உடற்பயிற்சியுடன் டையட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டை சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald's, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.
இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்கே நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாக கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவு பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.
பின்னர், aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்சிவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா.. சரியா ஆடி நம்ம என்ன உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போக போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, caloriesகளை குறைப்பதே எனது நோக்கம்.
இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், ரொம்ப இளைச்சுட்டே என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
காலேஜில் நிறைய பேர், "ஏய் என்னடி... செஞ்சே...you look good...you lost so much of weight.." என்று பாராட்டினர்.
போட முடியாத சட்டைகள் பல அதற்கு அப்பரமும் போட முடியவில்லை.
காரணம்?
அவை இப்போது பெரியாதாய் இருந்தன.ஹாஹாஹா.... நிறைய உடைகளை alter செய்து தான் போட்டுகொண்டேன்.
வீட்டில் ஒரு digital weighing machine வாங்கினேன். அதில் தினமும் காலையில் எடை பார்த்தபிறகு தான் மறுவேலை நடக்கும்.
எனக்கு ஒரு ஆசை, பேராசைகூட வைத்து கொள்ளலாம். 53 கிலோவில் இருக்கும் நான், 50க்கு வர வேண்டும் என்பதே! எல்லாரும் 50 கேஜி தாஜ்மகால்ன்னு சொல்றாங்களே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு முறை உணர்ந்து பார்க்க வேண்டும்.
சிரமம் எடையை குறைப்பது என்றால் அதைவிட சிரமம் 53விலே maintain செய்வது.
பரிட்சையில் தோல்வி அடைந்தவன் வெற்றி பெற்றுவிடுவான் அடுத்த முறை. ஆனால் இந்த 99 மார்க் வாங்கினவன் 100 மார்க் எடுக்க ரொம்ப ரொம்ப கஷ்டப்படுவான். இந்த நிலைமையில் தான் நான் இருக்கிறேன். 9 மாதங்களில் 53க்கு வந்த நான், 53லிருந்து 50க்கு வர ரொம்ப கஷ்டமாக இருக்கு!:)
May 15, 2009
May 14, 2009
biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன் - 2
பகுதி 1
நீச்சல் வகுப்பில் நானும் இன்னொரு சீன பெண் தான். அவங்க சீனியர். பல வித ஸ்டைல்கள் தெரியும். நான் beginner. பயிற்சிவிப்பாளர் வந்தார். புகைப்பிடிப்பவர். புகை நாற்றம் வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருந்தாலும் கட்டுபடுத்தி கொண்டேன். முதல் வகுப்பு என்பதால் ரொம்ம்ப பேசினார். lecture அடித்தார்.
'பொதுவா இந்தியர்களுக்கு நீச்சல் வராது." என்றார். முறைத்தேன்.
"இல்ல இல்ல...அவர்கள் ஓடுவதில் தான் experts" என்று சமாளித்தார்.
பக்கத்தில் 2, 3 வயது குழந்தைகள் சுலபமாக நீந்துவதை பார்த்து பொறாமை வந்தது. சின்ன வயதிலேயே நீச்சல் கற்று இருக்கலாமே என்ற ஏக்கம். அப்போது வசதி இல்லை, பெற்றோர்கள் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை.
முதல் வகுப்பு முடிந்தது. எப்படி float செய்வது என்பதை கற்றேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமை தான் வகுப்பு. இருந்தாலும், அடுத்த செவ்வாய் வருவதற்கு முன்னாலே மூன்று அல்லது நான்கு முறை நானாகவே நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி செய்தேன். அதன் காரணமாக மூன்றாவது வகுப்பிலேயே முதன் முதலாக 50 மீட்டர் நீந்தினேன் எந்த இடத்திலும் நிறுத்தாமல்! வாழ்க்கையில் நான் செய்த ஒருசில சாதனைகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
"நீ ரொம்ப வேகமா கத்துக்கிற" என்றார் பயிற்சிவிப்பாளர்.
நான்காவது வகுப்பு முடிந்த பிறகு, வகுப்பிற்கு போவதை நிறுத்திவிட்டேன். நீச்சல் தெரிந்தவுடன் நானாகவே சென்று 10 laps அல்லது 20 laps(கிட்டதட்ட 1 km) நீந்தினேன்.உடல் எடையை குறைப்பதற்காக இந்த முயற்சி. நீச்சல் செய்தால் thigh fats குறையும்.
இப்படி ஒரு பக்கம் சென்றது.
