Mar 24, 2007

இந்தியா byebye to உலக கோப்பை 2007!

நேற்று நடந்த போட்டியில் 'அதிரடியாக' தோற்று வீடு கிளம்புகிறது நமது இந்திய சிங்கங்கள்!! ஸ்ரீலங்கா அணி பிரமதமாக ஆடி இந்தியாவை வீழ்த்தி விலாசியது. நான் என்னத்த சொல்ல.... கொஞ்சம் வயத்தெறிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இப்படி மோசமா விளையாடுவார்கள் என்று சற்றே நினைக்கவில்லை!

அந்த முதல் ஆட்டக்காரர் உத்தப்பா(இந்திய அணி) 21 வயசுதான் நினைக்கிறேன். அனுபவம் இல்லாதவர்! ரொம்ப அவசரப்பட்டு லாவகமாக பந்தை 'அழகாக' ஸ்ரீலங்கா பந்து வீச்சாளரிடம் கொடுத்து நமக்கு எல்லாம் 'அல்வா' கொடுத்தார். அப்பவே எனக்கு பயம் வந்துவிட்டது. நம்ம ஆளுங்க ஏதோ தப்பு பண்ண போதுங்கனு. தெரியாமல் செய்தால் தப்பு, தெரிந்து செய்தால் திமிரு! இதில் இவர்கள் எந்த வகை என்று தெரியவில்லை.

அப்பரம் கங்குலி, சிறப்பாக ஆரம்பித்தாலும், அவரும் அவசரப்பட்டுவிட்டார். ஸ்ரீலங்காவின் முரளிதரன் அற்புதமாய் பந்தை பிடிக்க கங்குலியும் போய்விட்டார். அப்போது பயம் உச்சிக்கு போய்விட்டது. அடுத்து ஷேவாக், இவர் வந்து சில சிக்ஸர்களையும் பவ்ண்டிரிகளையும் அடிக்க ஆரம்பித்தார். சற்று நம்பிக்கை வந்தது.

அதுக்கு அப்பரம் ஒன்னு நடந்தது பாருங்க. எனக்கு ரத்த கொதிப்பே வந்துட்டு. நம்ம சச்சின் வந்தார். ஆரம்பிக்க போவதற்குமுன் தரையை இரண்டு தட்டு தட்டுனாரு. பேட்டை சரி செஞ்சாரு. சுற்றும் முற்றிலும் பார்த்தாரு. பந்து வீசப்பட்டது. பந்து 'ஸ்டமை' அடிக்க, சச்சின் 'டக்' ஔட்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இதுக்கு அப்பரம் இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்குநூறாகி போய்விட்டது.

இதுங்க தேராதுங்கனு முடிவுக்கு வந்துவிட்டேன். ஒன்னு இல்ல... ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன் எடுத்து நிதானமாக விளையாடி இருந்தாலே போதும். இப்ப என்ன பண்ணுறது.மிஞ்சியது அவமானம் தான்!! எல்லாம் போட்டிகளிலும் வெல்வது என்பது கடினம்தான். மற்ற சாதாரண போட்டி என்றால் பரவாயில்ல. இது உலக கிண்ணம் போட்டி! இதுல கண்டிப்பா ஜெயித்தே இருக்கவேண்டும். இந்தியா அணியிடம் திறமை இருக்கு. எத்தனை திறமை இருந்தாலம் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும்.

பாருங்க, புதிதாக வந்த சில அணிகள் அப்படிதான் விளையாடுறாங்க. பார்ப்பதற்கு அவ்வளவு பெருமையா இருக்கு. நம்ம ஆளுங்க.. எல்லாத்தையும் தொலைத்து நிற்கிறார்கள். சொல்வது சுலபம், செய்வது கடினம். எனக்கும் தெரியும்! ஆனா இப்படிப்பட்ட போட்டிகளில் என்னதான் நடந்தாலும் விளையாட்டில் கவனம் வேண்டும்!!! உலகமே இப்போது இந்திய அணியை பார்த்து கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

ஆமா நம்ம ஆளுங்க எங்க விளையாட்டு பயிற்சி செய்ய நேரம் இருக்கு. விளம்பர படங்களில் நடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல. காலையில் பயன்படுத்தும் பல்பொடி முதல் இரவு பயன்படுத்தும் கொசுவத்தி வரை எல்லா விளம்பரங்களில் நம்ம இந்திய அணி வீரர்கள்தான். விளையாடுவதில் விட இதில்தான் ஆர்வம் அதிகம் போல. 1983 ஆம் ஆண்டு நமக்கு பெருமை வந்தது போல இந்த தடவையும் பெருமை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனா, அவர்கள் சேர்த்துகொண்டதோ பல கோடி இந்தியர்களின் வயத்தெறிச்சலை மட்டும்தான்.

