Jun 12, 2013

காதல் கவ்வும்(பகுதி 1)- சிறுகதை

 நகை கடையில் ஷாபிங் முடிந்து காரில் வந்தார்கள் அஷ்வினும் அனிதாவும்.  காரில் ஒலித்து கொண்டிருந்தது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் 
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்

என்ற அலைபாயுதே பாடல். சத்தத்தின் அளவை, அஷ்வின் அதிகரித்தான். முறைத்தாள் அனிதா. பாடல் தொடர்ந்தது.

காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே........

சேர்ந்தபடி பாடலை முணுமுணுத்தான் அஷ்வின். அவன் வேண்டுமென்றே பாடினான். அது அறிந்த அனிதா, " ரேடியோவ கொஞ்சம் off பண்ணுறீயா?"

அவள் சொன்னது காதில் விழுந்தும் கேட்காததுபோல் இருந்தான் அஷ்வின். பாடலை முணுமுணுத்த அஷ்வின், இப்போது சத்தமாக பாட ஆரம்பித்தான்.

துன்பம் தொலைந்தது எப்போ...காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ...கல்யாணம் முடிந்ததே அப்போ


என்று ஒலித்தபோது, அஷ்வினும் "அப்போ!!!!!!!!!!!!" என பாடினான்   கத்தினான்.

"இப்ப மட்டும் வாய தொற! கடையில ரேவதி ஆண்ட்டி familyய பாத்தோமே. யாருகிட்டயும் பேசாம எதுக்கு டா இருந்த? I felt so awkard and embarrassed." என்றாள் அனிதா.

traffic junctionல் சிவப்பு லைட் வர, கார் நின்றது. அஷ்வின், " அந்த குடும்பத்தையே பிடிக்காது. அதுக்கு அப்பரமும் ஏன் வாய தொறக்கல. பல்லு விளக்கலனு கேட்டா நான் என்ன பண்ண முடியும்?"

அனிதா, "இப்ப மட்டும் வாய் கிழிய பேசு. வந்தவங்க எல்லாரும் கேட்டாங்க. அஷ்வின் ஏன் இப்படி இருக்காரு-னு? பதில் சொல்ல முடியல."

அஷ்வின், "சொல்ல வேண்டியது தானே. என் புருஷன் மூட் அவுட்ல இருக்கானு."

அனிதா, "இப்ப உனக்கு என்ன மூட் அவுட்?"

கார் முன்னாடி இன்னொரு கார் வேகமாய் புகுந்து செல்ல, கோபத்துடன் ஹார்னை அழ்த்தி, "ச்சே!" என்றான். அனிதாவின் கேள்விக்கு பதில் அளித்தான்,

"இன்னிக்கு தங்கம் வாங்கீயே ஆகனுமா? நான் வேலை முடிஞ்சு எவ்வளவு tired-a இருக்கேன் தெரியுமா? உன்னைய நகை கடைல விட்டுட்டு ஒரு மணி நேரமா பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சேன்! எனக்கு எப்படி இருக்கும்?"

அனிதா, " இன்னிக்கு தங்கம் வாங்கினா, நல்லதாம்."
  
ளை பார்த்து முறைத்துவிட்டு பேசாமல் ருந்தான் அஷ்வின்.   வீட்டை வந்து அடைந்தும், காரை விட்டு வேமாய் வெளியேறினாள் னிதா. இருரும் மின் தூக்கியில் நுழைந்னர்.

6 ஆம் நம்ரை அழ்த்திடி,  
ஷ்வின் "பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது. பெண்களே உலகில் இல்லையென்றால். ஆறுதலே தேவை இருக்காது" என்று மறுபடியும் அலைபாயுதே பட பாடலைப் பாடினான். 

கோபம் கொண்ட அனிதா, "stop singing that song!" என்றாள். 6ஆம் மாடியில் மின் தூக்கி கதவு திறந்தது. விறுவிறு என்று நடந்து வீட்டிற்குள் சென்றாள். வீட்டிற்குள் புகுந்த அஷ்வின் களைப்புடன் சோபாவில் விழுந்தான். தொலைக்காட்சியில், நேற்று முன் தினம் நடந்த கிரிக்கேட் மறு ஒளிப்பரப்பு ஆட்டத்தை பார்த்தான்.

ஆடையை மாற்றிவிட்டு அறை வெளியே வந்த அனிதா, அவன் கிரிக்கேட் ஆட்டத்தை பார்ப்பதை கண்டு, "இப்ப உனக்கு tiredஆ இருக்காத!"

அஷ்வின், "உன்கிட்ட, இன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லது-னு சொன்னவன் தான் என்கிட்டயும் சொன்னான்..."

புரியாமல் முழித்த அனிதா, " யாரு? என்ன சொன்னான்?"

அஷ்வின், "இன்னிக்கு கிரிக்கேட் பார்த்தால் நல்லதாம்."

அனிதா "stop irritating me ashwin!" என்றபடி சமையலறைக்குள் புகுந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அனிதா மீண்டும் சத்தம் போட்டாள்.

"அஷ்வின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!" என கத்தினாள். என்னமோ ஏதோ ஆகிவிட்டது என ஓடினான் சமையலறைக்கு.
பதற்றத்துடன் அஷ்வின், "என்ன மா ஆச்சு?"

கோபத்துடன் நின்று கொண்டிருந்தாள் அனிதா குளிர்பதன பெட்டி அருகில்.
"என்ன இது?" என்றாள் அனிதா, குளிர்பதன பெட்டிக்குள் இருக்கும் 2 பாத்திரங்களை பார்த்து.

"இதுக்கு தான் கத்தினீயா? நான் என்னமோ-னு பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு அறிவு இல்ல!!" என்று சீறினான் அஷ்வின்.

"உனக்கு இருக்கானு கேட்குறேன்." என்றபடி அந்த 2 பாத்திரங்களை எடுத்து அவன் கையில் வைத்து திறந்து காட்டினாள்.

ஒரு பாத்திரத்தில் அரை இட்லியும் இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் சட்னியும் இருந்தன. "காலைல சாப்பிட்டு முடிச்சீயே....இத ரெண்டும் முழுசா சாப்பிட்டு கழுவி வைப்பாங்களா? இல்ல fridgeல வைப்பாங்களா?" என்று அதட்டினாள் அனிதா.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான் அஷ்வின். "காலைல நிறைய சாப்பிட முடியல." என்று சொல்லிகொண்டே ஹாலுக்கு நழுவ பார்த்தான். அவளுக்கு இன்னும் கோபம் வந்தது, "I am talking to you, ashwin."

எரிச்சல் அடைந்த அஷ்வின், "இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு ஏன் சண்டை போடுற?" மறுபடியும் சோபாவில் அமர்ந்தான் கத்தியவாறு.

சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்த அனிதா, "இது சின்ன விஷயம் இல்ல அஷ்வின். where is your responsibility?"

தொலைக்காட்சியில் இருந்த பார்வையை, அவள் மேல் திருப்பிய அஷ்வின், "இட்லிய வச்சா என் responsibilityய judge பண்ணுவ?" தொலைக்காட்சி சத்த அளவை கூட்டினான்.

இதற்குள் மேல் அவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று நினைத்தவள் வருத்தத்துடன் தலையை ஆட்டிவிட்டு அவளது வேலையை பார்க்க சென்றாள். அஷ்வினும் கண்டுகொள்ளாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிரிக்கேட் பார்க்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு சத்தம்! அனிதா studyroomல் நின்று கொண்டு கத்தினாள்.

"oh my god, what's wrong with you anita?" என்றபடி அறைக்குள் சென்றான் அஷ்வின். கைகளை கட்டி நின்று கொண்டிருந்தாள் அனிதா.

"இப்ப என்ன ஆச்சு உனக்கு?" என்றான் அஷ்வின்.

அனிதா, "ஏன் அஷ்வின், ஈர towelல chairலே போட்டு போற? எப்படி காயும்? chair வீணா போகாதா?"

பதில் ஏதும் சொல்லாமல், வெடுகென்று துண்டை எடுத்து கொண்டு வெளியே காய போட சென்றான். தொலைக்காட்சியை நிம்மதியாக பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் அஷ்வினுக்கு இருந்தது.

அனிதா சோபாவில் அமர, அவன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான். சோபா மேசையில் சில கடிதங்களை தூக்கி வீசினாள். புருவங்கள் சுருங்கின அஷ்வினுக்கு.

"எதுக்கு இப்ப இத இங்க தூக்கி போடுற?"

"electricity bill, credit card bill, car loan. போன மாசமே உன்ன, இதலாம் கட்ட சொன்னேன். ஏன் இன்னும் கட்டாம வச்சுருக்க?"

எரிச்சலும் கோபமும் பொங்க அஷ்வின், "just stop it anita. don't treat me like a slave. நான் ஒன்னும் நாய் இல்ல. நீ சொல்றதெல்லாம் கேட்க."

அனிதா, "அப்பரம் இதலாம் யாரு போய் கட்டுவா? உன்னால போக முடியலனா, atleast சொல்லியிருக்கலாமே?"

அஷ்வின், "வந்ததுலேந்து நானும் பாக்குறேன். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாதே. இத செய்யாதே. நிம்மதியா இருக்க முடியுதா இந்த வீட்டுல. உன்னால...." என்று அஷ்வின் தனது அறைக்கு சென்று சட்டையை மாற்றிவிட்டு, வீட்டை வீட்டு வெளியே சென்றான்.

அப்போது அனிதா, "இப்ப இந்த ராத்திரி நேரத்துல எங்க போற?"

அஷ்வின், "சாக போறேன். முடிஞ்சா நீயும் செத்து தொல...." என கூச்சல்போட்டு விட்டு, வீட்டின் கதவை படார் என்று சாத்தினான்.

(பகுதி 2)

Jun 8, 2013

short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

முந்தைய பகுதிகள்


தயாரிப்பாளர் குறும்படங்களை பார்த்து கொண்டிருந்தார் youtubeல். அந்த நேரம், இயக்குனர் பாரதிகௌதம் அறைக்குள் நுழைந்தார்.

த: என்னய்யா பாரதி! ரொம்ப நாளாச்சு! உன்னோட படம் சூப்பர் hitனு கேள்விப்பட்டேன்.

இ: வணக்கம் சார்! ஒரு நாளுக்கு மேல ஓடினாலே அது hit படம்தான் சார்!!

த:உன் படம் ஒரு நாளுக்கு மேல ஓடிருச்சா? அப்பரம் உன்னைய கையில பிடிக்க முடியாது...

இ: ஐயோ போங்க சார்! என்னைய ரொம்ப புகழாதீங்க. நீங்க என்ன சார்! திருட்டு டிவிடி பார்த்துகிட்டு இருக்கீங்க.

த: திருட்டு டிவிடியா?? யோவ்! இதலாம் short films! youtube பக்கமெல்லாம் போரதில்லையா?

இ: திருட்டு டிவிடி ஆளுங்கவிட இந்த short films ஆளுங்க தான் பெரிய தலவலி சார்!

த: தலவலியா? ஏன்டா?

இ: நாங்கெல்லாம் கஷ்டப்பட்டு 10 வருஷமா உழைச்சு. assistantடா வேலை பார்த்து அதுக்கு அப்பரம் தான் படம் பண்ணுறோம். இதங்க சும்மா ஒரு கேமிராவ வச்சுகிட்டு youtubeல release பண்ணிடுதுங்க! அதயெல்லாம் பார்த்துட்டு ஆஹா ஓஹோனு வேற பாராட்டு! அப்பரம் 10 வருஷமா உழைச்ச எங்களுக்கு என்ன மரியாதை சார்??

த: என்னய்யா? புகையுற வாசம் வருது! ஹாஹாஹா...உனக்கு ஏய்யா பொறாமை? நல்ல கதையா இருந்தா சொல்லு, நம்ம படம் பண்ணுவோம்!

இ: அதுக்கு தான் சார் வந்துருக்கேன்!

த: படம் பெயர் என்ன?

இ: குட்டி கரடி

த: அப்பிபுடுவேன் அப்பி! எதுக்கு என்னைய திட்டுற?

இ: ஐயோ சார்! படம் பெயர் 'குட்டி கரடி'

த: ஹீரோ சிம்புவா?

இ: இல்ல சார்! நம்ம சசிகுமார்.

த: சரி கதைய சொல்லு.

இ: ஒரு ஊர்ல நாலு பேரு. அவங்க நாலு பேரும் ரொம்ப நல்ல friends. ஆனா...

த: அதுல ஒருத்தன் 2nd halfல கெட்டவனா மாறுவான். சசிகுமார்கிட்ட சண்டை போடுவான். "நண்பனோட கத்தி பேசினாலும், நம்ம கத்தி பேசகூடாது!" அப்படினு ஒரு பஞ்ச் வசனம். இதானே உன் கதை?

இ: சார்!!!!!! எனக்கு முன்னால யாரு சார் என் கதை உங்ககிட்ட சொன்னது? சார், உண்மைய சொல்லுங்க! இல்ல...என் கதைய நீங்களே திருட்டிட்டீங்களா?

த: யோவ்! இந்த கதைய வேற திருடுவாங்களா? எல்லாம் பார்த்த கதை தானே!

இ: இதுல ஒரு வித்தியாசம் இருக்கு.

த: என்ன வித்தியாசம்? படத்துல லட்சுமி மேனன் இல்லையா?

இ: லட்சுமி மேனன் இல்லாம ஒரு கதையா? போங்க சார்! அதுக்கு நான் பிச்சையெடுக்க போலாம்!

த: உன்னைய வச்சு படம் பண்ணா, நான் தான் பிச்சையெடுக்க போகனும்.

இ: சார்!!! என்ன சார் நீங்க! வித்தியாசத்த கேளுங்க!

த: சொல்லு.

இ: ஊரு சுத்துற சசிகுமாருக்கு அம்மாவ நடிக்க போறது லட்சுமி மேனன்!

த: (இதயம் வெடிக்கும் சத்தம்! நெஞ்சை பிடித்து கொண்டார்)

இ: சார்!!!

த: உன்னைய என்ன பண்ணா  சரியாகும்??

இ: சார்! முழுசா கேளுங்க. சசிகுமாருக்கு ரெண்டு ரோல். அப்பா சசிகுமாருக்கு ஜோடி லட்சுமி மேனன். நல்லா இருக்கும் சார்!!

த: சரி இந்த படத்துக்கு budget?

இ: தெரியல சார். கதை 2nd halfல south africa போகுது. சோ....கிட்டதட்ட 30 கோடி ஆகும் சார். போன படம் எனக்கு ஹிட் சார்! அதனால இந்த படத்துக்கு என் சம்பளம் கொஞ்சம் அதிகமாகும்!

த: எதுக்கு கதை south africa போகுது?

இ: ஹீரோ ஒரு போலிஸா training எடுக்க போறாரு. கதைய நல்லா கேளுங்க. ஹீரோவுக்கு ஒரு கெட்ட friend இருப்பாரு. ரெண்டு பேருக்குமே சண்டை வரும். அந்த கெட்ட ஃபரண்ட் கடத்தல் கும்பல இருப்பாரு. அவர காப்பாத்தவும் நட்பை காப்பாத்தவும்,ஹீரோ ஒரு போலிஸா மாறுவாரு.

த: (மேசையில் இருக்கும் தண்ணீரை அருந்துகிறார்)

இ: படத்தோட highlight இந்த ஒரு வசனம் தான் சார்! அங்க உள்ள south africa கும்பல்கிட்ட ஹீரோ ஒரு பஞ்ச் விடுவார். வசனத்த கேளுங்க சார்....

south africa கும்பல்: why did you commme here?
hero:  I know Friendship is Friendship because my friendship is not a TITANIC SHIP!!

சார்! எழுதி வச்சுங்க சார்! இந்த வசனத்தக்கு விசில் பறக்கும் சார்!!!

த: எனக்கு மண்டை வெடிக்குற மாறி இருக்கு. அருவாள், சத்தம், ரத்தம், south africa இதலாம் இல்லாம ஒரு கதை சொல்லுய்யா!

இ: அருவா இல்லாம ஒரு கதையா? நான் ஒன்னும் அந்த fortu slim பசங்க இல்ல சார்!!

த: fortu slim பசங்களா? ஹாஹா..யோவ்! அது short filmsயா!!

இ: அருவாள் தூக்கினா தான் தமிழ் சினிமாவுல நிலைச்சு நிக்க முடியும்! நீங்களே யோசிச்சு பாருங்க....
தளபதி ரஜினி
தேவர் மகன் கமல்
திருப்பாச்சி விஜய்
ரெட் அஜித்
புதுபேட்டை தனுஷ்
சிலம்பாட்டம் சிம்பு
சாமி விக்ரம்
இவங்க எல்லாருமே அருவாள் தூக்கினதுனால தான் இத்தன காலமா இருக்காங்க!!

த: சரி விடு! ரொம்ப emotional ஆகாத! simpleலா ஒரு கதை.

இ: (யோசித்தார் இயக்குனர். ரொம்ப யோசித்தார்...) சார் எனக்கு ஒரு ஐடியா. என்னைய விட என் மனைவி தான் ரொம்ப நல்லா சமைப்பாங்க.

த: என்னது????

இ: ஐயோ சாரி சார். உணர்ச்சிவசப்பட்டுடேன். என்னைய விடு என் மனைவி தான் ரொம்ப நல்லா கதை சொல்லுவாங்க.

த: அப்படியா? சொல்லவே இல்ல. ஃபோன போடு தங்கச்சிக்கு.

இ: (ஃபோன் போட்டு தயாரிப்பாளரிடம் கொடுக்கிறார்)

த: ஹாலோ தங்கச்சி! எப்படி இருக்க?

பாரதி கௌதம் மனைவி(ம): ஹாலோ அண்ணா! நான் நல்லா இருக்கேன். நீங்க?

த: ஏதோ போயிகிட்டு இருக்கு. பாரதி, உன்கிட்ட கதை இருக்குனு சொன்னான். கதைய கொஞ்சம் ஒன் லைன் மட்டும் சொல்லேன்.

ம: படம் பெயர் 'நாலு'

த: நாலு??? நம்பர் நாலு?

ம: ஆமா அண்ணா!

த: எதுக்கு நாலு?
ம: கடைசியா நம்ம சுடுகாடுக்கு தூக்கிட்டு போக, எத்தன பேரு தேவை?

த: நாலு.

ம: வீட்டுக்கு லேட்டா வந்தா, அம்மா எத்தன பேர் கேவலமா பேசுவாங்கனு சொல்லி திட்டுவாங்க?

த: நாலு.

ம: மூன்றுக்கு அப்பரம்?

த: நாலு.


ம: இப்ப தெரியுதா அண்ணா, 'நாலு' ரொம்ப முக்கியமான நம்பர்னு.

த: (கதிகலங்கி போனார்) யம்மா தங்கச்சி....ஆ..ஆ...நான் கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுறேன். (ஃபோனை கீழே வைத்தார்.)

இ: என்ன சார்? என் மனைவி கதை புடிச்சு இருந்துச்சா?

த: யோவ்! உன் குடும்பமே இப்படி தானா?

இ: சார் கலைகுடும்பம் சார்!

த: கொலை குடும்பம்-னு சொல்லு!

இ: சார் விடுங்க சார்!!! எந்த producerருமே இல்லேனா நாங்களே ஒரு படத்த எடுக்கலாம்னு இருக்கோம்.

த: அப்படியா? படம் பெயரு?

இ: திருமதி இங்கிலீஷ்!

த: (மறுபடியும் இதயம் வெடித்தது!!!!)

*முற்றும்*

Jun 4, 2013

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-25

#ஒரு குவாட்டர் சொல்லு மச்சி...ஐயோ........நம்பர் 25 சொன்னேன் #

வெள்ளி விழா கொண்டாட்டம் காண்கிறது இந்த தொடர்.

1) விஜய் சேதுபதியின் ரசிகையாகிவிட்டேன். தொடர் வெற்றிகள். பஞ்ச் டயலாக் பேசாமல், குத்தாட்டம் போடாமல் ஒரு ஹீரோ!

சிறப்பு அம்சம்: ஹீரோவாக தன்னை காட்டிகொள்ளாமல் நடிப்பது.

சிலரை பிடிக்க அவர்களது வெளிதோற்றம் முக்கியமில்லை. புதுசா ஒரு விஷயத்தை செய்யும்போதே, ஒருவரின் மீது ஒரு ஈர்ப்பு வருமே....that same ஈர்ப்பு தான் விஜய் சேதுபதி மீது! புதுசு புதுசாய் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரை சைட் அடிக்க வைத்தது.


மற்றும் அவரின் புன்னகை இன்னொரு ப்ளஸ்!

2) அடுத்த ஹீரோ நிவின். நேரம் படத்தில் நடித்தவர்.



இவருக்கு லேசான தாடி தான் அழகு. மற்றபடி படத்தை பார்க்கவில்லை இன்னும். சில பாடல்களை பார்த்தேன். ம்ம்ம்....மனுஷன் பின்னியிருக்காரு!


Jun 3, 2013

சூது கவ்வும், ரன்பீர், தீபிகா புது படம்!

அருவாள் தேவையில்லை. tata sumo தேவையில்லை. தாடி வைத்த ஹீரோவாக இருந்தாலும் எரிச்சலை உண்டாக்கவில்லை. ஒரு ஐட்டம் நம்பர் ஆனால் சிரிக்க வைக்கும் ஐட்டம் நம்பர்.

அருவாள் தேவையில்லை (கடத்தல்காரர்களுக்கு தேவை ஐந்து rules)
tata sumo தேவையில்லை (ஒரு ஓட்டை வண்டி போதும்)
தாடி வைத்த ஹீரோ (விஜய் சேதுபதி)
நகைச்சுவை ஐட்டம் நம்பர் (காசு பணம் மணி மணி பாடல்)





சூது கவ்வும்- மக்களின் மனதை கவ்வியுள்ளது!

ரொம்ப புதுமையான ஒரு நகைச்சுவை படம்! ஹீரோ கண்களுக்கு மட்டும் தெரியும் ஹீரோயின், படத்தின் ஹீரோவுக்கு 40 வயது என்று சின்ன சின்ன விஷயங்கள் தான் படத்தை புதிதாய் காட்டியுள்ளது. நடித்த அனைவரும் டாப்! முக்கியமா விஜய் சேதுபதி!

ஒரு சின்ன கதை. எல்லாருக்கும் புரியும் கதை. ரசிக்க வைக்கும் திரைக்கதையும் வசனங்களும் இருந்தால் போதும் ஒரு நல்ல படத்தை எடுக்கலாம் என்று மறுபடியும் குறும்பட இயக்குனர்கள் நிரப்பித்து காட்டிவிட்டார்கள்! குறும்பட இயக்குனர்கள் மீது இருக்கும் மரியாரை இப்போது பல மடங்கு ஏறியுள்ளது! வாழ்த்துகள் இயக்குனரே!

2) yeh deewani hai jaawani

ரொம்ப நாளாக, நான் எதிர்பார்த்து கொண்டிருந்த படம்! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படம்! ரன்பீரும் தீபிகாவும் எப்படி சேர்ந்தார்கள் மறுபடியும்???...அட படத்துல சொல்லல! :))))))))))))))))






சரி கதைக்கு வருவோம். காதல் கதை தான்! இதுல என்ன புதுசு இருக்கு? ஒன்னும் இல்ல. அப்பரம் எப்படி நல்லா இருக்கு? என்று கேட்பவர்களுக்கு....

போய் படத்தை பார்த்துதான் அந்த அனுபவத்தை பெற்று கொள்ள முடியும்.

ரன்பீரும் தீபிகாவும் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம செம்ம செம்ம!!! தீபிகாவின் நடிப்பு கிளாஸ்! ரன்பீர் flirt செய்யும்போது அடிக்கும் வசனங்கள் அனைத்தும் டாப்!கூட நடித்தவர்களும் அருமை!

madhuri dixit ஆட்டம் பலம். அந்த பாடலில் ரன்பீர் ரொம்பவே ரசித்து ஆடியிருக்கிறார். ஒவ்வொரு frameலில் அது தெரிகிறது.

படத்தை இன்னும் கொஞ்சம் trim பண்ணியிருக்கலாம்!! மற்றபடி ஒரு feel-good படம். 29 வயதே ஆன இயக்குனரின் இரண்டாவது படைப்பு இது (முதல் படம் wake up sid) நல்ல முன்னேற்றம். ஆங்காங்கே தயாரிப்பளார் கரண் ஜோகரின் மேஜிக் தெரிந்தது! எல்லாமே பிடித்து இருந்தது!

கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்!

ஆமா...இந்த ரன்பீரும் தீபிகாவும் எப்படி சேர்ந்தார்கள்? அட படத்துல சொல்லல பா!:))))))))))))))))))