Dec 24, 2006

என் உயிர் நீதானே..

கண்டவுடன் காதலில்
உடன்பாடு இருந்ததில்லை
உன்னை பார்க்கும்வரை
கண்ட நாள் முதல்
கனவுகளில் உலா வருகிறாய்
பகலிலும் நிலா தருகிறாய்

சூராவளி சுனாமி
இரண்டும் ஒரே நேரத்தில்
என்னை தாக்கின
உன் விழிகள் வழி...

காத்திருக்கிறேன் நீ
வரும் நாளுக்காக
கனவு கண்ணாளனை
கை பிடிக்கும் நாளுக்காக
காத்திருப்பேன்
காலமெல்லாம்....

No comments: