Dec 24, 2006

எண்ணங்கள்

பலமுறை வேண்டி கொண்டேனே!
என் பிராத்தனைக்குப் பலன்
இவ்வளவுதானா?
நினைத்தது நடக்கவில்லை
நடந்ததை கனவில்கூட
நினைத்துப் பார்க்கவில்லை


இது எதை சோதிக்கிறது?
மனிதனின் அறிவை அல்ல
அவனுடைய அகத்தை..
எதுவாக இருந்தாலும்
ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவன்தான்
உண்மையான வெற்றியாளன்!


தோல்விகூட தொலைவில் நிற்கும் வெற்றிதான்!
கடந்துவந்த பாதை சோதனை காலம்
கடக்கபோகும் பாதை சாதனை காலம்
இன்று வீழ்ந்தவர்கள்
நாளை "வின்னர்கள்"!
அது மட்டும் நிச்சயம்


படித்தவன் வாங்கும் பட்டமும் காகிதம்தான்
படிக்காதவன் விடும் பட்டமும் காகிதம்தான்
காகிதம் நம்மை
நிர்ணயிக்கப் போவதில்லை
நீ யார்? என்ற கேள்விக்கு
உன் மனமே பதில்!


நான் சொல்லும் அனைத்தும் உண்மை
ஏன் என்றால்
ஜெயிச்சவன் சொல்லும் கருத்தைவிட
தோற்றவன் சொல்லும் கருத்தில்தான்
ஆழமான அர்த்தம் உண்டு
அது கல்வியாக இருந்தாலும் சரி
காதலாக இருந்தாலும் சரி!!

No comments: