Mar 17, 2009

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அணியினர் இன்று அடுத்த போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆனால், தோல்வியை தழுவியது. இன்று பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. இறுதி சுற்றுக்கு செல்ல மிக குறைவான அளவில் தான் வாய்ப்பு உள்ளது. 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து இறுதி போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டது. இந்தியா இன்று சந்தித்த தோல்வியால் 4ஆம் இடத்தில் தான் உள்ளது. இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. அதில் வென்றால்கூட, வாய்ப்பு குறைவே!

இன்றைய ஆட்டத்தில், நிறையவே தவறுகள் நடந்துவிட்டன. 207 ரன்களுக்கு சுருண்டது இந்தியா! 4 விக்கெட்கள், ரன் அவுட்டில் போய்விட்டது. ரன் அவுட்டில் விக்கெட் இழப்பது விளையாட்டாளர்களின் பலவீனத்தையே சுட்டிகாட்டுகிறது.lack of communication between the runners. இதுவே காரணம். என் கிரிக்கெட் பயிற்சிவிப்பாளர் என்னிடம் கூறியதும் இதே தான், "ஒருத்தர் ரன் அவுட் ஆவதற்கு காரணம் ஒரு ஆள் இல்லை, அது இரண்டு பேரின் தவறு"

இருந்தாலும், நியூசிலாந்து அணியினருக்கு சரியான போட்டியாகவே அமைந்தது. நியூசிலாந்து அணியினர் பெட்டிங் செய்தபோது, சீக்கிரமாகவே விக்கெட் எடுத்திருக்கலாம் இந்தியா. அதிக ரன்களை கொடுத்துவிட்டது இந்தியா. இருப்பினும், கொஞ்ச நேரம் கழித்து, தனது fielding பலத்தை காட்ட தொடங்கியது. 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்த நியூசிலாந்து வெற்றி பெற்றது.

போன தடவை, கஷ்டமான போட்டியில், ஆஸ்திரேலியாவை வென்றது, சுலபமாக இருக்கும் என்று எண்ணிய ஆட்டத்தில் இப்படி போய்விட்டது! இறுதி போட்டிக்கு போக முடியவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவை வென்றதே ஒரு சாதனை. பெண்கள் இவ்வளவு உயரத்துக்கு முன்னேறி வருகிறார்கள் என்று நினைக்கையில் ரொம்ம்ம்ம்ம்ம்ப பெருமையாக உள்ளது!

தொடர்ந்து நாம் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்! ஜெய் ஹோ!

No comments: