May 30, 2009

ஜஸ்ட் சும்மா(30/5/09)

இன்று என் keyboard grade 1 தேர்வை எழுதினேன். எனக்கு தேர்வு என்ற வார்த்தையை பார்த்தாலே பயம் கவ்வி கொள்ளும்(கொல்லவும் செய்யும்)! இன்று காலை 1030 தேர்வு நடந்தது. ஏசி அறையாக இருந்தாலும் வேர்த்து கொட்டியது. ஏதோ ஓரளவுக்கு செய்தேன். தேர்வின் ஒரு பகுதி இசை கருவிகளை அடையாளம் காட்டுதல். ஒன்றை சுட்டி காட்டி இது என்ன என்று கேட்டார்.

நான் "......ம்ம்ம்....." தலையை சொறிந்தேன். அது என்ன என்று தெரியும். ஆனால் mental block ஆயிடுச்சு. என்ன சொல்றதுன்னு தெரியல்ல.

அவர் சற்று முறைத்தவாறு, " this is கஞ்சீரா!"

நான் புன்னகையித்தேன். அசடு வழிந்த புன்னகை. "you are such an idiot." என்றது மனசாட்சி. தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை தெரியும். தேர்வு முடிந்தவுடன், "குட்" என்றார். ஆனால் இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோன்னு தோணிச்சு!:(
--------------------------------------------------------------------------------

நம்ம வானவில் வீதி தம்பி கார்த்திக்கை ரொம்ப நாளா ஆள காணும். எங்கப்பா இருக்கிற? chatல் அடிக்கடி வருவார். இப்போ அதுகூட இல்ல! நல்ல புள்ளையா மாறிட்டாரா என்ன?
--------------------------------------------------------------------------------

கந்தசாமி பட பாடல்களை கேட்டேன். 8 பாடல்களில் விக்ரமே நான்கு பாடல்களை பாடி இருக்கிறார். பாடல் பல ரொம்ப இளமை துள்ளலோடு இருக்கு. excuse me kandasamy என்னும் பாடல் என்னை ரொம்ப கவர்ந்து இழுத்துவிட்டது. காரணம் பாடல் வரிகள். ஆனால் பாடல் காட்சிகளை பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியா தான் இருக்கு. இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாமோ. வெளிநாடுகளில் பாடல்களை காட்சி அமைத்து பணத்தை வாரி கொட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி ஸ் தானு. அங்கிள், ஆட்டோல போறத்துக்கு காசு இருக்கா?

இத்தனை பொருட்செலவு அவசியமா? சரி இதுக்கே இப்படின்னா, அங்க யாரோ ஒரு பாடல்களுக்கு 100 கெட்-டப்புல வருகிறாராம். உஷ்,........முடியல ராகவேந்திரா சாமி!
----------------------------------------------------------------------------------

சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள் என்ற புத்தகத்தை படித்து முடித்தேன் நேற்று. கதை எப்படி எழுதுவது என்பதை பற்றி நிறைய செய்திகள் அப்புத்தக்கத்தில் இருந்தன. 2 வார்த்தைகளில்கூட கதை எழுதலாமாம்!

what!! 2 words??- இது தான் என் முதல் reaction. தொடர்ந்து படித்தேன். ரொம்ப சுவாரஸ்சியமா இருந்துச்சு. பக்கம் பக்கமா எழுதுற எனக்கு 2 வார்த்தைகளில் எழுதுவது என்பது சிரமமே! ஆனால் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்...
------------------------------------------------------------------------------------

நேற்று ஒரு சின்ன புதிய சாதனை. இந்த வலைப்பூவின் followers ஐம்பது ஆகிவிட்டது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 50வது நம்பர் சுரேஷ் குமார். நன்றிங்கோ!

தங்க சங்கிலி, ஒரு பிரியாணி பொட்டலம் அவருக்கு கொடுக்கலாம் என்ற ஆசை தான். ஆனால், உலக பொருளாதாரம் சற்று மந்தமான நிலையில் இருப்பதால், அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் அது சேர்க்கப்படும்!:)

May 28, 2009

Book Tag

தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)

சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .. திறந்தவுடனே தூ(து)க்கம் வந்து விடும். மூணு இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துச்சு. என் அக்கா நிறைய படிப்பாங்க. அவங்க ஒரு புத்தகத்த கையில கொடுத்து இத படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்பரம் தான் ஓரளவு படிக்கும் பழக்கம் வந்துடுச்சு.

one book that changed your life:

ஆமா....அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் பெரிசா படிக்கவில்லை. ஒரே ஒரு சின்ன மாற்றம், நல்ல பழக்கம் வந்துச்சு. நான் சொன்ன மாதிரி இந்த வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது என் வாழ்க்கையில்- one night at the call centre.

The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.

one book you would want on dessert island:
"நான் வித்யா" புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நம்ம வலைப்பூ தோழி living smile வித்யா எழுதிய புத்தகம்.

one book that made me laugh:
five point someone- இப்புத்தகத்தில் வரும் பல காலேஜ் சம்பவங்கள் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

one book that made me cry:

children of war- ஈராக்கில் உள்ள குழந்தைகள் போரை பற்றி தங்களது ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். அவர்களின் சிறு பேட்டிகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். படிக்க படிக்க கண்ணு கலங்கிடுச்சு. கொடுமையான வாழ்க்கை அவர்களது! ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல...:(

one book you wish you had written:
சர்வதேச அளவில் விருது பெற்ற எல்லா புத்தகங்களையும் தான்! ஹாஹா...

one book you wish had never been written:

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்! ம்ம்ம்...அப்படி எதுவும் எனக்கு தெரியல்ல...

books that you are currently reading:

jasvinder sanghera எழுதிய 'shame' மற்றும் சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள்

books that you have meaning to read:

self-made man(இது உண்மை கதை. ஒருத்தி ஒரு வருடம் ஆணாக இருந்து பிறகு மறுபடியும் பெண்ணாக மாறுகிறாள்.)
மற்றும்
six suspects

அடுத்ததாக அண்ணன் பிரேம்குமாரை அழைக்கிறேன்.

May 25, 2009

சும்மா அரட்டை-5

ஞாயிற்றுக்கிழமை இரவு எங்க ஊர் வசந்தம் ஒளிவழியில் 'முதல் மரியாதை' படத்தை போட்டான். நான் பார்த்து கொண்டிருந்தபோது தோழனின் குறுந்தகவல்கள்...

தோழன்: are u watching முதல் மரியாதை now?

நான்: yep yep...நீ?

தோழன்: yea man!!!! செம்ம படம். எத்தனையோ தடவ பாத்து இருக்கேன், ஆனா ஒவ்வொரு தடவையும் ரொம்ப ரொம்ப வித்தியாசமா தெரியுது. i think ராதா is damn cute!!

நான்: ஹாஹா....நல்லா எஞ்சாய் பண்ணு!

தோழன்: ஏய், எனக்கு ஒரு பொண்ணு பாரேன்...அப்படியே ரவிக்கை இல்லாத ராதா மாதிரி!

நான்: அட உன் வீட்டுல நல்லா இருந்துட்டு போவ...இந்த எடுப்பட்ட பய மூஞ்சிக்கு ராதா மாதிரி பொண்ணு கேட்குதா?? ஹாஹா....:)

தோழன்: ஹாஹா...சும்மா சும்மா! ஆமா, நீ ஏன் வடிவுக்கரசி மாதிரி பேசுற??

நான்: படத்துல ஐக்கியம் ஆயிட்டேன்:)ஹிஹிஹி.... hey you know that sevili character...she was a singaporean...she studied in christchurch sec sch.now i think she is in america.

தோழன்: அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?

நான்: அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க..hey for ratha's voice, rathika dubbed for her. அதுக்கு ராதிகாவே நடிக்கவிட்டு இருக்கலாம்!

தோழன்: நோ...நோ.... எனக்கு ராதா தான் வேணும்! she is the best!

நான்: ஆஹா... நீ அடங்க மாட்டீயா? ஏய் இப்ப இருக்காங்க பாரு ராதா...ரொம்ப weight போட்டு குண்டா தெரியுறாங்க.

தோழன்: என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! ஹிஹி.... என் ராதாவும் அப்படி தான்!

நான்: டேய் நீ அடங்கவே மாட்டீயா? உஷ்...யப்பா!!!!!!

--------------------

முந்தைய அரட்டைகள்

May 24, 2009

மனசுக்குள் மத்தாப்பூ அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று நம்ம மனசுக்குள் மத்தாப்பூ திவ்யாவிற்கு பிறந்தநாள். என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், திவ்ஸ் குருவே!

அவரை நான் திவ்ஸ் என்று தா அழைப்பேன்.:) அவரின் கதைகளை படித்து தான் நானே கதை எழுத ஆரம்பித்தேன். நிறைய விஷயங்களில் அவர் தான் எனக்கு inspiration. ஆக, இந்த பொன்னாளில் அவருக்கு என் வாழ்த்துகள். ஒரு பாட்டு அவருக்கு dedicate பண்ணுறேன்....