Aug 20, 2007

தொட்டால் பூ மலரும்-விமர்சனம்

"துளியிலே ஆட வந்த வானத்து விண்விளக்கே" என்று சின்ன தம்பியில் சிறு குழந்தையாக வந்தவன் இன்று திரையில் ஆட்டம் போட வந்துவிட்டான். வேறு யாரு இல்லைங்க 'தொட்டால் பூ மலரும்' ஹீரோ சக்தி. சின்ன தம்பி, நடிகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவன். இயக்குனர் பி.வாசுவின் மகன் நடித்த படம் தான் 'தொட்டால் பூ மலரும்'.

அட நம்ம பார்த்து வளர்ந்த பையனா இவன் என்று ஆச்சரியம்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். உண்மையில் MBA படித்த முடித்து சினிமாவில் காலடி வைத்துவிட்டான் தன் அப்பாவின் உதவியால்.. சரி படத்துக்கு வருவோம். பி.வாசு தன் மகனுக்காகவே எடுத்த படம் போல தெரியுது. கதை, திரைக்கதையில் தன் மகனின் திறமைகளை வெளிபடுத்த வேண்டும் என்பதற்காக பல சண்டைகள் என்று திணித்துவிட்டார். இருப்பினும் 'காதலில் வென்றால் மட்டும்போதாது, வாழ்க்கையில் வெல்ல வேண்டும். அப்பதான் வருகின்ற காதலியை நிம்மதியாக வச்சுருக்க முடியும்' என்ற ஒரு வரி கதை தான் இந்த படம். கருத்து நல்லது தான். இருப்பினும் திரைக்கதை ஓட்டத்தை சரி செய்து இருக்கலாம்.

ராஜ்கிரண், நாசர், சுகன்யா, கேஸ் ரவிகுமார் போன்ற பெரிய ஜாம்பவான்கள் பட்டாளம் ஓரளவுக்கு சுவார்ஸ்சியமாக கொண்டு சென்றனர் படத்தை. வடிவேலு காமெடி அவ்வளவு எடுப்படவில்லை. காதல் கதை என்பதால் கதாநாயகிக்கு நடிக்க வாய்ப்பு இருந்தது... இருந்தாலும் எங்க இப்ப வர புள்ளைங்க அத பயன்படுத்துதூங்க...!

ஒரு சில சுவார்ஸ்சியமான காட்சிகள் இருந்தாலும் அவை கதையோடு ஒன்றியதாக அமையவில்லை. எது எப்படி இருந்தாலும்... புது முக கதாநாயகன் சக்திக்கு நல்ல எதிர்காலம் உண்டு. கேமிராவுக்கு முன் ஒரு பதற்றம் இல்லாமல் நடிப்பது, நன்றாக ஆடுவது... என்று ஹீரோவுக்கு இருக்கவேண்டிய பல அம்சங்கள் கொண்டவராக இருக்கிறார் சக்தி. பார்க்க அப்படியே அவங்க அப்பா சாயல். குரல்கூட அப்படியே அவர் மாதிரியே.

படத்தின் பாடல்கள் அருமை! காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சில வசனங்கள் நச்! கடைசி காட்சியில் கேஸ் ரவிகுமாரிடம் பணம் கொடுக்க வேண்டும் சக்தி. அப்ப சக்தி பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கபோதும், ரவிகுமார் சொல்லுவார் 'இருக்கட்டும்பா, என் அட்வான்ஸா வச்சுக்கோ" என்பார். ரசித்து பார்த்த ஒரு காட்சி

நம்ம வீட்டு பையன் என்ற வகையில் படத்தை சக்திக்காக ஒரு முறை பார்க்கலாம்.... தியெட்டரில் ரசிக்க முடியாவிட்டாலும். சீடியில் குடும்பத்தோடு பார்க்கலாம்!

தொட்டால் பூ மலரும்-ஒரு சில இடங்களில் மட்டுமே!

No comments: