Oct 1, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-4

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வரை இருவருமே பேசிகொள்ளவில்லை. உள்ளூர இருந்த துயரத்தை இருவருமே காட்டிகொள்ளவில்லை. பயம், வருத்தம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர் இருவரும். வரும் வழியில் விஷ்ணுவிற்கு அடிக்கடி ஆபிஸிருந்து ஃபோன் வந்து கொண்டிருந்தது.

"விஷ்ணு, நம்ம ஹேட் ஆபிஸ் வரைக்கும் போகனும். டில்லிக்கு இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணவா? சாரி...உங்க வீக்கெண்ட spoil பண்ணிட்டேனா? சாரி...ஆனா இது கொஞ்சம் அவசரம். இந்த வேலைய முடிச்சுட்டு நீங்க இன்னும் நாலு நாளு extra லீவு எடுத்துக்குங்க...பட் இன்னிக்க மட்டும்...கொஞ்சம்....." மறுமுனையில் இருந்த மேனேஜர் வற்புறத்தினார்.

கவலையில் மூழ்கி கிடந்த விஷ்ணு அமைதியாய், "சாரி சார். என்னால போக முடியாது. வேற யாராச்சயும் பாத்துக்குங்க." சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். அதை கவனித்தாள் தனுஜா. சிறிது நேரம் கழித்து, அதே ஆபிஸர் அதே வேண்டுகோளுடன். ஆனால், எதற்கும் இணங்கவில்லை விஷ்ணு.

இந்த நேரத்தில் தனுஜாவை விட்டு போக அவனுக்கு மனம் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் வீடு அன்று சோகபூமியாய் காட்சியளித்தது. தனுஜா படுக்கையில் படுத்து இருந்தாள். அவள் தேம்பி தேம்பி அழுதாள். விஷ்ணு என்ன செய்வது என்று தெரியாமல் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். மதிய வேளை ஆனது. மதிய உணவை தயாரிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து விஷ்ணு தனுஜாவை பார்க்க சென்றான். அவள் அழுவதை கண்ட விஷ்ணு அவளது கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு, "அழாத மா."

எழுந்து உட்கார்ந்த தனுஜா அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

"நீ எவ்வளவு ஆசையா இருந்த...ஐ எம் சாரி விஷ்ணு...." அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

"நீ எதுக்குடா சாரிலாம் சொல்ற....இது யாருடைய தப்பும் கிடையாது. it meant to happen and it has happened. that's all. no one is to be blamed. ஆனா, நீ இப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. cheer up da....please...." என்று அவன் ஆறுதல் சொன்னாலும் அவன் குரலில் தெரிந்தது சோகம்.

மறுபடியும் ஃபோன் வந்தது விஷ்ணுவிற்கு. அப்போது அதை எடுத்து பேச முற்பட்ட விஷ்ணுவின் கைகளிலிருந்து தனுஜா ஃபோனை வாங்கி கொண்டாள். அவள் பேசினாள்,

"சொல்லுங்க சார்...ம்ம்ம்...சரி. no problem sir. he will be there in one hour. thanks."

"தனு, நான் போகலடா....உன்னைய இந்த நிலைமைல....no i don't want to go."

"listen vishnu, i'll be fine soon. நீ கவலை படாம போயிட்டு வா. பாவம்...ரொம்ப முக்கியமான வேலைன்னு சொல்றாருல.....நீ போ....i will be alright soon." கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டு புன்னகையித்தாள்.

"are you sure?"

ஆம் என்று தலையாட்டினாள். அவனுடைய பெட்டியை தயார் செய்தாள். வாசல் கதவு அருகே நின்று வழியனுப்பி வைத்த தனுஜாவின் நெற்றியில் ஆறுதல் முத்தம் ஒன்று கொடுத்தான் விஷ்ணு.

அரை மணி நேரம் கழித்து வாசல் மணி ஒலித்தது. தனுஜா கதவை திறந்தாள். ஆச்சிரியம்! அங்கே விஷ்ணு. முதன் முதலாக அவனது கண்கள் கலங்கி இருப்பதை கண்டாள். கலங்கிய கண்களுடன் விஷ்ணு, "உன்னைய விட்டு போக முடியலடா" என்று ஓடி வந்து கட்டிபிடித்தான் தனுஜாவை.

*******************************

"we'll be right back after a short commerical break." oprah winfrey சொன்னதை கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் தனுஜா. அச்சம்பவம் நடந்து ஓராண்டு ஆனதை நினைவு கூர்ந்தாள். அவர்களது நட்பு ஆரம்பித்த விதம், காதல் மலர்ந்த தருணம், கல்யாணம், அவனது சிரிப்பு, அவன் பொழிந்த பாசம், அன்பு. சண்டை போட்டு கொள்ளும் நேரங்களில்கூட அது சண்டையாக முடியாமல் ஏதேனும் காமெடியாகி பேசி முற்றுபுள்ளி வைக்கும் அவனது சாமர்த்தியம் என்று பலவற்றை எண்ணினாள். அவனை ரொம்ப 'மிஸ்' பண்ணுவதாக உணர்ந்தாள்.

திடீரென்று ஒரு சத்தம் அறையிலிருந்து. ஓடி சென்று பார்த்தாள். பொருட்கள் கீழே விழுந்துகிடக்க, அதன் அடியில் விஷ்ணு கிடப்பதை பார்த்து குபீர் என்று சிரித்தாள் தனுஜா.

"அடி பாவி, ஒருத்தன் இங்க விழுந்துகிடக்குறது உனக்கு காமெடியா இருக்கா...." என்றான் விஷ்ணு. பொருட்களை எடுத்து அதன் இடத்தில் வைத்தவாறு தனுஜா,

"நான் தான் சொன்னேன்ல.....ஐயாவுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு."

"அது என்னமோ உண்மை தான் தனு. பாதி வேலை கூட முடியல. நீங்க பொண்ணுங்க எப்படி தான் எல்லாத்தையும் சரியா செய்றீங்களோ....உங்களுக்கு எல்லாம் தனித்தனியா சிலை வைக்கனும்!"

"இந்த ஐஸ் வச்சது போதும்....." சிரித்தாள் தனுஜா.

"i give up babe. இந்த challengeல நீ தான் ஜெயிச்ச...." விஷ்ணு சொல்ல அதற்கு தனுஜா,

"இல்ல டா...நீ தான் வின்னர்."

அவள் நினைவுகூர்ந்தவற்றை அவனிடம் சொன்னாள். இருவரும் பழைய நினைவுகளை பற்றி பேசி மகிழ்ந்தனர்.

"i think i really miss you." என்றாள்.

"ஹாஹா....thank god. finally you agreed!"

"so........." என்று இழுத்தாள் அவள். அவன் உதடுகள் அருகே சென்றது அவள் உதடுகள்.

"how about the report that you need to send?" என்றான் அவன்.

"all programs cancelled!" என்றாள்.

"you mean there is going to be something something today....."அவன் சிரித்தான்.

"not today....right now!" என்றவளின் உதடுகள் அவனது உதடுகளோடு lock ஆனது. அவ்வாறே அறை கதவும் lock ஆனது.

*PLEASE DO NOT DISTURB THEM*

***முற்றும்***

12 comments:

Karthik said...

me the first! :)

nice ending..i will not disturb them..:)

Prabhu said...

நல்ல கதை போங்க! பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க! இன்னும் ஒண்ணு போட்டு 5 ஆக்கிருக்கலாம் :)

G3 said...

:))) Poi ella partaiyum sethu innoru dhaba padikanum :D ambuttu romancea kotti vechirukkeenga :P

Seekiram mudichiteenga.. paravaa illa... adutha kadhai aarambikka thaannu manasa thethikkaren :D

gils said...

inum konjam part potrukalam :) takunu mudichiteengalay

VISA said...

என்னங்க சட்டுன்னு முடிச்சிட்டீங்க. இன்னும் நிறைய எதிர்பார்த்தோம். தொடர் முழுக்க விறுவிறுப்போடு கொண்டு போனது சூப்பர். தொடருங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

அட என்னங்க திடீர்ன்னு முடிச்சுட்டீங்க..

ப்ச்... நல்லா போயிட்டு இருந்துச்சு..

FunScribbler said...

@karthik, thanks
@pappu, 5 பார்ட் போட்டா நீங்க கிண்டல் பண்ணுவீங்களோன்னு பயந்துட்டேன்..:) ஹிஹி..

@ஜி3,அடுத்த கதையா? ஆஹா....சரி ரைட்டு!

@கில்ஸ்,விசா, வசந்த், ஜி3 அக்கா சொன்ன மாதிரி எல்லாரும் மனச தேத்திக்க வேண்டியது தான்!

Sundari said...

4 part um continuous padichean...superb...very romantic..

Adhutha kadhai eppo ?? :)

மேவி... said...

super kadhai.... semaiya irunthuchu.... reader la padichuttu irunthen.... ennaal comment podamal irukka mudiyala...


it was rocking

FunScribbler said...

@mayvee,thanks

@sundari, abt my next story..hmm...yet to decide on one! but hope that i can write smthing interesting soon. thanks for ur wishes!:)

ivingobi said...

adhu epdi Gaayu.... ungalaala mattum mudiyuthu......


Nijamaavaaaae nalla irukku......

லோகு said...

ya really i like this story very much....
nice timely humors
keep it up


really i like ur blog mam