Dec 24, 2006

தமிழன்

யாரும் செல்லாத வாழ்க்கை
பாதையில்
செல்ல அஞ்சுபவன் தமிழன்
குண்டு சட்டியில் குதிரை
ஓட்டுபவன்
இன்னும் அதே சட்டியில்தான்
குதிரை ஓட்டிக்
கொண்டிருக்கிறான்.


யாரும் போக முடியாது என்று
நினைத்த நிலாவில்
காலடி வைத்தான்
வெள்ளைக்காரன்
தமிழனோ நிலாவைப் பார்த்து
சோறு ஊட்டிக்
கொண்டிருக்கிறான்.
ஆகாயத்தில் வரும் நிலாவைக்


காட்டுவதற்குப் பதிலாக
இன்று
'அன்பே ஆருயிரே' நிலாவைக்
காட்டி
சோறு ஊட்டும் அளவிற்குத்
தமிழன்
“பின்னேறிவிட்டான்”!


ஆட்டுக்குட்டி தன் தாயை
“அம்மா”
என்று அழகாக அழைக்கிறது.
பச்சை தமிழனோ “மம்மீ ’
என்கிறான்.
மொத்தத்தில் தமிழன்
இன்னும் “தமிழனாக”வில்லை.

No comments: