Jul 31, 2008

அட கிறுக்கா.... நான் உனக்காக பிறந்தவள்டா!



நாம் காரில் செல்வதும்
நான் சுடிதார் அணிவதும்
ஒன்று என்றாய்-
இரண்டுமே சைவம்!


நாம் பைக்கில் செல்வதும்
நான் சேலை அணிவதும்
ஒன்று என்றாய்-
இரண்டுமே அசைவம்!
இதை அறிந்து, இனி
வெள்ளிக்கிழைகளிலும்
அசைவம் கேட்கிறாயே,
குறும்புக்காரா!


வயிற்று பசிக்கு
விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா?


புகைப்பிடிப்பவர்களை கண்டாலே
புகையும் எனக்கு
உன்னை முதன் முதலாக
பார்த்தபோது
நீ பிடித்துகொண்டிருந்த
சிகரெட்டையும் சேர்த்து
ரசித்தேன்
உன்னை!




உன்னை பார்த்தாலே
வெட்கத்தால்
கண்கள் மூடிகொள்கின்றன.
கண்கள் மூடினாலும்
என் வெட்கத்தை
அதிகப்படுத்தும்
உன் நினைவுகளை
நான் எப்படி சமாளிக்க?



'நான் எழுதிய கவிதைகளில்
எது ரொம்ப பிடிக்கும்'
என்று கேட்டாய்.
எழுதிய கவிதைகளைவிட
எழுதியவனை
ரொம்ப பிடிக்கும்!



ஆபிஸ் வேலையாக
வெளியூர் செல்லவேண்டும்
என்று சொல்லும்போதெல்லாம்
என் மனமும்
உன் மீது
நான் வைத்திருக்கும் காதலும்
நம் தலையணைகளை
நனைத்துவிடுகின்றன
அவை சிந்தும் கண்ணீர்
துளிகளால்....

34 comments:

narsim said...

gud..(photos!!)

விஜய் ஆனந்த் said...

// உன்னை பார்த்தாலே
வெட்கத்தால்
கண்கள் மூடிகொள்கின்றன.
கண்கள் மூடினாலும்
என் வெட்கத்தை
அதிகப்படுத்தும்
உன் நினைவுகளை
நான் எப்படி சமாளிக்க? //

cute!!! photos இன்னும் cute!!!

ச.பிரேம்குமார் said...

ஆகா! காதல் ரொம்ப முத்திப்போச்சே (கவிதைகளில்)

VIKNESHWARAN ADAKKALAM said...

அடேங்ப்பா!!! சரிதான்...

நவீன் ப்ரகாஷ் said...

தமிழ்,

கன்னா பின்னாவெனக் காதல்
கரைபுரண்டோடுகிறது.... :))))

நவீன் ப்ரகாஷ் said...

//வயிற்று பசிக்கு
விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா? //

ம்ம்ம்ம்ம்ம்......

;))))))

நவீன் ப்ரகாஷ் said...

//'நான் எழுதிய கவிதைகளில்
எது ரொம்ப பிடிக்கும்'
என்று கேட்டாய்.
எழுதிய கவிதைகளைவிட
எழுதியவனை
ரொம்ப பிடிக்கும்! //

அட்றா சக்கை.... டமிள் எங்கியோ போய்ட்டேமா.. ;)))

முகுந்தன் said...

I guess you are in
full form....

FunScribbler said...

@narsim

//gud..(photos!!)//

போட்டோ எடுத்ததும் நான் தான்!

(எங்களுக்கும் கிண்டல் வரும்ல..:)

FunScribbler said...

@விஜய்

//cute!!! photos இன்னும் cute!!!//

நன்றி!:)

FunScribbler said...

@பிரேம்குமார்

//காதல் ரொம்ப முத்திப்போச்சே (கவிதைகளில்)//

:)

FunScribbler said...

@vikineswaran

//அடேங்ப்பா!!! சரிதான்..//

படித்து ரசித்தமைக்கு நன்றி:)

FunScribbler said...

@நவீன்

//கன்னா பின்னாவெனக் காதல்
கரைபுரண்டோடுகிறது.... :))))//

அணை கட்டிவிடுகிறேன்.

//அட்றா சக்கை.... டமிள் எங்கியோ போய்ட்டேமா.. ;)))//

நன்றி நவீன்:)

FunScribbler said...

@முகுந்தன

//I guess you are in
full form....//

ஆமாங்க.. நான் மட்டும் opening batsman இறங்கினா.. century அடிக்காம விடமாட்டேன்!!:)

Vijay said...

wow!! Very good collections..keep going

FunScribbler said...

@vijaya

//wow!! Very good collections..keep going//

thanks vijaya!:)

Divya said...

ஆஹா.......தமிழ்மாங்கனி........என்னாதிது???

ஒன்னுமே புரியலியே:)))

என்னாச்சு தமிழ்......கவிதையில் 'காதல்' தூக்கலா இருக்கு??

Divya said...

\\நான் சுடிதார் அணிவதும்\\

இந்த சுடிதார்.......சமீபத்தில எங்கயோ...ஒரு கவிதையில படிச்ச மாதிரி ஒரு ஞாபகம்:)))

Divya said...

\\'நான் எழுதிய கவிதைகளில்
எது ரொம்ப பிடிக்கும்'
என்று கேட்டாய்.
எழுதிய கவிதைகளைவிட
எழுதியவனை
ரொம்ப பிடிக்கும்! \

அப்படிபோடுங்க!!

அல்டிமேட்.......கவிதை சூப்பர் !!

Divya said...

டைட்டில் நல்லாயிருக்கு தமிழ்....!!!

FunScribbler said...

@திவ்ஸ்

//சமீபத்தில எங்கயோ...ஒரு கவிதையில படிச்ச மாதிரி ஒரு ஞாபகம்:)))//

inspiration from one of pa vijay's poems thaan..:))

FunScribbler said...

@திவ்ஸ்

//அல்டிமேட்.......கவிதை சூப்பர் !!//

//டைட்டில் நல்லாயிருக்கு தமிழ்....!!!//

நன்றிங்க..:)

Unknown said...

what a honey words...

FunScribbler said...

@mega

வாழ்த்துகளுக்கு நன்றி:)

Shwetha Robert said...

totally awesome :))))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//வயிற்று பசிக்கு
விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா? //

superungooo :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//நவீன் ப்ரகாஷ் said...
தமிழ்,

கன்னா பின்னாவெனக் காதல்
கரைபுரண்டோடுகிறது.... :))))
//

yesu!

MSK / Saravana said...

//நான் எழுதிய கவிதைகளில்
எது ரொம்ப பிடிக்கும்'
என்று கேட்டாய்.
எழுதிய கவிதைகளைவிட
எழுதியவனை
ரொம்ப பிடிக்கும்!//

அடடா. இதுவல்லவோ கவிதை..
:)

//உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா? //

இதுவல்லவோ காதல்..
:)

மங்களூர் சிவா said...

ஆத்தாடி கலக்கீட்ட
பேஷ் பேஷ் ரொம்பவே நன்னா இருக்கு!!

மங்களூர் சிவா said...

/
Divya said...

\\நான் சுடிதார் அணிவதும்\\

இந்த சுடிதார்.......சமீபத்தில எங்கயோ...ஒரு கவிதையில படிச்ச மாதிரி ஒரு ஞாபகம்:)))
/

அப்பிடியே நல்லா யோசிச்சு மிச்சத்தையும் எங்க படிச்சீங்கன்னு சொல்லுடுங்க திவ்யா மாஸ்டர்!!

தமிழன்-கறுப்பி... said...

இது எப்ப எழுதினிங்க கலக்கல்...

தமிழன்-கறுப்பி... said...

நிறைந்து வழிகிறது காதல்...

Known Stranger said...

khadal rasam sotuthu.. anna thangaluku athayum thandi kavaithai ezhutha varumaiyin athilum thalai vidukngal rasika ingu oru rasigan irukinran.

FunScribbler said...

@known stranger

//rasika ingu oru rasigan irukinran//

முயற்சி செய்கிறேன், மற்ற கவிதைகளை எழுத, காதல் தவிர மற்றவையும் எழுதியுள்ளேன். படித்து பாருங்க..