Mar 14, 2009

chak de india- பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

முதல் கட்ட போட்டிகளில் இந்தியா 3 நாடுகளுடன் மோதியது. இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. ஆனால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் விளையாடி, வெற்றி பெற்றது.

சூப்பர் 6 சுற்றுக்கு முன்னோறியது இந்தியா. இந்த சுற்றில் இன்று ஆஸ்திரிலியா அணியிடம் மோதியது. வெற்றியும் கண்டது. எப்படி ஆண்கள் ஆஸ்திரிலியா அணி ஒரு power house குழுவாக இருந்ததோ அதே போல தான் பெண்கள் அணியும். முதல் ஆட்டத்திலியே இந்தியா ஆஸ்திரிலியாவிடம் விளையாட போவது என்று படித்த போது கொஞ்சம் பயமாக இருந்தது.

ஆனால், இந்திய பெண்கள் எதற்கும் தயார் என்பதை காட்டிவிட்டனர். எனக்கு ரொம்ம்ம்ம்ப சந்தோஷமாக இருந்தது. இப்போது ரொம்ம்ம்ப எதிர்பார்க்கிறேன், உலக கோப்பையை வெல்ல அதிக நம்பிக்கை வந்துவிட்டது. ஜெய் ஹோ இந்தியா!

இன்றைய ஆட்டத்தின் சிறப்பான விளையாட்டாளர் இந்தியாவின் anujam chopra. இவர் 76 ரன்ஸ் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியா மொத்தம் 234 ரன்ஸ் எடுத்தது. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 87 ரன்கள்!! டாப் மச்சி!:)

பிறகு பெட்டிங் செய்து ஆஸ் அணியினர் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு பெரிய அடியை வாங்கிய சோகத்தில் ஆஸ் அணியினர் இனி வரும் 2 ஆட்டங்களிலுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா, அடிச்சு தூள் கிளப்பு மச்சி!:)