Aug 11, 2009

எனக்கே என்னை தெரியாமல்-2

பகுதி 1


திடுக்கிட்டு போனாள் அவள். தேவி புன்னகையுடன், "ஐ எம் தேவி..." என்றாள்.


ஆச்சிரியத்துடன் அவள், "நீங்க யாரு...."


"உங்கள கொஞ்ச நேரமா கவனிச்சேன். mostly, அந்த பேப்பர யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க. அப்படி நீங்க தேடி வந்து பாத்தீங்கன்னா...you really need some help i think. ஒன்னும் பயப்படாதீங்க... நான் இந்த அக்னி மன்றத்துல தான் இருக்கேன்." என்றாள் தேவி, கை குலக்குவதற்காக கைகளை நீட்டினாள்.


ஏதோ தொலைந்து போன குழந்தையை மறுபடியும் பார்த்ததுபோல் அந்த பெண்மணி முகத்தில் ஒரு மறுமலர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி. சற்று தன்மையான குரலில், "அப்ப நீங்க...." என்று இழுத்தாள்.


"yes... you are right. i am a lesbian."


அந்த பெண்மணிக்கு மறுபடியும் ஆச்சிரியம். "ஓ...நான் கீதா..." தேவியுடன் கைகுலுக்கி கொண்டாள். ஆனால், மறுநொடியே ஒரு சோக ரேகை பரவியது கீதாவின் முகத்தில். அதை முற்றிலும் புரிந்து கொண்ட தேவி,


"வா கீதா...அந்த காபி ஷாப்புல பேசலாமா?" என்று சொன்னாள்.


"2 cappuccino." ஆர்டர் செய்தாள் தேவி.



"என்னால முடியல தேவி. ஏன் எனக்குள்ள இப்படி...." கண்கள் குளமாகி கன்னங்களில் அருவியாய் ஊற்றியது. தேவி எதுவும் பேசவில்லை. கீதாவை சற்று நேரம் அழவிட்டாள். உலகத்திலுள்ள பல பிரச்சனைகளின் முதல் எழுத்தும் கண்ணீர் தான், முற்றுப்புள்ளியும் கண்ணீர் தான். மேசையில் இருந்த tissue paperரை எடுத்து கொடுத்தாள் தேவி.

அழுகையின் நடுவே, "thanks" தேவி கொடுத்ததை வாங்கி கொண்டாள்.

"நான் ஏன் இப்படி இருக்கேன்?" கீதா தேம்பி அழுதாள்.

"எப்படி?" தேவி கேட்டாள். இந்த கேள்வி கீதாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது.

boy-cut hairstyle, baggy shirt, wrist band,one side ear stud-கீதாவின் தோற்றம். தன்னை ஒரு முறை பார்த்தவாறு, "இந்த மாதிரி டிரஸ் பண்ணியிருக்கேன்.... என்னால normal girlஆ இருக்க முடியல." அழுகை நின்றது.

ஆர்டர் செய்த cappuccino வந்தது. அதை குடித்துகொண்டே தேவி, "so இப்படி டிரஸ் போட்டா lesbianனு யாரு சொன்னது?"

இந்த கேள்வி கீதாவை சிந்திக்க வைத்தது. மேலும் குழம்பி போனாள்.

"இங்க பாரு கீதா...dressing sense and fashion have got nothing to do with who you are. உன் மனசுக்குள்ள இருக்குற ஃவீலிங்ஸ் தான் முக்கியம். there are lesbians who wear normal girls' outfits.....sarees....punjabi suits.... நம்ம society இருக்குற பெரிய தப்பே அது தான். we try to label people according to what they wear. இந்த மாதிரி superficial things எல்லாம் தூக்கி போடு. உன் மனசுல என்ன தோணுது?" கீதாவின் சில குழப்பங்களுக்கு விடை அளித்ததுபோல் இருந்தாலும் அவள் மேலும் குழப்பம் அடைந்தாள்.

கீதா, " என்னால ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்க முடியல....i am not feminine at all."

வேறு ஏதேனும் ஆர்டர் வேண்டுமா என்று கேட்பதற்காக வந்தான் சர்வர்.

"இல்ல வேண்டாம்ப்பா..." அனுப்பிவைத்தாள் தேவி.

மீண்டும் கீதாவிடன் தொடர்ந்தாள் தேவி, "இப்ப உனக்கு எத்தன வயசு?"

கீதா, "காலேஜ் first year படிக்குறேன்."

தேவி, "சில பேருக்கு 13, 14 வயசுலே தெரிஞ்சிடும். சில பேருக்கு உன் வயசுல தான் புரியும். ஆனா இன்னும் சில பேருக்கு..... கல்யாணம் ஆனபிறகு தான் புரியும்.... சிலருக்கு 55, 60 வயசு வரைக்கும்கூட தெரியாமலேயே வாழ்ந்துகிட்டு இருப்பாங்க....the most important thing is to take time to self-reflect on yourself. நம்ம இப்படி தான்னு முடிவு எடுத்துட கூடாது உடனே."

கீதா, "நீங்க சொல்றது எனக்கு புரியல்ல...."

