Jun 20, 2011

அப்பரம் இன்னிக்கு என்ன plan?-4

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

நாளை வெளியிட வேண்டிய ரஜினி படம் ஒரு வாரம் தள்ளி போனால் எப்படி மனம் வலிக்குமோ அப்படி வலித்தது சந்தோஷுக்கு. அவன் கனவுகள் எல்லாம் compoundக்கு வெளியே அடித்த கிரிக்கெட் பந்து போல் அவனைவிட்டு பறந்து போனது. கைப்பேசியை மெத்தையில் தூக்கி போட்டான். ஜன்னல் வழியே வானத்தை ஆனாந்து பார்த்தான். வருத்தம், கோபம், அவளைத் திட்ட வேண்டும் என மனம் துடித்தது. மனசாட்சி அவனை உதைத்து, "அங்க என்ன நடந்திருக்கும்னு தெரியாம, நீ பாட்டுக்கு கடந்து குதிக்காதே!" என்றது.

ரவிக்கு விஷயத்தை சொன்னான். ரவி, "ஹாஹாஹா.....," சிரிப்பை அடக்க முடியவில்லை.

சந்தோஷ், "நான் இப்ப உன் வீட்டுக்கு வந்தேன்... எதுக்கு டா சிரிக்குற?" கோபத்தை அடக்க முடியவில்லை.

ரவி, " காதல்னு வந்துட்டா மட்டும், ஏன் டா எல்லாரும் ஓவர் emotional ஆகுறீங்க? இப்ப என்ன நடந்துடுச்சுனு கடந்து குதிக்குற? session cancelled அவ்வளவு தானே. எல்லாத்தையும் positiveஆ பாரு மச்சான். listen, அவளுக்கு ஃபோன் பண்ணி பேசு." என்றான் 'ஐடியா மணி'

"நானா?"

"இல்ல இல்ல...விஜய் டிவி கோபிநாத்த பேச சொல்லவா!? நீ தான் மச்சான். இங்க பாரு. session cancelled ஆனது ஒரு வகையில நல்லது தான். உனக்கு அவகிட்ட பேசனும். இது ஒரு நல்ல வாய்ப்பா நினைச்சிக்க." என்றதும் சந்தோஷை பயம் கலந்த ஆனந்தம் கவி கொண்டது. ரவி சொன்னதில் உள்ள உண்மை புரிந்தது. சாதாரண விஷயம் தான் - ஒரு ஃபோன் செய்வது, ஆனால், அப்போது சந்தோஷுக்கு ஏதோ அகில உலக சாதனையை செய்வதுபோல் இருந்தது.

இரவு மணி 10 ஆனது. இந்த நேரத்தில் ஃபோன் செய்யலாமா என்று மனதில் போராட்டம். காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற எவ்வளவு போராட்டங்களை எதிர் கொண்டாரோ அதனையும் தாண்டி பல 'மனப் போராட்டங்களை' சந்தித்தன சந்தோஷின் மனமும் மூளையும். ஒரு வழியாக மனதை தேத்தி கொண்டு கைபேசியை எடுத்தான். contact listக்கு சென்றான், மாயா பெயரைத் தேடினான், 'call' பட்டனை அழ்த்தினான். ரிங் போனது.

ரிங் சென்றகொண்டிருக்கும்போது, lineயை அவனே 'கட்' செய்துவிட்டான். ஏன் அப்படி செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. பேச துடித்தது மனம், என்ன பேசுவது என்று தெரியாமல் திண்டாடியது மூளை. மறுபடியும் தைரியத்தை வரவழைத்து கொண்டு 'call' செய்தான்.

மறுமுனையிலிருந்து மாயா, "ஹாலோ! சந்தோஷ்?" என்றதும் அவன் அடிவயிறு ஒரு 'roller coaster ride' சென்று வந்ததுபோல் உணர்ந்தான். அவனது வார்த்தைகள் சென்னை corporation குழாயிலிருந்து வெளியே வர துடிக்கும் தண்ணீர் போல் சிக்கி தவித்தன.

எச்சில் முழுங்கியபடி, " மாயா," ஒற்றை வார்த்தையை அமைதியாய் கூறினான்.

மாயா, "சொல்லு சந்தோஷ்..எப்படி இருக்க?"

மௌனமாக இருந்தான் சந்தோஷ்.

தொடர்ந்தான் மாயா, "ஹாலோ, சந்தோஷ்? என்ன ஆச்சு? are you there?"

"ஏன் training session cancelled?" கேள்வி கேட்டான் சந்தோஷ்.

மாயா, "ஓ, அதுவா? சாரி சந்தோஷ். நாளைக்கு training court not available. but அடுத்த வாரம் கண்டிப்பா இருக்கும். i will message you. ஆமா, நீங்க guys எல்லாம் எங்க train பண்ணுவீங்க?"

சந்தோஷ், " weekdaysல தான், every wednesday evening yetrin football courtல. வரீயா?" தைரியம் இல்லாமல் பேச தொடங்கிய சந்தோஷ், இப்போது டாப் கியரை போட்டு ஏறி சென்றான் 'காதல் மலை'யில்.

மாயா, "weekdays முடியாது சந்தோஷ். வேலை lateஆ முடியும்.anyway thanks for the invite" என்று தொடங்கிய பேச்சு காற்பந்து, பிடிச்ச காற்பந்து குழு, வேலை, boss, colleauges, friends, facebook என்று நாட்டு முன்னேற்றித்திற்கு தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசி மகிழ்ந்தனர். மணி 11 ஆனது.

கொட்டாவி விட்ட மாயா, "சந்தோஷ், எனக்கு தூக்கம் வரது. shall we end our conversation?"

சந்தோஷ், "நான் பேசறது அவ்வளவு boringஆ இருக்கா?" என்றான்.

மாயா, "ஐயோ. no no! நான் அப்படி சொல்லல. நிஜமாவே எனக்கு தூக்கம் வரது. ரொம்ப tiredஆ இருக்கு, சந்தோஷ்." என்றாள். மாயா தூங்க சென்றாள். சந்தோஷுக்கு தூக்கம் கதவு வழியே வந்து ஜன்னல் வழியே பறந்து போனது. பையன அம்புட்டு சந்தோஷ்த்துல மிதந்து கொண்டிருந்தான்.

கைகளை தலைக்கு பின்னாடி மடிக்கியவாறு தலையணையில் தலை வைத்து படுத்தான். ceilingயை பார்த்தபடி புன்னகையித்தான். ஏதோ ஒரு பனிமலையை தாண்டிய மகிழ்ச்சி அவனுக்குள் புகுந்து உடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியை தந்தது. அவள் பேசிய ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து பார்த்து மறுபடியும் தனக்குள்ளே சிரித்து கொண்டான். தூக்கம் அவனது கண்களை தொட்டு பார்த்தாலும், அதை தூக்கி வெளியே போட்டான்.

மறுநாள் காலையில் கைபேசியை பார்த்தான். ஒரு குறுந்தகவல் வந்து இருந்தது மாயாவிடமிருந்து

சாரி சந்தோஷ். நேத்திக்கு உண்மையாவே எனக்கு தூக்கம் வந்துட்டு. hope you didn't get offended. :) take care and have a nice day.

புன்னகையித்தான் சந்தோஷ். அவள் நம்பரை 'maya' என்ற பெயரில் save செய்து இருந்ததை 'maya darling' என்று மாற்றி வைத்தான்.

சந்தோஷ் வழக்கம்போல் facebook பக்கத்திற்கு சென்றான். அவனுக்கு ஒரு 'event invitation' வந்து இருந்தது. முந்தைய அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவரின் அக்கா மகள் திருமண அழைப்பிதழ் அது. 'not attending' என்ற பட்டனை அழ்த்தலாம் என்று யோசித்தபோது, மாயாவின் chat box open ஆனது

மாயா: are you going for the wedding?

சந்தோஷ்: which wedding?

மாயா: சந்தியா's wedding. i saw your name on the guest list.

சந்தோஷ்: உனக்கு எப்படி சந்தியாவ தெரியும்?

மாயா: அவங்க அம்மாவும் என் அம்மாவும் friends. ஆனா, அம்மாவால போக முடியாது. அவங்க வேற ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. so, என்னைய போக சொன்னாங்க. i need a company and thank god, i saw your name.

சந்தோஷ்: sure. sure. நானும் போறேன். i will see you there at the wedding.

இது விதி என்பதா? இல்ல வேற என்பதா? சந்தோஷுக்கு மாயாவை சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி ஏற்பட்டது.

கல்யாணம் முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர்.
சந்தோஷ், " எனக்கு ஒரு help தேவை." என்றவன் தன் தங்கைக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வாங்க மாயா உதவ வேண்டும் என்றான்.

தொடர்ந்தான், "உனக்கு free இல்லேன்னா, பரவாயில்ல? i will manage" என்றான்.

மாயா சற்று யோசித்தாள். கைகடிகாரத்தை பார்த்து, "ம்ம்..ஓகே. ஆனா 5 மணிக்கு நான் கிளம்பிடனும். office work கொஞ்சம் pending." என சிரித்தாள். கடை கடையாய் ஏறி இறங்கினர். ஆனால், எதுவுமே அமையவில்லை.

தங்கைக்குத் தான் பிறந்தநாள் முடிஞ்சு பல மாதங்கள் ஆகிவிட்டதே! சும்மா தான், சந்தோஷ் பொய் சொல்லியிருக்கான். மாயா ஒவ்வொரு பொருளை பார்த்து ரசித்து அது அவனுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்கும்போதெல்லாம் அவனுக்குள் 'ஒரு புதிய சந்தோஷ் பிறப்பதாய்' உணர்ந்தான்.

ரொம்ப களைப்பாக இருந்ததால், சந்தோஷ், " juice சாப்பிட போலாமா?"

protein shake juice shopக்குள் நுழைந்தனர்.

மாயா, "சந்தோஷ், இங்க juice எல்லாம் protein shake மிக்ஸ் பண்ணது. very good for sportspeople. இந்த orange mix try பண்ணி பாக்குறீயா? என்றாள் menu cardயை திருப்பியபடி.

சந்தோஷ், "மாயா, i love you."

(பகுதி 5)

7 comments:

Anonymous said...

//'event invitation' //
ஆஹா. மூஞ்சி புத்தக ஆளுங்களே நீங்க இப்படி எல்லாம் யூஸ் பண்ணுவீங்கனு நினைச்சிருக்கவே மாட்டான். தெய்வமே. காலை கொஞ்சம் காட்டுங்க. இல்ல சும்மா தான். தொட்டு கும்பிட.

ஷக்தி said...

kallakal

ANaND said...

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்...

அடுத்து இந்த லிஸ்ட்ல கோபிநாத் வரபோறருனு நெனைக்கிறேன்

ANaND said...

எப்புடிங்க பசங்க மனச இப்படி புட்டு புட்டு வைகிரிங்க ..

கதை செம ஸ்பீடுல போகுதுங்க

நல்லாருக்கு

ANaND said...

மாயா, "சந்தோஷ், இங்க juice எல்லாம் protein shake மிக்ஸ் பண்ணது. very good for sportspeople. இந்த orange mix try பண்ணி பாக்குறீயா? என்றாள் menu cardயை திருப்பியபடி.

சந்தோஷ், "மாயா, i love you."

(தொடரும்)



அங்க வட்சிங்க பாருங்க ட்விஸ்ட

FunScribbler said...

அனாமிகா:
//தெய்வமே. காலை கொஞ்சம் காட்டுங்க. இல்ல சும்மா தான். தொட்டு கும்பிட.//

ஐயோ ஏங்க நீங்க வேற!!??

ஷக்தி: நன்றி boss!

ஆனந்த்: கோபிநாத் எல்லாம் பழையதா போச்சு!:))

எவனோ ஒருவன் said...

கதை இன்னும் டாப் கியர் ல போக ஆரம்பிச்சிடுச்சு :-)