May 20, 2014

இது தாலி இல்ல, தங்க பதக்கம். (சிறுகதை)

இனி ஒரு நிமிடம்கூட நித்யாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கை பையிலிருந்த கைபேசியை எடுத்தாள். உடனே கௌதமிற்கு whatsapp message அனுப்பிவிட்டு தூக்கி எறிந்தாள் கைபேசியை.


நித்யா: this is not happening. I can't take this anymore!
கண்ணாடி முன்னாடி நின்று தன்னை பார்த்தாள். கைபேசி அலறியது. கௌதமிடமிருந்து பதில் வந்தது.

கௌதம்: என்ன ஆச்சு?

நித்யா: என்னால முடியல. i can’t even walk properly.

நித்யாவிற்கும் கௌதமிற்கும் இன்று கல்யாணம்.

இருவரின் குடும்பங்களின் மூன்றாம் தலைமுறையில் நடக்கும் முதல் கல்யாணம். ஆக, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், தெருவில் நடந்தவன், வழுக்கி விழுந்தவன், ஊட்டிக்கு போனவன், ஊட்டிவிட்டவன் என்று பாதி ஊரையே அழைத்து இருந்தனர் வீட்டின் பெரியவர்கள். 

ஜோடா அக்மர் படத்தின் செட்-களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கல்யாண மண்டபம் அலங்காரத்தால் ஜொலித்தது. அழைப்பு அட்டையில் முகூர்த்தம் 7.30-8.30pm என்று தெளிவாக அச்சிடப்பட்டது. அதன்படி விருந்தினர் கூட்டம் தாமதிக்காமல் சரியாக இரவு மணி 8.25க்கு வர ஆரம்பித்தனர்.


கௌதமின் குறுந்தகவல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

கௌதம்: கொஞ்சம் adjust பண்ணிக்கோ.

நித்யா: this saree and accessories are literally killing me. Why the hell must I wear my great-grandma’s ottiyaanam? And I can’t even walk properly! Arggh!

கௌதம்: கொஞ்சம் நேரத்துக்கு தானே...

நித்யா: முடியாது! நீ மட்டும் வசதியா ஜிப்பாவுல இருக்க? தமிழ் கலச்சாரமா அது?

கௌதம்: சாரி! அடுத்த தடவ கல்யாணம் பண்ணிக்கும்போது, தமிழ் கலாச்சாரத்த காப்பாத்துறேன்!

நித்யா:
J J J you are crazy!! நானும் அடுத்த தடவ, netball shortsல கல்யாணம் பண்ணிப்பேன்.

கௌதம்: கொஞ்சம் decentஆ....??

நித்யா: ஒகே,
basketball shorts then.

கௌதம்: hahaha you are going crazy! Love you nitya!

********************************************************************

நமக்கு ஒரு நல்ல விஷயம் நடக்க போவது என்றால் மனதார வாழ்த்தி உண்மையாக ஆசிர்வாதம் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்து மொத்தமாக 10 பேராக தான் இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் உணவுக்காகவும், வாங்கிய புதிய தங்க வளையலை காட்டவும், சைட் அடிக்கவும், தனது facebook profile pictureக்கு புகைப்படம் எடுத்து கொள்ளவும் தான் வந்து இருப்பார்கள்.

கல்யாண மண்டப மேடையில் பூஜைகள் ஆரம்பித்தன. இரண்டு மணி நேரமாக புகைக்கு முன்னால் உட்கார்ந்து இருக்க முடியவில்லை நித்யாவுக்கு. முதல் இரண்டு வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கும் அதே கதி தான்!! ஆர்வத்துடன் வந்த நித்யாவின் வெள்ளைக்கார தோழிகள் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். தேவைக்கு அதிகமான புகைப்படங்களை எடுத்து முடித்த தோழிகள் ‘நாங்க கிளம்புறோம்’ என்று கை சைகயினால் நித்யாவுக்கு தகவல் சொன்னார்கள். தலையை மட்டும் ஆட்டினாள் நித்யா. பாவம்! இறும்பி கொண்டே சென்றனர் தோழிகள்.

தமிழ் கலாச்சாரப்படி நடக்கும் கல்யாணத்தில் புரியாத மொழியில் ஐயர் பூஜைகளை செய்து கொண்டிருந்தார். 30 பேருக்கு மேல் நிற்க முடியாத மண்டப மேடையில் 65 பேர் நின்றனர். மேடையில் யார் இருக்க வேண்டும் என்று இரு குடும்பங்களில் இடையே ஒரு போராட்டமே நடந்தது.

புகை மூட்டம் நித்யாவின் கண்களை குளமாக்கியது. நித்யா, தனது முழங்கையால் கௌதமின் கையை லேசாக இடித்தாள். Marathon பந்தயத்தில் ஓடுபவனைப் போல் வேர்த்து கொட்டிய கௌதம், அவள் பக்கம் திரும்பி பார்த்து ‘என்ன’ என்பதுபோல் கண்களால் கேட்டான். அவனது காது அருகே சென்ற நித்யா, “ this smoke is killing me. I need goggles.”
நித்யாவின் ‘ஷாருக் கான்’, ரோஜா படத்தின் தீவிரவாதி வாஸிம் கானை நேரில் பார்த்ததுபோல், கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன.

சிட்டி ரோபா போல ஒவ்வொரு பகுதியையும் செய்து அவளது உடம்பில் ஒட்டி வைத்ததுபோல் உணர்ந்தாள் நித்யா. தனது கழுத்தை மெதுவாய் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தாள். தனது அம்மாவை தேடினாள் நித்யா. மேடையில் எங்குமே இல்லை.

விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் தேடியது நித்யாவின் கண்கள். அங்கும் இல்லை. தேடிய காரணத்தை கௌதமிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தவள், மறுபடியும் அவனது கையை இடிக்க முற்பட்ட போது, காதுகளை பிளக்கும் அளவுக்கு ஒரு இரும்பல் சத்தம்!

அந்த கூட்ட நேரிசலிலும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியின் இரும்பல் சத்தம் அனைவரையும் திகைக்க வைத்தது. விசு படங்களில் தோன்றும் பாட்டிபோல்,  இரும்பலுடன் போராடி கொண்டிருந்தார் அந்த பாட்டி.

நித்யாவின் அம்மா மேடைக்கு வந்தார். முகம் சோர்வாக காணப்பட்டது. குழப்பமாகவும் தோன்றியது அவரது முகம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என நித்யாவின் மனம் புரண்டது. நித்யாவும், அம்மாவிடம் ஒன்று சொல்ல வேண்டும் என துடித்து கொண்டிருந்தாள். முதல் வரிசையில் இருந்த பாட்டியையும் காணவில்லை. ஒருவேளை பாட்டிக்கு ஏதோ ஆச்சோ என்று நினைத்து அவளின் மனம் தேவையில்லா சிந்தனைகளால் பந்தாடப்பட்டது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவின் கால்களை தட்டினாள் நித்யா.
குனிந்தார் அவர். அவளின் அம்மா, “என்ன?” என்று கேட்டதும் அவரின் குரல் தழுதழுத்தது.

“என்ன ஆச்சு? ஏன் கண்ணு கலங்குது?” என வினாவினாள் நித்யா.

நித்யாவின் அம்மா, “ஆஸ்திரேலியா சித்தி....” என்று இழுத்தார். கண்ணீர் தாழை தாழையாக ஊற்றியது.

“என்ன ஆச்சு ஆஸ்திரேலியா சித்திக்கு?” மனம் படபடத்தது நித்யாவுக்கு. இருதயம் நின்று போவதுபோல் உணர்ந்தாள்.

நித்யாவின் அம்மா கண்ணீரை துடைத்து கொண்டு, “ ஆஸ்திரேலியா சித்திக்குFlight delay ஆச்சு. அவ இல்லாம இந்த கல்யாணம் நடக்குது....”

பெருமூச்சுவிட்ட நித்யா சுற்றி பார்த்தாள். அங்கு நின்று கொண்டிருந்த 65 பேர்களில் பாதி கூட்டம்-அவளது அம்மாவின் 5 தம்பிகளும், 4 தங்கைகளும் அவர்களதும் குடும்பங்களும். இதில் ஆஸ்திரேலியா சித்தி வரவில்லை என்ற கவலை! ஐயோ ராமா, இந்த கூட்டத்துல ஏன் என்னைய சேர்த்த என்று கவுண்டமணி போல் கத்த வேண்டும் என்று இருந்தது நித்யாவுக்கு.

தான் சொல்ல நினைப்பதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவித்த நித்யா, கௌதம் பக்கம் மறுபடியும் திரும்பினாள். ஐயர் சொல்லும் சில மந்திரங்களை மாப்பிள்ளையும் சேர்ந்து சொல்ல வேண்டும். அதனை பாதி புரியாமல் உளறிகொண்டிருந்த கௌதமை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை நித்யாவுக்கு.

*******************************************************************************************************

கெட்டி மேளம் கொட்ட, ஆலங்கட்டி மழை கார் ஜன்னலில் விழுவதுபோல், விழுந்த அரிசியின் நடுவே, தாலி கட்டப்பட்டது. பிரசவ வலியில் 12 மணி நேரம் துடித்து, இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்த தாய் போல் கௌதமின் முகம் வாடியிருந்தது. அந்த வாடிய முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை. அதை கண்ட நித்யாவும் புன்னகையித்தாள்.

இத்தனை போராட்டங்களுக்கு இடையே நடந்த சம்பவத்தை எண்ணி பார்த்த நித்யா, கழுத்தில் தொங்கிய தாலியை தொட்டாள்.....
இது தாலி இல்ல. தங்க பதக்கம்!


காலில் விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் பெறும் பழக்கத்தை எவன் கண்டுபிடித்தான் என்று மனதில் திட்டிகொண்டே 23வது முறையாக குனிந்து எழுந்தாள் நித்யா. வாழ்த்து கூறவும், மொய் பணம் கொடுக்கவும் காத்திருந்த வரிசையை சற்று எட்டி பார்த்தாள். ரஜினி படத்துக்கு முதல் நாள் டிக்கெட் வாங்கும் வரிசைபோல் நீண்டு இருந்தது. அவளுக்கு கால் வலி ஆரம்பித்தது. தப்பித்து போகவும் முடியவில்லை.

அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் உணவு பரிமாறும் இடத்திலிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அங்கேயும் அவ்வளவு கூட்டம். சாப்பாட்டுக்கு போகாமல் மண்டப்பத்தில் நின்று கூட்டத்தின் மேல் ஒரு தனி மரியாதை வந்தது நித்யாவுக்கு. வந்திருந்த சொந்தாக்கார்கள் பலர் யார் என்று தெரியாமலேயே சிரித்து முகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவநிலையில் நித்யாவும் கௌதமும் நின்றனர். அதில் சிலர், நித்யாவை பிறந்த போது பார்த்ததாக கூறிவிட்டு, அவளது கன்னங்களை கிள்ளியதோடு அப்படியே பாதி make upயையும் அள்ளிவிட்டு சென்றனர்.

முதல் வரிசையிலிருந்து காணமல் போன பாட்டி மொய் கொடுக்க வந்தார். கட்டிப் பிடித்தார் நித்யாவை! ‘ஐயோ!’ என்று கத்த கூட முடியாமல் சமாளித்தார் நித்யா. ரொம்ப நேரமாய் அம்மாவிடம் சொல்ல நினைத்தது, அப்போது குத்தியது- சேலையில் உடைத்திருந்த இரண்டு safety pinகள் நறுக்கென்று குத்தியது நித்யாவின் இடுப்பில்.

பாட்டி, “நித்யா, அடிக்கடி மாப்பிள்ளைய இடிச்சுகிட்டு இருந்தே. கள்ளி! இப்படியே அன்னோனியமா இருக்கனும்” என்றார்.

நித்யா, “அன்னோனியமாவா? நான் இங்க அந்நியன் மாதிரி குமறிக்கிட்டு இருக்கேன் பாட்டி” என்று சொல்ல வேண்டும் என அவளின் மனம் கதறியது.

இருந்தாலும் சமாளித்த நித்யா, "சாப்பிட்டு போங்க பாட்டி!"

பாட்டி, "சாப்பிட்டு தான் மேல வந்தேன்." என்றவர் மறுபடியும் கன்னத்தை கிள்ளினார். 

‘என்னைய தாத்தாவா ஆக்கிடு.
என்னைய அத்தையா ஆக்கிடு.
என்னைய பாட்டியா ஆக்கிடு.’ என்று பல அநாகீரிய வாழ்த்துகளை செவிசாய்த்தனர் புதுமண தம்பிதியினர்.

நித்யாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

அதிகாலை மணி 1 என கடிகாரம் காட்டியது. 75 safety pinகளையும் கழற்றிபோட்டுவிட்டு சோபாவில் விழுந்தாள் நித்யா. தனது முட்டியில் போட்டிருந்த knee guardயை அவிழ்த்தாள். அதனைப் பார்த்த கௌதம், “எய் நிஜமா, knee guard போட்டு இருந்தீயா?” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

மண்டபத்தில் உணவு தீர்ந்துவிட்டது. நித்யாவுக்கும் கௌதமுக்கு பழத்தை மட்டும் கொடுத்து புது வீட்டுக்கு அனுப்பினார்கள். சாப்பாடு கிடைக்காத கோபத்திலும் இருந்த நித்யா, “பேசாத நீ!! I hate everyone. I hate the relatives. I hate the safety pins. I hate you.” என கத்தினாள்.

தொடர்ந்தாள் நித்யா, “அவன் அவன் எப்படி தான் ரெண்டு மூனு கல்யாணம் பண்றானோ? இனி சத்தியமா கல்யாணம் பண்ண மாட்டேன்.” என்று கோபங்களைக் கொட்டிவிட்டு, facebookல் குவிந்திருந்த 147 notificationsகளை பார்த்தாள்.

கௌதம், “நான் இன்னொரு தடவ பண்ணிப்பேன்.”

முறைத்தாள் நித்யா.

கௌதம், “பொண்ணு நீயா இருந்தா, இன்னொரு தடவ பண்ணிப்பேன்.” என கூறிவிட்டு புன்னகையித்தான்.

facebookல் இருந்த அவளது பார்வை அவன்மீது பாய்ந்தது. அவளும் பதில் புன்னகை வீசி, கௌதம் கன்னத்தில் ‘இச்’ வைத்தாள்.

அவளது கைபேசி மணி எழுப்பியது. அதனைப் பார்த்த நித்யா கதற ஆரம்பித்தாள். ஆஸ்திரேலியா சித்தியிடமிருந்து குறுந்தகவல்.

சித்தி: எய் புது பொண்ணு! நாங்க இப்ப தான் வந்து இறங்கி இருக்கோம். உன் வீட்டுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம்.

“என்னால முடியாது! என்னால முடியாது! உன்னைய அப்பவே flight ticket 2 மணிக்கு எடுக்க சொன்னேன்.” என்றாள் நித்யா. அன்று அதிகாலை 5 மணிக்கு இருவரும் honeymoon போக இருந்தனர்.

“இந்த சொந்தக்காரன் விருந்து. மருந்து வேணாம்னு தான் கல்யாணம் முடிஞ்ச கையோட honeymoon கிளம்புறோம்!” என்று நெற்றியைச் சொரிந்தாள். சித்தி பேச ஆரம்பித்தார் என்றால், அவ்வளவு தான்.

கௌதம், “கல்யாணம் முடிஞ்சு வரத்துக்கு ஒரு மணி ஆகிடும். அதனால தான் 5 மணிக்கு டிக்கெட் புக் பண்ணேன். உன் சித்தி வருவாங்கனு எனக்கு எப்படி தெரியும்!” என்று சொன்னதும் நித்யா உடனே,

why are you arguing now?”

யாரு நானு?” என்று கௌதம் பதில் அளித்தபோது வீட்டின் வாசல் மணி ஒலித்தது.

 “oh shit!! சரி போய் கதவ தொற” என்றாள் நித்யா.
அவசரத்தில் இருவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. கௌதம், மேசையிலிருந்து champagne பாட்டில்களை அள்ளிகொண்டு குப்பை தொட்டியில் போட்டான்.

“கௌதம், ப்லீஸ் கோ!!!” என்றாள்.

“அவங்க உன் சித்தி. நீ போ!” என்றான்.

வாசல் மணி மறுபடியும் ஒலித்தது.

நித்யா, “உன் சித்தினு, பிரிச்சு பேசுற?”

கௌதம், “ஐயோ! உன் சித்திய உன் சித்தினு சொல்லாம. என் சித்தினா சொல்ல முடியும்??"

இம்முறை வாசல் மணி மூன்று முறை தொடர்ந்தாற்போல் அடித்தது.

மேசையில் கிடந்த செய்தித்தாளை அவன்மீது கோபமாய் வீசிவிட்டு கதவை திறக்க சென்றாள் நித்யா. கதவு ஓட்டை வழி பார்த்தாள் நித்யா.

அங்கு சித்திக்கு பதிலாய், வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். குழம்பினாள் நித்யா. கதவை திறந்தாள்.

சிவப்பு சட்டையில் இருந்தவர், “coming from pizza delivery. 2 large chicken pizzas.”

*****************************************************************************
நள்ளிரவு.

உணவு சாப்பிட கீழே இறங்கிய போது, கடைசியாய் சாப்பிட்டு வெளியே வந்த ஒருவன், “சாப்பாடு எல்லாம் முடிஞ்சுட்டு.” என சொல்லிவிட்டு ஏப்பம்விட்டு சென்றான்.

அப்போது உடனே பிட்சாவுக்கு ஃபோன் போட்டான் கௌதம்!


*முற்றும்*

No comments: