May 16, 2018

நடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்?

தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ஒரு சந்தேகமும் இல்ல.  இவ்வளவு பெரிய 'ரிஸ்க்' எடுத்துருக்குறார்னு திறமை உழைப்பு ரெண்டுமே அவர்கிட்ட நிறையவே இருக்கு.

சாவித்திரி.
சாரி.
சாவித்திரி அம்மா.


அவங்க எவ்வளவு பெரிய நடிகையர் திலகம்னு நமக்கு ஒரே ஒரு காட்சில புரிய வைக்குறார் அஷ்வின். சாவித்திரி அம்மா பட ஷுட்டிங்ல இருக்குறார். அழுகிற காட்சி. சாவித்திரி அம்மாவுக்கு கிளிசரின் போடனும். ஆனா, அன்னிக்கு அந்த நாள் கிளிசரின் சரியா போச்சு. இயக்குனருக்கு கோவம் வர, பேக்-கப் சொல்றார். அதுக்கு சாவித்திரி அம்மா, "இல்ல, இப்பவ நடிச்சுடுறேனு' சொல்ல, இயக்குனர், "நிறைய டேக் ஆகும். ஒரே ஒரு கண்ணுல மட்டும் தான் கண்ணீர் வரனும். உன்னால கிளிசரின் இல்லாம முடியாது'னு சொல்ல,

அதுக்கு சாவித்திரி அம்மா, "இல்ல நான் ஒரே டேக்ல பண்ணிடுறேன். எத்தன துளி கண்ணீர் வரனும்?"

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சாவித்திரி அம்மானு சொன்னா, அது மிகையாகாது.

மூனு மணி நேரம் படம் போனதே தெரியாம, ஒரு அழகிய ஆறு மாதிரி ரசிச்சு பாத்துகிட்டே இருந்த படம் சமீபகாலத்துல இதுவா தான் இருக்கும். அவங்க வளர்ச்சி மட்டும் இல்லாம, வீழ்ச்சியும் அதுக்கு காரணம் என்ன அப்படினு தைரியாம காட்டியிருக்காங்க. ஏன் தைரியம்னா, இதுல பல பிரபலங்கள் பெயர் அடிப்படுது? முக்கியமா, ஜெமினி கணேசன்.

சாவித்திரி அம்மா பல பேரும் புகழும் அடையுறாங்க. ஜெமினி கணேசனுக்கு அது அப்போப்போ புடிக்காம போக,  கல்யாணம் பண்ணிகிட்ட  ரெண்டு பேருக்கு இடையே விரிசல். ஒரு கட்டத்துல எல்லாத்தையும் விட்டுடுறேனு சாவித்திரி அம்மா சொன்னாலும், அதுக்கு அவர், "இல்ல அம்மாடி, வேணாம்னு' சொல்றார். ஜெமினி கணேசனை வில்லனா காட்டாம, இருக்க எடுத்துகிட்ட முயற்சி பாராட்ட வேண்டியது.


சாவித்திரி அம்மா, 'பத்மஸ்ரீ' பட்டம் வேணாம்னு சொல்லிட்டாங்க, அதுக்கு காரணம் ஜெமினி கணேசன். ஏனா அவர் தப்பா நினைச்சுப்பார்னு' இப்படி அவங்க வளர்ச்சிக்கு  முட்டுகட்டையா ஜெமினி இருக்க, அவர் மேல ஏதோ ஒரு வெறுப்பு வர தான் செய்யுது. "நீங்க மட்டும் கடைசி வரைக்கும் சரியா பாத்துகிட்டு இருந்திருந்தா....இந்த நிலம அவங்களுக்கு வந்திருக்குமா?" அப்படினு கேள்விய கேட்காம இருக்க முடியல.


சாவித்திரி அம்மா குடிபழக்கத்துக்கு அடிமையா ஆன பிறகு, அவங்க பொண்ணு, "அம்மா எது செஞ்சாலும் யாரும் செய்யாத அளவுக்கு தான் செய்வாங்க. அம்மாவுக்கு தோல்விங்கறதே பிடிக்காது. ஆனா, அப்பாவ ஜெயிக்கனும்னு வெறில எல்லாத்தையும் தோத்துட்டாங்க"ணு சொல்லும்போது மனசு கனத்துடுச்சு.

அவங்க எத்தனயோ பேருக்கு உதவி செஞ்சாங்க. எல்லாருக்கு சாப்பாடு போட்டாங்க. தர்மம் பண்ணாங்க.  ஒன்னுமே இல்லாத போதும், அவங்க அவங்களாவே வாழ்ந்து முடிச்சது தான், நமக்கெல்லாம் மிக பெரிய வாழ்க்கை படம்.  எனக்கு படம் பாக்கபோது, இளவரசி டயனா வாழ்க்கை வரலாறு நினைவுக்கு அப்பப்போ வந்து போனுச்சு.

*******

சாவித்திரி அம்மா மாதிரி தெரிவது
சாவித்திரி அம்மா மாதிரி நடிப்பது
சாவித்திரி அம்மா மாதிரி வாழ்ந்து காட்டியது

இது மூனுலயும் கீர்த்தி சுரேஷ் வெளுத்து வாங்கி இருக்காங்க. 50 வருஷம் கழிச்சு கீர்த்தி சுரேஷ் பத்தி படம் எடுத்தா, இந்த படம் கண்டிப்பா அதுல முக்கியமா இருக்கும். முதல் ஒரு மணி நேரம் படம் சாதாரணமா தான் போகுது. ஆனா, அவங்க நடிகையா ஆன பிறகு, ஜெமினி கணேசன் மேல காதல் கொண்ட பிறகு, கீர்த்தி சுரேஷ் அப்படியே முழுமையா சாவித்திரி அம்மாவ மாறிட்டாங்க.

சில black&white ஷாட்லயும் சரி, மாயபசார் பாடல் காட்சிகளயும் சரி கீர்த்தி சுரேஷின் நேர்த்தியான நடிப்ப பாத்து வியந்து போகாம இருக்க முடியல. கொஞ்சம் பிசரு தள்ளினா கூட, கலக்க போவது யார் நிகழ்ச்சி மாதிரி வெறும் மிமிக்கிரி மாதிரி இருந்திருக்கும். ஆனா, அந்த மாதிரி எதுவுமே இல்லாம, 'என்னோட best இது தான் பாருங்க'னு கீர்த்தி சொல்லாம சொல்லியிருக்காங்க.

எனக்கு 7ஜி ரென்போ காலனி படத்துல அப்பா, சொல்வாரே, "பாரேன் இந்த பையனுக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்கு", அந்த காட்சி வசனம்  கீர்த்தி சுரேஷுக்கு பக்காவா பொருந்தும்.

நடிப்பு மட்டும் இல்லாம, இசையும் இந்த படத்துக்கு மிக பெரிய பலம். சாவித்திரி அம்மாவ கண் முன்னாடி, visualஆ கீர்த்தியின் செஞ்ச மேஜிக் ஒரு பக்கம்னா, இசை, இன்னொரு மேஜிக். சாவித்திரி அம்மா, திரையில வரும்போதெல்லாம், பிண்ணனி இசை ஒன்னு வரும் பாருங்க, புல்லரிக்கவச்சிடும்.

படம் பார்த்து முடிச்சுட்டு, சாவித்திரி அம்மாவின் நிஜ மகள்,

கீர்த்தி சுரேஷ் அம்மாவுக்கு ஃபோன் போட்டு சொன்னது, "கீர்த்தி எங்க அம்மாவ பெத்து எடுத்து கொடுத்துட்டா"

இதுக்கு மேல, ஒரு நடிகைக்கு என்ன பாராட்டு வேணும்?


சமந்தா வழி கதை நகர்வது சுவார்ஸ்சியம். சும்மா, அவங்க வாழ்ந்த வாழ்க்கைய 'documentary' மாதிரி கொண்டு போகாம, நம்ம மனசுல நிக்கிற படமா உருவம் பெற உழைத்த அத்தனை நடிகர் நடிகைக்கும், பாராட்டுகள்!
வெறும் படமா இல்லாம, தமிழ் சினிமாவுல ஒரு முக்கிய வரலாறா மாறிய அற்புத பொக்கிஷம்- நடிகையர் திலகம்.

No comments: