Dec 24, 2006

வெயில்

வீட்டைவிட்டு வெளியே வந்தேன்
காரணமில்லாமல்
பின் தொடர்ந்தது.
சரி போகட்டும் என விட்டுவிட்டேன்.

ஒரு நொடிகூட ஓய்வு எடுக்காமல்
என்னையே குறிவைத்தது.
நானும் பலியானேன்
மற்றவர்களோடு சேர்ந்து!


தப்பிக்க ஏதேதோ
செய்தோம்!
ஒன்றும் முடியவில்லை


எங்களை சுட்டு
எரித்தது
ஆகாயத்தின் துப்பாக்கி- "வெயில்"

No comments: