May 12, 2011

'தமிழ்' இன்னிக்கு ராத்திரி செத்து போயிடும்!

என்ன தான் தமிழ் தமிழ் என்று உயிரை கொடுத்து கத்தினாலும் சிலர் அதை கொலை செய்தே தீர்வேன் என்று இருக்கான். கோ படத்தில் வரும் 'அக நக' பாடலில் உள்ள rap வரியை பாருங்க

விண்ணிலும் மண்ணிலும் உள்ள
நட்சத்திரங்களோடு ஒன்னா
சேர்ந்து இணைந்து பினைந்து
பிச்சி பின்னி பேத்து எடுக்கலாம்!

என்னது பேத்து எடுக்கலாமா??? இதை கேட்டு பிறகு அழுவதா சிரிப்பதானு கூட தெரியல. தமிழை தமிழாக பயன்படுத்துங்கய்யா! அதுக்குனு சுத்த தமிழ்ல பாடல்கள எழுதனும் சொல்லவில்லை.... atleast சொத்தப்பாம எழுதலாம்ல! தமிழ்ல ஆங்கிலத்தை கலக்க வேண்டாம் என்று பலர் போர் கொடி தூக்கினாலும், எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆங்கிலத்தை கலந்து சொல்லுங்க ஆனா எந்தவிதத்திலுமே இரண்டுக்குமே பாதிப்பு வராத அளவு பாடல்களை எழுதுங்க!

ஏன் இரண்டையும் கலந்து சொல்லுங்கனு சொல்றேனா.... மசாலா தோசைய அப்படியே சாப்பிடுவதற்கும், கூட சாம்பார், சட்னி, பொடி வச்சு சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்குல! அதே வித்தியாசம் நாம் பேசும் மொழியில் இருந்தால் தப்பு இல்லையே! இந்த இரண்டு மொழியையும் அழகாக கலந்துவர் ஒருவர் என்றால் அது கௌதம் மேனன் எனலாம்!

அந்த மாதிரி அழகான வெளிபாடு இருந்தால் இரண்டையும் கலப்பதில் தப்பு இல்ல! ஆனா, இந்த பேத்து எடுக்குறேன்! சேர்த்து பின்னுறேன் அப்படினு மொக்கையா பாட்டு எழுதினா தமிழ் மெல்ல செத்துவிடும்!

சரி இது ஒரு வகையில போக, நம்ம little superstar ஆக இருந்த சிம்பு இப்ப promotion பெற்று young superstar ஆக மாரி, அவர் எழுதிய புத்தம் புது பாடலை கேளுங்க....




ஸ்ருதி, பல்லவி... அப்பரம் அவங்க அக்கா தங்கச்சினு இப்படி ஒரு பாட்டுக்கு தேவையான எதுவுமே இல்லாமல் வந்த பாடல்தான் 'லவ் பண்ணலாமா வேண்டாமா!'

சிம்புவுக்கு மட்டும் தான் பாடல் எழுத தெரியுமா! நானும் எழுதியிருக்கேன்.

"சிம்பு பாட்டு கேட்கலாமா வேணாமா?
கேட்டா என்ன ஆகும்?
பொறந்த குழந்தை திரும்பி
...அவங்க அம்மா வயத்துக்குள்ள போயிடுமே!
கேட்கலாமா? வேணாமா?
வேணாமா கேட்கலாமா?
பாட்டு கேட்கலாமா?வேணாமா? வேணாமா? கேட்கலாமா"

எப்படி??

அது சரி, இப்படிலாம் பாட்டு வந்தா தமிழ் மெல்ல சாகாது! இன்னிக்கு ராத்திரியே செத்து போயிடும்:))))))))

(நேயர் விருப்பம்: கோ படத்தில் வரும் என்னமோ ஏதோ பாடலில் வரும் 'குவ்வியமில்லா ஒரு காட்சி பேழை' என்று வருகிறதே, குவ்வியமில்லா என்றால் என்ன? யாரேனும் சொல்லுங்களேன். பேழை என்றால்?)

May 7, 2011

ko- ஏன் எனக்கு மட்டும் பிடிக்கவில்லை ?

கோ படம் நேத்துக்கு பார்த்தேன். என்னோட expectations ரொம்ப அதிகமா போயிட்டுனு நினைக்குறேன். facebookல எல்லாரும் படம் நல்லா இருக்குனு சொன்னதுனால நம்பி போனேன், பாதி படத்துல தூங்கிட்டேன்.

தேவர் மகன், முதல்வன், சிவாஜி ஆகிய படங்களில் வராத காட்சிகளை எடுத்து கோர்வையாய் போட்டு, norwayல 4 பாட்டுகள shoot பண்ணி வச்ச கலவை மாதிரி இருந்துச்சு. நடிப்பு பரவாயில்லை. ஆனா அந்த heroine...யப்பா!!!! புருவத்தை வளர்த்தாங்களா? இல்ல செஞ்சு ஒட்டுனாங்களானு தெரியல!!

heroine ரெண்டு பேருக்குமே டுப்பிங் நல்லாவே இல்ல.:(( சாரி, கே வி சார்!

இது அக்மார்க் கே வி சார் படம்னு தெரியுது, flashback என்ற பாணியில், ஒருவர் நடந்த கதையை narrate செய்வது தூக்கத்தை கிளப்பியது. அப்பரம், chemical, bombing... (ayan படத்திலும் இப்படி தான்) என்று பிடிக்காத chemistry பாடத்தை புரியாமல் பார்ப்பது போல் இருந்தது.

அயன் படத்துக்கு, 100க்கு 100 கொடுத்தேன். இப்படம்.....கோ....அச் ச்ச சோ!!!

(கொசுறு: மாப்பிள்ளை படம் பார்க்க போனேன். 3 மணி நேரம் மாப்பிள்ளை படம் பார்த்ததற்கு பதிலாய் எங்கயாச்சும் மாப்பிள்ளையாவது பார்த்து இருக்கலாம். ஹிஹிஹி.....)

Apr 6, 2011

டாப் 10 அழகான கிரிக்கெட் வீரர்கள் (என் பட்டியல்)

இந்த கிரிக்கெட் உலக கிண்ண போட்டிகள் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல வகையில் தீணி போட்டு இருக்கும்! ஆனால், கண்களுக்கு தீணி என்ற வகையில் அதாவது பொண்ணுங்க 'eye feast' என்று இதனை செல்லமாக அழைப்பார்கள். அந்த வகையில் இந்த உலக கிண்ண போட்டிகளில் விளையாடிய வீரர்களில் டாப் 10 அழகர்கள் இவர்கள் (என் பட்டியல் படி)



பத்தாவது இடத்தில்: shakib from bangladesh
ஒன்பதாவது இடத்தில்: shahzad from pakistan
எட்டாவது இடத்தில்: nitish kumar from canada
ஏழாவது இடத்தில்: jp duminy from South Africa
ஆறாவது இடத்தில்: gautham from India
ஐந்தாவது இடத்தில்: dhoni from India
நான்காவது இடத்தில்: jade from England
மூன்றாவது இடத்தில்: brett lee from Aus
இரண்டாவது இடத்தில்: sachin from India

அந்த முதல் இடம் யாருக்குப்பா?????? இவர் தான் அந்த முதல் இடத்தில் இருப்பவர்....

Apr 3, 2011

இந்தியா ஜெயிச்சாச்சு..... எங்க வூட்டுல பிரியாணிங்கோ!

நேத்து இரவு, மனசு துடிச்சது பாருங்க... 30 பந்துகளில் 30 ரன்கள்!!! ஐயோ, எனக்கு தலவலி, வயத்துவலி, நெஞ்சுவலி- எல்லாமே வந்துவிட்டது.

இங்கு சிங்கையில் மாலை 5 மணிக்கு ஆரம்பித்தது ஆட்டம். boat quay என்னும் இடத்தில் ஆட்டத்தை கூட்டத்தோடு பார்க்கலாம் என்று தோழியுடன் சென்றேன். பொதுவா அந்த இடத்தில் வெள்ளைக்காரர்கள் தான் அதிகம் இருப்பார்கள்! ஆனால் நேற்று ஒரு இந்தியாவே அங்கு தான் இருந்தது. முகங்களில் வண்ண நிறம். நீல வண்ண சட்டை அணிந்த பலரும் அந்த இடத்திற்கே புது வண்ணம் கொடுத்தனர். ஒவ்வொரு பந்திற்கும் செம்ம விசில் சத்தம்! முதல் விக்கெட் விழுந்தபோது, அந்த இடமே சந்தோஷத்தில் குதித்தது.

இது எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப புதுசு. முதல் தடவ கூட்டத்தோடு பார்ப்பதும், சிங்கையில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இப்படி ஒரு ஆதரவு இருப்பது எனக்கும் ரொம்ப ஆச்சிரியமாய் இருந்தது. முதல் 10 ஓவர்களில், இந்தியாவின் fielding செம்ம powerful!! தோழி இலங்கையை சேர்ந்தவள். ஆக, இன்னும் வெறித்தனமாய் நான் கைதட்டி ஆரவாரம் செய்தேன். :)))) இலங்கை 220 ரன்களில் சுருண்டுவிடும் என்று நினைத்தேன். இருப்பினும் இலங்கையில் கடைசி சில ரன்கள் அபாரம்!

கொஞ்ச நேரம் கழித்து வீடு திரும்பிவிட்டேன், இந்தியா battingயை பார்க்க. shewag அவுட், சச்சின் அவுட்! மனசு கிடந்து பதறியது! facebookல் நண்பர்களின் update ஒரு பக்கம், ஆட்டம் ஒரு பக்கம், என் வீட்டு பணிப்பெண் அக்காவின் reaction ஒரு பக்கம் என்று ஒரே பரபரப்பாய் சென்றது நேற்று இரவு.

என் வீட்டு பணிப்பெண் சமீப காலமாய் தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார். இருப்பினும், நேற்று ஆட்டத்தை ரொம்பவே ரசித்து பார்த்தார். சச்சின் அவுட் ஆனதும் அவர் முகத்தில் தெரிந்த சோகம்....ஐயோ அப்ப தான் புரிந்தது cricket is not just a sport, it's a game that can emotionally impact people's lives!

gambhir கம்பீரமாய் ஆடியதும் கொஞ்சம் சந்தோஷம். இந்தியாவில் இருக்கும் தோழி மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தோழி ஆகிய இருவரிடம் facebookல் நாங்கள் அடித்து கொண்ட commentaryகள் ஏராளம்!

gambhir போனதும், சற்று கூடியது heart beat rate. டோனி வந்தார்! கலக்கிட்டார்! அவர் கண்களில் தெரிந்த வெறி- the fire in his eyes. தல டா, டோனி! உண்மையான தலைவன் அவன் தான். ஸ்டைல் மன்னன் ரஜினி அங்கு இருந்ததால் என்னவோ, டோனியும் ஆட்டத்தை ஸ்டைலாக முடித்தார்!

28 வருட கனவு. சச்சினின் ஆசை. 100 கோடி மக்களின் விருப்பம்- நேற்று இரவில் அனைத்தும் நிறைவேறியது! ஆனந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை.

இலங்கையின் அதிரடி ஆட்டம் அற்புதம். ஒரு இறுதி போட்டி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது!!

ஆட்டம் முடிந்தபிறகு, kohli சொன்னதும் இன்னும் கண்ணீர் பெருகியது, "Sachin carried the burden of the nation for 21 years. It's time we carried him on our shoulders."

நான் ஒரு இந்தியன் என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))))
நான் ஒரு கிரிக்கெட் ரசிகை என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))
நான் வாழும் காலத்தில் இந்தியா உலக கிண்ணத்தை ஜெயித்தது என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))

*இந்தியா ஜெயிச்சா, பிரியாணி செஞ்சு தரேன்னு பணிப்பெண் சொன்னாங்க! பிரியாணி, here i come!:)))