Dec 24, 2006

மௌனத்தை கலைத்தேன்

சண்டை போட்டுக் கொண்டு
ஒரு வாரம் பேசாமல் இருந்தோம்
ஒரு வாரம் கழித்து
பார்க்கில் சந்தித்தோம்
மௌனமாய் புல் தரையை மூன்று
மணி நேரமாய் தடுவி கொண்டிருந்தாய்
மௌனமாய் நான் உன்னை மட்டும்
பார்த்து கொண்டிருந்தேன்.
"அட பேசுங்களேன்" என்று பரிதாபமாய்
கெஞ்சியது நம் காதல்.
சற்று உன் அருகே வந்தேன்
மௌனத்தை கலைத்தேன்
ஆசையாய் உன் கன்னத்தில்
இட்ட முத்தத்தால்....

5 comments:

Saravanan said...
This comment has been removed by the author.
Saravanan said...

kalainthadu mounam mattum alla, iru manathin kobamum kooda

goma said...

கலைந்தது உங்கள் மெளனம் மட்டுமல்ல எங்கள் நிசப்தமும்தான்

goma said...

அருமையான வலைப்பூ இதுவரை கண்ணில் படவில்லை.

FunScribbler said...

நன்றி goma!:)