Jan 21, 2009

கள்ளச்சிரிப்பழகா..

கடவுள் 'அழகு'
என்பதை உருவாக்கி
எங்கே வைப்பதென்று
தெரியாமல்
உன் கன்னத்தில்
வைத்தான்!
மிச்சமீதியை உன்
உதட்டில் சேர்த்தான்!

அந்த அழகை
ரசிக்க மட்டுமல்ல
ருசிக்கவும் பிறந்தவள்
நான்!


யார் செய்த தவமோ,
போன ஜென்மத்தில்
பிறந்த வண்டும் பூவும்
இந்த ஜென்மத்தில்
உன் உதடுகளாகவும்
என் உதடுகளாகவும்
மறுபிறவி எடுக்க!




குலதெய்வ கோயிலுக்கு
குடும்பமே புறப்பட
'தலைவலிக்குது நான் வரல'
என்று பொய் சொல்லி
கள்ளச்சிரிப்புடன்
என்னை பார்த்தாய்,
நான் என்ன செய்ய?
எனக்கு பொய் சொல்ல வராதே!


அழகான காயங்கள்
நொடிபொழுதில் ரசிக்க
வைக்கும் மாயங்கள்.
நம்மையே நாம்
மறந்து போவதால்
முத்தமும்
ஒருவித தியானம் தான்!


'ஒன்னு தரவா?' என்று
கெஞ்சி கேட்கிறாயா!
கிறுக்கா,
கேட்காமலே கொடுத்தால்
என்னவாம்?


எத்தனையோ கவிதைகளை
நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா!


என்னை அப்படி பார்க்காதடா
நான் வெட்கப்படுவதைவிட
என் வெட்கங்கள்
தனியே நின்று
அதிகமாய் வெட்கப்படுகின்றன.



15 comments:

பூங்குழலி said...

நம்மையே நாம்
மறந்து போவதால்
முத்தமும்
ஒருவித தியானம் தான்

என்னை அப்படி பார்க்காதடா
நான் வெட்கப்படுவதைவிட
என் வெட்கங்கள்
தனியே நின்று
அதிகமாய் வெட்கப்படுகின்றன.

ரொம்ப வெட்கமாயிருக்குப்பா இந்த கவிதைகளை படிக்கும் போது ...படங்களை நான் பார்க்கவே இல்லை ....சத்தியமா ...(முத்தமும் தியானம் தான் .... கலக்கல் )

பிரியமுடன்... said...

No comments sorry! me too Feel shy lah!

FunScribbler said...

@பூங்குழலி,

//ரொம்ப வெட்கமாயிருக்குப்பா//

ஆஹா, டாக்டர் வெட்கப்படுறத பாக்க கொடுத்து வைக்கலையே! ஹாஹா...:)

Karthik said...

//ரொம்ப வெட்கமாயிருக்குப்பா

ரிப்பீட்டேய்..!

Karthik said...

//No comments sorry! me too Feel shy lah!

ரிப்பீட்டேய்..!

Divya said...

Highly romantic kavithai:)))
kalakkureenga tamilmangani!

\\எத்தனையோ கவிதைகளை
நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா!\\

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு:))

நவீன் ப்ரகாஷ் said...

காதல் கன்னாபின்னாவென
ஆனந்த தாண்டவமாடுகிறது வரிகளில்...

அனைத்துமே அசத்தல் தமிழ்...

எப்படி இப்படி...??? :))))

நவீன் ப்ரகாஷ் said...

//அழகான காயங்கள்
நொடிபொழுதில் ரசிக்க
வைக்கும் மாயங்கள்.
நம்மையே நாம்
மறந்து போவதால்
முத்தமும்
ஒருவித தியானம் தான்!//

அட இப்படிகூட‌
தியானம் செய்யலாமா என்ன..? :)))
கலக்கல்ஸ்... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//எத்தனையோ கவிதைகளை
நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா! //

கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்..??
அழகான‌ வரிகள்... :))))

//என்னை அப்படி பார்க்காதடா
நான் வெட்கப்படுவதைவிட
என் வெட்கங்கள்
தனியே நின்று
அதிகமாய் வெட்கப்படுகின்றன.//

கிறங்கலான உணர்வுகள் அழகு...!!

மஹாராஜா said...

unbelievable love gazal..
u r gr8 tamil.. you have gr8 future. take care.. write more...
have a wonderfull day.

மஹாராஜா said...

these kind of gazals only i am expecting from some male writers.. this is the first time from you...
excellent... right now mine too shy.. coz of ur words..

FunScribbler said...

@திவ்ஸ்

//Highly romantic kavithai:)))
kalakkureenga tamilmangani!//

நன்றிங்க!:)

FunScribbler said...

@நவீன்

//எப்படி இப்படி...??? :))))//

சத்தியமா தெரியலங்க...:)

FunScribbler said...

@நவீன்

//கிறங்கலான உணர்வுகள் அழகு...!!//

மிக்க நன்றி:)

FunScribbler said...

@மஹாராஜா,

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி:)