Dec 24, 2006

சந்தனமா? சாக்கடையா?

ஒரு கூட்டுக் கிளியாக
வாழ்ந்தோம்
கூட்டிலிருந்து
பறவைகளாகப் பிரிந்தோம்!
பற்ற வைத்தனர் அந்நாளில்
பற்றிக் கொண்டு எரிகிறது
இந்நாள் வரை
ஏன்?


சிந்தித்தோம்! சாதித்தோம்!
ஆனால் யாருமே நம்பிக்கை
வைக்கவில்லை
மனம் உடைந்து போனது.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கள்
அனைவரும் தாழ்வு
என்பதைப் புத்தக்கத்தில்
படித்தபோது
அர்த்தம் அறியவில்லை
அனுபவபூர்வமாக
உணர்ந்தபோது
வேதனை தாங்கமுடியவில்லை


விதியின் விளையாட்டு
என்பதா?
கடவுளின் கட்டளை என்பதா?
காலத்தின் கட்டாயம்
என்பதா?


பிரச்சனைக்கு மேல்
பிரச்சனை
உள்ளத்தில் காயங்கள் உண்டு
அதைநான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்
ஆனால் உள்ளே அழுது
கொண்டிருக்கிறேன்


தூணாக இருக்க
வேண்டியவர்கள்
இன்று தூலாக
இருக்கின்றனர்!


வெளியே நின்று பார்த்தால்
சந்தனம்
உள்ளே புகுந்து பார்த்தால்
சாக்கடை


கடைசியில் என்ன ஆகும்?
காலமெல்லாம்
காத்திருக்கிறேன்
பதிலுக்காக...

No comments: