Apr 4, 2018
முதல் e-kavithai நூல்- கா _ _ Comes First.
ஏற்கனவே எழுதிய கவிதைகள் சிலதும், சமீபத்தில் எழுதியதையும், ஒன்றாக சேர்த்து உருவாக்கிய e-kavithai. படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க, மக்கா!
கீழே உள்ள லிங்-கை அழுத்தவும்,
http://online.anyflip.com/hnnb/fguh/mobile/index.html#p=1
Feb 13, 2018
காமம் comes first( கவிதை)
Apr 11, 2015
எனக்கென்ன யாருமில்லையே!- காதல் தோல்வி கவிதை
'ஐ மிஸ் யூ' மெசெஜ்கள்
குவியும் அவள் கைபேசியில்
இப்போது வெறும் மழை சாரல்
மட்டும் பட்டு பட்டு போனது!
படம் பார்த்த நினைவுகளெல்லாம்
திரையரங்கு தரையில் கிடக்கும்
பாப்கான் போல சிதறி போனது!
மண்ணுக்குள் புதைந்த
கல்லறையாக
கண்ட காதல்
மண்ணில்
விழுந்த சில்லறையாக
வாழ்கிறாள் தாடி இல்லா
பெண் தேவதாஸாக!
Sep 9, 2014
பாப்கான் காதல்
cheesecake கொண்டு

Aug 24, 2013
ராஜா ராணி கவிதைகள்!
என்று இனி
வெட்கத்தில்
Jan 11, 2013
மச்சான், அவள் என்னை பார்த்து சிரிச்சா டா!
Oct 10, 2012
காதல் கவிதை-55
Jul 8, 2012
ஐ மிஸ் யூ!

நீ கொடுக்காமல் சென்ற 'முத்தத்தையும்'
நீ சொல்லாமல் விட்ட 'ஐ லவ் யூ'யையும்
சுவாசிக்கிறது
என்
இதயம்!
நம் குழந்தையுடன்
நீயும் குழந்தையாய் மாறி
மணல் வீடு கட்டியபோது
என் மனம்
உனக்காக கோயில் கட்டியது.

வீட்டு வேலைகளை
முடிக்க உதவுகிறேன் என்று
குழந்தைபோல் எல்லாவற்றையும்
கலைத்து போட்டு வைத்திருக்கிறாயே!
உன்னை
அடிப்பதா?
அணைப்பதா?

ஆபிஸ் வேலையாய்
ஒரு வாரம்
வெளியூர் செல்வதாய்
சொல்லிவிட்டு நீ போகும்போது
நாய்க்குட்டி போல்
உன் துப்பட்டாவை பிடித்துகொண்டு
வந்த என் மனதை
கவனித்தாயா?
உலகத்திலேயே பிடித்த விஷயம்
நீ முத்தம் கொடுத்து செல்வது
பிடிக்காத விஷயம்
கைபேசியில் அதை
வெறும் சத்தமாக மட்டும் தருவது!
Mar 18, 2012
Jan 24, 2012
உன் ஞாபகம்!
Mar 7, 2010
என் முத்த மெசேஜ்களை
போட்டுவிட்டேன்.
என் இன்பாக்ஸ்
காலியாக தான் இருக்கு.
உன் அவுட்பாக்ஸ்
ஏன் சும்மா இருக்கு?
உன் மௌனமே
ஆயிரம் சொல்லும்போது
உன் உதட்டிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
தேவையில்லையடி எனக்கு!
நாம் இருவரும் பேசிகொண்டிருக்கையில்
திடீரென்று முத்தம் வைக்கிறாய்
கன்னத்தில்
எப்படிடா உன்னால் மட்டும்
எதுவுமே நடக்காததுபோல்
மறுபடியும் பேச்சை தொடங்கமுடிகிறது?,
கள்ளசிரிப்பழகா!
Apr 22, 2009
விழி மூடி யோசித்தால்....

தெரிந்திருந்தும் உன் முத்தங்கள்
வேண்டுமென்றே
வம்புக்கு இழுக்கிறதே!
உன் உதடுகளை என்ன செய்ய?
ஐயோ, அவை மீது
கோபப்படவும் தெரியவில்லையே!

கை வைக்காதே என்று
அதட்டுகிறாய்
நான் கண்ட இடங்களிலாவது
கை வைக்க
உத்தரவு தருவீயா?

உன் மீசையின் குறும்புகளும்
ஒரே நேரத்தில்
என்னை சீண்டியபோது
உணர்ந்தேன்
சுகமான அவஸ்த்தை
என்றால்
என்னவென்று!

இனியதாக்க
பாட்டு சத்தம் வேண்டாம்.
உன் முத்தச்சத்தம்
மட்டும் போதும்!

சொர்க்கத்தை
அனுபவிக்க செய்கிறாய்
நீ சிந்தும் வெட்கத்துளிகளாலும்
அதில் ஜில்லென்று
தெறிக்கும் உன் முத்தங்களாலும்!

நிறைய ஆபிஸ் வேலை
இருக்குடா என்னை
இம்சை பண்ணகூடாது
என்று திட்டவட்டமாய்
நீ சொல்லும்போதே
தெரிகிறது
'என்னை இம்சை
பண்ணுடா' என்று.

காலையில் கண் விழிக்கும்போது
நீ கொடுக்கும்
முத்தத்தை ஒப்பிடும்போது

நம் பார்வைகள்
கண்டதும் மோதல்
நம் உதடுகள்
Feb 11, 2009
உன் வெட்கங்களை வேடிக்கை பார்த்தேன்!

குளியலறையில் எதற்கு டி
துண்டும் சோப்பும்?
நீயும் உன் வெட்கங்களும்
போதுமே!
காலை, மதியம், இரவு
மூன்று வேளையும்
கொடுக்க வேண்டும்.
மருந்து இல்லடா விருந்து.
நான் சொல்வது
உன் உதடுகளுக்கும் விரல்களுக்கும்
புரியும்!

நீ செய்த குறும்புகள்
மறுபடியும் என் வெட்கங்களை
தீண்டியது,
காலை வேளையில் நான்
தேடிய ஸ்டிக்கர் பொட்டு,
உன் உதட்டோரத்தில்
கண்டபோது!
'நீ இல்லாமல் நானில்லை
நான் இல்லாமல் நீயில்லை'
என்று மௌன மொழியில்
பேசிகொண்டன
நம் உதடுகள்.
நீ இருக்கையில்
தலையணைக்கும்
போர்வைக்கும்
என்ன வேலை
படுக்கையில்?

காலையிலேயே உன் இம்சையை


உன் கண்களும் என் கண்களும்

நீ வெட்கப்பட்டு சிரிக்கும்போது
* இது என் 50வது காதல் கவிதை! :)
அனைவருக்கும் என் அன்பர் தின/காதலர் தின நல்வாழ்த்துகள்!
Jan 21, 2009
கள்ளச்சிரிப்பழகா..
எங்கே வைப்பதென்று
தெரியாமல்
உன் கன்னத்தில்
வைத்தான்!
மிச்சமீதியை உன்
உதட்டில் சேர்த்தான்!
அந்த அழகை
ரசிக்க மட்டுமல்ல
ருசிக்கவும் பிறந்தவள்
நான்!

யார் செய்த தவமோ,
போன ஜென்மத்தில்
பிறந்த வண்டும் பூவும்
இந்த ஜென்மத்தில்
உன் உதடுகளாகவும்
என் உதடுகளாகவும்
மறுபிறவி எடுக்க!
குடும்பமே புறப்பட
'தலைவலிக்குது நான் வரல'
என்று பொய் சொல்லி
கள்ளச்சிரிப்புடன்
என்னை பார்த்தாய்,
நான் என்ன செய்ய?
எனக்கு பொய் சொல்ல வராதே!
நொடிபொழுதில் ரசிக்க
வைக்கும் மாயங்கள்.
நம்மையே நாம்
மறந்து போவதால்
முத்தமும்
ஒருவித தியானம் தான்!

கெஞ்சி கேட்கிறாயா!
கிறுக்கா,
கேட்காமலே கொடுத்தால்
என்னவாம்?

நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா!

நான் வெட்கப்படுவதைவிட
என் வெட்கங்கள்
தனியே நின்று
அதிகமாய் வெட்கப்படுகின்றன.
Nov 24, 2008
Oct 13, 2008
இரயில் பயணத்தில் ஒரு காதல் கவிதை!
இனிய இரவு
ஜன்னல் வெளியே மழை
குளிர் காற்று
பக்கத்தில் நீ
உன் மடியில் நான்
இது போதும்டா.
வாழும் போதே
சொர்க்கத்தை
உணர்ந்துவிட்டேன்!
காதல் பார்வையுடன்
என் கை பிடித்து கேட்டாய்
"எத்தனையோ கவிதை
எழுதி இருக்கே
எனக்காக இப்ப
ஒரு கவிதை
சொல்லேன்..ப்ளீஸ்"
உடனே எனக்கு
தோன்றியது
"நான் கொஞ்ச அழுகு
நீ கொஞ்சும் அழுகு"

காதலுக்கு கண் இல்லையாம்.
ச்சே.. அப்படி ஒரு காதல்
வேண்டாம் நமக்கு.
என் காதலுக்கு
கண் வேண்டும்,
இல்லையெனில்
இந்த கருப்பு நிலாவை
எப்படி ரசிப்பது?
ரொம்ப குளிருது.
ஜன்னலை சாத்தவா?
இல்ல
உன்னை போர்வையா
அள்ளி போத்தவா?
சேலை மாற்றவேண்டும்
என்று என்னை
வெளியே அனுப்புகிறாயே.
'compartment'க்கு கிடைத்த பாக்கியம்
இந்த
'companion'க்கு கிடைக்காதா?
என்னை
தனியே விட்டு,
உன் நண்பனிடம்
நீ செல்போனில் பேசிய
அந்த இரண்டு நிமிடங்களில்
என் உயிர் 'செல்'களெல்லாம்
தனிமையில்
தவித்தன!
(இதே concept வச்சு நம்ம காதல் இளவரசன் நவீன் காதல் கவிதைகளை அள்ளி வீசுவார் என்று கூறியுள்ளார். விரைவில் எதிர்பார்க்கலாம்....:)