Jan 14, 2007

சரணடைந்தேன்!

சும்மா பார்க்கிறேன் என்று
சூராவளியை ஏற்படுத்தினாய்.
என் வேலையை செய்யவிடாமல்
பார்வையினாலேயே என்னை
உன் பக்கம் இழுத்தாய்!
தொடாமலேயே என் அழகை
அளவெடுத்தாய்.
காதோரம் கவிதை பாடினாய்
கழுத்தோரம் வீணை மீட்டினாய்
எல்லாம் பிடித்தும்
பிடிக்காதவாளாய் நான் நடித்தேன்
ஒரு கணம் என்னை பார்த்து
"ஐ லவ் யூ" என்றாய்!
நடிப்பை தொடர முடியாமல்
உன்னிடம் சரணடைந்தேன் நான்!

4 comments:

Unknown said...

ஃபிப்ரவரி 14 அன்னைக்குப் போட வேண்டிய பதிவ ஜனவரி 14 அன்னைக்கேப் போட்டுட்டீங்க :))

FunScribbler said...

நன்றி அருட்பெருங்கோ!! எப்ப போட்டால் என்ன.. காதல் காதல் தானே!! :)

N Suresh said...

ஐ லவ் யூ என்றதும் சரணடைந்த காதலியிருக்க பாக்கியவான் அவனுக்கு வேறென்ன வேண்டும்

நல்ல கவிதை

வாழ்த்துக்கள்

என் சுரேஷ், சென்னை

FunScribbler said...

நன்றி சுரேஷ்!