Jun 10, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2)- பகுதி 1

daddy mummy வீட்டில் இல்ல தொடர்கதையை தொடர்ந்து அதன் season 2 வந்துவிட்டது. அதாவது sequel 2. தெளிவாக சொல்லபோனால், 5 பாகங்களை கொண்டது அத்தொடர்கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தெடுத்த பாகங்கள் வரும். என்னமோ தெரியல்ல, எனக்கே இந்த 'daddy mummy வீட்டில் இல்ல' கதை ரொம்ப பிடிச்சு போச்சு.(பொதுவா நான் எழுதிய கதைகளை மறுபடியும் நான் படிக்க மாட்டேன்...:)

பிடித்து போனதால், தான் இதை தொடர வேண்டும் என்ற ஆவலும் வந்தது. so sequel 2 gonna start...start musik!

daddy mummy வீட்டில் இல்ல கதையை படிக்க: http://enpoems.blogspot.com/2009/04/daddy-mummy-1_13.html
------------------------------------------------------------------------------------------


"ஏய் நான் இப்போ என்னடி செய்ய?" சசி குழம்பினாள். பாவமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. சசிக்கு பயமாக இருந்தது. மெத்தையில் விழுந்து புரண்டு சிரித்து கொண்டிருந்த விஜி,

"கவலைப்படாதே சசி, பரிசம் போட்டுட வேண்டியது தான்!" மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தாள். தன்னை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் என்பதை தாங்கி கொள்ள முடியாமல் சசி, "நான் கிளம்புறேன்."

சிரித்து கொண்டிருந்த சுதாவிற்கு சசியின் கோபம் புரிந்தது. "ஏய், என்ன சசி நீ, நாங்க சும்மா சிரிச்சோம்.. இதுக்கு போய் கோச்சிக்கிட்ட....சரி ஃபிரியா விடு! just don't reply him anything for now. exams எல்லாம் முடியட்டும். அப்பரம் இத பத்தி பாத்துக்கலாம்."

சுதா சற்று சீரியஸா பேசியது சசிக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், கலா தன் பங்கு கிண்டலை கொட்டினாள். "காதல் வந்தா சொல்லியனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்...." என்ற அழகான பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் வேண்டுமென்றே பாடி சசியை நக்கல் அடித்தாள்.

ஒரு வாரம் ஓடியது. தேர்வுகளும் முடிந்துவிட்டன. கடைசி தேர்வு முடிந்து அனைவரும் சசி வீட்டிற்கு சென்றனர். அவளது தம்பி ஹாலில் உட்கார்ந்து விடியோ கேம்ஸ் விளையாடி கொண்டு இருந்தான்.சசியின் அம்மா சோபாவில் உட்கார்ந்து ஏதோ கணக்கு வழக்குகளை புரட்டி கொண்டிருந்தாள். சசியும் அவள் தோழிகளும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

சசியின் அம்மா, "வாங்கடியம்மா....என்ன பரிட்சையெல்லாம் pass பண்ணிடுவீங்களா?"

அதற்கு கலா, "என்ன ஆண்ட்டி எங்கள பாத்து இப்படி கேட்டுடீங்க? உங்க பெயர காப்பாத்தீயே தீருவோம். இது சசி மேல சத்தியம்." என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த சசியின் தலையில் அடித்தாள். அனைவரும் சிரித்தனர். சிரித்து கொண்டிருந்த சசியின் அம்மாவின் முகம் சற்று மாறியது கையிலிருந்த billலை பார்த்தபிறகு.

அவர், "என்ன சசி, உன் mobile phone பில் ஏன் இவ்வளவு அதிகமா வந்து இருக்கு?"

சசிக்கு பயம் கவி கொண்டது. சசி அம்மா கையில் இருந்த பில்லை வெடுக்கென்று பிடிங்கி அதைப் பார்த்தாள். ஆம், அளவுக்கு அதிகமாக தான் இருந்தது. சசிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பொங்கலுக்கே வெடி வெடிக்கும் கலா, தீபாவளி வந்தால் சும்மா இருப்பாளா? சதாரணமாகவே சசியை கிண்டல் செய்யும் கலா, இச்சமயம் சசியின் நிலைமை கண்டு உற்சாகம் அடைந்தாள். கிண்டல் செய்ய தக்க தருணம்!

"அது ஒன்னுமில்ல ஆண்ட்டி....சித்தார்த்....." என்று கலா வாயை திறந்தாள்.

"who siddarth, boys movie hero siddarth?" வீடியோ கேம்ஸ் விளையாடி கொண்டிருந்த தம்பி அவர்களிடம் கேட்டான். கேள்வியை கேட்டுவிட்டு மறுபடியும் விளையாட்டில் மூழ்கிவிட்டான்.

கலா, சசியை இப்படி மாட்டிவிட்டது விஜிக்கும் சுதாவிற்கும் ஆச்சிரியமா இருந்தது. சசிக்கு அதிர்ச்சி. கலா முடிப்பதற்குள் சசி,

"ஒன்னுமில்ல மா, இன்னிக்கு சித்தார்த்தனந்தா சாமிகள பத்தி டீவில போடறத்த பத்தி சொல்லுறா?" சமாளித்தாள்.

"நான் என்ன கேட்குறேன், நீ என்ன சொல்லுற?" அம்மா தன் புருவங்களை சுருக்கினார்.

"இந்த மாசம், exams time. கிளாஸ்மேட்ஸ் நிறைய பேரு doubts கேட்க ஃபோன் பண்ணாங்க, நானும் ஃபோன் பண்ண வேண்டியதா இருந்துச்சு." என்ற உண்மையை சொன்னாள். அம்மாவும் சரி சரி என்று தலையாட்டினார். இருந்தாலும் ஒரு எச்சரிக்கையுடன், "அடுத்த மாசம்...." என்று ஆரம்பிக்கும்போதே சசிக்கு புரிந்துவிட்டது அம்மாவின் ஆர்டர்!

சசியை ஓரளவுக்கு தவிக்கவிட்ட சந்தோஷத்தில் தனக்குள்ளே சிரித்து கொண்டு சசியின் அறைக்கு சென்றாள் மற்ற தோழிகளுடன். அனைவரும் உள்ளே சென்றது. அறையில் இருந்த தம்பியின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கலாவை அடிக்க சென்றாள், "நான் எப்ப டி சித்தார்த்துக்கு ஃபோன் பண்ணேன்....ஏன் டி இப்படி என்னைய மாட்டிவிட்டே? நாசமா போ! உன் பொய்க்கு அளவே இல்லையா? stupid woman."

கலா சுதா பின்னாடி ஒலிந்துகொண்டாள்.

"ஏய் சரிவிடு, அவ சும்மா சொன்னா....what are we going to do during the holidays?"விஜி கேட்டாள்.

"அதுக்கு நிறைய நாளு இருக்கு. அத அப்பரம் யோசிப்போம். நாளைக்கு நம்ம எல்லாரும் வெளியே போவோம்....படம் பார்க்க." கலா மெத்தையில் புரண்டு கொண்டே.

"என்ன படம்?" சுதா கேட்டாள்.

கலா, "french படம். M18 movie!" நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

சசி வாயை பிளந்து, "what????????"

கலா, " hey this is no R21. just a matured content movie. கலைப்படம் மச்சி! ஆமா அது சரி, எதுக்கு இவ்வளவு பெரிய reaction உனக்கு. நம்ம எல்லாரும் ஓவர் 18. தப்பு இல்ல."

சசிக்கு கலாவின் ஐடியா பிடிக்கவில்லை, முகத்தை சுளித்து கொண்டு, " நான் வரல."

விஜி சிரித்து கொண்டே, " நீ இப்படி தான் ஆரம்பிப்ப...அப்பரம் கடைசில எப்படி முடியும்னு இந்த உலகத்துக்கே தெரியும்டி. சும்மா வா!"

சுதா, "இந்த மாதிரி படம் எல்லாம் தப்பில்லையா?" முகத்தை அப்பாவித்தனமாக வைத்து கொண்டு.

விஜி, "வந்துட்டாய்யா question paperக்கு பொறந்தவ?"

கலா, "சுதா, இதலாம் தப்பு தான். ஆனா...வைரமுத்து என்ன சொல்லியிருக்காரு. தப்புகள் இல்லையின்னா தத்துவம் பொறக்காதுன்னு சொல்லியிருக்காரு!"

சசி, "உன்கிட்ட சொன்னாராக்கும்?"

சசியின் கேள்வி பிடிக்காமல் அவளை பார்த்து, "ஆமாண்டி, நேத்திக்கு ஸ் எம் ஸ் பண்ணி சொன்னாரு. சரிதான் போடி....யாரு வரீங்களோ, வாங்க. விஜி, நீ வர தானே?"

விஜி எப்போதுமே கலாவின் பக்கம் என்பதால் நான் இல்லாமல் எப்படி என்பதுபோல் ஒரு சிரிப்பை சிரித்தாள்.

மறுநாள் காலையில் எப்படியோ சுதாவை சமாதானப்படுத்தி அழைத்து கொண்டு சென்றார்கள். போகும்வழியில் சுதா, "நான் சசிக்கு ஃபோன் பண்ணி பார்த்தேன், ஆனா அவ எடுக்கல்ல....."

கலா, "அவ தூங்கிகிட்டு இருப்பா மேன்...சரி விடு. அவளுக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான்."

திரையரங்கை அடைந்தது மூவருக்கும் அதிர்ச்சி. சசி அங்கே காத்து கொண்டிருந்தாள்........

(பகுதி 2)

8 comments:

மயாதி said...

தொடரட்டும்...
வாழ்த்துக்கள்


இன்னும் கதை வாசிக்கவில்லை நேரம் கிடைக்கும் போது வாசித்துவிட்டு வாறன் ...

sri said...

Hey congrats da, kalakareenga ponga. Comedy content innum konjam erundha nalla erukkum - i guess now u have set the base - it will unfold good.

//பொங்கலுக்கே வெடி வெடிக்கும் கலா, தீபாவளி வந்தால் சும்மா இருப்பாளா? //

//விஜி, "வந்துட்டாய்யா question paperக்கு பொறந்தவ?"//

Ungey nakkal style and touch nalla theriyudhu . This is good ;)

Divyapriya said...

எத்தன பட்டாலும் இந்த பொன்னுக அடங்க மாட்டாங்க போல? :))

G3 said...

:))))))))))))))

Nalla irukkae.. naan poi 1st series-a padichittu varen :D

ivingobi said...

Second round a..... kalakkala start pannittinga all the best....

Prabhu said...

ஏற்கனவே முதல் சீரிஸ் படிச்சிதான் பாலோயர் ஆனேன். அடுத்த சீரிஸ் எழுதுங்க!

இராவணன் said...

அட அட அட..
french படம் பார்க்கும் தமிழ்பெண்கள்.
இப்பவாவது பாரதி கனவு பலிக்குதே.

குட் start.

Karthik said...

:)))