிடுவாய். வேண்டாம். ஏன் இந்த சிறுபிள்ளைதனமான ஆசை.

டி ஆர்: (சும்மா உட்கார்ந்து, சொன்னதுக்கு தலையை 360 degrees ஆட்டிவிட்டு, அந்த amazon காடு முடியை தடவிகிட்டு இருந்தார்...)

வைர: உங்களை இடைவேளைக்கு அப்பரம் மீண்டும் சந்திப்பதில் மிக்க சந்தோஷம் ரசிகர்களே. இது வரைக்கும் நம் கழுத்தை அறத்து கொண்டிருந்தார் டி ஆர்! பார்த்து கை கொட்டி சிரித்த நாம், இனி நமது உயிரை எடுக்க, தொடுக்க,கோர்க்க வருகிறார் அவர் வாரிசு, தானே பட்டம் பறைசாற்றி கொண்டு தமிழ்நாட்டையே கலக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு!

டி ஆர்: (ஒரே குஷியாகி, மேசையில் தாளம் போட, சிம்பு கருப்பு சட்டை கருப்பு பேண்ட் அணிந்து வர, வைரமுத்து கைத்தட்ட, உள்ளே entry)

சிம்பு: வணக்கம் சார்.( வைரமுத்துவை பார்த்து)

வைர: சார் என்பதற்கு பதிலாக ஐயா என்று அழைத்து இருக்கலாமே?

சிம்பு: சார், ஒரு தமிழ் நிகழ்ச்சியில முடிஞ்சவரைக்கும் ஆங்கில வார்த்தை தான் use பண்ணனும். அப்பதான் நமக்கு பெருமை. என்ன பா நான் சொல்லுறது.

டி ஆர்: சரியா சொல்லுவான் நம்ம சிம்பு
தப்பா சொன்னா பறக்கும் அம்பு
வேண்டாம் டா வம்பு
மொத்ததில் என் மவன் ஒரு சொம்பு!

சிம்பு: அப்பா!!! என்ன நீங்களே.. இப்படி.

டி ஆர்: சாரி சிம்பு, ரொம்ப emotional ஆகி, உளரிட்டேன். வைரமுத்து, இத நீங்க எடிட்டு பண்ண சொல்லிடுங்க...

வைர: இருக்கட்டும் இருக்கட்டும். நீங்க சொன்ன வசனங்களில் இதுதான் அருமை. சிம்பு, நீங்க ஏன் விளக்கமாத்து குச்சிபோல் தலைமுடி வைத்து இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் இந்த முடிக்கும் ஏதேனும் பகையோ?

சிம்பு: அப்படிலாம்.. ஒன்னும் இல்ல... சார். நாங்க ஒரு நல்ல முடிவு தான் எடுக்க தெரியாதவங்க. அதனால முடியும் எடுக்க தெரியாதவங்கனு தப்பா நினைக்க வேணாம். இதுலாம் ஒரு ஸ்டைல். உங்கள மாதிரி வெள்ள ஜிப்பா ஆளுங்களுக்கு இதலாம் தெரியாது சார்.

வைர: ஹாஹாஹா... உங்கள் தந்தை போலவே பேச கற்று கொண்டீர். நீர் வாழ்க வளமுடன்!!

(சிம்பு திடீரென்று...)

சிம்பு: ஆமாங்க.. எனக்கு என்ன பிரச்சனையினா நான் மத்துவங்க மாதிரி கிடையாதுங்க. நான் என்ன பண்ணுறது. சிம்பு straight forward தான். திமிரு பிடிச்சவனா... எங்க அப்பா எனக்கு அப்படி சொல்லி தருல... எனக்கு நடிக்க தெரியாதுய்யா!!

(காமிராமேன், வைரமுத்து எல்லாருக்கும் ஒரே shock. சம்மந்தமே இல்லாமல் ஏன் சிம்பு கொச்சிகிட்டு போனும்)

சிம்பு: ரொம்ப நல்லா பேசினாங்க சார். இன்னிக்கு யார் eliminate ஆவ போறானா...சிம்பு!!

(சிம்பு வெளியேறினார். ஒன்னுமே புரியாமல் வைரமுத்து, காமிராமேன் நிற்க.. டி ஆர் மட்டும் சிம்புவை பிடிக்க ஓடினார் இப்படி சொல்லிக்கிட்டே... "டேய் மவனே... அது வேற நிகழ்ச்சிடா. இது வேற நிகழ்ச்சி. எல்லாத்துக்கும் இதையே சொல்லுறீயே!! ஏய் சிம்பு நில்லுடா.. நில்லு!!)

ஹாஹாஹாஹா..... முற்றும்**********---------------