Dec 24, 2006

ஒரு வருடம்

365 நாட்கள் கடந்த
சென்றுவிட்டன
எத்தனை அனுபவங்கள்
எத்தனை இன்பங்கள்
எத்தனை வலிகள்
எத்தனை சாதனைகள்
எத்தனை சோதனைகள்


வெற்றி கனிகளைச்
சுவைத்ததுண்டு
நாவில் மட்டுமே சுவை
மனதில் சுமை
வெளி இன்பங்கள் சில
உள் துன்பங்கள் பல


உறுதியாக நின்ற எனக்கு
கிடைத்த பெயரோ
பிடிவாதக்காரி!
ஆணவக்காரி!
அடங்காபிடாரி!


கேட்டபோது சிரிப்பு வந்தது
இவற்றைக் கூறியது யார் என
தெரிந்தபோது
அழுகை வந்தது!


விழி ஓரத்தில்
நீர்த்துளிகள்
துளிகளின் ஆழத்தில்
கிடைப்பதோ
அந்த ஒரு வருடம்!!

No comments: