Dec 28, 2007

ஓடி போயிட்டா..

'என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு'

என்று செல்போன் ரிங்டோனாக பாடல் ஒலித்தது நிஷாவின் செல்போனில். பாதி தூக்கத்தில் கண் விழிக்க முடியாமல் தன் தலையணை கீழ் கிடந்த கைபேசியை எடுத்து பேசினாள்.

"ஏ செல்லம், நீ இன்னும் என்ன பண்ணுறே? நேத்திக்கு நம்மா plan பண்ணபடி 7 மணிக்கு பஸ் டாப்புல வேட் பண்ண சொன்னியா இல்லையா... உன்ன நம்பிதான் எல்லாத்தையும் பண்ணேன். 715 ஆச்சு... எங்க நீ?" என்றான் பஸ் டாப்பில் நிஷாவிற்கு காத்து கொண்டிருந்த ராகுல். தூக்க கலக்கத்தில் இருந்து சுயநினைவுக்கு வந்த நிஷா வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள். விரிந்துகிடந்த தன் கூந்தலை கட்டிகொண்டே ராகுலிடம் பேசினாள், " ஏய் சாரி பா, கொஞ்சம் தூங்கிட்டேன். நீ நேத்திக்கு plan சொன்னதேலிருந்து எனக்கு தூக்கமே வரல. இது எல்லாம் சரியா வருமா?" என்றாள் சற்று பயத்துடனும் சந்தேக்கத்துடனும்.

ராகுல் சும்மாவே டென்ஷன் பார்ட்டி. கடுப்புடன் " ஆமா நான் மட்டும் என்னவா... தினமுமா இப்படி பண்ணுறேன். ஏதோ நீ சொன்னதுனால நானும் ஓகே சொல்லிட்டேன். உன்னைய மாதிரிதானே நானும். சரி சரி... சிக்கிரம் கிளம்மி வா."நிஷாவுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. தன் அறையின் கதவை திறந்தாள். வீட்டு கதவு, சன்னல் அனைத்தும் மூடியே இருந்தது. யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. நேற்று இரவு வீட்டில் நிஷாவின் அம்மா, அப்பா, தம்பி, வீட்டு வேலைக்காரி அனைவரும் 'காதல்' படம் பார்த்துவிட்டு இரவு 12 மணியளவில் தான் தூங்கினார்கள். நிஷா அவர்களோடு படத்தை பார்க்காமல் தனியே தன் அறையில் ராகுலிடம் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தாள்.

கிச்சுனு இருந்தது வீட்டு, காலையில். நிஷாவுற்கு மனதில் படுபடுவென்று அடித்தது. முகத்தை மட்டும் கழுவி கொண்டாள். எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. குடும்பத்தார் படுத்திருந்த அறைகளின் கதவுகளை சத்தமின்றி திறந்து லேசாக பார்த்தாள். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்து இருந்தனர். தன் கையில் இருந்த கைபேசி முணுமுணுத்தது. ராகுலிடமிருந்து ஒரு மெஸ்சேஜ்- ' ஏய் செல்லம், சாரி பா, கொஞ்சம் டென்ஷனாயிட்டேன். அதான் அப்படி பேசிட்டேன். சாரி! anyway நான் எடுத்துட்டு வர சொன்னத, மறக்காம கொண்டுவா... don't forget... இட் ஸ் வெரி important. those 2 things...' என்று பாதி ஆங்கிலத்திலும் பாதி தமிழிலும் கலந்து கலந்து அனுப்பியிருந்தேன்.

நிஷா அவற்றை எடுத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆனால், சொல்லாமல் போகிறோமே என்ற வருத்தம் நெஞ்சில் பாய்ந்தது. அதனால் நிஷா வீட்டு மேசையில் கிடந்த ஒரு காகிதத்தில் ஏதோ எழுத ஆரம்பித்தாள்.. எழுத்திவிட்டு அங்கே வைத்துவிட்டு சென்றாள். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராகுலை பார்த்துவிட்டாள். அவனை நோக்கியபடி மெல்ல நடந்தாள்... சற்று குழப்பத்துடன்.

"ஏய் செல்லம்... குட் மார்னிங். யூ ஓகே?" என்று வினாவினான் ராகுல், நிஷாவின் வேர்த்து கொட்டிய முகத்தை பார்த்தவுடன். நிஷா தன் முகத்தை துடைத்து கொண்டு 'ஒன்றுமில்லையே' என்றவாரு முகம் பாவம் செய்தாள். இருவரும் பேருந்தில் ஏறினர். இறங்கவேண்டிய இடம் வந்தது. ஒரு பெரிய கட்டடம் தெரிந்தது நிஷாவின் கண்கள் முன். "சரியா வருமா?" என்றாள் நிஷா ராகுலின் கையை பிடித்து.

"ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா? நம்மல மாதிரி எத்தனையோ பேரு இப்படிதான் செய்வாங்க.. சோ don't worry." என்று ஆறுதல் கூறினான் ராகுல்.

(அப்படியே உங்க கேமிரா கண்களை நிஷா வீட்டிற்கு திருப்புங்க..)

நிஷாவின் அப்பா மேசையில் இருந்த கடிதத்தை படித்துவிட்டு, தன் மனைவியிடம் நீட்டினார், " உன் பொண்ணு நம்மகிட்டு சொல்லாம என்ன பண்ணிட்டா பாரு." கடிதத்தை படித்துவிட்டு நிஷாவின் அம்மா புன்னகையிட்டார். நிஷாவின் கைபேசிக்கு அழைத்தார்.

ராகுல் தான் எடுத்தான். "ஹாலோ ஆண்டி.. எப்படி இருக்கீங்க..." என்றான்.

"ஹாலோ ராகுல், am fine. how about u? ஹாஹா.. நிஷா சீக்கிரம் கிளம்மி போயிட்டா.. நாங்கலாம் இப்பதான் எழுந்திருச்சோம். அதான் நிஷா ஒரு தாள்ல gym போயிருக்கேனு எழுதி இருந்தாள். அத பார்த்து தான் போன் பண்ணேன். ஹாஹா.. ராகுல்.. நான் ரொம்ப நாளாவே சொல்லிகிட்டு இருந்தேன் அவகிட்ட... gym போ... உடம்ப குறையினு... இப்ப தான் புத்தி வந்து போயிருக்கா... சரி அவ ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டாளே.. எதாச்சு எடுத்துகிட்டு வந்தாளா?" என்றாள் நிஷாவின் அம்மா.

"ஓ.. இல்ல ஆண்டி... வெறு வயத்துல...exercise பண்ணாதான்... அந்த fats எல்லாம் குறையும். நான் அவகிட்டு ஒரு small towelலும் water bottleலும் எடுத்துட்டு வர சொன்னேன். அது போதும் ஆண்டி... " என்றான் ராகுல்.

"ஓ அப்படியா.. சரி நீங்க இரண்டு பேரும் நல்லா gymக்கு போய் உடம்ப குறைச்சா சரி." என்று சிரித்து கொண்டே நிஷாவின் அம்மா சொன்னார். அதுக்கு தானே வந்துருக்கோம் என்பது போல் ராகுலும் சிரித்தான்.

"சரி செல்லம் என்ன பண்ணுது இப்ப... ச்சி i mean நிஷா... உங்க கூட்டாளிங்க செட் பசங்க அவள செல்லம் செல்லம்னு கூப்புட்டு எனக்கும் ஒட்டிகிச்சு. where is நிஷா?" என்று கேள்வியுடன் முடித்தார் அம்மா. அதற்கு ராகுல் சொன்னான்,

"ஆண்டி.. செல்லம்... ஓடிகிட்டு இருக்கா!!"

------------------------முற்றும்-------------------------------

6 comments:

Anonymous said...

ஓடி போயிட்டா இல்லை.ஓடிகிட்டு இருக்கா :))தலைப்பை மாத்தி வைச்சுட்டு ஏமாத்த பார்த்தீங்களே!
இந்த மாதிரி ஒரு திருப்பத்தை நினைச்சு பார்கவே இல்லை.நல்லா இருந்தது :D

Divya said...

வாவ் தமிழ் சூப்பர்!

திருப்பம் அருமை!

'ஓடி'போற எஃபக்ட் கொடுத்துட்டு, ஓடிட்டே இருக்க வைச்சுட்டீங்க! ஹா ஹா!

நல்லாயிருக்கு தமிழ்!

Anonymous said...

haha..funny...unexpected ending... :D

FunScribbler said...

நன்றி துர்கா...
நன்றி திவ்யா..
thanks celes!!

Anonymous said...

thala, supeerrrbbb!! awesome ending!

Unknown said...

hmmm Gr8 opng....Gr8 Endng.....superb turning point....