தேவி, " Are your feelings for women stronger than your feelings for men? .....Do you get more excited about the idea of kissing a man or kissing a woman? Who do you see yourself settling down with in the future? Are you more physically attracted to men's or women's bodies?
Who do you fantasize about more, men or women?....." என்று வரிசையாக கேள்வி மழை பொழி்ந்தாள்.

இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பாராத கீதா முழித்தாள்.

"இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கனும்னு அவசியமில்ல. எல்லாத்துக்கும் ஆம் என்ற பதில் வரனும்னு அவசியம் இல்ல. மனசு சம்மந்தப்பட்ட விஷயம். ஆனா...முடிவு உன் கையில தான். மத்தவங்களுக்காக உன்னைய மாத்திக்க வேண்டியது இல்ல. மாத்திக்காம இருக்கவும் தேவையில்ல." தேவியின் கேள்வியும் பதிலும் கீதாவின் மனதை திறப்பதுபோல் இருந்தது.

கீதா, "ஏன் இந்த complications.....?"

தேவி, "நம்ம இருக்குற உலகம் அப்படி. lesbians/gays ஏத்துக்குற மனபக்குவம் இல்ல. கடவுள் எப்படி ஆண் பெண் படைச்சாரோ அப்படி தான் என்னையும் படைச்சார். if people think we are going against nature.... that's wrong. in fact we are embracing nature. we accept the changes within ourselves...... which is natural!"

தேவியுடன் அமைந்த உரையாடல் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது கீதாவிற்கு. தாழ்வுமனபான்மை நீங்கியது போல் உணர்ந்தாள். "நீங்க எப்படி உணர்ந்தீ்ங்க? சின்ன வயசுலே...you knew you were like this?" கீதாவிற்கு தேவியின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமா இருந்தது.

சிரித்தவாறு, "i learnt it the hard way. இந்த மாதிரி எடுத்து சொல்ல ஆளு இல்ல. எந்த மன்றமும் கிடையாது...."

கீதா, "அப்பரம் எப்படி?"

தேவி, "கஷ்டப்பட்டு..... கொஞ்ச அடிப்பட்டு.... நிறைய அழுகை...அவமானம்... வெறுப்பு.... தற்கொலை முயற்சிகூட பண்ணியிருக்கேன்..... " சிரித்தாள்.

கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தன கீதாவிற்கு. வாயை விரல்களால் பொத்தியபடி, "ஐயோ! அப்பரம் என்ன ஆச்சு?"

அச்சமயம் தேவியின் கைபேசி அலறியது மறுமுனையில் ரினிஷா. தேவி நடந்தவற்றை கூறினாள் ரினிஷாவிடம்.

ரினிஷா, "oh god, is she ok now? you wanna invite her for dinner at our place tonight. நேரம் ஆச்சு டா."

தேவி, "ok sure. don't worry. we'll be there soon."

பேசிமுடித்தபிறகு தேவி கீதாவை அவள் வீட்டிற்கு அழைத்தாள். தேவியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் கீதாவை, "no problem... let's go." என்று சொல்ல வைத்தது. கீதாவின் மனதில் ஓடி கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

பைக்கில் ஏறுவதற்கு முன் கீதா, "தேவி....ரினிஷா வந்து....உங்க..." இழுத்தாள்.

தேவி, "we are in a relationship. staying together." தனது helmetடை போட்டுகொண்டாள்.

தொடரும்....


பகுதி 3

பகுதி 4

பகுதி 5

12 comments:

G3 said...

me the firstae :))))

G3 said...

Eppadinga konjamum viruviruppu koraiyaama continue pandreenga !!! paaratukkal :)))

Defaulta indha qn.um koodave varudhu :)) adutha part eppo release? ;)

Sundari said...

Kadhai nalla intersting aa pogudhu..sekaram next part podunga..

Karthik said...

//(தொடரும்)

hey go on....

this part is really interesting. waiting for the next. :))

gils said...

unga theme kalakkal...not many venture into this topic..athukaagavay spl congrats...adutha partoda mudikama konjam neria series podunga ithula :)

ivingobi said...

ada second part post pannittingala sollavae illa......
sari padichuttu varren.....

Bhuvanesh said...

நல்லா இருக்குங்க.. Intrestinga போகுது.. அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க!

இராயர் said...

intha storyala yarukku yenna labam nu konjam sollunga

illa

ungalukku lesbian na pidikuma??

Anonymous said...

அமிர்தலிங்கம் சார் கதைய கதையா பாருங்க!
லாப ந்ஸ்டம் பார்க்காதீங்க.

FunScribbler said...

@ அமிர்தலிங்கம் சார்,/

//intha storyala yarukku yenna labam nu konjam sollunga//

hahaha...சார் நான் என்ன படமா எடுத்து ரிலிஸ் பண்ண போறேன்...லாபம் பாக்க?

//ungalukku lesbian na pidikuma??//

நல்ல மனசு இருக்குற எல்லாரையும் பிடிக்கும்.

23-C said...

yarum chose panaatha topic...seekram adutha part release panunga

ivingobi said...

innuma adutha part varala..... ethir paarthu kkittu irukkom eppo varum nu...... so plzzz.........