Apr 16, 2009

daddy mummy வீட்டில் இல்ல(series 1) -பகுதி 4

பகுதி 1

பகுதி 2

பகுதி 3


காவலர்கள் தங்களை நோக்கி வருகிறார்கள் என்பதை பார்த்தபிறகு, ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினர். கலா தான் அவர்களை ஒருங்கிணைத்து ஏதோ ஒரு அறைக்கு இழுத்து சென்றாள். அங்கு ஒரே குப்பையாக கிடந்தது. பெரிய அறை வேற, ஒளிந்து கொள்ள சரியான இடமாக தோன்றவில்லை. காவலர்கள் அந்த அறைக்குள் வந்தால், கண்டிப்பாக மாட்டிகொள்வார்கள். எங்கே போவது என்று தெரியவில்லை யாருக்கும்.

கலாவிற்கு ஒரு ஐடியா தோன்றியது. அனைவரையும் இழுத்து கொண்டு கழிவறைக்கு ஓடினாள் யார் கண்களிலும் படாமல். கழிவறை கதவை பூட்டினாள்.

"ஏய், லூசு... ஏன் இங்க.... வேற எங்கயாச்சு இருந்தாலும் பரவாயில்ல...எப்படியாச்சு தப்பிச்சு போலாம். இங்க.. ஒரு ஜன்னல்கூட இல்ல தப்பிச்சு போக. சரியான லூசு டி கலா." சுதா திட்டினாள்.

சசி அழுகையை நிறுத்தவே இல்லை. கலாவின் பேச்சை கேட்டு கிளப்புக்கு வந்தது தவறு என்பதை நினைத்து தேம்பி தேம்பி அழுதாள். கழிவறை ரொம்பவே சின்னது. அந்த நான்கு பெண்கள் எப்படியோ சமாளித்து கொண்டு நின்றனர்.

"உன் பேச்சையே கேட்டு இருந்திருக்க கூடாது. என் புத்திய செருப்பால அடிக்கனும்." சசி தனது கோபத்தை கொட்டினாள்.

"சாரி என்கிட்ட high heels தான் இருக்கு... பரவாயில்லையா?" நக்கல் அடித்தாள் கலா.

"இந்த நேரத்துல கூட உனக்கு ஜோக் வருதா? என் ஜன்மமோ நீ" சசிக்கு ஆத்திரம் வந்தது.

"ஏய்... ப்ளீஸ் கேள்ஸ்... எப்படி தப்பிக்கலாம்னு யோசிங்கடி..." விஜி அவசரப்படுத்தினாள்.

"ஆமா...இந்த இடத்துல நின்னுகிட்டு என்ன யோசிக்குறது. போலீஸ் வருவான். கதவ திறப்பான்... தேவையில்லாம இங்க ஒளிஞ்சு இருக்கீங்களே, அப்ப நீங்க தான் ஏதோ கடத்தியிருக்கீங்கன்னு... நம்மள அள்ளிகிட்டு போய்டுவான். கல்லூரி பெண்கள் கஞ்சா கடத்தினார்கள்னு நாளைக்கு பேப்பர்ல வரும்!" மழைபோல் கொட்டி தீர்த்தாள் சுதா.

பருத்திவீரன் பிரியாமணி போல் கதறி அழ ஆரம்பித்தாள் சசி.

"எல்லாம் இவளால வந்தது." என்று கலாவின் முதுகையை அடித்தாள் சசி.

"ஓய்... சத்தம் போடாத. நாங்க இங்க மணிரத்னம் பட ஹீரோ மாதிரி சவுண்ட் இல்லாம பேசிகிட்டு இருக்கேன். நீ பேரரசு பட வில்லன் மாதிரி காட்டு கத்து கத்துறே... ஷுஷு..." அமைதியாய் பேசுமாறு சொன்னாள் கலா.

"எல்லாம் போச்சு... இனி அமைதியா பேசி என்ன பயன்? அம்மா அப்பா என்னைய பத்தி என்ன நினைப்பாங்க... அவ்வளவு தாண்டி நம்ம எதிர்காலம். எல்லாம் ஓவர்." நெற்றியில் அடித்து கொண்டாள் சசி.

"சசி, முட்டாள் மாதிரி பேசாத. நம்ம என்ன கஞ்சாவா கடத்துனோம். அப்படியே வந்து புடிச்சுகிட்டு போனாலும், விசாரிப்பாங்க. அப்பரம் investigation முடிஞ்சு விட்டுடுவாங்க." விஜி கூலாக பதில் சொன்னாள்.

"உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா.... வீட்டுல என்ன நடக்கும் தெரியுமா. பொய் சொன்னதுக்கு, கிளப்புக்கு போனதுக்கு, போலீஸில் மாட்டியதுக்கு...இப்படி வரிசையா அடி விழும்...." சுதா குரலில் ஒருவித நடுக்கம்.

"அப்பரம் அவ்வளவு தாண்டி.... எனக்கு சங்கு தான்! என் வீட்டுல என்னைய சாகடிச்சுடுவாங்க...." அழுகையை நிறுத்தவில்லை சசி.

"கவலைப்படாத....நீ செத்தா உன் சாவுக்கும் வந்து டான்ஸ் ஆடுறேன்..." என்று நாக்கை மடித்து கொண்டு குத்தாட்டம் ஆடும் போஸ் கொடுத்தாள் கலா. சசிக்கு கோபம் வர, கலாவின் கன்னத்தில் அறைவதற்காக கை ஓங்கினாள். விஜி சசியை தடுத்து நிறுத்தினாள்.

"ஏய் தோடா... இந்த கொசு தொலை தாங்க முடியல...." கலா கிண்டல் செய்தாள். அவள் தொடர்ந்தாள், " கொஞ்ச நேரம் யோசிங்க...எப்படி தப்பிக்கலாம்னு?"

"பேசாம...surrender ஆயிடலாம். அது தான் ஒரே வழி." சுதா அழுகாத குறையாய் கூறினாள்.

"இது உன்னைய மாதிரி முட்டாள்கள் வழி." கலா சுதாவின் ஐடியாவிற்கு நோ சொன்னாள்.

"பேசாம ஒவ்வொரு ஆளா இந்த toilet bowlக்குள் இறங்குவோம். flush பண்ணிடுவோம். அப்படியே குழாய் வழியா drainageக்குள்ள போயிடுவோம்...அங்கேந்து தப்பிச்சு போயிடலாம். எப்படி ஐடியா?" சசியின் கேவலமான யோசனையை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

கலா, "உனக்கு ஏண்டி இப்படியலாம் ஐடியா வருது? மூளைய பயன்படுத்தவே மாட்டீயா? த்தூ.... இதுக்கு மேல ஏதாச்சு பேசுனே....கழிவறையில் கன்னிப்பெண் கொலைன்னு நாளைக்கு நிஜமாவே பேப்பர்ல வந்துடும்...."

எந்த நேரத்திலும் காவலர்கள் வந்துவிடுவார்கள் என்ற பயம் ஒரு பக்கம். யோசனை எதுவுமே சிக்கவில்லை என்று என்னொரு பக்கம். அவர்களை கெட்ட நேரம் பந்தாடியது. பேச்சு சத்தம் கேட்டது. காவலர்கள் கிட்ட நெருங்கி கொண்டு வருகிறார்கள் என்பது இப்பெண்களுக்கு புரிந்துவிட்டது. சசி சாமி பாடல்களை பாடினாள். கலாவிற்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது.

இவர்கள் கிளப்பிற்குள் நுழையும்போது 'rules and regulations of this club' என்று ஒரு பேப்பரை கொடுத்தார்கள். அது கலா தனது கைபையில் தான் வைத்திருந்தாள். அதை எடுத்தாள். அந்த தாளின் மறுபக்கத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை. தனது லிப்ஸ்ட்டிக்கை எடுத்தாள். அந்த தாளில், "toilet- out of order" என்று லிப்ஸ்ட்டிக்கால் எழுதினாள். கதவு ஓரத்தில் ஏதோ ஒரு பசை ஒட்டி இருந்தது. அதை எடுத்து தாளின் நான்கு ஓரத்தில் ஓட்டினாள். கதவை மெதுவாக திறந்து கதவில் ஒட்டிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்து கொண்டாள்.

இவளது செயலை கண்ட மற்றவர்களுக்கு இவளை பாராட்ட வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தனர். சசி, "ஏய், நம்ம இப்படி நின்னுகிட்டு இருந்தா, வெளியே நின்னு பாக்கும்போது நம்ம காலு தெரியுமே?"

sitting toilet என்பதால் அதன் மூடியை மூடி, அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டனர் . ஏதோ ஒரு வாத்து கூட்டம் உட்கார்ந்து இருந்ததுபோல் இருந்தது. அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுகொண்டாள் கலா.

காவலர்கள் உள்ளே வந்தார்கள். மற்ற கழிவறைகளை பார்த்தார்கள். இந்த கழிவறை மட்டும் 'toilet-out of order' என்று இருந்ததை கவனித்த காவலர் அவரின் மேல் அதிகாரியிடம்,

"சார்... யாரும் இங்க இல்ல சார்...ஆனா ஒன்னும் மட்டும் out of orderன்னு இருக்கு சார்" என்றார்.

மேல் அதிகாரி, "சரி சரி...அதையலாம் போட்டு நோண்டிகிட்டு இருக்காத...மத்தத செக் பண்ணிட்டு வந்துடு" என்றார்.

யப்பாடா தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டனர் இப்பெண்கள். வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லை. லேசாக கதவை திறந்து எட்டி பார்த்தாள் கலா. யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மற்றவர்களை அழைத்தாள்.

டிஸ்கோ விளக்குகள் உடைந்து இருந்தது. தண்ணீர் பாட்டில்கள் கீழே விழுந்து கிடந்தன. யாருமே இல்லாத இடமாக காட்சியளித்தது அந்த கிளப். ஒரு மாதிரியாக இருந்தது அவர்களுக்கு. இருந்தாலும் கலா, "ஏய்...யாருமே இல்லடி...நம்மளே ஏதாச்சு பாட்டு போட்டு ஆடலாமா?" என்று கூறியபோது சசி

"நீ திருந்தவே மாட்டீயா?"

விஜிக்கு பயம் பற்றிகொண்டது. ஏன் தெரியுமா?

விஜி, "ஏய்..... போலீஸ் main doorல் seal வச்சுட்டு போய் இருப்பாங்களே? இப்ப நம்ம எப்படி தப்பிக்குறது?"

இப்போது சுதா சசியின் பணியை தொடர்ந்தாள். சுதா அழ ஆரம்பித்தாள்.

"ச்சீ.... நீங்களாம் போய் சீரியல நடிக்க போலாம்...சும்மா எப்ப பாத்தாலும் அழுதுகிட்டு.... " கலா எரிச்சலுடன்.

"தேடுவோம்... எப்படியாச்சு... ஒரு வழி இல்லாம போயிடுமா என்ன?" கலா சொன்னாள். அப்போதே மணி விடிய காலை 2 ஆகிவிட்டது. அவர்கள் தேடினார்கள். மணி 3 ஆகிவிட்டது. அப்போது சசி கூச்சலிட்டாள்.

"ஏய் இங்க பாருங்க ஒரு backdoor இருக்கு."

அனைவரும் அங்கு சென்றார்கள். அதன் வழி தப்பித்தார்கள். கொஞ்ச தூரம் ஓடினார்கள். main roadட்டை அடைந்தார்கள். அங்கு இருந்த பஸ் டாப்பில் உட்கார்ந்தார்கள். ஓடி வந்த களைப்பு! சாலையில் எந்த வாகனமும் இல்லை. வேறு யாரும் அங்க இல்லை.

அச்சமயம் தூரத்தில் 4 வாலிபர்கள் தண்ணி அடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டு பஸ் டாப்பை நோக்கி வந்தனர்.

சுதா, "மாட்டுனோம் டி!"

(பகுதி 5)

14 comments:

புதியவன் said...

//பருத்திவீரன் பிரியாமணி போல் கதறி அழ ஆரம்பித்தாள் சசி.//

என்ன ஒரு உவமை...

புதியவன் said...

உரையாடல் முழுதும் நகைச்சுவை...கதையின் இந்தப் பகுதியும் நல்லா வந்திருக்கு...

Gajani said...

superb

sri said...

Romba nalla erukku , comedy romba naturala erukku - Waiting for the next post

Bhuvanesh said...

ஒவ்வொரு பகுதியும் மேலும் மேலும் சுவாரஸ்யம் ஆகுது!!

Anonymous said...

nice dialogues gal........ went to cafeteria after reading this & was smiling alone.. pakiravanlam enna achu nu kekiranga... athila intha anti-triumph group "aalillamal adikadi siricha triumph nu artham" nu paduranunga.. kadavule..

Divyapriya said...

ஹப்பா..இந்த பகுதி செம விறுவிறுப்பு...ஒரு வழியா தப்பிச்சாங்களே!!! ஆனா, நல்ல மூளை தான் :))

உவமை எல்லாமே படத்தை வச்சு தானா? ;)

மறுபடியும் பகீர் இடத்துல கொண்டு போய் முடிச்சிடீங்க..ஹ்ம்ம்...

Karthik said...

mudiyala! ;)

next part a seekiram podunga plz!

ivingobi said...

enakku ennavo ithu karpanai kathai nu thonala avlo thaan.....


appada nammaalaana oru bit a poattachu.... Nimmathi....

Divya said...

விறுவிறுப்பா போகுது கதை.......தொடருங்க காயத்ரி:)

டைமிங் நக்கல்ஸ் & கிண்டல்ஸ் உரையாடல்கள் எல்லாமே நல்லா வந்திருக்கு இந்த பகுதிலயும், கலக்குறீங்க!

Ramya Ramani said...

வாவ் விருவிருப்பா கொண்டுபோறீங்க.. தொடருங்கள்

FunScribbler said...

@புதியவன்

//உரையாடல் முழுதும் நகைச்சுவை//

நன்றி:)

FunScribbler said...

@கஜினி, srivats,புவனேஷ், triumph

பாராட்டுகளுக்கு நன்றி:)

FunScribbler said...

@திவ்யாபிரியா

//உவமை எல்லாமே படத்தை வச்சு தானா? ;)//

அது ஒன்னு தாங்க எனக்கு தெரியும்.:)