Dec 24, 2006

கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்

மனம் என்னும் எனது
தோட்டத்தில்
காதல் என்னும் பூ
முதன்முதலாகப்
பூத்தது!!


விதையைப் போட்டவன் அவன்
விளைகிறது என் உள்ளத்தில்
இப்போது!
அந்த காதல் பூ மலர்கிறது
மணம் பரப்புகிறது!
நெஞ்சம் எல்லாம் காதல்
தென்றல்
வீசுகிறது!


ஜில்லென தென்றல் காற்று
மனதை
மெல்ல வருடுகிறது!
அய்யோ. . . . அதை எப்படி
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியும்?
அதை சொல்ல எந்த மொழியிலும்
வார்த்தைகள் கிடையாதே. . .


கடவுளின் விரல் எழுதிய
சிறுகதை
என் காதல் கதை.
அவனைப் படைத்த இவ்வுலகில்
என்னையும் படைத்த
கடவுளுக்கு நன்றி
சொல்கிறேன்!

No comments: