Feb 14, 2013

இன்னிக்கு ஏதோ காதலர் தினமாம்?

இந்த நாள்- 14 பிப்ரவரி அன்று உலகத்தில் உள்ளவரை 4 வகையில் பிரிக்கலாம்!

1) காதல் காதல் காதல்


தமிழ்ல ஒரு வாக்கியம் சரியா எழுத தெரியாத பயலுக எல்லாம் கவித கவிதையாய் கொட்டி தீர்ப்பான்! ரோஜா பூவுக்கு வாய் இருந்தால், துப்பும்! அம்புட்டு ரோஜா பூக்களை வாங்கி குவிப்பான். காதலன்/காதலி வீட்டுக்கு பூ அனுப்புவாங்க. அவுக வேலை பார்க்கும் ஆபிஸுக்கு பூ அனுப்புவாங்க!!

இப்படி ஒரு நாளில் ஒரு மாசம் சம்பளத்தை செலவு பண்ணுவாங்க!

2) நான் சிங்கம்! நான் single!!


365 நாளும் காதல் இருக்கனும். இன்று மட்டும் கொண்டாடுவது மூட்டாள் தனம் அப்படினு சொல்லும் கட்சி. காதலிப்பவர்களை கிண்டல் பண்ணும் கூட்டம் இது. கடவுள் எனக்காக ஒருத்தரை/ஒருத்தியை பார்த்து வைத்து இருக்கிறார். அவர் ஒரு நாள் என்னை பார்க்க வருவார் அப்படினு வைதேகி காத்திருந்தாள் விஜய்காந்த் மாதிரி உட்கார்ந்து இருப்பவர்கள். தேவையில்லாமல் கிண்டல், கேலி செய்து facebookகளில் அதிக 'லைக்'களை சேர்ப்பவர்கள்.

இன்னிக்கு ''happy thursday" அப்படினு சொல்லி காதலர்களை வெறுப்பேத்துபவர்கள்!

3) காதல் கலாச்சாரத்தை கவுகுது!

 Anti Valentines Day Photo Picture
கலாச்சாரத்தை காப்பாத்தனும். கருப்பான்பூச்சியை காப்பாத்தனும்னு கண்டபடி இந்த தினத்தை எதிர்ப்பவர்கள்!  ஒரு காரணமும் இருக்காது! ஆனால், எதிர்ப்பார்கள்!

பாரதியார் தினம் எந்த நாள் தெரியுமா?
அவர் இறந்த நாள் எந்த நாள் தெரியுமா?


என கேட்டு இளையர்களை மடக்குவதாய் நினைப்பு!!!

பாரதியார் தினம் தெரியாமல் இருக்கலாம்...ஆனால் அவர் சொன்ன 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'னு காதலிப்போர் இளையர்கள்!

நீங்க- 'என் ஜாதிக்கு ஒன்னுனா, நான் வெட்டுவேன்!' என்கிறீர்கள்!!!

***************************************************************************

அப்பரம் அந்த நான்காவது குரூப்?
அட அது நம்ம தான் (நான் உள்பட)

4) எல்லாரும் அன்பர் தான். இன்று அன்பர தினம் தான்.






காதலிப்போரே, வாழ்க!

single சிங்கமே, all the best!

கலாச்சாரத்தை காப்பாத்துவோரே, ம்ம்ம்...நடத்துங்க!!

கெட்டவங்களோ, நல்லவங்களோ, அனைவரும் அன்பர்கள் தான்! ஏதோ காதலர் தினம் அப்படினு சொல்லி அவர்களை நாம் தனியாக விட வேண்டாம். அன்பர் தினம் என்று அனைவரும் கொண்டாடுவோம்!!

மற்றவர்களை சந்தோஷமா வச்சு இருங்க, அதுவே போதும்! சண்டை வேண்டாம். போர் வேண்டாம். சந்தோஷமா வாழ்வோமே- என்று நினைப்பவர்கள் நாங்கள்!!

****************************************************************************

4 comments:

gils said...

addaadadada....yappayappayappayappapapapaa....epdi mango ithelaam!!! athulayum antha baratiyar jaathi part...avvvvvvvvv.....

JA and KJo ku neenga koodai koodaiya anuppinathelaam intha post kanakula vaaraatho? :D

Anonymous said...

Naanum unga group than. Ethu mathiri rendu post weekly podungappa. Story? Ok. ok. Waiting.

FunScribbler said...

I will send to john Abraham, karan johar, their mothers, their brothers, their sisters.... Everyone!! Ellarum pudikum!!

Ps: so you like your boss? Apadinu ketka kudaathu:)))

FunScribbler said...

Thanks for waiting!! Actually I'm also waiting for my mind to craft something!! :))