Dec 1, 2010

எவன் டி உன்ன பெத்தான், கையில் கிடச்சா செத்தான்!

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்காரர், நாம் தேடினாலும் கிடைக்காத ஒரு முத்து, உலக எழுதி வாங்க முடியாத சொத்து, சிவப்பு வைரமுத்து, தாடி வைக்காத வாலி, இலக்கணம் பிடிக்காத பா.விஜய், இலக்கியம் அறியாத நா.முத்துக்குமார் (உஷ்ஷ்ஷ்....இதுக்கு மேல என்னால முடியல...)

தலைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு சொந்தக்கார் உங்கள் சிம்பு! அவர் நடித்து (அப்படின்னு நினைக்குறேன்...) வெளிவரும் படம் 'வானம்'. அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள வரிதான் இது 'எவன் டி உன்ன பெத்தான், பெத்தான், பெத்தான், கையில கிடச்சா செத்தான் செத்தான் செத்தான்!'

பாடலை கேட்டவுடன், எனக்கு 'குபீர்'னு சிரிப்பு வந்துவிட்டது. பேஸ்புக்கில் இந்த பாடலின் யூடியுப் லிங்கை போட்டேன், அதற்கு நண்பர்கள் கொடுத்த கருத்துகள் அதைவிட காமெடி. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிட்டு.

சிம்பு கதைக்கு வருவோம்.....ஏன் பா ராசா, உன்னையெல்லாம் இப்படி எழுத சொல்லி யாரு கத்துகொடுக்கறது?? அப்பாவா?

என்னமோ போ...சிரிப்பு போலீஸ் மாதிரி...சிரிப்பு கவிஞர் மாதிரி தான் நீ எனக்கு தெரியுற! என்ன இருந்தாலும், பாடலின் வெற்றி உறுதி! நானே 100 முறை கேட்டுவிட்டேன்! (சிரிச்சு ரொம்ப நாளாச்சு பா!!!)


2 comments:

Arun said...

நான் மொதல்ல உங்கள பத்தி நீங்களே எழுதிக்கிட்டீங்கனு நெனச்சேன். உள்ள வந்து பாத்தா மேட்டர் வேற. :)

Karthik said...

வேர் ஈஸ் த பார்ட்டி ஹிட்டாகிடுச்சாம். கஷ்டம். :)