Feb 19, 2013

"நான் இப்ப என்ன செய்ய?"- தம்பி மாதவனின் தங்கச்சி

நம்ம சமுதாயத்துல......ஐயோ அது பெரிய வார்த்தையோ?
சரி விடுங்க...
நம்மில் பல பேர் இன்னும் தேவையற்ற விழாக்களை கொண்டாடுகிறோம்.

அதில் ஒன்று தான் - இந்த 'மஞ்சள் நீராட்டு விழா'. ஐயோ இன்னுமா இந்த உலகம் இப்படிலாம் பண்ணுதுனு நினைக்கும்போது....
Madhavan

"நான் இப்ப என்ன செய்ய?"

இது கலாச்சாரம்னு நிறைய பேர் நினைக்குறாங்க. இல்லேனு சொன்னா, அடி இடி மாதிரி வருது!! இது போன்ற வழக்கங்கள் அந்த காலம் பழக்கம். அதை இப்ப வரைக்கும் தொடர தேவையில்ல. போன வாரம், இப்படிப்பட்ட ஒரு விழாவுக்கு போக நேர்ந்தது. எனக்கு இதில் சுத்தமாக ஆர்வமில்லை. கோபம் தான் வந்தது. சென்ற எனக்கு ரொம்ப முக்கியமான பொறுப்பு வேற- பொண்ணு தோளில் வைக்கப்பட்டிருக்கும் 'அடையை' கீழே விழாமல் பாத்துக்கனும்!! what a great insult!!! பாவம் அந்த சின்ன புள்ள, என்ன நடக்குது-னுகூட புரியல!:((

என்னமோ போங்க!! நம்ம பல விஷயங்களில் முன்னேறியுள்ளோம் என்று சொன்னாலும் இது போன்ற நேரங்களில் அறிவில்லாதவர்களாய் நடந்து கொள்கிறோம் என நினைக்கும்போது...

"நான் இப்ப என்ன செய்ய?"

*************************************************************************

இந்த விஷ்வரூபம் காய்ச்சல் குறையவில்லை. வீட்டுக்கு வருபவர்களுக்கு கிடைத்துள்ளது மிக பெரிய 'நீயா நானா' தலைப்பு- விஷ்வரூபம் படம் நல்லா இருக்கா இல்லையா என்பது தான்.  கருத்தை சொன்னால், அது எப்படி நீ அப்படி சொல்ல முடியும்! இது ஒரு காவியம், செதுக்கிய ஓவியம். உலக சினிமா அப்படி இப்படினு சொல்றாங்க!!

அடுத்து கடல் படம் பற்றி பேச்சு வந்துச்சு.
 என் reaction.... "YES, YES, THANK YOU!"



கடைசில என்னையும் அரசியல்வாதி ஆகிட்டாங்களே, "நான் இப்ப என்ன செய்ய?"
******************************************************************************

அடுத்த வார சனிக்கிழமைல 'மீட்டிங்' இருக்குதாம்!! சனிக்கிழமையையே அசிங்கப்படுத்துறாங்களே,

"நான் இப்ப என்ன செய்ய?"

******************************************************************************

6 comments:

Anonymous said...

இந்தபோஸ்ட் எனக்கு புடிக்கல.வெய்ட்டிங் ஃபார் அடுத்த போஸ்ட். As usual jolly post. Namakkellam ethukku evvlo serious post.

FunScribbler said...

Boss!! Hahaha boss!! Ithu comedy post Thaan post:))

Anonymous said...

சரி சரி. ஆனா நாங்க இன்னும் எதிர்பார்க்கறோம். சனிக்கிழழை மேட்டர் உண்மையிலே ஐநா சபை வரைக்கும் போகவேன்டிய மேட்டர்.

Anonymous said...

neenga ithuvarikkum enna sengingalo athaiye seiunga ... puthu yosichu brain heat pannathinga ... athu bodykku safe illa .. :)

-Unga Fan

இராஜராஜேஸ்வரி said...


""நான் இப்ப என்ன செய்ய?"

இந்த பதிவைப்படிங்க ...

AshIQ said...

”தம்பி மாதவன்” அப்படினு சொல்லும் போது தங்கச்சி எப்படி வரும்? சோ தம்பி மாதவனின் அக்கானு எழுதுங்க அதான் சரி.
ஏற்கனவே தம்பினு சொல்லிட்டு அப்பறம் தங்கச்சினு சொன்னா கண்க்கு டேலி ஆகமாட்டேங்குது இல்லையா :-)
-பஹ்ருதீன்