இனி இவர்களை பற்றி சொல்ல ஒன்னுமே இல்ல. தனக்காக விளையாடாமல் தன் நாட்டிற்காக விளையாடி இருந்திருந்தாலே போதும். வெற்றி பெற்றிருக்கலாம்! என்னொரு கவ்வாஸ்கர் வருவாரா? இன்னொரு கபில் தேவ் வருவாரா? பதிலாக்காக காத்திருக்க வேண்டும் 2011 ஆம் ஆண்டு அடுத்த உலக கோப்பை வரை.

இதுல ஒரே ஒரு ஆறுதல்... என்னதான் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் சண்டை சச்சரவு இருந்தாலும். துன்பத்தில் இரண்டுமே ஒன்னு சேர்ந்துட்டாங்க!

Feb 28, 2007

எப்போதும், ஏன்?

கூட்ட நெரிசல்
எவ்வளவு இருந்தாலும்
கண்கள் அலை பாயும்!

நமக்கு ஏற்ற வயது பையன்களை
விட்டு வைப்பதில்லை நமது பார்வை
காரில் பயணம்
கண்ணாடி வழி
காதல்!

பேருந்தில் பயணம்
பக்கத்து சீட்டில்
காதல்!

இரயிலில் பயணம்
கம்பி பிடித்து
காதல்!

சாலை கடந்து போகையில்
திரும்பி பார்க்க வைக்கும்
காதல்!

நிலைமை

சல்மான் கான்
விவேக் ஒப்ராய்
இதற்கு பின்பு தான்
அமிஷேக் பச்சனே
ஐஸ்வர்யா ராயுக்கு!

முதல் காதல் உடைய
இரண்டாம் காதல் கரைய
முன்றாவது முறைதான் முழு நிலவாய்!
உலக அழகிக்கே இந்நிலைமை
உள்ளூர்வாசி நமக்கு எந்நிலைமையோ?

Feb 18, 2007

தீபாவளி- படவிமர்சனம்

பொங்கலுக்கு வராத தீபாவளி போன வாரம் வந்தது! இந்த படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு வச்சுருந்தேன். ம்கூம்.. எல்லாம் புஷ்பவனவெடி மாதிரி புஷ்னு போச்சு!

hero- jayam ravi
heroine- bhavana
director-ezhil
producer- llingusamy
music-yuvan shankar raja

கதையினு பார்த்தா.. மூன்றாம் பிறை கதைய கொஞ்சம் பிச்சி போட்டு colourful dance, youthful actors போன்ற மசாலா கலவைய போட்டு செஞ்ச ஒரு படம். திரைக்கதையில் எந்த ஒரு புதுமையும் இல்லை. சென்னை ராயபுரம் ஏரியாவை மையமா வச்சு கதை எழுதுனாங்களாம். ஆனா, அந்த ராயபுரம் இடத்துக்கு எந்த ஒரு சீனிலையும் முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியல. இதுல வேற.. இந்த படக்கதையை கேட்டவுடன் ஜெயம் ரவி உடனே ஒகே பண்ணிட்டாறாம்.. வேற எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். (யோவ், ஏன்ய்யா, உனக்கு இந்த அவசர புத்தி... அது சரி, உன் தலைஎழுத்த யாரு மாத்த முடியும்)

படம் ஆரம்பித்தவுடனே, கதை தெரிந்தவிட்டது. 1st half படு போர்! 2nd half கொஞ்ச எதோ பரவாயில்ல. climax எதிர்பார்த்தது போலவே! புதுமை ஒன்னுமே இல்ல. எப்படா படம் முடியுமுனு இருந்துச்சு. தெரியாத்தனமா வந்துடோமேனு ஒரே feeling வேற....

அதவாது.. படம் பார்க்க் வர நாங்களாம் கேனு பயபுள்ளைங்கனு இந்த படம் எடுத்தவன் நினைச்சுரு பாருங்க.. அதான் என்னால தாங்க முடியல. logic இல்லாமலேயே படம் போகுது. அப்பா விஜய்குமாருக்கும், மகன் ரவிக்கும் அந்த ஏரியா மக்களே உயிரை கொடுக்க இருக்காங்க! எதுக்குனே தெரியல...
ரகுவரன் டாக்டரா வராரு! பவானவுக்கு உள்ள வியாதியை விளக்கும்போது.. சிரிப்பு வருது... மூன்று வருஷமா நடந்தது மறந்துடுச்சு.. ஆனா ஞாபகம் திருப்பி வந்தா இப்போ 6 மாசம் நடக்குறது மறந்துடுமாம்!! ( மொத்தில் எப்படி பார்த்தாலும் வியாதி வியாதி தான்... ஐயோ தாங்கல சாமி)

சரி நடிப்பு பொறுத்த அளவில்.. பாவனா பரவாயில்ல.. அழுகும்போது நல்லா நடிக்குது புள்ள! அப்பரம்.. ஒரு டயலாக் சொல்லும் " சரி வாடா, தப்பு பண்ணலாமா?" இந்த இடத்தில் பாவனா அந்த cute and naughty expression கொடுத்து நல்லா நடிச்சு இருந்துச்சு! ஜெயம் ரவி நடிப்பு... சொல்லும்படி ஒன்னுமில்ல. சென்னை தமிழ் பேசுகிறார். ஒரு சமயம் சென்னை தமிழ், மற்ற நேரத்துல.. சதாரண தமிழ் பேசுகிறார். ஒரு சீரோட்டம் இல்லாத டயலாக் delivery! not good! ஆனா ஒரே ஒரு ஆறுதல், (பாவனா கதாபாத்திரம் பெயர் சுசி), ஜெயம் ரவி பாவனாவை "சுசி, சுசி" என்று கூப்பிடும்போது... ரொம்ப அழகா இருக்கு கேட்பதற்கு!

பாடல்கள்... அவ்வளவு பிரமாதமில்ல.. "போகாதே, போகாதே" பாடல் மட்டுமே படம் பார்த்து முடித்துவிட்டு வரும்போது முணுமுணுத்து கொண்டே இருந்தேன். யுவன் பாடிய பாடல். கேட்க ரொம்ப அருமையா இருக்கு. பாடல் வரிகள் அப்படியே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கு. இங்க ஒரு வரி வரும் 'உயிரே, உயிர் போகுதடி"! இந்த வரியை பாடும்போது யுவன் ஒரு feel கொடுத்து இருப்பாரு பாருங்க... உருகிபுட்டேன் நான்!!

மற்றபடி, வில்லன், காமெடி... சிறப்பா இல்ல. லுங்குசாமி தயாரித்த படம். ஆனாலும் இவர் படங்களில் வரும் வில்லன் பாணியே இப்படத்தில் இருக்கு... எனக்கு என்ன புரியலைனா.. படம் வருவதற்கு முன்னாடி, ஒரு செய்தித்தாளில் படித்தேன் இந்த படத்தை பற்றி " இப்படம், இன்னொரு கஜினி மாதிரி இருக்கும்! என்று. (அட பாவிகளா.. இந்த விஷயம் சூர்யா கேட்டா இவ்வளவு பீல் பண்ணுவாரு!! )

உங்களுக்கு எந்த வேல வெட்டி இல்லை என்றால் மட்டுமே இப்படத்தை போய் பாருங்க. நல்ல படம் பார்க்கனும் என்று நினைப்பவங்க, தப்பி தவறிகூட போய்டாதீங்க...இப்படி சொல்லியும் நீங்க போனிங்கனா... அப்பரம் உங்க வாயில நீங்களே acid ஊத்திக்கிறீங்கனு அர்த்தம்.

மொத்ததில் தீபாவளி- தீராத தலைவலி
(பட பேஜாராகீதுப்பா!!)