Dec 24, 2006

சொல் நீ...

சொல்நீ தோழியே
காலையிலிருந்து மாலை வரைக்கும்
உன் நெற்றியில்
அழகாய் இருக்கும்
பொட்டை
இரவு வேலை முடிந்து
வீட்டிற்கு வந்து
முகம் கழுவும்போது
கண்ணாடியின் ஓரத்தில் ஒட்டிவைக்கிறாய்!
அந்த பொட்டும் நானும் ஒன்றுதான் பெண்ணே
மறுபடியும் உன்னிடம் சேர துடிக்கும்
அந்த பொட்டும் நானும் ஒன்றுதான் பெண்ணே
விடியலுக்காக காத்திருக்கும்
உன் காதலனும் நானே!

No comments: