Sep 15, 2009

எனக்கே என்னை தெரியாமல்-5

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
சூடான காபியுடன் ரினிஷா உட்கார்ந்து இருந்தாள் தேவியின் வீட்டில். ஹாலில் இருந்த curtainயை திறந்துவிட்டு ஜன்னல்களை சாற்றினாள்.

"ரொம்ப மழையா இருக்குல." தேவி சொன்னாள்.

"thank you devi."

மழையில் நனைந்த தன்னை வீட்டிற்கு அழைத்தமைக்கு நன்றி சொன்னாள் ரினிஷா. இருவரும் ரொம்ப நேரம் பேசினர். அவர்களுக்கிடையே நிறைய விஷயங்கள் ஒத்துபோயின. ஒரே மாதிரியான விருப்பங்கள்கூட. ரினிஷாவின் கணவன் சந்தேகபேர்வழியாக இருந்தபோதிலும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிகொண்டிருப்பதை கேட்ட தேவி,

"தனியா போயிடு ரினிஷா....எதுக்கு கஷ்டம்?"

புன்னகையித்தாள் ரினிஷா. "பார்ப்போம் வாழ்க்கை எப்படி போகுதுன்னு." என்றாள்.

ஆனால், தேவி தான் ஒரு லெஸ்பியன் என்னும் உண்மையை சொல்லவில்லை. மறைப்பதற்காக அல்ல, ஆனால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாகின. தேவியின் பாக்ஸிங் மாஸ்ட்டரும் ரினிஷாவின் நண்பர் ஆனார். மூவரும் நிறைய இடங்களுக்கு சென்றனர். வாழ்க்கை கொஞ்சம் சந்தோஷமாக தெரிந்தது.

அப்படி ஒரு நாள், மூவரும் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது தேவி கை கழுவ சென்றாள். அச்சமயம் காபி குடித்து கொண்டிருந்த மாஸ்ட்டர்,
"தேவி, இப்படி சந்தோஷமா இருந்து பாத்தது கிடையாது. நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆனாபிறகு, அவளுக்கு எல்லாம் கிடைச்சு ஒரு ஃவீல் நினைக்குறேன். அதான்..... சந்தோஷமா இருக்கா.... இப்படி ஒரு பொண்ணுகூட ஃபிரண்ஷிப் வச்சு இருக்குற உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்" என்றார் மாஸ்ட்டர். நல்ல எண்ணத்தில் அவர் சொன்னார். ஆனால், அது உண்மையை போட்டு உடைக்கும் சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

ரினிஷாவிற்கு ஒன்னும் புரியவில்லை.

"மாஸ்ட்டர்...நீங்க என்ன சொல்லவறீங்க?" புருவங்களை உயர்த்தினாள்.

"நீங்களே சொல்லுங்க.... லெஸ்பியன்ஸ்கூட ஃபிரண்டா இருக்க...எத்தன பேரு விருப்பப்படுவாங்க.." என்றார்.

ரினிஷாவிற்கு அதிர்ச்சி!!! ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள் அவசர வேலை இருப்பதாக சொல்லிவிட்டு. செய்தி தெரிந்த தேவி, பலமுறை ஃபோன் செய்து பார்த்தாள். ஆனால், ரினிஷா எடுக்கவில்லை.

அன்று இரவு தேவியின் வாசல் மணி ஒலித்தது. பெட்டியுடன் ரினிஷா. தேவி தலைகுனிந்து நின்றாள். தோழியிடம் உண்மையை சொல்லாமல் போன வருத்தம் அவள் முகத்தில் படர்ந்தது.

ரினிஷா தேவியை கட்டிபிடித்து அழுதாள்.

"நான் ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லனும். உன்னைய பாத்த முதல் சந்திப்பிலேயே....ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு. உன்னைய ரொம்ப பிடிச்சு போச்சு. அது ஒரு சாதாரண ஃபிரண்ஷிப்பை மீறிய ஒரு ஈர்ப்பு. சொல்ல தெரியல. நீ தப்பா நினைச்சுப்பேன்னுதான் சொல்லாம விட்டுடேன்......" அழுகையின் நடுவே.

தேவிக்கு ஆச்சிரியமாக இருந்தது.

"இப்ப இந்த நேரத்துல ஏன்...."

"அவர விட்டுடு வந்துட்டேன்."
-----------------------------------------------------------------------------------------

கீதா கதையை கேட்டு விட்டு, "ஆனா, நம்ம societyல இதலாம் ஒத்து வருமான்னு யோசிச்சீங்களா அப்போ."

அதற்கு ரினிஷா, "நான் கொடுக்கும் அன்புக்கு ஒரு இருப்பிடம் தேவைப்பட்டுச்சு. அது என் ex husbandகிட்ட கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு..... வந்துட்டேன். மத்தவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்ல மனசு இருக்குற ஒருசில பேர் எங்கள புரிஞ்சுகிட்டாவே சரி. அது போதும் எங்களுக்கு." என்றாள்.

கீதாவிற்கு அன்றைய பொழுது மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இருவரின் வாழ்க்கை கதையை கேட்டு ஆச்சிரியப்பட்டாள். தன் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பதை பற்றி யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

நேரம் ஆகிவிட்டதால் கீதா, "ரொம்ப நன்றிங்க.....really appreciate your time. i had a great evening today. thanks alot."மனமுவந்து நன்றிகளை கூறினாள்.

அப்போது ஒரு குட்டி பொண்ணு அறையிலிருந்து ஓடி வந்து ரினிஷாவின் கால்களை கட்டிபிடித்து, "mummy, look at this. i won the game." கையில் இருந்த video game playerயை காட்டி சிரித்தது.

"யாரு இந்த குழந்தை?" என்று கீதாவின் முகத்தில் உதித்த கேள்வியை கண்டுகொண்ட ரினிஷா,

"my child from my previous marriage." என்றாள்.

கீதா குழந்தையிடம் சென்று, "ஹாலோ, உங்க பேரு என்ன?" என்று கேட்டு தன் பையில் இருந்த ஒரு சாக்லெட்டை கொடுத்தாள்.

"சரி நான் கிளம்புறேன்...." என்றாள் கீதா. வழியனுப்பி வைக்க வாசல்வரை வந்தனர் ரினிஷாவும் தேவியும்.

"ஏதாச்சுன்னா...ஃபோன் பண்ணு." என்றாள் தேவி கீதாவிடம்.

கீதா உடனே, "ம்ம்ம்.... குழந்தைக்கு தெரியுமா?....நீங்க ரெண்டு..." எச்சில் முழுங்கினாள். கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டதாய் முழித்தாள்.

சிரித்து கொண்டே ரினிஷா, "அவள பொருத்தவர....அவளுக்கு ரெண்டு அம்மா இருக்காங்க...."

*முற்றும்*

(யப்பா சாமி, ஒரு வழி முடிச்சுட்டேன். இந்த பாகம் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சுட்டு. கதைக்கு எப்படியாச்சு முற்றும் போட்டுவிட வேண்டும் என்பதற்காக தான் முடிச்சேன். ஐயோ....எந்த நேரத்துல எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல. ஒரே பிஸி... ப்ளாக் பக்கமே தலவச்சு படுக்கல......இனியாவது உருப்படியா எதாச்சு எழுதுறேன். i guess i will be back to form soon!)

13 comments:

gils said...

vadai enakkay

gils said...

enanga ad spot kedaikatha mega serial mathiri takunu mudichiteenga

gils said...

aaanna hats off u to mango..sooper theme..and semma viruvirupaana flow..

G3 said...

Sooper :))) Nalla writing flow :) Asathareenga :)))

//கதைக்கு எப்படியாச்சு முற்றும் போட்டுவிட வேண்டும் என்பதற்காக தான் முடிச்சேன். //

Appadi avasarapattu mudikaama innum porumaiya ezhudhi irundha innum soopera irundhirukkumo?? :)))

G3 said...

// gils said...

vadai enakkay//

Aapisla ippo ellam velayae paakaradhillae pola.. ella edathulayum vadaikku readya nikkareenga :P

க.பாலாசி said...

நல்ல டச்சிங்கான முடிவு...

கதையில் நல்ல flow...

Prabhu said...

நான் சொல்லல நீங்க 5 பாகத்துல ம்டிச்சிருவீங்கங்கிறத!
ஐ நோ!

நல்லாதான் இருந்துச்சு! ஆனா, எடிட்டிங் அட்ஜஸ் பண்ணி 4 ல முடிச்சிருந்தா இந்த சின்ன பாகம் insignificanta வந்திருக்காதுல! நீங்க அந்த ராசியான எண்ணில் தான் முடிப்பேன்னு அடம் பிடிக்கிறீங்க!

FunScribbler said...

@gils,//enanga ad spot kedaikatha mega serial mathiri takunu mudichiteenga//

hahahha...that's what i wanted to say too!

FunScribbler said...

பாலாஜி,
//நல்ல டச்சிங்கான முடிவு...//

நன்றி நன்றி:)

@g3, thanks akka!

@pappu,
//நீங்க அந்த ராசியான எண்ணில் தான் முடிப்பேன்னு அடம் பிடிக்கிறீங்க!//

ada neenga vera...

Divyapriya said...

enna ivlo seekram mudichiteenga? aanaa nallaa irundhuchu :)

/my child from my previous marriage///

idhu f.r.i.e.n.d.s kadhai maadhiri irukku :)

JACK and JILLU said...

காயத்ரி...வித்தியாசமான கதைக்களன்... நன்றாக இருந்தது

FunScribbler said...

@divyapriya

//idhu f.r.i.e.n.d.s kadhai maadhiri irukku :)//

appadiyaa? i haven't seen that series.

sri said...

hey good :) eppo dhan enakku padikka time kedachadhu 5 dhaan mudipeengannu enakku theriyumey :)

Yeah good storyline and easy flow, romba kacha mudhannu ezudhame, azhaga mudichiteenga :) subam