Aug 2, 2013

சிங்கமும் மரியானும்

ஓநாயும் நரியும், முயலும் ஆமையும் போன்ற நீதி கதைகள் எவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. ரசிக்க முடிகிறது. இப்போது வரும் படங்கள் ஏன் அப்படி புரிந்து கொள்ள முடியவில்லை. இல்ல நமக்கு தான் அறிவும் ரசிக்கும் தன்மை போதவில்லையே.

சிங்கம் 2

1) சிங்கம் 1 கடைசி காட்சியில், விஜய்குமார் "இது யாருக்கும் தெரியவேண்டாம். வேணும்னா உங்க மனைவிகிட்ட மட்டும் சொல்லுங்க" என்பார்.

அப்போ ஏன் சிங்கம் 2ல கல்யாணம் ஆகாத மாதிரி காட்டனும்? சிங்கம் 2 படத்திலும் கல்யாணம் ஆகவில்லை. அப்போ சிங்கம் 3 வரபோகுதா?

:(((((((((((((((((((((((((((((((((

2) யம்மா அஞ்சலி, குயிலிகிட்ட கொஞ்சம் பயிற்சி எடுத்துகொண்டு அந்த கப்பலில் ஆடியிருக்கலாம். எனக்கு என்னமோ குயிலியை தவிர வேறு யாரும் கப்பலில் ஆடினாலும் பிடிக்கவில்லை:)))))

3) பள்ளி மாணவியாக ஹன்சிகா....ம்ம்ம்... (சரி நான் ஒன்னும் சொல்லல. அப்பரம் சிம்பு ரசிகர்கள் கோபத்திற்கும் ஆளாகிடுவேன்!)

 
               

4) இப்ப வர படங்களில் வில்லன்கள் ஹீரோவைவிட அழகா தெரியனும். இது தெரியாதா ஹரி சார்?? (முருகதாஸ் சாரிடம் கேட்டு பாருங்க)

****************************************************************************

மரியான்

1) தனுஷ் கடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகளால் துன்புறத்தப்படுவார். அப்போது, இந்தியா அதிகாரிகளிடம் ஃபோன் செய்து பணம் கேட்குமாறு தீவிரவாதிகள் சொல்வார்கள். அப்போது தனுஷ், பார்வதிக்கு ஃபோன் செய்து பேசுவார். அந்த காட்சி, சூப்பர்!!!

2) சிறுத்தைகள் பக்கத்தில் சுற்றி கொண்டிருக்கும் தனுஷின் நடிப்பி டாப்! (நான் சிறுத்தை, அலேக்ஸ் பாண்டியன் படங்கள் பார்க்கும்போது அப்படி தான் இருந்தது)

3) மேலே சொல்லப்பட்ட இரண்டு காட்சிகள் தவிர, வேறு ஒன்றும் இப்படத்தில் என்னைக் கவரவில்லை.




4) என்னதான் அழகான ஹீரோயின், ஏ ஆர் ராஹ்மான், தேசிய விருது பெற்ற தனுஷ், வெள்ளக்கார ஒளிப்பதிவாளர் இருந்தாலும், திரைக்கதையின் வேகம் முக்கியம்.

5) அப்பரம்  ஏ ஆர் சார்,  i think you got தண்ணீரில் கண்டம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடல் சம்மந்தப்பட்ட படங்களை தவிர்க்குமாறு சிவகாமி கம்பியூட்டர் சொல்லது!
******************************************************************************

இரண்டு படங்களிலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்! ஹீரோ ஹீரோயினை அறையும் காட்சி.

மது அருந்தினால், புகை பிடித்தால், கீழே "இது ஆபத்தானது" என்று போடுவதுபோல் அறையும் காட்சிகள் வந்தால்,

"இது அபத்தமானது" என்று போட வேண்டும்.

அடித்தால் தான் கெத்து என்று பலர் நினைக்கும்போது, படங்களும் அதற்கு எண்ணெய் ஊற்றவேண்டாம்.

3 comments:

Anonymous said...

There was spelling mistake with அரையும். There can more pros ans and cons with the both films. But parvathy she is just smelling a like jamine in the midst of sea waves.

Anonymous said...

There was tamil spell mistake. அரையும். But what about panimalar.

indrayavanam.blogspot.com said...

நல்ல அலசல் மச்சி