பகுதி 1அப்போது தான் அனிதாவை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்தவுடனே மனதில் ஒரு மின்னல். கண்களுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் அழகாய் தெரிந்தாள். அவளிடம் சென்று
"ஹாலோ, நான் பக்கத்து ஆபிஸிலிருந்து...." என்று சொன்னவுடனே புரிந்து கொண்டாள்.
"ஓ யெஸ் யெஸ்.... பாஸ் சொல்லியிருந்தாங்க..." என்று கூறிகொண்டே ஒரு கோப்பை நீட்டி அதில் உள்ளதை விளக்கினாள். அவள் சொல்வது எதையுமே கவனிக்கவில்லை, ஆனால் நான் அவளை மட்டுமே கவனித்து கொண்டிருந்தேன். அவளின் குரல், அவள் பேசிய விதம், வேலைகளை சரிவர பார்த்த விதம்- இப்படி அனைத்தையுமே சேர்த்து ரசித்தேன். அன்று முதல் என் ஆபிஸிலிருந்து அவள் ஆபிஸுக்கு போக வேண்டிய கோப்புகளை அனைத்தையுமே நானே கொண்டு சென்றேன். அவளை பார்க்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொண்டேன்.
வேலை விஷயங்களையும் தாண்டி, ஒரு நல்ல நட்பு உருவானது. என் காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஒரு நாள் மதியம், அவள் ஆபிஸுக்கு சென்றேன். மதிய உணவு நேரம். அவள் சாப்பிட்டு கொண்டிருந்தாள் அவள் தோழிகளுடன். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை எனக்கு பொறுமையில்லை.
"அனிதா..உன்கிட்ட கொஞ்ச தனியா பேசனும்..." என்றேன்.
"சார் தனியா பேசனும்னு...நடுகடல்ல நின்னு தான் பேசனும்.." என்றாள் அவளின் தோழி ஒருத்தி. அனைவரும் சிரித்தனர். என் நிலைமை புரியாமல் அனைவரும் ஜோக் அடித்து சிரித்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.
"நான் வரேன்." என்று கோபத்துடன் கிளம்பினேன். என் கோபத்தை புரிந்து கொண்டவள் என் பின்னாடியே என் பெயரை கூவி கொண்டு வந்தாள்.
"ஏய்...நில்லுப்பா... ஏன் இவ்வளவு கோபம்? என்ன ஆச்சு? என்ன பேசனும்? any problem?" என்றாள்.
"ஆமா...ஒரு முக்கியமான விஷயம்..." வார்த்தைகளின் வேகம் குறைந்தது.
" அனிதா, எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. எப்போ உன்னைய முத தடவ பாத்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்...நீ தான் என் மனைவின்னு. பாத்தவுடனே ஐ லவ் யூ சொன்னா...அது நல்லா இருந்திருக்காது... அதான் நல்லா பழகின பிறகு... உன்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்." என்றேன்.
நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. எதையுமே பேசமால் ஆபிஸைவிட்டு வெளியேறினாள். இரண்டு நாட்கள் ஆபிஸுக்கு வரவில்லை. உடல் நலம் சரியில்லை என்று ஆபிஸில் கூறி இருந்தாள். எனக்கும் மட்டும் தான் தெரியும், சரியில்லாமல் கிடப்பது அவளது மனம் என்று.
அந்த இரண்டு நாட்கள் அவளுக்கு பல முறை ஃபோன் செய்து பார்த்தேன். அவள் எடுக்கவில்லை. பிடிவாதக்காரி! பல்லாயிரம் மேசேஜ்கள் அனுப்பினேன்! எதுக்குமே பதில் இல்லை. மூன்றாவது நாள் அவள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றேன். விடுதிக்கு வெளியே நின்று ஃபோன் செய்தேன். என் காதல் தோற்குமா என்ன? அவள் ஃபோன்னை எடுத்தாள்.
தழுதழுத்த குரலில் அவள், "ம்ம்ம்...சொல்லு?"
நான்,
" சாப்பிட்டீயா?" எதுவுமே நடக்காததுபோல் நான் பேசினேன்.
"இன்னும் இல்ல... " என்றாள்.
"எத்தன நாளா...சாப்பிடாம இருந்த?" என் குரலில் சற்று அதிகாரம் உயர்ந்தது. மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை.
"நான் உன்னைய உடனே பாக்கனும்.... உன் ஹாஸ்டல் பக்கத்துல தான் இருக்கேன்.. உள்ளே அழகான பசங்கள விடமாட்றாங்க...சோ..இங்க பக்கத்துல இருக்கிற சன்ஹன் பார்க்கிற்கு வா..." நான் சொன்னதை கேட்டு கண்டிப்பா புன்னகையித்து இருப்பாள்.
வரமாட்டாள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் வந்தது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. என் கையில் இருந்த உணவு பொட்டலத்தை கொடுத்து அவளை சாப்பிட சொன்னேன். என் முகத்தை சரியாக பார்க்கவில்லை. பொட்டலத்தை வாங்கி வைத்து கொண்டாள். சாப்பிடவில்லை. இரண்டு நாட்களாக அவள் சரியாக தூங்கவில்லை. அவள் முகத்தில் தெரிந்தது சோர்வு.
அவள் கண்முன் விழுந்த முடியை எடுத்த அவள் காதுக்கு பின் சொரிகியபடி,
"நான் என்ன கேட்டேன்னு... நீ இப்படிலாம் பண்றே?" என்றேன்.
"இதலாம் சரியா வருமா?" என்றாள் கண்ணீருடன்.
அவள் சொன்ன விதத்தில் இருந்து நான் புரிந்து கொண்டேன்- அவளுக்கும் என்னை பிடித்து இருந்தது. கல்யாணம் வரை போகாமல் காதல் வெறும் காதலாக போய்விடுமோ என்ற அச்சம் தான் அவளுக்கு.
"ஓ... அப்போ உனக்கும் ஓகே தான்னு சொல்லு! ஐயோ.. நான் நினைச்சேன் நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி.. ஒரு ஃபிரண்டா தான் நினைச்சு பழகினேன்னு சொல்லுவே... நம்மளும் துரத்தி துரத்தி... லவ் பண்ணி அப்பரம் ஒகேன்னு சொல்ல வைக்கலாம்னு இருந்தேன்... இப்படி சப்புன்னு முடிச்சிட்டீயா..." என்று முகத்தை விளையாட்டுக்காக பாவமாய் வைத்திருந்தேன்.
நான் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள் கண்களை துடைத்தபடி.
நாட்கள் கடந்தன. நிறைய பேசினோம். நிறைய சிரித்தோம். அனிதாவுக்கு புத்தகங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரிந்த எல்லாம் புக்-ஷாப்புக்கும் அழைத்து சென்றேன். நீண்ட நேரம் கடற்கரையில் உட்கார்ந்து பேசினோம். நிறைய சந்தோஷம், அவ்வபோது சின்ன சின்ன சண்டை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு- in this world, you might be someone but to someone, you might be the world. இவ்வாறு அவளது உலகம் நானாகவும் என் உலகம் அவளாகவும் வாழ்ந்தோம்!
"சனியன் சனியன்...மூணாவதும் பொட்ட புள்ளையா பெத்துருக்கா உன் பொண்டாட்டி. சனியன் பிடிச்சவ..." என்று மருத்துவமனையில் கத்தி கூச்சல் போட்டாள் ஒருத்தி. ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்த நான் பக்கத்திலுள்ள நாற்காலியில் உட்கார்ந்தேன். அவளது மகனின் சட்டையை பிடித்து கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு கொண்டிருந்தாள்.
"இந்த எழவு பிடிச்சவள உனக்கு கட்டிவச்சது என் தப்பு தான்..." தலையில் அடித்து கொண்டாள். பிறந்த குழந்தையை கையில் வைத்துகொண்டிருந்தாள் தாதி. அக்குழந்தை கத்தியவளின் மூன்றாவது பேத்தி.
"அந்த சனியன் பிடிச்சவளுக்கு பொறந்த இந்த சனியன எடுத்துட்டு போயிடு!" மறுபடியும் கத்தினாள். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை- அது ஏன் எல்லா மாமியார்கள் தனது மருமகள்களை சனியன் என்று திட்டுகிறார்கள்?
என் அம்மாவும் அப்படி தான்!
"சனியன்... என்ன ஜாதியோ, என்ன மதமோ? அவள கட்டிக்க போறீயா? உனக்கு என்ன கேடு வந்துச்சு?" என் அம்மா ஒரு நாள் பூகம்பத்தை ஆரம்பித்துவிட்டார்.
நானும் அனிதாவும் பீச், புத்தககடைகளில் சுற்றியது அனைத்துமே என் பெற்றோர்களுக்கு தெரிந்துவிட்டது. நான் உறுதியாக நின்றேன். என் அப்பா என் பக்கம். ஆனால், அம்மாவை மீறி அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை.
"அவன் ஆசைப்படுறான்...அவன் விருப்பபடி நடக்கட்டுமே!" அப்பா முயன்றார்.
"என்ன ஆசைப்படுறான்? நீங்க எதும் பேசாதீங்க... அவனுக்கு செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க?" அம்மா பாய்ந்தார்.
"அம்மா, அனிதா ரொம்ப நல்ல பொண்ணு. அவ அனாதை இல்லத்துல வளர்ந்ததுனால கெட்ட பொண்ணுனு ஆயிடாது? அவங்க அம்மா அப்பா செஞ்ச தப்பு... அவ என்ன பண்ணுவா? ப்ளீஸ் மா... நீங்க ஒரே ஒரு தடவ அவகிட்ட பேசி பாருங்க..." காலில் விழாத குறையாய் அம்மாவிடம் கெஞ்சினேன். பிச்சை எடுத்தேன் என்றுகூட சொல்லலாம்.
அம்மா பிடிவாதத்தை விடவில்லை. அப்பா எடுத்து சொன்னார். ஆனால் கேட்கவில்லை.எத்தனை முறை போராடி பார்த்தேன். என் அம்மா சம்மதம் தரவில்லை.
"ஓடி போய் கல்யாணம் பண்றது, திருட்டு கல்யாணம் அப்படி இப்படின்னு ஏதாவது செஞ்சு வச்சே.... என்னை உயிரோட பாக்க முடியாது." அம்மா மிரட்டினார். எல்லா அம்மாக்களும் பயன்படுத்தும் emotional blackmail இது. அம்மாவின் பிடிவாதம் சில நாட்களில் சாந்தம் ஆகம் என்று நினைத்து அனிதாவும் நானும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம்.
அம்மாவுக்கு தெரியவந்தது. கோபத்தில் குதித்தார். அமெரிக்காவில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அம்மாவும் அப்பாவும் கிளம்பி சென்றனர். என் முகத்தில் இனி முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டார் என் அம்மா. ஆனால், அப்பா அமெரிக்கா கிளம்பும் முன் எங்களை வந்து பார்த்தார் எங்களது புது வீட்டில்.
"வீடு ரொம்ப நல்லா இருக்கு. கச்சிதமா இருக்கு...very good selection." அப்பா பாராட்டினார்.
"அனிதா தான் பா select பண்ணா."
"அதான் ரொம்ப extra ordinaryயா இருக்கு. வெரி குட் மா." மாமனார் மருமகளை பாராட்டுவதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
"அத்தையும் வந்திருந்தா நல்லா இருக்கும். எங்க மேல உள்ள கோபத்துல நீங்க அங்க போறது எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு மாமா." என்றாள் அனிதா.
"நான் என்ன மா பண்ண முடியும். உங்க அத்தை அப்படி தான். காச்சுமூச்சுன்னு கத்துவா. அவ அப்படி தான். நாளைக்கே உங்களுக்கு குழந்தை பொறந்த செய்தி கேட்டா, உடனே ஓடி வந்திடுவா..."அப்பா சிரித்தார். அனிதா என்னை பார்த்து புன்னகையித்தாள். புன்னகை கலந்த வெட்கம் அது.
ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்து இருந்த நான் கடிகாரத்தை கவனித்தேன். மருத்துவமனைக்கு வந்து இரண்டு மணி நேரம் ஆனது. மருத்தவர்களிடமிருந்து எந்த செய்தியும் வந்தபாடு இல்லை. என் எதிரே இருந்த சுவரில் குழந்தைகள் சிரிப்பதுபோல் படம் ஒட்டியிருந்தது.
அனிதாவிற்கு குழந்தைகள் என்றால் ரொம்ப ஈஷ்டம்.
ஒரு நாள் மெத்தையில் உட்கார்ந்து மடிகணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த நான் அவள் அருகே சென்று அவள் அனுமதியின்றி அவள் கழுத்தோரத்தில் இதழ் பதித்தேன்.
பிடிக்காதவளாய் அவள், "ஐயோ... என்னது..ச்சீ..." செல்ல கோபத்துடன் என்னை தள்ளினாள்.
"ஆமா நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே?" நான் எனது பார்வையை அவள் மடிகணினி மீது செலுத்தினேன். அதை பார்த்தபிறகு சிரிப்பு வந்தது...
(பகுதி 3)