Dec 10, 2012

ஜஸ்ட் சும்மா (10/12/12)

'talaash' படம் பார்த்தேன். நேத்து இரவு படம் பாக்க போனால், இன்னிக்கு மதியம் தான் வெளியே வர முடிஞ்சது. அப்படி ஒரு slow படம். இரண்டு மணி நேரமாக இருந்தாலும், வேகம் ரொம்ப குறைவு. இருந்தாலும், படம் ஓரளவுக்கு பிடித்து இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். நல்ல கதை, திரைக்கதை ஓட்டத்தை வேகமாக்கி இருந்தால் இன்னொரு 'kahaani' பிறந்திருக்கும்.

படத்தில் பிடித்தது அமீர் தான். அது என்னமோ தெரியல, அவர் எந்த படத்தில் அழுதாலும், மனசு தாங்க மாட்டேங்குது!!:)))))))))))

அமீர் கானுக்கு நீச்சல் தெரியாது இதுவரைக்கும். ஆனால் இந்த படத்துக்காக அவர் கற்று கொண்டாராம்.


********************************************************************************
கொஞ்ச நேரம் முன்னாடி தான் 'நீயா நானா' நிகழ்ச்சியை பார்த்தேன். ஆங்கிலம் பற்றி தலைப்பு.

ஆங்கிலத்தால் நாம் படும் பாடும்
ஆங்கிலத்தை நாம் படுத்தும் பாடும்

ஐயோ ரொம்ப கஷ்டம்!!!

எனக்கு கமல் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது

"உங்க வீட்டில் எத்தன ஜன்னல் இருக்கிறதோ அத்தன மொழிகளை கற்று கொள்ளுங்க. வீட்டு நுழைவு வாசலாக மட்டும் தமிழாக வைத்து கொள்ளுங்க"

இது தமிழுக்காக மட்டும் இல்ல. அவங்கவங்க தாய்மொழியை கற்று கொள்ள வேண்டும். (ஆனா, இப்ப கலப்பு திருமண அதிகம் ஏற்படுவதால், இன்னும் சிக்கல். என்னுடன் பணி புரியும் ஒருத்தியின் தந்தை சீனர். அம்மா Philippines நாட்டை சேர்ந்தவர். ஆக, அவளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியுமா? பாவமாக இருந்தது கேட்க!)

****************************************************************************

சமீபத்தில் ஒரு 10 நாள் சுற்றுலா போக வாய்ப்பு கிடைத்தது. இத்தாலி, சுவிட்ஸலாந்து மற்றும் france.

கடவுள் 'அழகானவர்களை' படைத்து மொத்தமாய் இத்தாலியை போட்டுவிட்டார் போலும். பெண்கள், ஆண்கள், பெரியவர்கள், சின்னவர், குழந்தை எல்லாருமே அழகா இருக்காங்கப்பா!!!:)))

சுவிட்ஸலாந்தில் பிடித்தது பனி. ஐயோ எனக்கு அழுகையே வந்துடுச்சு. இரண்டு வருடமாய் சம்பாதித்த சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தில் போனதால், ஒரு வித வலி கலந்த சந்தோஷம். ஒவ்வொரு முறையும் பனியை ஜன்னல் வெளியே பார்க்கும்போது, இரவு தூக்காமல் கிடந்த நாட்கள், தன்மானத்தை புதைத்து boss சொல்வதை கேட்ட வார்த்தைகள், கஷ்டப்பட்டு attend பண்ண meeting எல்லாமே ஞாபகத்துக்கு வந்தது. அந்த பனியை பார்த்து கொண்டே ஒரு கப் சூடா hot chocolate குடித்தால் தெரியும் பாருங்க சொர்க்கம்..priceless!!!:)))))))

franceல் ஒரு படம் பார்க்க போனோம். 'the impossible'- சுனாமியில் சிக்கி தவித்த ஒரு குடும்பத்தின் கதை. படம் ஆரம்பித்த 10 நிமிடத்தில் அழ ஆரம்பித்த நான் கடைசி காட்சி வரைக்கும் அழுகையை நிறுத்த முடியவில்லை. என்ன ஒரு நடிப்பு, சம்பவங்கள்...ச்சே...chanceஏ இல்ல. பக்கத்துல இருந்த french guys எல்லாம் அழ, ஒரே சோக பூமியா போச்சு. ஒவ்வொரு காட்சியிலும் மனசு பதறது, கைகால் உதறுது. படம் முடிந்து பார்த்தால், கழுத்தில் போட்டிருந்த scarf நனைச்சு போச்சு.

*********************************************************************************

3 comments:

ANaND said...

ஐயோ எனக்கு அழுகையே வந்துடுச்சு//////. பின்னே சொந்த காசுல ஊர் சுத்துனா. வலிக்கும் தான் மச்சி. நீங்க இன்னும் வளரனும் ஹி ஹிஹி

FunScribbler said...

//பின்னே சொந்த காசுல ஊர் சுத்துனா. வலிக்கும் தான் மச்சி. //

anand: உண்மை தான் மச்சி! அப்படினா, நீ அழுததே இல்லேனு சொல்லு:))

gils said...

//பின்னே சொந்த காசுல ஊர் சுத்துனா. வலிக்கும் தான் மச்சி//

hahaha :D golden words :D

but mango..so the jealous of u..kaasu sethu vaika dhairiyam theavai illa..theramaium konjam luck iruntha porum..aana selavu panna..athuvum thanakku pudicha vishayngalla selavu panna kandippa oru thairiyam venum...to over come fear of us over ourselves..u got it in loads machi :D