Apr 29, 2008

இந்த மனசுக்கு புரியல- பாகம் 2

"இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு. போய் முகம் கழுவு. அழுகுறத நிறுத்து. you are old enough. just concentrate with your own work." என்று மனசாட்சி கண் எதிரே வந்து சொல்வதை உணர்ந்தான் ரமேஷ்.


மனசாட்சி சொல்வது சரி என்று நினைத்துக் கொண்ட ரமேஷ் உடனே சென்று முகம் கழுவி விட்டு வந்தான். கண்ணாடி எதிரே நின்றான். கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து, " ஏய் ரமேஷ், உனக்கு என்ன ஆச்சு? இந்த மாதிரி வீலிங்ஸ் உனக்கு வரக் கூடாது. this is very wrong. அவள பத்தி நினைக்காதே. ஒகே!" என்று ரமேஷ் தனக்குள்ளே ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்.


அடுத்த நாள் காலையில் பள்ளிக்குப் போனான். நேற்று உறுதி எடுத்திருந்தாலும் அவன் மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். காற்றில் அடித்துக் கொள்ளும் சன்னல்கள் போல ரமேஷின் மனம் அடித்துக் கொண்டிருந்தது.


" ஏய் ரமேஷ். அவள பத்தி நினைக்காதே! pleasssee...." என்று தனக்குள்ளே ஆயிரம் முறை சொல்லி கொண்டு மனதோடு போராடி கொண்டிருந்தான். அன்று வித்யா பள்ளிக்கு வரவில்லை. பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரின் குரல் மட்டும்தான் ரமேஷின் காதுகளுக்குச் சென்றது. அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று தெரியாமல் புரியாமல் பாடத்தைக் கவனிக்க முடியாமல் தவித்தான். பாடத்தை கவனிக்கவும் விருப்பமில்லை.


" ஐயோ, அவளுக்கு என்ன ஆச்சு. ஏன் வரலே? இவள் இருந்தாலும் ஒரு மாதிரியா இருக்கு. இல்லாம போனால் ஒரு மாதிரியா இருக்கு. என்னடா பொழப்பு இது? என்று முணுமணுத்துக் கொண்டதைப் பார்த்தவிட்டார் ஆசிரியர்.


" ஏய் ரமேஷ், what are you doing? பாடத்தைக் கவனிக்காம என்ன யோசனையில இருக்குறே?" என்று ஆசிரியர் திட்டியதைக் கண்டு ரமேஷ் மிரண்டு போனான்.

அதற்குள் வகுப்பின் மூலையிருந்து ஒரு மாணவன் , " டீச்சர், அவன் மனசு எங்கேயோ அலைபாயுது" என்று ரமேஷின் இதயத்தை 'scan' செய்து பார்த்ததுபோல் கூவினான். இதை கேட்டதும் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கைகொட்டி சிரிக்க, கும்மாளம் அடிக்க, வகுப்பு ஒரு நிமிடம் ரகளையானது.


" ஓகே. that's enough. பாடத்தைக் கவனிப்போம்," என்று ஆசிரியர் வகுப்பையும் ரமேஷையும் பார்த்து அதட்டினார். பிறகு, பாடங்கள் நடந்தன. ஆனால் ரமேஷுக்கு தான் கோபம்!

" இந்த வித்யானாலே நமக்கு திட்டு, அவமானம். ச்சே..... இனிமேலே அவள பத்தி நினைக்கவே கூடாது!!!" என்று கோபத்தில் மறுபடியும் ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்.


அன்று மதியம் உணவு இடைவேளையின்போது எப்போதுமே தன் நண்பர்களுக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தான் ரமேஷ். அது ஒரு அற்புதமான இடம். அப்படிப்பட்ட இடம் ஒன்று இருக்கிறது என்று அந்தப் பள்ளியில் சிலருக்குதான் தெரியும். அந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிட அந்த சிலருக்கு அவ்வளவு விருப்பம். அதனால்தான் முன்கூட்டியே இடத்தைப் பிடிக்க ரமேஷ் அங்கு சென்றுவிடுவான். மொட்டை மாடிக்குச் செல்லும் ரகசிய வழி அது. அந்த மாடிக்கு வழி வகுக்கும் படிகளிலிருந்து பார்த்தால் தூரத்திலிருக்கும் மெரீனா கடற்கரை அழகாகத் தெரியும். ஜில்லென காற்று, சுகமான காற்றின் மெல்லிசை, அந்த இதமான கடல் சாரல் என இயற்கையின் இருப்பிடமாக இருப்பதால்தான் அந்த இடத்திற்கு அவ்வளவு மவுசு!!


நண்பர்கள் வந்துவிட்டார்களா என்று கீழே எட்டிப் பார்த்தான் ரமேஷ். பழைய நண்பர்களுடன் 'புது தோழி! 'வித்யா!


ரமேஷுக்கு ஆச்சிரியம்!அதிர்ச்சி! "இன்று வகுப்பிற்கு வராதவள் எப்படி இங்கு?" என்று குழம்பிபோனான். அவனுடைய பழைய நண்பர்களான கலா, காஞ்சனா, கோகுல், சந்தோஷ் ஆகியோர் புது மருமகளைப் புகுந்த வீட்டிற்கு அழைத்துவருவது போல் அழைத்து வந்தனர் வித்யாவை.


"ஏய் ரமேஷ் நம்ம வித்யா வந்துட்டா. ஏதோ காலையிலே தலைவலியாம், அதான் வரல காலையில," என்று ரமேஷின் குழப்பத்திற்குப் பதில் சொன்னதுபோல் இருந்தது கலாவின் பேச்சு.


மற்றவர்கள் அரட்டையடித்து கொண்டே சாப்பிட்டார்கள். ஆனால், ரமேஷுக்குச் சாப்பிடமுடியவில்லை. வித்யாவைக் கண்டாலே ரமேஷ் பிரம்மை பிடித்ததுபோல் ஆகிவிடுகிறான். அவனுக்கு மனதில் கோடிக்கணக்கான எண்ணங்கள் ஓடின. வார்த்தைகளை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். எவ்வளவுக்கு எவ்வளவு தள்ளி போக நினைத்தானோ அவ்வளவுக்கு அவ்வளவு வித்யாவின் பேச்சாலும் செயலாலும் ஈர்க்கப்பட்டான்.


வித்யாவின் கணிவான பேச்சு, அடக்கமான செய்கை, எல்லோரிடமும் பழகும் தன்மை, ஆசிரியரிடம் பணிவு, மற்ற தோழிகளுக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பான்மை என்று பலவற்றால் ரமேஷ் கவரப்பட்டான். வித்யாவிடம் பேசாமலேயே அவளுடைய மாபெரும் 'ரசிகன்' ஆனான். வித்யாவைப் பற்றி சிந்திக்கக் கூடாது, நினைக்கக் கூடாது என்று எத்தனை உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றை ரமேஷால் ஒரு நொடிகூட கடைபிடிக்க முடியவில்லை.


ரமேஷுக்கு வித்யாவின் மீது இருந்த அந்த விசித்திரமான 'ஈர்ப்பு' நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. தோட்டத்தில் வளரும் ரோஜா செடியைப் பார்த்து பார்த்து ரசிப்பதுபோல ரமேஷ் வித்யாவைப் பார்த்தான் ; ரசித்தான். அவனுக்கு தோழிகள் இருந்தாலும் யாரிடமும் இப்படிப்பட்ட ஒரு உணர்வு ஏற்படவில்லை.

"வித்யாவை நான் காதலிக்கிறேனா?" என்று ரமேஷின் மனம் ஒரு கேள்வி எழுப்பியது.

வித்யாவுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன, பிடிக்காதது என்ன என்பதை யாருக்கும் தெரியாமல் கண்டுபிடித்து அவற்றை தானும் செய்து பார்க்க வேண்டும் என ரமேஷ் ஆசை கொண்டான். இவ்வாறு எல்லாம் செய்து கொண்டு வந்தாலும், ரமேஷ் வித்யாவிடம் நேருக்கு நேர் பார்த்தால் தயக்கம்! ரமேஷ் வித்யாவிடம் ஒரு வார்த்தைகூட முகத்தைப் பார்த்துப் பேசியதில்லை. பேசவும் தைரியமில்லை. இவ்வாறு நொடிகள் நிமிடங்கள் ஆகின. நிமிடங்கள் நாட்கள் ஆகின. நாட்கள் மாதங்கள் ஆகின.

ஆனால் அவன் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் தேடி அலைந்தான்.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்துவிட்டன. பள்ளி விடுமுறை ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. பள்ளி மாணவர்கள் எல்லாம் ஓரே குஷியாக் இருந்தனர். வழக்கம்போல் வகுப்பு சத்தம்போட்டு கொண்டிருந்தது. அப்போது வகுப்பாசிரியர், " students listen here. நம்ம வித்யா வேற பள்ளிக்குப் போயிட்டா. அவ அப்பாவுக்கு திடீரென்று எங்கோ transfer கிடைச்சுட்டு. அதான் உடனடியா கிளம்பிட்டா. உங்களுக்கு எல்லாம் 'ஆல் தி பெஸ்ட்' சொல்ல சொன்னா," என்று சொல்லி முடித்தார்.


சிலர் கவலையாக இருந்தனர். சிலர் அதை அவ்வளவு பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ரமேஷுக்குதான் அது துயரச் செய்தியாக மாறியது. கண்கள் குளமாகின. தொண்டைக் குழியில் சோதனையும் வேதனையும் சிக்கிக் கொண்டன. அப்போது ஆசிரியர் ரமேஷிடம் ஒரு கடிதத்தை நீட்டி,

" ரமேஷ், நேத்து ராத்திரி வித்யா என் வீட்டுக்கு வந்தா. டீசி வாங்கி கிட்டுப் போக வந்தா. கிளம்புறத்துக்கு முன்னாலே இந்த லெட்டரை கொடுத்தா. உங்கிட்ட கொடுக்க சொன்னா. இந்தா.... லெட்டர்." என்றார். ரமேஷ் அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான் கடிதத்தை...


'ஹலோ ரமேஷ், நான் ஏன் லெட்டர் எழுதுறேனு உனக்கு ஆச்சிரியமா இருக்கும். I want to thank you for everything that you have done. இந்த வருஷத்திலே ஒரு நாள்கூட நீ என்கிட்ட சகஜமா பேசியதில்ல. ஆனா உண்மைய சொல்ல போனால் நீதான்ப்பா என் best friend. நட்பு என்கிறது ஒரு ஆள் என்னோரு ஆள்கிட்ட கொடுக்கிற encouragement and support தான். நீ நல்ல படிக்கிறத பார்த்து நானும் நல்ல செய்ய வேண்டும் என்று தோணும். அதனாலதான் என்னால இந்த வருஷம் ஐந்தாவது ரேங் வாங்க முடிஞ்சுது.

உன்ன பார்த்து நான் நிறைய நல்ல விஷயங்கள் எல்லாம் கத்துகிட்டேன். நானாச்சு வந்து உங்கிட்ட பேசியிருக்கலாமேன்னு நீ நினைப்பே. ஆனா உங்கிட்ட பேச வரும்போது எல்லாம் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கும். ஏன்னு சொல்ல தெரியல. ஆனா இந்த classல எனக்குக் கிடைச்ச நல்ல friend நீதான்பா. ஆல் தி பெஸ்ட் டு யூ ரமேஷ். உன்ன மறக்கமாட்டேன்!!



இப்படிக்கு
உன்னிடம் பேசாமல் போன
உன் அன்பு தோழி வித்யா'



இதை படித்ததுமே குளமாகியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்தது. வித்யா என்கிற ஒரு நல்ல தோழியின் உண்மையான நட்பை இழந்தவிட்டோமே என்ற தவிப்பு ரமேஷின் மனதில் அலையாகப் பாய்ந்தது. ரமேஷ் சிந்தித்தவை, அவன் எண்ணங்கள் எல்லாம் தவறு என்று புரிந்துகொண்டான். வித்யாவிடம் அந்நொடியே அவளிடம் பேசவேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனம் துடித்தது.


திடீரென்று பின்னால் ஆட்டோவின் சத்தம் கேட்டுக் காரிலிருந்த ரமேஷ் சுயநினைவுக்கு வந்தான். அச்சம்பவம் ரமேஷின் மனதிரையில் ஒரு படமாக ஓடி முடிந்ததை உணர்ந்த ரமேஷ் வீட்டை அடைந்தான். கடந்த பல ஆண்டுகளாக ரமேஷ் வித்யாவின் முகவரியை அறிந்து கொள்ள பல முயற்சிகள் செய்தான். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வித்யா பக்கத்திலிருந்தபோது ரமேஷால் நல்ல தோழனாக இருக்கமுடியவில்லை. இப்போது வித்யா பக்கத்தில் இல்லை, ஆனால் நல்ல தோழனாக இருக்க வேண்டும் என்று ரமேஷின் மனம் ஆசைப்பட்டது . இத்தனை ஆண்டுகளில் ரமேஷ் பல நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தாலும் வித்யாவின் நட்பை பெறமுடியாமல் போனது இன்றைக்கும் அவனுக்கு ஒரு குறையாகவே தெரிகிறது.

தன் அறைக்குச் சென்ற ரமேஷ் கணினியைத் திறந்தான். பல இணைய பக்கங்களில் அறிவிப்பு விடுத்திருந்தான். இன்றைக்காவது வித்யாவிடமிருந்து ஏதேனும் செய்தி வராதா என்று ஏக்கத்துடன் தன் ஈமெயிலைப் பார்க்கத் தொடங்கினான் ரமேஷ்....

***முற்றும்***

15 comments:

தமிழ் said...

/காற்றில் அடித்துக் கொள்ளும் சன்னல்கள்
போல ரமேஷின் மனம் அடித்துக் கொண்டிருந்தது.

நொடிகள் நிமிடங்கள் ஆகின. நிமிடங்கள் நாட்கள் ஆகின. நாட்கள் மாதங்கள் ஆகின.

கண்கள் குளமாகின. தொண்டைக் குழியில் சோதனையும் வேதனையும் சிக்கிக் கொண்டன./

நனறாக இருக்கிறது
எழுத்து நடை

/ரமேஷ் தனக்குள்ளே ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்......

கோபத்தில் மறுபடியும் ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்.

எத்தனை உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டாலும் /

நானும் கதை மட்டும்
படிக்க உறுதிமொழி எடுத்தக்கொள்கிறேன்.......

:))))))))))

/வார்த்தைகளை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான/

நிஜமாவா?
பார்த்துகொள்ளவும்
தொண்டையில்
ஏதாவது
மாட்டிக்கப்போகுது

/***முற்றும்***/

ஏமாற்றம்

இன்னும் கதையே
தொடர்ந்து இருக்கலாமே

நிஜமாகவே
நல்ல இருந்தது

FunScribbler said...

//நனறாக இருக்கிறது
எழுத்து நடை//

நன்றி

//ஏமாற்றம்

இன்னும் கதையே
தொடர்ந்து இருக்கலாமே

நிஜமாகவே
நல்ல இருந்தது//

இரண்டு வரி திருக்குறள் மாதிரி இந்த கதைய short and sweetஆ எழுதிட்டேன். ஹாஹா.. அதான் காரணம்! அடுத்த முறை உங்கள் கருத்துகளை மனதில் வைத்து கொண்டு எழுத முயற்சிக்கிறேன். நன்றி.:))

ரசிகன் said...

//வித்யாவிடம் பேசாமலேயே அவளுடைய மாபெரும் 'ரசிகையானான்'. //

வேணுமின்னே ”ரசிகனாகிடுவான்” என்பதைக்கூட ரசிகையாகிடுவான்னு சொன்ன பெண்ணியவாதத்தை நான் வன்மையாக கண்டிக்கறேன்:P

ரசிகன் said...

//அப்போது ஆசிரியர் ரமேஷிடம் ஒரு கடிதத்தை நீட்டி,

" ரமேஷ், நேத்து ராத்திரி வித்யா என் வீட்டுக்கு வந்தா. டீசி வாங்கி கிட்டுப் போக வந்தா. கிளம்புறத்துக்கு முன்னாலே இந்த லெட்டரை கொடுத்தா. உங்கிட்ட கொடுக்க சொன்னா. இந்தா.... லெட்டர்." என்றார்.//

ஆஹா.. எம்புட்டு நல்ல டீச்சர்:)

Dreamzz said...

ஹ்ம்ம்! நல்லா தான் எழுதி இருக்கீங்க! interesting! :) keep writing pa!

ரசிகன் said...

//ஒரு ஆள் என்னொரு ஆள்கிட்ட //
//நானும் நல்ல செய்யுனும்முனு//
//பேசமால் //

மறுக்கா சொல்லறேன்,உங்க எடிட்டர் தலையில ரெண்டு கொட்டு கொட்டினா தான் சரிப்படும்:P

ரசிகன் said...

//இதை படித்ததுமே குளமாகியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்தது. வித்யா என்கிற ஒரு நல்ல தோழியின் உண்மையான நட்பை இழந்தவிட்டோமே என்ற தவிப்பு ரமேஷின் மனதில் அலையாகப் பாய்ந்தது. ரமேஷ் சிந்தித்தவை, அவன் எண்ணங்கள் எல்லாம் தவறு என்று புரிந்துகொண்டான். வித்யாவிடம் அந்நொடியே அவளிடம் பேசவேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனம் துடித்தது.//

வர்ணனை ஸ்பெசல் ஆகிட்டிங்க:))
வாழ்த்துக்கள்:)

ரசிகன் said...

//வித்யா பக்கத்திலிருந்தபோது ரமேஷால் நல்ல தோழனாக இருக்கமுடியவில்லை. இப்போது வித்யா பக்கத்தில் இல்லை, ஆனால் நல்ல தோழனாக இருக்க வேண்டும் என்று ரமேஷின் மனம் ஆசைப்பட்டது . இத்தனை ஆண்டுகளில் ரமேஷ் பல நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தாலும் வித்யாவின் நட்பை பெறமுடியாமல் போனது இன்றைக்கும் அவனுக்கு ஒரு குறையாகவே தெரிகிறது//

ஆம். எல்லாருடைய வாழ்விலும் இப்படிப்பட்ட தவற விட்ட தருணங்களின் சுவடுகள் மறைந்துதான் இருக்கின்றன. அருமையா சொல்லியிருக்கிங்க காயத்ரி. வாழ்த்துக்கள்:)

Divya said...

அட கதை முடிஞ்சிடுச்சா??......இன்னும் சில பகுதியா எழுதியிருக்கலாமே காயத்ரி, ரொம்ப நல்லா இருந்தது கதையும் உங்கள் எழுத்து நடையும்!!

Divya said...

\\வித்யாவின் கணிவான பேச்சு, அடக்கமான செய்கை, எல்லோரிடமும் பழகும் தன்மை, ஆசிரியரிடம் பணிவு, மற்ற தோழிகளுக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பான்மை என்று பலவற்றால் ரமேஷ் கவரப்பட்டான். வித்யாவிடம் பேசாமலேயே அவளுடைய மாபெரும் 'ரசிகையானான்'.\\

வரிகள் ரொம்ப நல்லா இருக்கு!!

ஈனக்கவர்ச்சி ஒர் நல்ல நட்பை இழக்க செய்கிறது என்பதை....ரொம்ப நல்லா சொல்லியிருக்கிறிங்க!!

FunScribbler said...

//வர்ணனை ஸ்பெசல் ஆகிட்டிங்க:))
வாழ்த்துக்கள்:)//

//அருமையா சொல்லியிருக்கிங்க காயத்ரி. வாழ்த்துக்கள்:)//

நன்றி ரசிகன்

FunScribbler said...

//நல்லா தான் எழுதி இருக்கீங்க!//

நன்றி dreamz

FunScribbler said...

//இன்னும் சில பகுதியா எழுதியிருக்கலாமே//

ம்ம்.. எழுதியிருக்கலாம். ஆனா மனசுல தோனுச்சு இந்த பகுதில கதைய முடிச்சரலாம் என்று.. :))

//ரொம்ப நல்லா சொல்லியிருக்கிறிங்க!!//

பாராட்டுகளுக்கு நன்றி திவ்ஸ்!!

Anonymous said...

நானும் வந்துட்டேன் :)
கதை எழுத்து நடை அற்புதம்...
ஆனால் இப்படி 2 பகுதிகள் போட்டு
முடிச்சுட்டீங்களே!?

FunScribbler said...

//கதை எழுத்து நடை அற்புதம்...//

நன்றி!

ஆனா மனசுல தோனுச்சு இந்த பகுதில கதைய முடிச்சரலாம் என்று.. :)) that's y..))