வீட்டின் கீழ் தாளத்தில் உடற்பயிற்சி செய்ய சின்ன இடம் இருக்கிறது. காலை நேரங்களில் சென்று skipping செய்தேன். 100 முறை ஸ்கிப் செய்துவிட்டு 13 மாடி ஏறுவேன். மறுபடியும் கீழே வந்து இன்னொரு 100 முறை ஸ்கிப் செய்வேன். மறுபடியும் மாடி ஏறுவேன். இப்படி 5 முறை செய்வேன். வேர்த்து கொட்டும். கால்களிலுள்ள தசைகள் வலிக்கும். உயிர் போவது போல் இருக்கும்.
ஆனால், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான் - உடம்பை குறைக்க வேண்டும்!
உடம்பை குறைப்பது என்பது....
it is not a struggle in the body. it is the battle between the heart and the mind!
இது போதாது என்று, ஜிம்மிற்கு போக ஆரம்பித்தேன். முதன் முதலாக ஜிம் போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கே உள்ளவர்கள் நம்மை பார்ப்பார்களோ, என்ன நினைப்பார்களோ என்று பல சிந்தனைகள். அங்கு சென்று பார்த்தபிறகு ஒரு புதிய தன்னம்பிக்கை.
வயது 40, 50 இருக்கும் பெண்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக பயிற்சி செய்வதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அவர்களை பார்த்து நிறைய கற்றுகொண்டேன்.
முதன் முதலாக ஆரம்பித்த போது threadmill 10 நிமிடங்கள் நடக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். stamina பத்தாது! பத்தி நிமிடங்கள் நடந்தவுடன் உட்கார்ந்து கொள்வேன். இப்படி பயிற்சி செய்து என்னிக்கு நம்ம உடம்ப குறைப்பது என்ற சோகம்! சில சமயங்களில் சோர்ந்து நொந்து போயிவிடுவேன். ஆனால், ஏதோ ஒன்று மனதில் சொல்லும்-உன்னால் முடியும் என்று!
staminaவை முன்னேற்றி கொண்டாலே போதும்! அதற்கு தொடர்ந்து ஜிம்-மிற்கு சென்றேன்.
threadmillலில் 20 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பிறகு ஓட ஆரம்பித்தேன்.
mini-weights தூக்கினேன்.
cycling machineலில் 25 நிமிடங்கள் பயிற்சி செய்தேன்.
ஒவ்வொரு முறையும் நான் அன்று ஜிம்மில் என்ன செய்தேன், எவ்வளவு calories குறைத்தேன் என்பதை டைரியில் எழுதினேன். 100 caloriesலில் ஆரம்பித்து, உச்சகட்டமாக 1200 calories வரையிலும் சென்றுள்ளேன். அதாவது ஒரு நாளில் 1200 calories குறைப்பது என்பது கிட்டதட்ட மூன்று மணி நேர உழைப்பு!
அங்குள்ள weighing machineலில் எடையை பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும் குறைந்து கொண்டே வந்தது. சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே....
என் சூழ்நிலைக்கு ஒத்துவராத பொன்மொழி!
பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சாப்பாட்டின் அளவையும் குறைக்க வேண்டும்...
ஆனால்...
(தொடரும்)
நீச்சல் வகுப்பில் நானும் இன்னொரு சீன பெண் தான். அவங்க சீனியர். பல வித ஸ்டைல்கள் தெரியும். நான் beginner. பயிற்சிவிப்பாளர் வந்தார். புகைப்பிடிப்பவர். புகை நாற்றம் வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருந்தாலும் கட்டுபடுத்தி கொண்டேன். முதல் வகுப்பு என்பதால் ரொம்ம்ப பேசினார். lecture அடித்தார்.
'பொதுவா இந்தியர்களுக்கு நீச்சல் வராது." என்றார். முறைத்தேன்.
"இல்ல இல்ல...அவர்கள் ஓடுவதில் தான் experts" என்று சமாளித்தார்.
பக்கத்தில் 2, 3 வயது குழந்தைகள் சுலபமாக நீந்துவதை பார்த்து பொறாமை வந்தது. சின்ன வயதிலேயே நீச்சல் கற்று இருக்கலாமே என்ற ஏக்கம். அப்போது வசதி இல்லை, பெற்றோர்கள் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை.
முதல் வகுப்பு முடிந்தது. எப்படி float செய்வது என்பதை கற்றேன். ஒவ்வொரு செவ்வாய்கிழமை தான் வகுப்பு. இருந்தாலும், அடுத்த செவ்வாய் வருவதற்கு முன்னாலே மூன்று அல்லது நான்கு முறை நானாகவே நீச்சல் குளத்திற்கு சென்று பயிற்சி செய்தேன். அதன் காரணமாக மூன்றாவது வகுப்பிலேயே முதன் முதலாக 50 மீட்டர் நீந்தினேன் எந்த இடத்திலும் நிறுத்தாமல்! வாழ்க்கையில் நான் செய்த ஒருசில சாதனைகளில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
"நீ ரொம்ப வேகமா கத்துக்கிற" என்றார் பயிற்சிவிப்பாளர்.
நான்காவது வகுப்பு முடிந்த பிறகு, வகுப்பிற்கு போவதை நிறுத்திவிட்டேன். நீச்சல் தெரிந்தவுடன் நானாகவே சென்று 10 laps அல்லது 20 laps(கிட்டதட்ட 1 km) நீந்தினேன்.உடல் எடையை குறைப்பதற்காக இந்த முயற்சி. நீச்சல் செய்தால் thigh fats குறையும்.
இப்படி ஒரு பக்கம் சென்றது.
வீட்டின் கீழ் தாளத்தில் உடற்பயிற்சி செய்ய சின்ன இடம் இருக்கிறது. காலை நேரங்களில் சென்று skipping செய்தேன். 100 முறை ஸ்கிப் செய்துவிட்டு 13 மாடி ஏறுவேன். மறுபடியும் கீழே வந்து இன்னொரு 100 முறை ஸ்கிப் செய்வேன். மறுபடியும் மாடி ஏறுவேன். இப்படி 5 முறை செய்வேன். வேர்த்து கொட்டும். கால்களிலுள்ள தசைகள் வலிக்கும். உயிர் போவது போல் இருக்கும்.
ஆனால், என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான் - உடம்பை குறைக்க வேண்டும்!
உடம்பை குறைப்பது என்பது....
it is not a struggle in the body. it is the battle between the heart and the mind!
இது போதாது என்று, ஜிம்மிற்கு போக ஆரம்பித்தேன். முதன் முதலாக ஜிம் போகும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கே உள்ளவர்கள் நம்மை பார்ப்பார்களோ, என்ன நினைப்பார்களோ என்று பல சிந்தனைகள். அங்கு சென்று பார்த்தபிறகு ஒரு புதிய தன்னம்பிக்கை.
வயது 40, 50 இருக்கும் பெண்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக பயிற்சி செய்வதை பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அவர்களை பார்த்து நிறைய கற்றுகொண்டேன்.
முதன் முதலாக ஆரம்பித்த போது threadmill 10 நிமிடங்கள் நடக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும். stamina பத்தாது! பத்தி நிமிடங்கள் நடந்தவுடன் உட்கார்ந்து கொள்வேன். இப்படி பயிற்சி செய்து என்னிக்கு நம்ம உடம்ப குறைப்பது என்ற சோகம்! சில சமயங்களில் சோர்ந்து நொந்து போயிவிடுவேன். ஆனால், ஏதோ ஒன்று மனதில் சொல்லும்-உன்னால் முடியும் என்று!
staminaவை முன்னேற்றி கொண்டாலே போதும்! அதற்கு தொடர்ந்து ஜிம்-மிற்கு சென்றேன்.
threadmillலில் 20 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்து, பிறகு ஓட ஆரம்பித்தேன்.
mini-weights தூக்கினேன்.
cycling machineலில் 25 நிமிடங்கள் பயிற்சி செய்தேன்.
ஒவ்வொரு முறையும் நான் அன்று ஜிம்மில் என்ன செய்தேன், எவ்வளவு calories குறைத்தேன் என்பதை டைரியில் எழுதினேன். 100 caloriesலில் ஆரம்பித்து, உச்சகட்டமாக 1200 calories வரையிலும் சென்றுள்ளேன். அதாவது ஒரு நாளில் 1200 calories குறைப்பது என்பது கிட்டதட்ட மூன்று மணி நேர உழைப்பு!
அங்குள்ள weighing machineலில் எடையை பார்த்தபோது, ஒவ்வொரு வாரமும் குறைந்து கொண்டே வந்தது. சந்தோஷம் தாங்க முடியவில்லை. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே....
என் சூழ்நிலைக்கு ஒத்துவராத பொன்மொழி!
பயிற்சி செய்தால் மட்டும் போதாது, சாப்பாட்டின் அளவையும் குறைக்க வேண்டும்...
ஆனால்...
(தொடரும்)
May 13, 2009
biggest loser- எந்த கடையில நான் அரிசி வாங்கினேன்?-1
biggest loser நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது, பழைய நினைவுகள் என்னை தீண்டின.
2007 மே மாதம்.
காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."
அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.
1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.
2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.
கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.
அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.
வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
நீச்சல் வகுப்பில்.....
(பகுதி 2)
2007 மே மாதம்.
காலேஜ் முதலாம் ஆண்டு முடியும் வேளை. காலேஜ் வாழ்க்கையில் settle ஆக ரொம்ப கஷ்டப்பட்டேன். படிப்பு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிறைய தேர்வு, assignment. பள்ளி நண்பர்களிடம் பேச கூட நேரம் இல்லை. வெளியே போகவில்லை. கிட்டதட்ட பைத்தியம்போல் இருந்த காலம். அதிகபடியான மன உளைச்சலால் நிறைய சாப்பிட ஆரம்பித்தேன். அதன் விளைவு. obesity பிரச்சனை! என் உயரத்திற்கு நான் 49-52.9 கிலோக்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் 66 கிலோ இடையில் இருந்தேன். மருத்தவர் எச்சரித்தார், "நீங்க இப்படியே போய்கிட்டு இருந்தீங்கன்னா, சின்ன வயசுலே diabetics, heart problem வர வாய்ப்பு இருக்கு."
அப்போதுகூட நான் அதை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. அதற்கு அப்பரம் நடந்த இரண்டு சம்பவங்கள்.
1) என் மாமா மகள், வயது 5 தான் இருக்கும். அவர்கள் வீட்டில் ஃபோட்டா எடுத்தோம் ஒருநாள். ஃபோட்டாவில் நான், அக்கா, அவள். ஃபோட்டாவை பார்த்து அவள் என்னிடம் சொன்னாள், "நீங்க ஏன் இவ்வளவு பெரிசா இருக்கீங்க? ஃபோட்டா முழுசா நீங்க தான்..." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள்கூட சேர்ந்து சிரிப்பதா. இல்ல, ஒரு சின்ன புள்ள நம்மள பாத்து சொல்லிட்டேன்னு அழுவதான்னு ஒன்னும் புரியல்ல....மனசுக்குள் ஒரு மணி அடித்தது.
2) இன்னொரு முறை, நானும் என் அப்பாவும் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, அவர் என்னை பார்த்து ஒன்று சொன்னார். (ரொம்ப மோசமான கமெண்ட்...அதை இங்கே சொல்ல முடியாது.) என்னடா இது இவர் இப்படி நம்மை பார்த்து சொல்லிட்டாரேன்னு அன்று இரவு முழுசும் ஒரே கவலை. நம்ம என்ன அப்படி குண்டாவா இருக்கிறோம் என்று மனம் நொந்து போனது.
கண்ணாடியில் பார்த்தேன். உண்மை சுட்டது! என்னிடம் ஒரு பத்து சட்டைகள் இருந்தால், அதில் இரண்டு மட்டுமே போட முடியும். அந்த அளவுக்கு நிலைமை இருந்தது. உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு முடிவு எடுத்தேன். உடல் இடை குறைக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்றேன். அங்கே ஒரு கணிசமான தொகையை செலுத்தி, இயந்திரங்கள் உதவியால் beltகளை வயிற்று பகுதி, கால் பகுதியில் சுற்றி வைப்பார்கள்.
அரை மணி நேரத்திற்கு அவை உடம்போடு ஒட்டி இருக்கும். ஆனால், அதிலிருந்து சூடு வரும். அந்த சூட்டினால் உடல் இடை குறையுமாம்! நானும் நம்பி போனேன். சொல்ல முடியாத வலி! அரை மணி நேரம் முடியும் முன்னே கத்திவிட்டேன். என்னை விட்டுவிடும்படி சொல்லி கிளம்பிவிட்டேன். அதுக்கு அப்பரம் நடக்கவே முடியல.
வாத்துக்கு piles வந்தா எப்படி நடக்குமோ, அப்படி நடந்தேன். கட்டடத்தின் கீழ் தளத்தில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுது இருப்பேன். சூட்டினால் ஏற்பட்ட வலி, உடல் பருமனாக இருக்கிறேனே என்ற வலி, மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்களே என்ற வலி, நமக்கு பிடித்த ஆடைகளை போட முடியவில்லையே என்ற வலி, இந்த சின்ன வயசுல ஏன் எனக்கு இந்த கஷ்டம் என்ற வலி....என்று வலிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
அழுது முடித்தேன். இந்த இடத்திற்கு மீண்டும் வந்தால் என்னை உயிரோடு சமாதிகட்டிவிடுவார்கள். பணத்தை கட்டிவிட்டோம், அப்பணம் பழனி உண்டியலில் போட்டதாக நினைத்து கொண்டேன். ஆக, சொந்த முயற்சியில் இறங்கினேன். அம்மா என்னை நீச்சல் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
நீச்சல் வகுப்பில்.....
(பகுதி 2)
ஜஸ்ட் சும்மா(13/5/09)
காலேஜ் இருக்கும்போது, அம்புட்டு வேலை இருக்கும். ஆனா எழுதுறதுக்கு 1008 விஷயங்கள் தோணும். இப்போ லீவு தானே.. ஆனா இந்த (மர)மண்டையில ஒரு மண்ணும் தோண மாட்டேங்குது... அது ஏன்னு தெரியல.... லீவுல தான் நிறைய எழுதுறதுக்கு நேரம் கிடைக்கும்.ஆனா ஒன்னுமே எழுத தோணல...எழுத வரல...அதான் இப்படி ஜஸ்ட் சும்மா....
ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------
biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------
1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------
நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."
அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."
நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------
குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)
ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற கனா காண்கிறேன் பாடலை ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல கேட்குறேன். சமீப காலத்தில் வந்த பாடல்களில் என்னை கவர்ந்த ஒரு பாடல் இதுவே!! பாடல் வரிகள் ரொம்ம்ப நல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------
biggest loser என்ற அமெரிக்கா நிகழ்ச்சி ஒன்று, அதை தினமும் பார்த்து கொண்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி குண்டா இருப்பவர்கள் 15 வாரங்களில் எப்படி தங்களது இடையை குறைக்கிறார்கள் என்பதை பற்றி. ஒவ்வொரு ஆளும் எடுக்கும் முயற்சியை பார்க்கும்போது ரொம்ம்ப வியப்பா இருக்கும். என்னையே நான் பார்த்த மாதிரி ஒரு உணர்வு... ஏன் என்றால் ஒரு காலத்தில் நானும் குண்டா இருந்து, நிறைய கஷ்டப்பட்டு 13 கிலோ குறைத்தேன். அந்த 'இரத்த கண்ணீர்' கதையை விரைவில் எழுதுகிறேன்:(
----------------------------------------------------------------------------------------
1988 ஆம் ஆண்டு சச்சின் 10வது வகுப்பு தேர்வில் தோல்வி. ஆனால் 2008 பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முதல் பாடமே சச்சினை பற்றி தான்! முயற்சியே பலம்- இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது. அன்றே சச்சின்- ஒரு சுனாமியின் சரித்திரம் என்னும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தேன். ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட், சச்சின் இஸ் சிம்பிலி சூப்ப்ப்ப்ப்ப்ர்ப்ப்!! எத்தன சங்கடங்கள், சோதனைகள், சாதனைகள், கஷ்டங்கள், கேப்டனாக தோல்வி, சக விளையாட்டர்களின் பொறாமை, பகைமை, கிரிக்கெட் வாரியம் செய்தவை.... அவரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது அப்புத்தகம். அதை படித்தவுடன் ஏதோ ஒரு புத்துணர்ச்சி!!
-------------------------------------------------------------------------------------
நேற்று சன் டிவில காதல் படத்த போட்டான். நானும் அக்காவும் பார்த்து கொண்டிருந்தோம். சந்தியாவின் வண்டி கோளாறு ஆனவுடன் பரத் கடைக்கு எடுத்து செல்வார்கள். அப்போது சந்தியாவின் தோழி, "வண்டிய நீங்க தான் பாக்கனுமா? வண்டி ஆசைப்படுது." என்பாள். ஆனால் நேற்று 'வண்டி ஆசைப்படுது' என்ற ஷாட்டை கட் செய்துவிட்டான்.
நான் உடனே, "அக்கா, ஒரு டயலாக்க கட் பண்ணிட்டான் பாவி பய."
அக்கா ஒரு மாதிரியாய் என்னை பார்த்து, "ஆமா.. நீ எத்தன தடவ இந்த படத்த பாத்துருக்க... இவ்வளவு கரெக்ட்டா சொல்றே."
நான் அசட்டு சிரிப்பு சிரித்தேன்:)
---------------------------------------------------------------------------------------
பசங்க படத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்லைனிலும் தேடி பார்த்தேன். ஒன்றும் சரியா கிடைக்கவில்லை.:(
---------------------------------------------------------------------------------------
குறிப்பு: அவியல், குவியல் அப்படின்னு சீனியர்கள் எழுதுகிறார்கள். நானும் இப்பதிவுக்கு பொரியல் என்று தலைப்பு வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் அப்படி வைத்தால், சீனியர்களை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக மக்கள் நினைக்கலாம். ஆகவே தான் தலைப்பை மாற்றினேன்:)
Subscribe to:
Posts (Atom)